அத்தியாயம் — 10
மாலை ஆறரை மணிபோல் வீட்டிற்க்கு வந்தவன்.. ‘ஆதவா.. நம்ம ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்றவங்களெல்லாம் ட்ரீட் கேக்கிறாங்க.. நீ ஊருக்கு போறதுக்குள்ள ஒரு நாள் அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு சின்ன பார்ட்டி மாதிரி அரேன்ஜ் பண்ணிடலாமா..?”என்றான் சூர்யா.
‘நாளைக்கே பண்ணிடலாம் சூர்யா..” என்றான் ஆதவன்.
‘அண்ணி.. திலகாக்கு கிராண்டா எதாவது டிரெஸ் எடுத்திங்களா..?”
‘மெட்டீரியல்தான் பிராண்டடா வாங்கினேன்.. ஆனா பார்ட்டிக்கு போடுற அளவுக்கு கிராண்டா எடுக்கல.. உனக்கு திலகா சாரி கட்டிங்கிறது பிடிக்கலைன்னு சொன்னதால சாரி எதுவும் எடுக்கலை.. சுடிதார் மட்டும்தான் எடுத்தேன்..” என்றாள் கீர்த்தி.
‘பரவாயில்லண்ணி.. நாளைக்கு பார்ட்டிக்கு திலகா சுடிதாரே போட்டுக்கட்டும்..” என்றவன்.. ‘சுடிதாரைப் பார்த்ததும் என்ன சொன்னா..?” என்றான்.
‘யாரோ என்னவோ செய்துக்கோங்கன்ற மாதிரி உக்கார்ந்திட்டிருந்தா.. இந்த சுடிதாரெல்லாம் உனக்குத்தான்னு சொன்னேன்.. நானாவது இதெல்லாம் போடறதாவதுங்கிற மாதிரி பார்த்தா.. நீ எப்படி அவளை போட வச்ச..?” என்றாள் ஆச்சர்யமாக.
சிரித்தவன்.. ‘அவகிட்ட கெஞ்சினா வேலைக்காதுன்னு எனக்கு தெரியும்.. மிரட்டித்தான் போடவச்சேன்..” என்றான்.
‘திலகா பாவம் சூர்யா.. ரொம்பவும் குழப்பத்தில இருக்கா.. சும்மா எதுக்கெடுத்தாலும் மிரட்டாத..” என்றாள் கீர்த்தி.
தானும் வருத்தமடைந்தவன்.. ‘இப்போ இருக்க சுட்சுவேசன்ல மிரட்டலன்னா ஒன்னும் வேலையாகாது.. இன்னும் பிரசாத் நினைவோடதான் இருக்கா.. பழைய நினைவுலயிருந்து அவளை மீட்கனும்னா மிரட்றதைத் தவிர வேற வழியே இல்ல..” என்றான் தளர்வாக.
‘நாளைக்கு பார்ட்டி இருக்குன்னு திலகாக்கு தெரியுமா..?”
‘இனிதான் அண்ணி சொல்லனும்.. என்னை கல்யாணம் செய்துகிட்டதை பெரிய கொல குற்றமா நினைச்சிட்டிருக்கா.. அவ தம்பி வாங்கிட்டு வந்த பூவைக் கூட சாமிக்கு வைக்கப்போனா.. உனக்குன்னுதான பாலா ஆசையா வாங்கி வந்தான்.. நீ வச்சிக்கோ.. சாமிக்கு வேற வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன்.. நான் சொன்னதை காதுலயே வாங்காம சாமிக்குதான் பூவை வச்சா..
ஏன் பூ வச்சிக்கமாட்டியான்னு கோபமா கேட்டேன்.. பதிலுக்கு அவளும் அத்தனை கோபமா நான் சாமிகிட்ட போனதும் என் போட்டோக்கு வச்சிவிடுங்கன்னு கத்திட்டு அழறா..” என்றான் வேதனையாக.
தானும் வருத்தமடைந்து.. ‘எதுன்னாலும் நமக்குள்ள இருக்கிறவரைக்கும் ஒன்னுமில்ல சூர்யா.. நாளைக்கு பார்ட்டில அத்தனைபேர் முன்னாடி எதாவது கலாட்டா செய்திடப்போறா..” என்று கீர்த்தி பதற..
‘திலகாவை நான் பார்த்துக்கிறேன்.. அதுக்கு முன்ன நம்ம அம்மாவை கொஞ்சம் இயல்பா இருக்க சொல்லுங்க அண்ணி.. திலகா எதாவது கலாட்டா செய்தாக்கூட யாரும் ஒன்னும் நினைக்கமாட்டாங்க.. ஏன்னா அவளோட சூழ்நிலை எல்லாருக்கும் தெரியும்.. ஆனா அம்மா ஒருமாதிரி இருந்தாங்கனா.. அதுதான் எனக்கு பெரிய அசிங்கமாய்டும்.. அதோட ஏற்கனவே கில்ட்டி ஃ பீல்ல இருக்கிற திலகா இன்னும் ஒரு மாதிரி ஆகிடுவா..“ என்றான் வருத்தமாக.
‘ச்சே.. ச்சே.. அத்தை அப்படியெல்லாம் இருக்கமாட்டாங்க சூர்யா.. அத்தைகிட்ட நான் சொல்லிக்கிறேன்..” என்று சூர்யாவை தேற்றினாள் கீர்த்தி.
பெருமூச்சிழுத்து.. ‘சரிங்கண்ணி நாளைக்கு என்ன ஃ புட் ஆர்டர் பண்ணலாம்..?” என்றான் ஆவலாக.
‘அதெல்லாம் சஸ்பென்ஸ்.. ஃ புட் ஐய்ட்டம் நான் பார்த்துக்கிறேன்.. நீ ஆது முத்து எல்லாருமா சேர்ந்து வீட்டை டெகரேட் பண்ணுங்க..” என்றாள்.
‘அவ்ளோதான..? செய்துட்டா போச்சி..” என்று சந்தோசித்தவன்..
‘சரிங்கண்ணி.. நான் போய் திலகாகிட்ட இந்த விசயத்தை சொல்றேன்.. இப்பவே சொன்னாதான் நைட்டுக்குள்ள அவளை தயார் செய்யமுடியும்..” என்று தனதறைக்குள் போனான்.
கன்னத்தில் கைகொடுத்தபடி ஏதோ யோசனையோடு அமைதியாக அமர்ந்திருந்தாள்.. ‘கொஞ்சம் தண்ணிகொடு திலகா..” என்றான்.
பக்கத்திலதான இருக்கு என்பதுபோல் திலகா பார்க்க.. அவளின் பார்வை புரிந்தாலும்.. ‘காது கேட்கலையா..? தண்ணி வேணும்னேன்..” என்றான்.
‘அங்கதான இருக்கு..? ஏன் எடுத்து குடிக்கமாட்டிங்களா..? நான் என்ன உங்களுக்கு வேலைக்காரியா..?” என்றாள் கடுப்பாக.
திலகவதியை மெச்சுதலாய் பார்த்தபடி.. மெல்ல அவளருகில் நெருங்கி நின்றவன்.. ‘அப்போ நீ யாரு எனக்கு..?” என்றான் மைய்யலாக.
அவனின் பார்வையிலும் கேள்வியிலும் பே என விழித்தவள்.. பின் சுதாரித்து.. இவன்கிட்ட மல்லுக்கு நிக்கிறதுக்கு பேசாம தண்ணியை எடுத்து கொடுத்திடலாம் என நினைத்து விலகப் பார்க்க.. அவளின் கைப்பிடித்து நிறுத்தியவன்.. ‘நீ யாரு எனக்குன்னு கேட்டேன்..” என்றான் மீண்டும்.
திலகவதி அமைதியாகவே இருக்க.. இன்னும் நெருங்கியவன் அவளின் இடையை ஒரு கையால் வளைக்க.. திலகவதியின் கண்கள் கண்ணீரை வெளியனுப்ப.. அவளின் கண்ணீரை தன் விரல்கொண்டு துடைத்தவன்.. ‘நீ யாரு எனக்கு..?” என்றான் மீண்டும்.
சொல்லாமல் விடமாட்டான் என்றுணர்ந்தவளுக்கு சூர்யாவின் மீதான வெறுப்பு மேலும் அதிகமாக.. ‘என்னோட இரண்டாவது புருசன்..” என்று இரண்டாவது என்ற வார்த்தையை அழுத்தமாகவும் ஆத்திரமாகவும் சொல்ல..
சூர்யாவின் பொறுமை காற்றில் பறக்க.. திலகவதியின் மீதான பிடியை இன்னும் அதிகமாக்கியவன்.. ‘ஆமா.. இரண்டாவது புருசன்தான்.. ஆனாலும் புருசனாச்சே.. அதனால.. இனி உன்னை வேலைக்காரியா நடத்தாம எனக்கு பொண்டாட்டியா நடத்தட்டுமா..?” என்று மறு கையால் அவளின் கன்னத்தை அழுத்தத்தோடு வருடியபடி கேட்க..
பதிலின்றி தவித்த திலகவதியின் முகம் உச்சபட்ச அதிர்ச்சியைக் காட்ட.. மனம் அறுவருப்பில் கூச.. முடிந்தவரை போராடியும் சூர்யாவின் நெருக்கத்தை தளர்த்த முடியாத இயலாமையில் கண்கள் மீண்டும் கண்ணீரை வெளியனுப்ப..
திலகவதியின் பரிதவிப்பான நிலையை பார்த்த சூர்யாவின் கோபம் சற்றே குறைய.. தன் பிடியை தளர்த்தியவன்.. பிறகு மெல்ல இடையை விடுவித்து அவளின் கையை மட்டும் பிடித்துக்கொண்டு.. சற்றுநேரம் அவளையே பார்த்திருந்து.. பின்னர் கையையும் விடுவித்து.. ‘தண்ணி எடுத்து தா..” என்றான் கனிவாக.
சொன்னதை செய்யும் அடிமையாய் திலகவதி தண்ணியை எடுத்து நீட்ட.. மனம் வலிக்க வாங்கிப் பருகினான் சூர்யா.
சூர்யா தண்ணீர் குடித்ததும் டம்ளரை வாங்கிவைக்க திலகவதி கையை நீட்ட.. தன் கோபத்தை குறைக்கவேண்டும் என்று தனக்குள் நினைத்து.. டம்ளரை திலகவதியிடம் கொடுக்க.. வாங்கி அருகிலிருந்த டேபிள்மேல் வைத்தவள் இன்னும் என்ன கேட்பானோ என்ற பாவனையோடும் தவிப்போடும் சூர்யாவை பார்த்திருக்க..
அமைதியாக கட்டிலில் அமர்ந்தவன்.. ‘உக்காரு திலகா..” என்றான் மென்மையாக.
திலகவதி சோபாவில் அமரப்போக… ‘இங்க வந்து உக்காரு..” என்றான் கட்டிலை காண்பித்து. ஒரே கட்டிலில்தான் தூங்குகிறார்கள்.. அந்த பெரிய கட்டிலின் ஓரத்தில் படுப்பவள்.. தூக்கம் வருகிறதோ இல்லையோ படுத்ததும் கண்மூடிக்கொள்வாள் திலகவதி. தூங்கும் நேரம் தவிர்த்து திலகவதி கட்டிலில் அமர்ந்ததில்லை.. சூர்யா வீட்டில் இல்லையென்றாலும் கீழேதான் ஒருமூலையில் அமர்ந்திருப்பாள். எனவே சூர்யாவோடு கட்டிலில் அமரத்தயங்கி நிறக்க..
மீண்டும் கட்டிலை காட்டி.. ‘உக்காரு..” என்றான் மென்மையாகவே.
திலகவதி அமர.. ‘நீ இயல்பா இருந்தினா.. நான் உன்னை எந்த தொல்லையும் பண்ணமாட்டேன்..” என்று வருத்தத்தோடு சொல்ல.. திலகவதி தலைகுனிய..
‘நாளைக்கு நம்ம வீட்ல ஒரு பார்ட்டி இருக்கு..” என்க.. என்னவோ இருந்திட்டு போகுது என்ற நினைவோடு திலகவதி அதே நிலையில் அமர்ந்திருக்க..
‘பார்ட்டில முக்கியமான ஆளே நீதான்..” என்றான் மெல்ல..
அதிர்ச்சியோடு தலைநிமிர்ந்தவள்.. வேணாம் என்பதுபோல் பாவமாய் தலையாட்ட.. ‘எனக்கும் உன்னை கஷ்டப்படுத்தனும்னு இல்ல திலகா.. என்னோட ஒர்க் பண்ற டாக்டர்ஸ்.. நர்ஸ்சுங்க.. ஹாஸ்பிட்டல்ல வேலை செய்றவங்கள்லாம் கேட்க்குறாங்க.. நம்ம கல்யாணத்துக்கும் யாரையும் கூப்பிடல இல்ல.. அதனால என்னால தவிர்க்க முடியல..“ என்று பொறுமையாய் விளக்கினான்.
நடிப்புக்கள்ளன் திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சிட்டான்.. என உள்ளுக்குள் மருகியவள்.. ‘என்னை கஷ்டப்படுத்த வேணாம்னா என்னை கல்யாணமே நீங்க செய்திருக்க கூடாது.. எதுக்கு செய்திங்க..?” என்று கோபத்தோடு கேட்க..
இவர்களுக்கிடையில் இரண்டு ஆள் அமரும் இடைவெளியிருந்திருக்க.. தற்போது ஒரு ஆள் அமரும் இடைவெளியை குறைத்து அவளருகே நெருங்கி அமர்ந்தவன்..
‘எல்லாரும் எதுக்கு கல்யாணம் செய்துக்குவாங்களோ அதுக்குத்தான் நானும் செய்துகிட்டேன்..” என்றான் அழுத்தத்தோடு.
சூர்யா நெருங்கவும் பயந்தவளின் உடல் தானாய் எழுந்து நிற்க்க.. ‘நான் இன்னும் பேசி முடிக்கல.. உக்காரு..” என்றான் அதிகாரமாக.
ஒரு முடிவிற்க்கு வந்தவளாய் அமர்ந்தவள்.. ‘அவங்க எல்லாரும் இங்க வந்து சாப்பிடுவாங்க.. அதோடவே சாராயம் குடிப்பாங்க.. அதுக்கு பேர்தான பார்ட்டி..? எத்தனை பேர் வருவாங்கன்னு சொல்லுங்க.. எல்லாருக்கும் நானே சமைச்சிடறேன்.. எல்லாரும் வரதுக்குள்ள வேலையை முடிச்சிட்டு நான் ரூம்க்குள்ள வந்திடறேன்.. நீங்க எல்லாரும் சரியா சாப்பிடறாங்களா பார்த்துக்கோங்க..” என்று இறங்கிய குரலில் கெஞ்ச..
குழந்தையின் அறியாமைப்போல.. குமரியின் அறியாமையும் கூட இத்தனை அழகாய் இருக்குமா..? என மனைவியை ரசித்தவன்.. ‘நான் ஒரு டாக்டர்.. சாராயம் குடிக்கவெல்லாம் அனுமதிப்பேனா..? அதுவும் நம்ம வீட்ல வச்சி..?” என்றான் இயல்பாக.
நான் கேட்டதற்க்கான பதிலெங்கே என்ற பாவனையோடு திலகவதி அவனின் பதிலுக்காக ஆவலோடு காத்திருக்க.. அவளின் பார்வையைப் புரிந்தவன்..
‘சாப்பாடெல்லாம் அண்ணி ஹோட்டல்ல சொல்லிக்குவாங்க..” என்றவன்.. மிகக் கனிவாக.. ‘நீ வந்து அமைதியா உக்கார்ந்திருந்தினா போதும்..” என்றான்.
‘வேண்டாம்.. எல்லாரும் என்னை தப்பா பார்ப்பாங்க.. எனக்கு சங்கடமா இருக்கும்.. எனக்கு பிடிக்கல..” என்றாள் மன்றாடலாக.
மத்தவங்க என்ன நினைப்பாங்க என்பதுதான் உன் பிரச்சனையா..? என நினைத்தவன்.. திலகாவின் நிலையறிந்து முதலில் பார்ட்டிக்கு தயங்கியவன்.. மனைவியின் தயக்கமும் குற்றவுணர்வையும் போக்கவேண்டி.. இப்பொழுது முடிவே செய்தான் இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக செய்யவேண்டும் என்று..
‘நாளைக்கு பார்ட்டின்னு எல்லாருக்கும் சொல்லியாச்சி.. எல்லாரையும் வரசொல்லிட்டு திரும்ப வரவேணாம்னு சொல்லமுடியாது.. நீ வந்து என்னோட அமைதியா நில்லு அதுபோதும்..” என்றான் பொறுமையாக.
திலகவதியின் முகம் கலக்கத்தையே காண்பிக்க.. ‘உன்னை தப்பா பேசுற அளவுக்கு நீ ஒரு தப்பும் செய்யல.. என்னோட பிரண்ட்ஸ் யாரும் அப்படி தப்பா பேசுறவங்களும் கிடையாது.. அதையும் மீறி யாராவது உன்னை தப்பா சொன்னாலோ.. இல்ல பார்த்தாலும் கூட சரி.. என்கிட்ட சொல்லு.. நாம இரண்டு பேருமே பார்ட்டிலயிருந்து விலகிடலாம்..” என்றான் தன்மையாக.
‘உங்களுக்கு பயந்திட்டு யாரும் வெளில சொல்லமாட்டாங்க.. ஆனா உள்ளுக்குள்ள நினைப்பாங்க.. நான் வேண்டாமே..” என்று மீண்டும் மன்றாடினாள்.
பொறுமையை இழுத்துப்பிடித்தவன்.. ‘மத்தவங்களுக்காக நாம வாழக்கூடாது திலகா.. நமக்காகத்தான் வாழனும்..” என்று சொல்ல..
‘எனக்குமே பிடிக்கலயே..” என்றாள் கண்ணீரோடு.
இனி இவகிட்ட கெஞ்சினா வேலைக்காகாது என்றுணர்ந்தவன்.. ‘நம்ம கல்யாணம் கூடத்தான் உனக்கு பிடிக்கல.. ஆனாலும் நான் உன் புருசன் இல்லையா..? அதனால நான் சொல்றதைத்தான் நீ கேட்டாகனும்..” என்று அழுத்தமாக சொன்னவன்..
‘நாளைக்கு சாய்ங்காலம் பார்ட்டிக்கு நிறைய பேர் வருவாங்க.. நம்ம கல்யாணத்தப்போ வந்து நின்னியே.. அதுபோல அழுது வடிஞ்சி வீங்கின முகத்தோட வந்து நிக்கிறது.. மத்தவங்க முன்னாடி முகத்தை திருப்பறதுன்னு ஏடாகூடமா எதுவும் செய்யக்கூடாது புரியுதா..?” என்றான் கட்டளையாக.
‘எனக்கு கஷ்ட்டமா இருக்கு..” என்று கண்ணீர் விட்டபடி மெத்தைவிரிப்பை இறுக்கிப்பிசைந்தாள் வேதனையோடு.
மனதை கல்லாக்கியவன்.. ‘உன் கஷ்டம் உன்னோட இருக்கிறவரைக்கும் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா நாளைக்கு பார்ட்டியில உன்னால எனக்கு எதாவது கஷ்டம் வந்தது… அப்புறம் உனக்குத்தான் ரொம்ப ரொம்ப கஷ்ட்டமாய்டும்..” என்று அர்த்தமான பார்வையோடும் அழுத்தத்தோடும் சொல்ல..
திலகவதி குனிந்த நிலையிலேயே கேட்டுக்கொண்டிருக்க.. ‘எனக்கு பசிக்குது..” என்றான்.
திலகவதி எழுந்திரிக்கவும்.. ‘நான் போய் இரண்டுபேருக்கும் டிபன் எடுத்திட்டுவரேன்.. நான் வரதுக்குள்ள முகத்தை கழுவிட்டு சாப்பிட ரெடியாகு..” என்று வெளியே போகவும் மீண்டும் பொத்துக்கொண்டு வந்தது அழுகை.
வருவதற்க்குள் முகத்தை கழுவவில்லை என்றால் அதற்க்கும் எதாவது செய்வானே என்று அழுகையோடே சென்று முகத்தை கழுவி வர.. அப்பொழுதும் கண்ணீர் நின்றபாடில்லை.
‘வா.. சூர்யா.. சோனு சித்தியை சாப்பிட கூட்டிட்டுவா..” என்று கீர்த்தி சொல்ல..
‘பொண்ணுமா.. இங்க வா..” என சொல்லி சோனுவை தூக்கிக்கொள்ள..
‘தம்பி டிபன் எடுத்து வைக்கட்டுங்களா..?” என்று முத்து கேட்க..
‘கொஞ்சம் பொறுத்து சாப்டுக்கிறேன் முத்து.. நாளைக்கு வீட்டை டெக்கரேட் செய்ய வருவாங்க.. கொஞ்சம் பக்கத்திலயிருந்து பார்த்துக்கோங்க.. எனக்கு காலைல ஹாஸ்பிட்டல் போயே ஆகனும்..” என்று சொல்ல..
‘கீர்த்தி பொண்ணு சொன்னாங்க தம்பி.. நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்ல..
‘சரி நீங்க கிளம்புங்க..” என்றவன் முத்து கிளம்பியதும்.. ‘அம்மா சாப்ட்டாங்களாண்ணி..?” என்றான்.
‘இப்பதான் சாப்ட்டு ரூம்க்கு போனாங்க..” என்றாள்.
‘நாளைக்கு பார்ட்டிப்பத்தி சொன்னிங்களா..? ஆதவன் எங்க..?” என்று கேட்க..
‘சொன்னேன் சூர்யா.. ஆது அத்தையோடதான் பேசிட்டிருக்கார்..” என்றாள்.
‘நானும் அம்மாகிட்ட ஒருவார்த்தை சொல்லிடறேன்.. எத்தனைபேர் சொன்னாலும நான் சொல்லலைன்னா வருத்தப்படுவாங்க..” என்று தன் அன்னையைத் தேடி போனான்.