“ஓ… எந்த ஊர்லமா.. இப்படி நைட்டி போட்டு அதுவும் இப்படி ஏத்தி கட்டி பரதநாட்டியம் ஆடுவாங்க..” என்று கேட்டபடி எழுந்து வர,
வேண்டுமென்றே அவன் முன்னே ஒட்டடை குச்சியை நீட்டி நீட்டி, “நான் இப்படி தான் அடுவேன்… உங்களுக்கு பிடிக்காட்டி போங்க மாமா….” என வம்பிழுக்க,
“ஹ்ம்ம் ஒட்டடை குச்சியே அவ்வளோ உயரமா இருக்கு… இதில எதுக்கு ஸ்டூல்… நீ இழுத்ததுல என் தூக்கம் போச்சு..” என்று அவளை வம்பிளுக்கவே குறைபடுவது போல் சொல்ல,
“நான் மெல்லதான் இழுத்தேன்.. எனக்கு ஸ்டூல் மேல ஏறி நிக்க பிடிக்கும் அதான்… ” என்று சொல்லியவள் மீண்டும் அவன் முன்னே குச்சியை நீட்ட,
“ம்ம் கிளாஸ்ல இப்படி தான் பென்ச் மேல நிப்பியோ…” என்று கேட்டபடி அவளை இன்னும் நெருங்கியிருந்தவன், அவள் நீட்டிய குச்சியை வாங்கி ஒரு ஓரத்தில் போட்டு,
“இப்படி நீ ஆடிக்கிட்டே கிளீன் பண்ணா, பரதநாட்டியம் இல்லை, குச்சுபுடி தான் அடுத்து ஆடனும்…” என்று சொல்லிக்கொண்டே அலேக்காய் அப்படியே தூக்கினான்.
அவனது தலைக்கு மேலே, பாதி உயரத்திற்கும் லட்சுமி இருக்க, அவளது கைகளோ இறுக்கமாய் ஈசன் தோளை பற்ற, “மா.. மாமா… என்ன இது… விழுந்திடுவேன்.” என்று காலை உதற,
“நான் தான் பிடிச்சிருக்கேனே….” என்றவன் இன்னும் பிடி இறுக்கினான்..
“ம்ம்.. வேணாம் வேணாம்.. இறக்குங்க…” என அவள் இன்னும் காலை ஆட்ட, ஈசனுக்கோ அவளை இறக்கும் எண்ணமே இல்லை.. அவளுள் தான் இறங்கி போகவேண்டும் என்ற எண்ணம் எழ, லேசாய் நிமிர்ந்து அவளை முகத்தை பார்த்தவன், மெல்ல அடி வைத்து, கட்டில் மேல் அவளை இறக்க,
அவளோ “ஹப்பாடி.. கொஞ்சம் விட்டா விழுந்திருப்பேன்…” என்று சொல்லிக்கொண்டே நகர போக, ஈசனது கரங்கள் இன்னும் வளைத்து பிடித்திருந்தது.
“எப்படி விழுவ.. நான் பிடிச்சிருக்கேன்..”
“மா.. மா…” என்று சொல்லும் போதே, அவளை மீண்டும் சாய்க்க, இம்முறை அவளால் நகரவும் முடியவில்லை.
லட்சுமியை முக்கால்வாசி தன் மீது சரித்துகொண்டு, அவள் இடையில் கரம் போட்டு, இன்னும் இறுக அணைத்து படுத்தவன்,
“சேலை எல்லாம் கட்ட மாட்டியா…” என்று அவள் அவள் காதுகளை தன்னுதடால் உரசியபடி கேட்க, ஈசன் இப்படி திடீரென்று நெருங்குவான் என்றறியாத அவளோ, முதலில் திணறித்தான் போனாள்.
ஆனாலும் தன்னை நிலைபடுத்தியவள், “ஏன் இதுக்கென்ன….” என்று கேட்டபடி அவன் கன்னத்தில் வைத்து இன்னும் அழுத்தமாய் தன் கன்னத்தோடு அழுதிக்கொள்ள,
“அடிக்கடி சேலை கட்டலாம்ல…” என்றவன் உதடுகளோ அவள் முகத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தது..
கண்களை மூடி, ஈசனின் நெருக்கத்தையும், அவனது ஸ்பரிசத்தையும் மனதில் ரசித்துகொண்டிருந்தவள்,
“ஏன் மாமா… கல்யாணம் ஆகிட்டா அம்பிள்ளைங்க எல்லாம் ட்ரெஸ் வேற மாதிரி போடுறீங்களா…” என்று கேட்டவளை, சற்றே தன் முகத்தை தள்ளி வைத்து ஆச்சர்யமாய் பார்த்தான். ஒருசில நேரங்களில் பேசும் பேச்சு ஆச்சரயப்பட வைக்கிறது.
இந்த நேரத்தில், அதுவும் இந்த நெருக்கத்தில் லட்சுமியிடம் ஈசன் இப்படி ஒரு பதில் எதிர்ப்பார்க்கவில்லை.
‘அம்மாடியோ கொஞ்சம் விட்டா ஃபெமினிசம் பேசுவாளோ…’ என்று தான் தோன்றியது ஈசனுக்கு. அவனுக்கு பெரிதாய் உடை விசயங்களில் எல்லாம் அத்தனை ஈடுபாடில்லை.. கண்ணை உறுத்த கூடாது.. அவ்வளவே.. அதற்குமேல் அவரவர் விருப்பம் என்று இருப்பான்.
கண்கள் விரிய அவளை பார்க்க, “என்ன மாமா சொல்லுங்க….” என்றவள், அவன் கன்னத்தில் தன்னிதழ்களை பதித்து, அவன் விட்டதை தான் தொடங்கியிருந்தாள்..
“ம்ம்… என்ன சொல்லணும்… சேலை இன்னும் அழகு…அதான் சொன்னேன்…” என்று ஒருவகை மயக்கத்தில் பதில் சொல்ல தொடங்கியிருந்தான்.
ஈசனோடு இப்படியே இருக்கவேண்டும் என்ற எண்ணம் எழ, அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவான் என்பதும் நினைவில் வர, அவன் முகத்தை தன்னிடம் இருந்து தள்ளியவள்,
“நீங்க ஊருக்கு போய்ட்டு வாங்க…” என்று சிணுங்கினாள்..
“ஊருக்கு போறேன்ல சந்தோசமா அனுப்பேன்…” என்று அவனும் குழைய, அவனது பிதற்றல்கள் அவளுக்கு புரிய தொடங்கிய நேரம், அவனது மயக்கம் அவளையும் சூழ, ஓர் அழகிய உறவு அங்கே தொடங்கியது..
அன்று நடந்தது இன்றும் நினைவில் அவள் இதழ்களில் புன்னகையும், கண்களில் காதலையும் கொடுக்க, கரங்களோ இன்னும் ஈசன் தலைமுடியை கோத,
“மாமா… நம்ம எங்கயாது போகலாமா..” என்று கேட்டாள்.. குரலில் அத்தனை ஆசை.. அத்தனை ஏக்கம். உன்னோடு நான் தனியாக நேரம் செலவிடவேண்டும் என்று சொல்லாமல் சொல்லியது அவள் கண்கள்.
லட்சுமி ‘மாமா…’ என்று ஆரம்பிக்கும் போதே ஈசன் கண்கள் திறந்து அவளை தான் மேலே நிமிர்ந்து பார்த்தான். அவள் இப்படி கேட்கவும், லேசாய் யோசனைக்கு மாற,
“இல்லைதான். ஆனா எனக்கும் தெரியலை… நீயே பார்த்த தானே.. புது மாடுங்க.. நான் மட்டும் தான் பழக்கம்.. அதை கவனிக்க தனி ஆள் போடணும்.. அவனை பழக்கணும்.. தேனில புது கடை ஆரம்பிக்க நினைச்சேன்.. ஆனா இப்போ அங்க பண்ணை போடலாம்னு ஐடியா… நாலு இடம் சொல்லிருக்காங்க… போய் பார்த்து எது சரியா வரும்னு முடிவு பண்ணனும்.. அப்புறம் அங்க எல்லாம் ரெடி பண்ணி முடிக்கணும்… இதுக்கெல்லாம் எப்படியும் ரெண்டு மூணு மாசம் மேல ஆகும்…”
“ஓ… அப்போ இப்போதைக்கு முடியாது இல்லையா…” என்றவள் குரலில் ஒரு உணர்வும் இல்லை.. மாறாக கண்களில் உன்னிடம் இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை என்ற ஏமாற்றம் தெரிய, ஈசனோ கண்களை இடுக்கி அவளை பார்த்தான்.
லட்சுமிக்கு சும்மாவே ஆசை தான் ஈசனோடு எங்காவது செல்லவேண்டும் என்று. அதிலும் அன்றைய உறவிற்கு பிறகு இன்னும் மனம் ஆசைகொண்டது.. போதாத குறைக்கு, தன் வகுப்பு கூட்டத்தோடு பிராஜெக்ட் விசயமாய் மதுரை செல்ல, அப்போது பார்த்து அவள் உடன் பயில்பவள் தன் கணவனோடு கொடைக்காணல் போய் வந்ததாய் சொல்ல, அடுத்து அனைவரும் இவளை தான் பார்த்தனர்.
“லட்சமி நீ எங்க போன…” என்று ஒருத்தி கேட்க,
ரேவதியோ, “அதுசரி இவ எங்க போனா… நானே இவளை வீட்ல போய் பார்த்த அப்புறம் தான் என் நியாபகமே இவளுக்கு வந்துச்சு…” என்று அவளும் அனைவரோடும் சேர்ந்து கிண்டல் செய்ய,
வேறொரு பெண்ணோ, “அட என்ன டி.. ஸ்கூல் படிக்கிறதுகளே ஆளாளுக்கு ஒரு ஆள் செட் பண்ணி அங்க இங்கன்னு சுத்திட்டு இருக்குதுங்க.. நீ எங்கயும் போகலைனு சொல்ற..” என்று மேலும் கேலி பேச, லட்சுமிக்கோ எப்படியோ ஆனது.
இதுவரை ஒரு கோவிலுக்கு கூட போனதில்லை தானே..
“மாமா ஊர்க்கு போயிருக்காங்க.. வரவும் போவோம்னு சொல்லிருக்காங்க…” என்று அவர்கள் வாயை லட்சுமி மூடிவிட, மனமோ அப்படி நிற்கவில்லை.
‘ஈஸ் மாமா வரவும் முதல்ல எங்கயாது ஒரு ஒருவாரம் தனியா போய்ட்டு வரணும்…’ என்று சொல்லிக்கொண்டவள், இந்த ஐந்து நாட்களில், போகணும் போகணும் என்று சொல்லி இறுதியில் அதுவே அவள் மனதில் உறுதியாகி, ஈசன் வந்தால் போவோம் என்ற நிலைக்கு வந்திருந்தது.
அதையே ஈசனிடமும் கேட்க, அவனோ தன்னிலையை விளக்க, லட்சுமிக்கு சட்டென்று ஓர் ஏமாற்றம்.
அவள் முக மாற்றங்களையே பார்த்த ஈசன், “போறப்போ ப்ரீயா போகணும்.. எந்த டென்சனும் இல்லாம.. அதுக்குதான் நேரம் பார்க்கிறேன்…” என்று சமாதனம் செய்யும் விதமாய் எழுந்தமர்ந்து சொல்ல,
“ம்ம் சரி…” என்றுமட்டும் சொன்னவள், அவன் முகம் பார்க்காமல் கிளம்ப எத்தனிக்க,
“லஷ்மி கோவமா…” என்று ஈசன் அவள் கைகளை பிடித்து இழுத்து நிறுத்த,
“என்ன கோவம்…?? ஏன் கோவம்…??” என்றவளின் குரலே ஆம் கோவம் தான் என்று சொல்லியது.
“நான் இவ்வளோ சொல்றேன்ல லஷ்மி…”
“நானும் சரின்னு சொல்லிட்டேனே…”
“சரின்னு தான் சொன்ன.. ஆனா சரியா சொல்லல…” என்றவனும் இலகு தன்மை விட்டிருந்தான்.
தான் சொல்வதை இவளே புரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி என்ற எண்ணம் வந்திருந்தது. இது ஒரு சின்ன விஷயம், அதற்கே சொன்னதை புரியாமல் கோவிக்கிறாள் என்று தோன்ற, அவனது முகமும் மாறியிருந்தது.
“உங்களுக்கு தேவை என்னோட சரி தானே மாமா.. சொல்லிட்டேன்.. போதுமா…” என்றவள் கீழே சென்றுவிட்டாள்..
அவள் போவதை தடுக்கவும் முடியாமல், முதல் முறை அவள் கேட்டதை செய்யவும் முடியாமல், தன் வேளைகளில் இருந்து தப்பிக்கவும் முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான் ஈசன்.
சம்சார சாகரம்… அத்தனை எளிதில் நீந்தி கரை கண்டிட முடியுமா என்ன… சில நேரம் தண்ணீர் குடிக்கவும் வைக்கும்… சில நேரம் கண்ணீர் சிந்தவும் வைக்கும்..