மழை மேலும் வலுக்க அதற்குமேல் அங்கிருக்கமுடியாமல் கிளம்பினர்.
“போச்சு நல்லா நனைஞ்சுட்டோம்…” என பேசிக்கொண்டே காரை வந்தடைந்திருந்தனர்.
ஏற்கனவே மனதோரம் தகப்பனை பார்க்க அழைத்து செல்வானோ இவன் என்று யோசனையுடன் தான் இருந்தாள் வெண்ணிலா.
அதனை அவனாகவே கூறட்டும் என்று வாய் திறக்கவே இல்லை அவள். ஆனாலும் ராம்நாத்தை பற்றி பிரத்யூவிடம் கேட்டறிந்துகொண்டாள்.
பயப்படும்படி பெரிதாக எதுவுமில்லை என பிரத்யூக்ஷா கூறியிருக்க, கௌரவ்வின் இயல்பான நடவடிக்கையிலும் பயமில்லை என்று புரிந்து அந்த பேச்சையே எடுக்கவில்லை.
மாமனாராய் அவரை சென்று பார்க்கவேண்டியதாக இருந்தாலும் பார்த்து தானே ஆகவேண்டும் என ஒருமனது எடுத்துரைக்க, இன்னொரு மனது ராம்நாத் செய்த ஒவ்வொன்றையும் நினைத்து வெறுப்பில் ஆழ்ந்தது.
குழந்தை கௌசல்யாவை பார்த்து அவளின் உடல்நிலையை கண்டுகொண்ட பின்னர் தான் நிம்மதி.
அதிலும் நெற்றியின் வீக்கம் கொஞ்சம் வற்றியிருந்தாலும் அதன் தடம் மாறவில்லை.
பிள்ளையிடம் கேட்டு மீண்டும் அந்த விஷயத்தை பேசவேண்டாம் என தவிர்த்திருக்க, கௌரவ்வுமே அதனை கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு வருடிக்கொடுத்து காயத்தில் முத்தமிட்டு அப்படி பார்த்திருந்தான் பிள்ளையை.
இபோதும் நினைக்க சிறுமுறுவல் வெண்ணிலாவின் முகத்தில். அதனுடனே திரும்பி பார்க்க காரை கிளப்பியிருந்தான் கௌரவ்.
“இவ்வளோ பேச்சு பேசிட்டு சடனா இதென்ன அமைதியோ அமைதி?…” அவன் தோள் தட்டி கேட்க,
“சும்மா…” என்றான் அவன் திரும்பாமலேயே.
“இப்ப எங்க போறோம்?…”
“எங்க போகனும்? அதுவும் இந்த ட்ரெஸ்ல?…” என்று புருவம் உயர்த்தி அவன் கேட்க,
“ஆமா, வீட்டுக்கே போயிடலாம்…”
“அவ்வளோ சலிப்பு?…” என்றவன்,
“எல்லாரும் வீட்டுக்கு வந்தாச்சு போல. ஆகர்ஷன் அண்ணா மெசேஜ் பண்ணிருக்காங்க…”
“கால் பண்ணவே இல்லையே? நான் பிரத்யூ அக்காட்ட கால் பண்ண சொன்னேன்…” என்று தன் கைப்பேசியை எடுத்து பார்க்க,
“நம்மளை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு பண்ணிருக்கமாட்டாங்க…” புரிதலாய் அவன் கூற,
“அவங்க என்ன நினைக்காங்கன்னு கூட சரியா சொல்லுவீங்க போல?…” என்றாள் கேலியாய்.
அதற்கும் சன்னமான புன்னகை கௌரவ் முகத்தில் மௌனமாய் வீற்றிருந்தது.
வெண்ணிலா பேசிக்கொண்டே வர வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்.
இருவரும் உள்ளே நுழைய வந்தவர்கள் கிளம்புவதற்கு ஆயத்தமாகி இருந்தனர்.
கௌசல்யா, ஆகர்ஷன், பிரத்யூக்ஷா, ஷ்யாமளா, குழந்தை கௌசல்யா வந்திருந்தனர்.
“அடடா, வந்தாச்சா ரெண்டுபேரும்?…” என்ற ஷ்யாமளா கேட்க,
“கௌவாப்பா…” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டாள் குழந்தை.
“கௌசல்யாம்மா…” என மென்மையாய் பிள்ளையை தள்ளி நிறுத்தியவன்,
“இப்ப தான் பீவர் விட்டிருக்குடா. அப்பா நாளைக்கு தூக்கறேன். சரியா?…” என்ற கௌரவ் சங்கடமாய் நின்றான்.
“நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா கௌரவ். நாங்க கிளம்பறோம்…” ஆகர்ஷன் கூற,
“இல்லை, வெய்ட் பண்ணுங்க வந்திடறேன்…” என்று குழந்தையின் கன்னம் தட்டிவிட்டு வேகமாய் உள்ளே வெண்ணிலாவின் அறைக்கு சென்றுவிட்டான்.
“என்ன நிலா இப்படி நனைஞ்சிருக்கீங்க?…” என சாவித்ரி கேட்க,
“இந்த மழையில நனையாம வந்தா தான் தப்பு. நீ போ நிலா. போய் சேன்ச் பண்ணிட்டு வா…” என்று சொல்லிய பிரத்யூ சாவித்ரியை பார்த்து கண் சிமிட்டினாள்.
“எல்லாம் தெரியுது உனக்கு? ஹ்ம்ம்…” என ஆகர்ஷன் கேலி பேச,
“தெரிஞ்சுக்கிட்டே ஆகவேண்டிய கட்டாயம் சீனியர்…” என்று கொஞ்சமும் சளைக்காமல் அவள் பதில்.
“கௌவாப்பா நானு…” என பின்னால் செல்லவிருந்த குழந்தையை இழுத்து நிறுத்திய பிரத்யூ,
“இவ ஒரு கௌவாப்பா கோண்டு. எங்கியாச்சும் நடக்குமா இது?…” என மகளை அதட்டுவதை போல ஒருவித பெருமிதத்தோடு கூற,
“டேய், கௌரவ்…” என்று ஆகர்ஷன் எழுந்துவிட்டான் வேகமாய்.
“கௌரவ் அமைதியா இருப்பா…” கௌசல்யா சட்டென மகனின் அருகில் வந்து நின்று அவனின் கையை பிடித்துவிட்டார்.
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்?…” என அவர் குரலை உயர்த்த நொடியில் சூழ்நிலை தலைகீழானது.
“போதும் குமரா, இப்படி பேசறதை முதல்ல நீ நிறுத்து…” என சாவித்ரி போட்ட சத்தத்தில் அவர் கோபமாய் முறைத்து நிற்க,
“என்னாச்சு?…” என்று வந்தாள் வெண்ணிலா.
“கோல்ட் மூன், பைட் பைட்…” என்றாள் குழந்தை கௌசல்யா.
“வாய மூடுடி…” என மகளின் வாயை அடைத்த பிரத்யூ,
“ஓகே நிலா நாங்க கிளம்பறோம். நாளை மறுநாள் மறுவீடு அழைச்சுட்டு போறதை பத்தி பேசியாச்சு. உன்கிட்ட ஏற்கனவே சொன்னது தான். நாளைக்கு போன்ல பேசறோம்…” என்றாள்.
வெண்ணிலா என்ன நடந்ததென புரியாமல் நின்றிருக்க பிரத்யூவின் பார்வையில் அனைவருமே கிளம்பிவிட்டனர்.
“ம்மா…” கௌரவ் கௌசல்யாவை பார்க்க,
“அம்மா போய்ட்டு வர்றேன் கௌரவ். நீ சந்தோஷமா எதைப்பத்தியும் நினைக்காம நிலாவோட வா…” என்ற கௌசல்யா,
“நான் ஏற்கனவே சொன்னதுதான். நீங்க பேசாம எங்களோட வந்து இருங்களேன். இங்க தனியா இருக்கனுமே. யோசிங்க. கௌரவ், நிலாவும் அதைத்தான் விரும்புவாங்க….” என்று சொல்லிவிட்டு ஆகர்ஷனை பார்த்து தலையசைத்தார்.
பிள்ளைகளுக்கு அத்தனை வலித்தது தாயின் முகம் பார்க்க. குமரன் தெரிந்து பேசவில்லை என்றாலும் அந்த வார்த்தையின் வீரியம் என்னவென்று தெரிந்தவர்களுக்கு புரியுமே.
“கண்டிப்பா வருவேன் கௌசி. எனக்கும் நிலாவை விட்டா யார் இருக்கா? நிலாவோட நீங்க எல்லாரும் இருக்கீங்களே. இங்க பேசினதை நினைச்சு வருத்தப்படாதம்மா. எப்போ வரனுமோ அப்போ உன்கிட்ட வருவேன்….” என சாவித்ரியும் பேச, குமரனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
இதுவரை நடந்த பேச்சுக்களில் தன்னை ஒரு பொருட்டாக எண்ணாமல், தன்னிடம் என்ன செய்யலாம் என்றும் கேளாமல் அவர்களாகவே பேசி முடிவுக்கு வந்திருக்க அதிலிருந்தே பொசுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார் அவர்.
இப்போது கோபத்தை அடக்கமுடியாது வாய்விட்டுவிட, அனைவரின் முகத்திலும் அத்தனை அதிருப்தி.
“வர்றேன் கௌரவ்…” என மகனின் கன்னம் தொட்டு வருடிவிட்டு கௌசல்யா நகர, கௌரவ் ஆகர்ஷனை பார்த்தான்.
பார்வையால் கௌரவ்வை அத்தனை கட்டுப்படுத்தியிருந்தான் ஆகர்ஷன். திருமணம் முடிந்து மறுநாளே கோபமாய் எதுவும் பேசிவிட கூடாதென்று பார்வையால் உரைத்திருக்க, பல்லை கடித்துக்கொண்டு நின்றான் அவன்.
“நான் பார்த்துக்கறேன் கௌரவ். வர்றேன்…” என்று அவனும் கூற,
“அப்பறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டு போறேன் பாருங்க…” என்று குமரனிடம் வந்து நின்றாள் பிரத்யூக்ஷா.
“பிரத்யூ…” என ஆகர்ஷன் கை பிடித்தும்,
“அட இருங்க…” என்றவள்,
“இது எங்க குடும்பம். கௌசல்யாத்தை எங்களுக்கு எல்லாத்தையும் விட பெருசு. அவங்களுக்காக நாங்க தான் பேசுவோம். இனியும் பேசுவோம். அதுல உங்களுக்கு கஷ்டமா இருந்தா…” என்று நிறுத்திவிட்டு அவரை எள்ளலாய் பார்த்தவள்,
“அதைபத்தி எங்களுக்கு கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை. அர்த்தமில்லாத பேச்சுக்கும், வறட்டுத்தனமான அநாகரீக கோவத்துக்கும் நாங்க பதில் சொல்லி எங்க மதிப்பை குறைச்சுக்க முடியாது. புரியுதா?…” என்று சொல்லிவிட்டு,