“அய்யா..” என்று மீண்டும் சத்தமாய் அழைத்து, அவர் தோள் தொட, பட்டென்று நிமிர்ந்தவர், வந்திருப்பது ஈசன் என்று கண்டதும், முகத்திலும் கண்களிலும் அப்படி ஒரு ஒளி..
என்னவோ ஒரு தைரியம் வந்தது போல் நேராய் நிமிர்ந்து அமர்ந்தவர், “ஈசா..” என,
“என்னய்யா.. என்னவோ போல இருக்கீங்க…??” என்று கேட்டபடி அவனும் ஒரு இருக்கையில் அமர,
“அது… கணக்குல கொஞ்சம் சிக்கலாகி போச்சு ஈசா…” என்று உண்மையை மறைக்காமல் சொல்ல,
“பிரச்சனையா…??” என்றான் பட்டென்று..
“அ.. அதெல்லாம் இல்ல… சரி பண்ணிடலாம்… ஆமா நீ என்ன இந்த நேரத்துல…” என,
ஒருநொடி அவர் முகத்தையே பார்த்திருந்தவன், “நம்ம மதுரை, சண்முகத்தை பார்த்தேன்.. உங்களை பார்க்க வரேன் சொல்லியிருந்தாராமே.. ரெண்டு நாள்ல வர்றேன் சொன்னார்…” என்றவன் பார்வை இன்னும் அவர் முகத்தில் தான் நிலைத்திருந்தது..
‘என்னவோ சரியில்லை…’ என்று மனதில் பட்டது அவனுக்கு..
“ஓ… சண்முகமா…” என்று கேட்டவர், துண்டால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டார்.. ஈசனுக்கு உறுதியே ஆகிவிட்டது.. என்னவோ இருக்கிறது என்று..
“அய்யா… சொல்லுங்க என்ன பிரச்சனை… இனியும் மறைக்காதீங்க…” என்று சற்றே அழுத்தமாய் கேட்க,
மகனின் முகத்தை பார்த்தவர், “எல்லாம் இந்த பண விஷயம் தான்… ஆனா பிரச்சனை இல்லை.. பார்த்துக்கலாம்…” என்றார் சமாளிப்பாய்..
“இல்ல.. எனக்கு என்னவோ சரின்னு படலை… என்னனு சொல்லுங்கய்யா..”
“இந்த சண்முகம், ரெண்டு வருஷம் முன்னாடி நாற்பத்தி ஐந்து லட்சம் கொடுத்தான்.. ரொட்டேசன் பண்ணி கொடுங்கன்னு… ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு கோடியா திரும்ப தரணும்னு தான் பேச்சு… போன வாரத்தோட ரெண்டு வருஷம் முடிஞ்சது.. அதுக்கு தான் என்னை பார்க்க வரேன்னு சொன்னான்… பணமெல்லாம் கைல இருக்கு.. ஆனா இது வேற ஒரு சிக்கல்…”
ஈசனுக்கோ இதெல்லாம் தேவை தானா என்று தோன்றியது.. வயது ஆகிறது.. இருக்கின்ற பணம், தொழில் போதாதா.. அவனுக்கே தெரிந்தது, முன் போல அவரால் இப்போது அலைய முடியவில்லை என்று..
லட்சம் கோடியேல்லாம், கஜேந்திரன் சர்வ சாதாரணமாய் புரட்டுபவர் தான் ஆனால், சிக்கல் பிரச்சனை என்று வரும் போது சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறுமல்லவா..
“என்ன சிக்கல்…” என்றான் கேள்வியாய்..
“இல்ல சண்முகம் கொடுத்த பணத்தை மூனார்ல ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஓனர் தான் வாங்கினார்.. வட்டி எல்லாம் சரியாதான் வந்துச்சு… ஆனா அசல் கேட்க போக… அதான் கொஞ்சம் இழுத்தடிப்பு… அதுமில்லாம இந்த வேலு வேற மறதியில தேதி எல்லாம் மாத்தி மாத்தி போட்டு எழுதிட்டான்.. அதுல வேற கொஞ்சம் திகட்டல்…” என்றவர் அமைதியாய் அமர்ந்திருக்க,
அவர் முகமே சொல்லியது, இது மட்டுமில்லை இன்னும் நிறைய இருக்கிறது என்று..
“அய்யா… இது மட்டும் தானா??? இல்லை வேறெதுவும் இருக்கா… நான் என்ன செய்யணும் அதை சொல்லுங்க..” என்று ஈசன் இன்னும் தீவிரமாய் கேட்க,
“நிஜமா ஈசா… ஒன்னும் பிரச்சனை இல்லை… சண்முகம் வந்தா கொடுத்திடலாம்.. நீ இதெல்லாம் போட்டு மனசை உழப்பிக்காத…. இத்தனை வருசத்துல இதுபோல எத்தனை பார்த்திருப்பேன்….” என்று சமாளிப்பாய் சொல்ல, ஈசனுக்கோ கோவம் தான் வந்தது..
அவர் முகமே சொல்லியது என்னவோ பெரிய பிரச்சனை என்று.. கேட்டாலும் இதற்குமேல் ஒன்றும் சொல்லமாட்டார் வேறு.. என்னடா செய்வது என்று யோசித்தான்.. சரி இன்றே லட்சுமியிடம் பேசிவிட்டு இரண்டொரு நாளில் இங்கேயே திரும்பி வந்துவிட வேண்டும்.. வந்தபின் இங்கே இருந்துகொண்டு என்ன ஏதென்று கவனித்தால் தான் தெரியும்.. இதெல்லாம் ஈசன் மனத்தில் தோன்ற,
“ஹா ஹா….” என்று சிரித்த கஜேந்திரன், மகனது கரங்களை இறுக பற்றி,
“நீ இப்படி கேட்டதே சந்தோசமா இருக்கு ஈசா….” என்றவர், “எல்லாம் சரியாகும்…” என்று மகனுக்கு நம்பிக்கையாய் சொல்ல, ஈசன் மனமோ எல்லாமே சரியாகி தான் ஆக வேண்டும் என்று உறுதிகொண்டான்..
“சரிங்கய்யா… நான் கிளம்புறேன்…” என்று வெளிவர, மரகதம் ஈசனை நோக்கி வந்தார், “ஈசா…” என்றபடி..
“ம்மா… என்ன நடக்குது… உங்களுக்காது என்னனு தெரியுமா…???”
“எனக்கென்ன தெரியும் என்னவோ உன் அப்பாவும், வேலு அண்ணனும் அப்பப்போ பேசிக்கிறாங்க… ஏன் ஈசா எதுவும் பிரச்சனையா..??” என்றார் கலக்கமாய் பார்த்து..
“ம்ம் என்னை கேளுங்க… வீட்ல தானே இருக்கீங்க இதெல்லாம் கவனிக்கவேணாமா?? அவர் சொல்லாட்டியும் நீங்களா என்னனு தெரிஞ்சுக்க வேணாமா…??? என்னம்மா..”
“இல்லடா முதல்ல இருந்தே தொழில் விஷயம் எல்லாம் அப்பா வீட்ல பேசமாட்டார்…”
“ரொம்ப நல்ல கொள்கை…” என்றவன், “கொஞ்சம் அய்யாவ கவனிங்க…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்..
“இதென்னா இவனா வந்தான்… அவன்பாட்டுக்கு பேசுறான்… கிளம்பிட்டான்… நல்லா வந்து வாச்சாங்க..” என்று நொடித்துக் கொண்டே மரகதம் தன் வேலை பார்க்க போனார்..
ஈசன் அடுத்து நேராய் சூப்பர் மார்க்கெட் தான் போனான்.. போகும் போதே துரைசாமி வேறு அவன் கண்ணில் பட, ஈசனுக்கு இன்னும் எரிச்சல் கூடியது.. எப்படியும் அடுத்து துரைசாமியும் இரண்டொரு மாதத்தில் புதிய சூப்பர் மார்க்கெட் தொடங்கி விடுவான்.. அதன் பின் ஈசன் சூப்பர் மார்கெட்டுக்கும் சற்று தொய்வு ஏற்படும்.. அதை வேறு சரி செய்யவேண்டும்..
ஈசன் கடைக்கு வந்ததையோ, அறைக்குள் சென்றதையோ லட்சுமி கவனிக்கவே யில்லை.. ஆட்கள் கூட்டம் இருந்தது… பணத்தை கணக்கு பார்த்து வாங்கி போட்டு, மீதம் சரியாய் கொடுத்து, என்று அவளுக்கு அதிலே கவனம் இருக்க, ஈசன் வந்ததை பார்க்கவில்லை..
நேராய் உள்ளே சென்றவனோ, அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்து, எதிரே இருந்த மேஜையில் இருக்கும் கணினியை இயக்க, அதுவோ சிசிடிவி கேமெரா ஒளிபரப்பை காட்ட, ஈசனின் பார்வையோ லட்சுமியிலேயே நிலைத்தது..
லேசாய் முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தாலும், கர்ம சிரத்தையாய் வேலை செய்துகொண்டிருந்தாள்.. அவளது பாவனைகள் கண்டு லேசாய் முறுவல் பூக்க, அத்தனை நேரம் இருந்த டென்சன் கொஞ்சம் குறைவது போல் இருந்தது.. பார்த்துக்கொண்டே தான் இருந்தான்… கொஞ்சம் கொஞ்சமாய் வேறு சிந்தனைகள் மறைந்து அவள் சிந்தனை மட்டும் புகை போல் அவன் புத்தியில் பரவ, அவளை தவிர வேறெதுவும் அப்போது மனதில் இல்லை…
நேரம் இப்படியே கடக்க, மதிய உணவு மரகதம் கடைக்கே கொடுத்துவிட்டிருந்தார்..
“இதான் நீ கடை பார்த்ததா??? உள்ள யார் வந்ததுன்னு கூட தெரியாம..??” என்று கேட்டவனுக்கு முகத்தில் சிரிப்பு..
“அதுசரி.. கூட்டம் பார்த்தீங்கள்ள.. நீங்க கமுக்காமா வந்திருப்பீங்க…” என்றபடி கைகழுவி வந்தவள், இருவருக்கும் தட்டு எடுத்து வைக்க, அவனுக் கை கழுவி வந்தவன்,
“லஷ்மி… நம்ம பெரிய வீட்டுக்கே போயிடலாமா…” என்றான்..
வீட்டிற்கு போய் சாவகாசமாய் பேச என்று எல்லாம் ஈசன் காத்திருக்க முடியாது.. அதான் இப்போதே கேட்டுவிட்டான்.. ஆனால் லட்சுமிதான் அவன் தட்டில் சாதமிடும் வாக்கில் அப்படியே நின்றுவிட்டாள்.. ஈசன் சொன்னது நிஜம்தானா என்று அவளால் உணர முடியவில்லை…
“மாமா….” என்று ஆச்சர்யமாய் கேட்க,
அவனே அவள் கை பிடித்து தன் தட்டிலும், அவள் தட்டிலும் சாதம் போட்டவன், “தோணிட்டே இருக்கு லஷ்மி.. அதான் உன்கிட்ட பேசிட்டு முடிவு எடுக்கலாம்னு…” என,
“நிஜ… நிஜமாவா…???” என்றாள் இன்னும் நம்பாமல்..
“ம்ம் போலாமா…” என்று அவன் கேட்க, லட்சுமிக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.. அனைவருமே எதிர்பார்த்தது இதை தானே… முன் போல் அனைவரும் ஒன்றாய் இருந்தால் எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும்..
லட்சுமிக்குமே அங்கே போகவேண்டும் என்று தானே தோன்றியது.. எப்படியாவது இவனிடம் பேசி சம்மதம் சொல்ல வைத்துவிட வேண்டும் என்று தானே நினைத்தாள். ஆனால் அவனே சொல்லவும் அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், அரக்க பறக்க முழித்தவள், பட்டென்று ஈசன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டாள்..
“நானே சொல்லனும்னு இருந்தேன் மாமா… நீங்களே சொல்லிட்டீங்க…” என்று மகிழ்ச்சியாய் சொல்ல, அவள் முத்தமிட்டத்தில் இருந்து இன்னும் மீண்டிராதவன்,
“லஷ்மி இப்போ என்ன பண்ண..??” என்றான்.
“என்ன பண்ணேன் ஒண்ணுமில்ல… வீட்ல சொல்லிடலாமா… நம்ம வரோம்னு…” என்று பேச்சை மாற்ற,
“ஒன்னு….” என்றான் ஈசன்..
“என்ன??? என்ன ஒன்னு…” என்று லட்சுமி புரியாமல் கேட்க,
“நீயா இப்படி கிஸ் பண்ணது…” என,
“ஹா…!!!!! பண்ணதே இல்லையா..” என்றாள் குறும்பாய்.
“ம்ம்ம்ஹும் அது வேற இது வேற… ஆனா பரவாயில்ல லஷ்மி… நம்மளை கண்டுக்காம வேலை பார்க்கிறாளேன்னு நினைச்சேன்… ஆனா இது கொஞ்சம் ஓகே தான்…” என்று போனால் போகிறதென்று சொல்வது போல் சொல்ல,
“ஓ… வேலை வேலைன்னு நான் தான் உங்களை கண்டுக்காம இருக்கேனா…???” என்று கேட்டவள் முகத்தில் சட்டென்று ஒரு கோவம் வந்து போனது…