மகிழ்மொழியின் ஒரு வார்த்தை ஆண் எனும் அகங்காரத்தை தூண்டிவிட தன் மனதிலிருந்தவள் என்பதை மறந்து அவளை பழிக்கு பழி வாங்க தக்க தருணத்திற்கு காத்திருந்தான் அவினாஷ்.
அன்று தந்தைக்கு தேவையான மருந்து பொருட்களுடன் வீட்டுக்கு தேவையான மளிகை சாமானும் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டியில் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள் மகிழ். ஆள் அரவம் அதிகமில்லாத குறுக்கு சாலையில் அவள் வண்டியை மறித்த சிறுவனொருவன்..
“அக்கா கா..இந்த பேனாக்களை வாங்கிக்க..அம்பது ரூபா தான்..காலைலருந்து போனியாகல..ப்ளீஸ் கா..” என கெஞ்ச அவன் உரிமையாக மறித்து நின்றதற்கு கண்டனத்தை தெரிவித்து தன் கைப்பையில் பணம் எடுக்க குனிந்தவளது நாசியை ஒருவன் மயக்கமருந்து தெளித்த கர்சீப்பால் அழுத்தி மூட, மூச்சடக்க முயன்று அவன் கையை பிடிக்க முயன்றும் மற்றொருவன் அவள் கைகளை பிடித்து கொள்ள வேறு வழியின்றி மயங்கி சரிந்தவளை தயாராய் வந்து நின்ற ஆம்னி வேனில் ஏற்றியபடி கிளம்பினர்.
சுமார் இரண்டு மணி நேரம் கடந்து மயக்கம் தெளிந்து கண்களை திறக்க எதிரில் மெல்லிய விளக்கொளியில் கண்கள் கூச தான் எங்கிருக்கிறோம் என தெரியாமல் சுற்றிலும் பார்க்க..விசாலமான அறை, ஓரத்தில் அலமாரி மேலே ஏசி வசதியுடன் இருந்தது..குனிந்து தன்னை பார்க்க, அவள் கை கால்கள் கட்டிலில் கயிறால் பிணைக்கபட்டிருந்தது.
இதுவரை எதற்கும் அச்சபடாத மகிழின் முகம் இன்று ஏனோ பயத்தில் வெளிறிப்போனது..யார் தன்னை கடத்தியிருப்பார் என யோசித்து யோசித்து குழம்பியவள் தப்பிக்க வழியே இல்லாத நிலையில் சோர்வுடன் கண்களை சுழற்றினாள்..’இது மட்டும் அவினாஷிற்கு தெரிந்தால் இந்நேரம் இந்த இடத்தையே தவிடுபொடியாக்கியிருப்பானே..அவனையும் பகைத்து கொண்டேனே..’ என மனம் அது பாட்டுக்கு புலம்ப..
“யாராவது இருக்கீங்களா?.”என சத்தமிட்டாள். ஏசி சத்தத்தில் இவள் குரல் அடங்கி போனது தான் பரிதாபம்.
சில நிமிடங்களில் கதவை திறந்து ஒரு நெடிய உருவம் உள்ளே வர, மகிழ்..
“ஏய் யார் நீ, என்னை ஏன் கடத்தி வச்சிருக்க? நான் யாரு தெரியுமா? ஆர்.வி.எம் டெம்பிள் ஒர்க்ஸ் மேகநாதன் கன்யா மேடம் பிஏ..என்னை கடத்தி வச்சிருக்கே னு என் லவ்வர்க்கு தெரிஞ்சா நீ அவ்ளோ தான்..மரியாதையா என்னை விட்டுடு..”என மகிழ் கத்தவும், அறையில் உள்ள விளக்கை போட்டது அவ்வுருவம்.
திரும்பி நின்று கொண்டிருக்கும் உருவத்தை பார்த்தவள்..
“என் லவ்வர் யார் தெரியுமா? தி கிரேட் கருடா போர்ஸ் கமாண்டோ விஷ்வமித்ரன் தம்பி..” என்று அவள் கூறியதை கேட்டு ஓர் நொடி அசையாது நின்று பின் தலையிலிருந்த ஹூடியை கழட்டியவாறு திரும்ப..
“அ..வி..னா…ஷ்…” என உயிருடன் மண்ணுக்குள் புதைந்தது போல துடித்து போனாள் மகிழ்.
“நீங்களா என்னை கடத்தினீங்க?..” என எதிர்பாரத அதிர்ச்சியில் நாக்கு உலர்ந்து பேசவே தவித்தவளை பார்த்து அவி,
“அச்சச்சசோ.. புரட்சி மங்கை, ஏர் ல பறந்து பறந்து பைஃட் பண்ணும் கொரியன் டால், தி கிரேட் மகிழ்மொழி மேடம் இப்படி பேசவே பயப்படறத பார்த்தா செம கிக்கா இருக்கே..” என்ற அவனின் புது அவதாரத்தில் மிரண்டு தான் போனாள். எனினும் துளி நம்பிக்கையுடன்..
“ஹீட் ஆஃப் த மொமெண்ட்(Heat of the moment) ல யோசிக்காம நான் பேசினது பெரிய தப்பு தான்..ப்ளீஸ் அவி, என்னை விட்ருங்க..” என கெஞ்சினாள் மகிழ். அவள் கண்ணீர் மனதை அசைத்தாலும் அவள் கேள்வி நினைவு வர அனல் தெறிக்கும் விழிகளுடன்..
“என்னால உன்னை…” என உதட்டை இறுக்கமாக கடித்தவன்..
“நீ தெரிஞ்சுக்க வேணாமா?..” என அவளருகே வர, மகிழோ..
“உ..ங்க..ளை நான் ல..வ் பண்றேன் அவினாஷ், அதான் நீங்க அப்படி கேட்டதும் ஆத்திரத்துல அறிவிழந்து பேசிட்டேன்..என்ன தான் புரட்சி, மனசு தான் கற்பு னு பேசினாலும் ஒரு பொண்ணு தன்னை விரும்புனவனேயானாலும் கட்டாயபடுத்தபட்ட உறவை ஏத்துக்கவே மாட்டா..வருங்காலத்தில நமக்கு கல்யாணமாகி நம்ம காதலின் சாட்சியா என் பரிபூரண சம்மதத்தோட நானே என்னை உங்களுக்கு கொடுக்கனும் னு ஆசபட்டேன்..ஆனா என்னை காப்பாத்த வேண்டி உங்ககிட்டயே இப்படி கெஞ்சுவேன் னு கனவிலயும் நினைக்கல..இதுக்கு என்னை கொன்னுடுங்க..சந்தோஷமா செத்துடறேன்..ஆனா என்னை பழி வாங்கறதா நினைச்சு நீங்க பண்ற துரோகத்தை எப்பவும் மன்னிக்க மாட்டேன்..” என மகிழ் உடல் குலுங்க அழுதாலும் மனமிரங்காமல் அருகே வந்து சில நொடிகள் அமைதியாக நின்றவன் அவள் கை கால்களை அவிழ்த்து விட்டான்.
கட்டுகளை அவிழ்த்ததும் அவனை விட்டு சட்டென விலகி மூலையில் ஒடுங்கியவளுக்கு அழுகை நிற்கவில்லை. கண்ணெடுக்காது அவளையே பார்த்திருத்தவனின் மனதும் உள்ளுக்குள் வெடித்து சிதற தீவிரமான முகத்துடன் அமர்ந்திருந்தான்.
சில நிமிடங்களில் அவள் அழுகை குறைந்ததும் அவளின் வண்டிச்சாவியை அவளிடம் வீசியவன்..
“எவ்வளவு தான் கோபம் வந்தாலும் வார்த்தைகள் விடறதுல நிதானமா இருக்கனும் னு இப்ப உனக்கு தெளிவாவே புரிஞ்சிருக்கும்.அசெக்ஷுவலா (Asexual) இருக்கிறவனுக்கே நீ பேசினது கோபம் வரும் போது எனக்கு வெறியே வந்துச்சி..உன்னை பழி வாங்கனும் னு தான் கடத்திட்டு வந்தேன், ஆனா பாரு உன்னை நெருங்க கூட என்னால முடியல, ஏன்னா..”என அவளுக்கான நேசத்தை மறைத்தவன்..
“என்ன தான் நீ பேசினது ல நான் ப்ரவோக் ஆகி உன்னை நாசம் பண்ணனும் னு நினைச்சாலும் என்னை பெத்தவங்களோட வளர்ப்பு முறை, என் அண்ணன் என்னை தெளிய வச்சுட்டாங்க..இப்ப கூட இந்த நிதானம் தெளிவு எனக்கே இருக்கும் போது ஒரு பொண்ணா எப்பயுமே உனக்கு ஆயிரம் மடங்கு வார்த்தைகளிலும் செயல்களிலும் நிதானம் இருக்கனும்..இனி எந்த ஜென்மத்திலயும் உன் முகத்தை பார்க்க எனக்கு விருப்பமில்லை..கிளம்பு..” என ஆங்காரமாய் கத்தியவனின் அலைபேசி ஒலிக்க அண்ணி காலிங் என வர, முகத்தை துடைத்தவன் குரலை சீர் செய்து..
“நீங்க விசிட் பண்ற ரெயின்போ ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்..கொஞ்சம் சீக்கீரமா வாங்க..எனக்கு பயமா இருக்கு..” என கன்யா கூற..
“இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் அண்ணி…அப்பா இருக்கார் ல..வந்துடறேன்..” என திரும்பி அந்த வீட்டிற்கான சாவியை அவளிடம் எறிந்தவன்..
“வீட்டை பூட்டிட்டு சாவி பக்கத்து வீட்டுல குடுத்துட்டு போ..உன் வண்டி திங்க்ஸோட வெளியே இருக்கு..” என ஒரு நொடி அவள் முகத்தை பார்க்க அவளும் அவனை பார்க்க, அதீத காதல் கொண்ட இரு மனதும் தங்கள் துடுக்குத்தனத்தால் இனிய தருணங்களை இழந்ததை கண்டு ஊமையாக அழ..திரும்பியவன் கண்களில் ஓரம் வந்த நீர்த்துளியை துடைத்தபடி கிட்டதட்ட ஓடினான்.
தன் முகத்தை துடைத்தபடி எழுந்தவளுக்கு தன்னவனின் ஆங்காரம் கண்டு மனம் வெம்பினாலும் தன்னை மிரட்டி பார்க்க இதை தான் பின்பற்ற வேண்டுமா? என நினைத்தவாறே தன் வீட்டிற்கு கிளம்பினாள்.
மருத்துவமனைக்கு வந்த அவினாஷின் கையை பிடித்துக்கொண்டு கன்யா,
“உள்ள டாக்டர்ஸ் செக் பண்ணிட்டிருகாங்க அவி..கண் முழிக்கவேயில்ல அவன்..பயமாயிருக்கு..” என அழ ஆரம்பிக்க அவினாஷ்..
“தைரியமா இருங்க அண்ணி, ஒன்னும் ஆகாது, நான் பார்த்துட்டு வர்றேன்..பா..அண்ணிய பார்த்துகங்க” என உள்ளே நுழைந்தான்.
சில நிமிடங்களில் வைத்தியருடன் வெளிவந்த அவினாஷ் கன்யாவிடம்..
“தேவ்க்கு ஹை பீவர் அண்ணி..அதான் மயங்கிட்டான்..இப்ப ஓகே..கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிடுவான்..ஜான்டீஸா இருக்குமோ னு சஸ்பக்ட் பண்றோம்..இன்னிக்கு இங்கயே இருக்கட்டும்..நாளைக்கு பேமஸ் Hepatologist டாக்டர் ஷாந்தனுவை கான்டாக்ட் பண்ணி பேசியிருக்கோம்..நாளைக்கு வர்றார்..பயப்படாம இருங்க..” என வைத்தியருடன் பேசியபடி சென்றான் அவினாஷ்.
மயக்கம் சற்று தெளிய சோர்வுடன் கண்களை திறந்த தேவ்..
“ம்மா…” என அழைக்க, கன்யா வேகமாக மகனை நெருங்கி அவன் கைகளை பற்றி,
“நத்திங் தேவ், ஹை டெம்பரேச்சர் ல பெயின்ட்(faint) ஆகிட்ட..யூ ஆர் டூயிங் குட்..சித்தா இங்க தான் இருக்கார்..தாத்தா கூட..மாமா, அத்தை, பாட்டி நாளைக்கு காலை ல வந்துடுவாங்க..அம்மா இங்கயே இருக்கேன்..”என்றாள். தேவ்..
“ஐ..ம் ..பைன்..நீங்க ப..யப்..படாதீங்க..” என திக்கி திக்கி பேசம் மகனை நெஞ்சோடு அணைத்து கொண்டாள் கன்யா. கண்ணீர் நிற்காமல் வழிந்தாலும் மகனுக்காக மனதை திடமாக்கியவள் மேகாவிடம்.
“ஒன்னுமில்ல டா..தைரியமாயிரு..” என்றவன் மருமகனின் அருகே சென்றான். துருதுருவென ஓடிக்கொண்டிருக்கும் தேவ்வின் நலிந்த தோற்றத்தில் வேதனையடைந்தாலும் அவனிடம்,
“ஹே சேம்ப்..என்ன நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிட்டியா?..” என கேட்க அவன்..
“நோ மாமா, ஜஸ்ட் 2..” என கைக்காட்டினான். கோபியோ..
“ஓகே, இன்னும் 2 டேய்ஸ் ல என்க்கூட பைட்டிங் பண்ண ரெடியாகனும் ஓகே?..” என்றதும் தன் பெருவிரலை உயர்த்தி காட்டினான் சேம்ப்.
சுமார் பத்து மணியளவில் டாக்டர் ஷாந்தனு வந்து தேவான்ஷை பரிசோதித்தவர் அரை மணி நேரங்கழித்து கன்யாவை அழைக்க கோபியுடன் அவர் அறைக்கு விரைந்தாள்.
ஏற்கனவே அங்கு நிம்மியும், அவினாஷூம் இருக்க, கன்யாவை பார்த்து ஷாந்தனு..
“தேவான்ஷ் ‘Progressive Familial Intrahepatic Cholestasis’ னு ஒரு அரிய வகை நோயால் பாதிக்கபட்டிருக்கான்..ஏர்லி ஸ்டேஜ் னாலும் லிட்டில் கிரிட்டிக்கல்..இது பை பர்த் வந்துருக்கலாம்..மே பி பிறக்கும் போதே அவனுக்கு மஞ்ச காமாலை தொற்றும் இருந்திருக்கும்..” என சொல்ல இடையிட்ட நிர்மலா..
“இல்ல டாக்டர் பிறக்கும் போது அவனுக்கு ஜான்டீஸ் இல்ல..” என கோபியை பார்த்தபடி கூற அவனும் ஆமோதித்தான். ஷாந்தனு..
“மே பி னு சொன்னேனே..பட் திஸ் இஸ் க்யுரபிள் பை ஏ சர்ஜரி…எய்தர் நீங்களோ இல்ல அவன் அப்பாவோ உங்க லிவர் ல ஒரு பார்ட் டொனேட் பண்ணா அவனை கம்ப்ளீட்டா க்யூர் பண்ண முடியும். இல்ல னா அவன் லிவர் செயலிழந்து போக சான்ஸ் இருக்கு..உடனே சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணுங்க..”என்றார்.
கன்யா அவரிடம்..
“என்க்கிட்டயிருந்து என் உயிரை கூட எடுத்துக்கிட்டு எப்படியாவது அவனை காப்பாத்தி கொடுங்க டாக்டர்..” என கை கூப்பி கெஞ்சவும் கோபி அவளை தட்டிக்கொடுத்தான். ஷாந்தனு..
“இவ்ளோ எமோஷனலாகாதீங்க கன்யா..கண்டிப்பா உங்களால உங்க பையனை சேவ் பண்ண முடியும்..அவினாஷ் அதுக்கான ப்ரசீஜர்ஸ் பார்த்துப்பார்..டோன்ட் வொர்ரி..” என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
கன்யாவிற்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு தானே முன்னின்று செய்த அவினாஷ் மாலை அவள் பரிசோதனை முடிவுகள் பொருந்தி வர வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொண்டு திறந்தவன் பலத்த அதிர்ச்சியில் அவள் ரிப்போர்ட்டை தவறவிட்டான்.
தன் கண்களை நம்பாது மீண்டும் ஒரு முறை அந்த டிஎன்ஏ ரிப்போர்ட்டை படிக்க அதில் தேவகன்யா தேவான்ஷை பெற்ற தாயல்ல என துல்லியமாக சொல்லப்பட்டிருந்தது.
உடனே லேப்பிற்கு ஓடியவன் அங்குள்ளவரிடம் விசாரிக்க அவர்..