—————————-
சூர்யாவைக் கண்டதும் கமலம் தன் கண்களைத் துடைக்க.. இத்தனைநேரம் திலகவதியின் அழுகையை நினைத்து மனதில் தவித்திருந்தவன்.. தற்போது அன்னையின் அழுகையில் மேலும் ஓய்ந்தவனாய்..
‘நீங்க இப்படி அழற அளவுக்கு நான் என்னம்மா செய்துட்டேன்..?” என்றான் வருத்தத்தோடு.
‘ஏய் நீ பீல் பண்ணாத சூர்யா.. இப்போதான் திலகாப்பத்தி அம்மாகிட்ட சொல்லிட்டிருந்தேன்.. போகப்போக அம்மாவும் புரிஞ்சிப்பாங்க..” என்றான்.
ஆதவனை விடுத்து.. ‘இப்போ என்னம்மா..? நாளைக்கு பார்ட்டியை கேன்சல் செய்திடவா..?” என்றான் தன்மையாகவே.
‘என்ன பேச்சு பேசறான் பார்த்தியா ஆதவா..?” என்று கமலம் கண்கலங்க..
‘ப்ச்.. அழாதிங்கம்மா..” என்று தன் அன்னையின் கண்களை துடைத்துவிட்டு..
‘அம்மா உன் சந்தோசத்தை கெடுக்க நினைப்பாங்களா சூர்யா..?” என ஆதவன் அதட்ட..
‘உனக்கு கல்யாணம் ஆனப்போ அண்ணிகிட்டயிருந்து அம்மா இப்படித்தான் விலகியிருந்தாங்களா ஆதவா..? விளக்கேத்து கீர்த்தி.. இதப்பண்ணு அதப்பண்ணுன்னு எத்தனை சந்தோசமா இருந்தாங்க..?
எனக்கு கல்யாணமாகி மூனு நாளாகுது.. முதல்ல திலகா முகத்தையாவது பார்த்தாங்களான்னு கேளு..” என்றான் வேதனையாக.
கமலம் தலைகுனிய.. ‘டேய்.. போகப்போக எல்லாம் சரியாகிடும் சூர்யா..” என்று சூர்யாவை ஆதவன் தேற்ற..
‘சரி திலகாதான் பிடிக்காதவ.. அவகிட்ட பேசலன்னு வை.. திலகாவோட என் கல்யாணம் முடிவானதிலயிருந்து.. இந்த பத்து பதினைஞ்சி நாளா என்கிட்ட எத்தனை முறை பேசுனாங்கன்னு கேளு..” என்றான் தன் அம்மாவை ஏக்கமாய் பார்த்தபடி.
மகனின் ஏக்கத்தை தாள முடியாதவராய்.. ‘சூர்யா…” என தன் மகனின் தலையை தன் மார்போடு சேர்த்துக்கொண்டு கண்ணீர் விட..
சற்றுநேரம் அன்னையிடம் தன் தவிப்பை போக்கியவன்.. ‘பிரசாத்துக்கும் திலகாக்கும் கல்யாணம் முடிஞ்ச அஞ்சாவது நாள் பிரசாத் டியூட்டிக்குப் போய்ட்டான்.. டியூட்டிக்குப் போன இரண்டாவது நாள்லயே இறந்துட்டான்..“ என்று கண்ணீர் வடித்தவன்..
‘இதுல திலகாவோட தவறு என்னம்மா இருக்கு..? அவ பாவம்மா.. உன்னை மாதிரியே ரொம்ப நல்லவ.. கல்யாணம் செய்துக்கன்னு எனக்கு திலகாவைத்தான் பிடிச்சிருந்தது..” என்று கனிந்த குரலில் விளக்கம் கொடுக்க..
‘அதான் நினைச்சதை சாதிச்சிட்டியே.. அப்புறமென்ன..?” என்று கமலம் பொய்யாய் கோபிக்க..
‘என்னோட சின்னவயசில நீP பெரியாளா ஆனதும் நிறைய பேர்க்கு உதவி செய்யனும்னு அப்பா சொல்லிட்டே இருப்பார்.. அப்பா போனதுக்கப்புறம் நான் செய்யிற எல்லா நல்ல காரியத்துக்கும் நீங்களும் உறுதுணையா இருந்திங்க.. நானும் ஆசைப்பட்டதெல்லாம் செய்துட்டிருந்தேன்.. அதேபோல திலகாவை ஆசைப்பட்டேன்.. எனக்கு பிடிச்சவளை நீங்க ஏத்துப்பிங்கன்னு நம்பினேன்.. கல்யாணமும் செய்துகிட்டேன்.. உங்க வளர்ப்பு அப்படி.. நான் என்ன செய்ய..?” என்று சூர்யா தன் அன்னையை பெருமையாய் பார்க்கவும்..
கமலம் சிரிக்கவும்.. ‘மாத்திரை சாப்ட்டிங்களாம்மா..?” என வாஞ்சையாய் கேட்க..
‘டைம் ஒன்பதாகுது சூர்யா.. திலகாவை கூட்டிட்டு சாப்பிட வா.. அத்தை நீங்க மாத்திரை சாப்பிடுங்க..” என்று சொன்ன கீர்த்தி தன் அத்தைக்கான மாத்திரையை எடுத்து கொடுக்க.. வாங்கி குடித்த கமலம்..
‘போய் சாப்ட்டு படு சூர்யா..” என்று கனிவாய் சொல்ல.. பெருகிய நிம்மதியோடு சரி என்பதாய் தலையசைத்து எழுந்தவன்..
‘அண்ணி எனக்கும் திலகாக்கும் டிபன் கொடுங்க.. நான் ரூம்க்கு எடுத்திட்டு போய் சாப்ட்டுக்கிறேன்..” என்று சொல்ல..
கொழுந்தனின் முகவாட்டம் புரிந்தவளாய்.. ‘பார்ட்டில கலந்துக்கமாட்டேன்னு திலகா அழுதாளா..?” என்று வருத்தத்தோடு கேட்க..
ஆமாம் என்பதாய் தலையசைத்தவன்.. ‘அவ எதுக்குத்தான் அழாம இருக்கா..? அவளை நான் பார்த்துக்கிறேன் அண்ணி.. நீங்க சாப்ட்டிங்களா..? பொண்ணுமாங்க தூங்கிட்டாங்களா..?” என கேட்டான் இயல்பாய்.
‘சின்னவ தூங்கிட்டா.. சோனா கேம் விளையாண்டுட்டிருக்கா.. நான் பக்கத்தில போனாதான் தூங்குவா.. நீ வா நான் டிபன் தரேன்..” என்று வெளியேறினாள்.
சூர்யா டிபனோடு உள்ளே வரவும்.. திலகவதி தன் கண்களைத் துடைக்க..
‘உன்னை முகம் கழுவிட்டு சாப்பிடத்தான ரெடியாக சொன்னேன்..?” என்று அதட்ட..
‘கொஞ்சம் முன்னதான் மூஞ்சி கழுவினேன்..” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.
‘போய் இன்னொருமுறை கழுவிட்டு வா..” என்றான்.
திலகவதி முகம் கழுவி வருவதற்க்குள் சாப்பிட ஏதுவாக தட்டை வைத்து காத்திருந்தவன்.. ‘வந்து சாப்பிடு..” என்று தானும் சாப்பிட ஆரம்பித்தான்.
திலகவதியும் அமைதியாக சாப்பிட்டு முடிக்க.. ‘தட்லயே கைகழுவு..” என அதட்டலாகவே சொன்னவன்.. பிறகு தானே எடுத்துபோய் கிச்சனில் வைத்து வர..
கட்டிலின் ஓரத்தில் முகத்தை சுவற்றுக்கு காட்டியபடி படுத்திருந்த திலகாவிடம்.. ‘ம்ம்.. குட்.. சீக்கிரம் தூங்கு.. அப்போதான் நாளைக்கு பிரஸ்சா இருக்கமுடியும்..” என்று மெச்சுதலாய் சொன்னவன்.. சிறிதுநேரம் புத்தகத்தை புரட்டிவிட்டு பிறகு தானும் படுத்துறங்கினான்.
அடுத்தநாள் காலை வழக்கம்போல் சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு சென்றிட.. எத்தனைமுறை கீர்த்தி அழைத்தும் மாலை மூன்று மணிவரை திலகவதி வெளியிலேயே வரவில்லை.. காலை இரண்டு தோசை சாப்பிட்டதோடு சரி.. மதியம் பசியில்லை என்றுவிட்டாள்..
‘சூர்யா.. அஞ்சி மணிக்கு பார்ட்டின்னு சொன்ன.. இப்போ டைம் என்னன்னு பார்த்தியா..? இன்னும் ஒரு மணிநேரம்தான் இருக்கு.. உன்னையும் காணோம்.. திலகாவும் ரூமைவிட்டு வெளில வரமாட்டுக்குது.. சீக்கிரம் வாடா..” என்று ஆதவன் கொஞ்சம் கோபமாய் கத்த..
‘ஒரு எமர்ஜென்சி ஆதவா.. இதோ கிளம்பிட்டேன்..” என்றான் சூர்யா.
சோனா தியாவை ரெடி செய்து.. ஹோட்டலிலிருந்து வந்த பதார்த்தங்களை சரிபார்த்து.. முத்துவின் உதவியோடு அனைத்தும் தயாராய் எடுத்து வைத்தவள்.. தன்னிடம் இருக்கும் ஒரு ஒரு புது சாரியை எடுத்துக்கொண்டு திலகாவை போய் பார்க்க..
வழக்கம்போல் ஒருமூலையில் கன்னத்தில் கைகொடுத்து அமர்ந்திருந்தாள்.
‘திலகா இந்த பிளெஸ் புதுசு.. நான் இன்னும் யூஸ் பண்ணல.. சரியா இருக்கா போட்டுப்பாரு..” என்க.. காதே கேளாதவள் போல் அமர்ந்திருந்தாள்.
‘ப்ச்..” என சலித்தவள்.. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாரும் வந்திடுவாங்க திலகா..” என்று கெஞ்சலாய் சொல்ல..
‘ஏன் என்ன சொல்றா..?” என்று கதவருகே நின்றிருந்த சூர்யா கேட்க.. பயந்தெழுந்தவள்.. பிறகுதான் கீர்த்தி வைத்திருந்த சாரியைப் பார்த்தவள்..
‘அது ரொம்ப மினுக்குது.. எனக்கு இப்படி பிடிக்காது..” என்றாள் பாவமாய்.
‘சரி இரு வேற எடுத்திட்டு வரேன்..” என்று வேறு ஒரு சாரியை எடுத்துவந்து காண்பிக்க.. சரி என்பதாய் வாங்கியவள்.. இருவரையும் மாறிமாறி பார்க்க..
‘சீக்கிரம் சேன்ஜ் பண்ணு..” என்று இருவரும் வெளியேற.. ‘நான் எத்தனை முறை சொல்லிட்டிருந்தேன்.. கல்லுமாதிரி அசையவே இல்ல சூர்யா.. உன் குரலை கேட்டதும் உடனே ரெடியாக கிளம்பிட்டா.. அந்தளவுக்கு பயமுறுத்தி வச்சிருக்கியா.?” என்று கீர்த்தி பாவமாய் கேட்க..
‘நான் என்னண்ணி பண்றது..? தன்மையா சொன்னா அசறவே மாட்றா.. மிரட்டினாதான் கொஞ்சமாவது வேலையாகுது..” என்றான் தானும் பாவமாக.
பத்து நிமிடம் கழித்து திலகவதி கதவைத்திறக்கவும்.. அவள் சாரி கட்டியிருந்த விதத்தைப்பார்த்த கீர்த்தி.. ‘எப்படி திலகா இப்படி சூப்பரா கட்டியிருக்க..?” என ஆச்சர்யப்பட்டவளாய் கேட்டு.. ‘சூர்யா நீ கொஞ்சம் இங்கையே இரு..” என்று உள்ளே போய்.. திலகவதியின் சாரியை சரி செய்ய ஆரம்பிக்க..
தனது இடுப்பைக் காட்டி.. ‘அக்கா.. இங்க தெரியுது.. இன்னும் கொஞ்சம் மேல ஏத்தி கட்டிக்கிறேன்..” என்று திலகவதி சாரிக்கட்டை மாத்திக்கொண்டே இருக்க..
வெளியே நின்றிருந்த சூர்யாவின் காதினில் விழவே.. ‘அண்ணி.. “ என்றான்.
‘வா சூர்யா..” என்கவும் உள்ளே போனவன்.. திலகவதியைப் பார்த்து பிரம்மித்தான்.. அவனின் பார்வையில் இடுப்பை சாரியால் மறைத்தவாறே தலைகுனிந்தவள்.. ‘எனக்கு இப்படி கட்டிக்க பிடிக்கல.. என்னால இப்படி எல்லார் முன்னாடியும் நிக்க முடியாது..” என்று கலக்கத்தோடு சொல்லி தன் முந்தியை தோளோடு இழுத்து மூடினாள்.
இவ இப்படி போர்த்திட்டிருக்கிறதுக்கு சுடிதாரே பெஸ்ட் என நினைத்தவன்..
‘அண்ணி.. சுடிதார் போட்டுக்கட்டும்..” என்றவன்..
திலகாவிடம்.. ‘எந்த சுடிதார் போட்டுக்கிற..? எடுத்துக்காட்டு..” என்றான்.
பத்து நிமிடம் வரைதேடியவள்.. அங்கிருந்ததிலேயே குறைந்த வேலைபாடுகளுடைய ஒரு சுடிதாரை எடுத்து காண்பிக்க.. கீர்த்தி சூர்யாவை சிரிப்போடு பார்க்க.. ‘சரி இதையே போட்டுக்கோ.. கொஞ்சம் சீக்கிரம் ரெடியாகு..” என்று மீண்டும் வெளியே வந்தான்.
மீண்டும் கால் மணிநேரம் கழித்து உள்ளே போனவன் குளிக்கப்போகும் முன்.. தாலிசெயினைத்தவிர எந்த நகையும் அணியாமல் இருப்பவளை பார்வையால் வருடிவிட்டு பேனான்.
‘திலகா உன்னை ரெடிசெய்யவே எனக்கு நேரம் பத்தாது போல.. சீக்கிரம் இந்த நகைகளைப் போடு..” என்று அவளின் சுடிதாருக்கேற்றவாறு எடுத்து வைத்து போனாள்.
இவன் குளித்து இடுப்பில் ஒரு துண்டோடும் தன் உடலைப்போர்த்திய இன்னொரு துண்டோடும் வெளியே வந்தவன்.. ரூமின் கதவை தாளிட.. அடுத்து என்ன சொல்வானோ என்ற பயத்தோடு திலகவதி மிரண்டு விழிக்க..
‘நான் டிரெஸ் சேன்ஜ் பண்ண வேணாமா..? அண்ணி வந்திடுவாங்கன்னுதான் தாழ் போட்டேன்.. நீ சீக்கிரம் ரெடியாகு..” என்று நகைகளை பார்த்தவாறு சொன்னவன்.. தன்போல் தனக்கான உடையை தேர்ந்தெடுக்க ஆரம்பிக்க..
‘நீங்க டிரெஸ் பண்ணுங்க.. நான் வெளில இருக்கேன்..” என்று சொல்லிக்கொண்டே கதவை நோக்கி நகர..
‘நான் டிரெஸ் பண்ண நீ எதுக்கு வெளில போற..?” என மைய்யலாய் கேட்க..
நான் உன் புருன்னு சொல்லிகிட்டு நம்ம முன்னாடியே துணிமாத்துவானோ..? என்று கலக்கத்தோடு யோசிக்க.. அவளின் முகபாவனையில் உள்ளுக்குள் சிரித்தவன்..
‘சீக்கிரம் நகையை போடு..” என்று.. திருமணத்திற்க்கு இரண்டு நாள் முன்பாக திலகவதி உடைமாற்ற மறைப்புக்கு வேண்டி.. ரூமின் ஒரு பகுதியில் திரை ஏற்பாடு செய்திருந்தவன்.. தற்போது அதை இழுத்துவிட்டு அதனுள் தன் உடையோடு உள்ளே போக..
ஓ.. இதுக்குத்தான் இந்த துணி இங்க தொங்கிட்டிருந்துச்சா..? என ஆசுவாசமாய் நினைத்தவள் பின்னர் நகைகளைப் பார்க்க.. எல்லாம் இத்தனை பெருசா இருக்கு.. போடலன்னா என்ன செய்வானோ..? என்ற கவலையில் ஆழ்ந்திருக்க..
உடைமாற்றி வெளியே வந்த சூர்யா.. ‘உன்கிட்ட என்ன சொன்னேன்..?” என்று முறைக்க.. திடுக்கிட்டவள்..
‘இது.. இதெல்லாம் ரொம்ப பெருசா..” என்று திணற..
‘போடு நல்லாயிருக்கும்..” என்றான் இயல்பை வரவழைத்து..
‘எல்லாம் கூத்து கட்டறவங்க போடுறமாதிரி இருக்கு.. எனக்கு பிடிக்கல..” என்றாள் பாவமாய்.
‘என்ன..? கூத்து கட்டறமாதிரியா.?” என சிரித்தவன்.. மேலிருந்து கீழ்வரை மனைவியை ஆராய.. கழுத்தில் தாலிச்செயின்.. கைகளில் திருமணத்திற்க்கு முன்பாக நலங்கு வைக்கும்போது கீர்த்தி போட்டுவிட்ட கல்யாண வளவிகள் தவிர.. காலில் கொலுசு மெட்டி என எதுவுமில்லாமல் போக..
‘அண்ணி..” என்றழைத்தான்.
கீர்த்தி உள்ளே வர.. ‘இவ ஏன் மெட்டி போடாம இருக்கா..?” என்றான் கோபமாய்.
சூர்யா எந்த சடங்கும் வேண்டாம் என்று முன்னமே சொல்லியிருக்க.. ரிஜிஸ்தர் அலுவலகத்தில் நடந்த திருமணத்தால்.. தானும் கவனிக்காத கீர்த்தி அச்சோ என நினைக்க..
‘ஆதவன்கூட போய் வாங்கிட்டு வாங்க..” என்றான் திட்டவட்டமாக.
‘இப்ப டைம் ஆய்டுமே சூர்யா..” என்று கீர்த்தி இழுக்க..
‘பெரிய கடைலதான் வாங்கனும்னு இல்ல.. இங்க பக்கத்தில ஒரு சின்ன நகைக்கடை இருக்கு.. அங்க போய் வாங்கிட்டு வாங்க..” என்றான் குறையாத கோபத்தோடு.
‘சரி நான் வாங்கிட்டு வரேன்.. அதுக்குள்ள திலகாவை ரெடியாக சொல்லு..” என்று அவசரமாய் கிளம்பினாள்.
இருபது நிமிடம் வரை இருவரும் அமைதியாகவே இருக்க.. ‘சூர்யா..” என்ற கீர்தியின் அழைப்பிற்க்கு ‘வாங்க..” என்றான்.
உள்ளே வந்த கீர்த்தி கொலுசையும் மெட்டியையும் திலகாவிடம் கொடுக்கப்போக.. ‘இங்க கொடுங்கண்ணி…” என்று வாங்கியவன்.. திலகவதியைப் பார்க்க..
‘ம்ம்.. பொண்டாட்டிக்கு போட்டுவிட்டு சீக்கிரம் ரெடியாகி வெளில வாங்க.. ஹோம்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்..” என்று சிரிப்போடு சொல்லி கீர்த்தி வெளியேற..
தானும் சிரித்தவன்.. ‘இங்க கட்டில்ல வந்து உக்காரு..” என்றான்.
கொலுசைப் போடத்தான் கூப்பிடுகிறான் என்றுணர்ந்தவள்.. ‘எனக்கு வேணாம்..” என்றாள்.
‘வந்து உக்காரு..” என்று அதட்டி ரூமின் கதவை தாள்போட்டவன்.. நின்றிருந்தவளை கைப்பிடித்து இழுத்து வந்து அமர வைத்து..
‘உனக்கு பிடிக்கலன்னா நிறைய நகை வேணாம்.. இதிலிருந்து எதாவது ஒரு கம்மல் மட்டும் போட்டுக்கோ..” என்று சொல்ல..
‘எல்லாம் பெருசா இருக்கு.. எனக்கு இப்படி பிடிக்காது..” என்று சொன்னதையே சொல்ல..
ஒரு கம்மலில் இருந்து ஜிமிக்கியைப் பிரித்தவன்.. ‘இந்த ஸ்டட் மட்டும் போட்டுக்கோ..” என்று நீட்ட..
திலகவதி கையை நீட்ட.. ‘காலை மேல வச்சி உக்கார்ந்து போடு.. திருகு கீழவிழுந்தா தேடிட்டிருக்க டைம் இல்ல..” என்று கொடுத்தான்.
சூர்யா சொன்னபடி கட்டிலில் வசதியாய் உக்கார்ந்தவள் கம்மலை போட்டு முடிக்க.. ‘காலை நீட்டு..” என்றான்.
வேணாம் என்பதுபோல் திலகவதி தலையசைக்க.. கட்டாயத்தோடு அவளின் ஒரு காலை இழுக்க.. போடாமல் விடமாட்டான் என மனதில் வறுத்தெடுத்து..
‘கொடுங்க நான் போட்டுக்கிறேன்..” என்று காலை இழுத்தபடியே தன் கையை நீட்ட..
‘அதை நான் முன்ன சொல்லும்போதே செய்திருக்கனும்..” என்று சற்றே காரமாய் சொல்லி.. இருகால்களிலும் தானே கொலுசை அணிவித்து பிறகு அவளின் ஒரு காலை தன் உள்ளங்கையில் ஏந்தியவன்.. மனைவியை ஆழ்ந்து பார்த்து இரு கால் விரல்களிலும் இதமான வருடலோடு மெட்டியணிவிக்க..
மெட்டி போட்டதும் திலகவதிக்கு பிரசாத்தின் நினைவு வரவும்.. கண்ணீரை அடக்க திராணியற்றவளாள் விம்மிவெதும்ப..
திலகவதியின் நிலையைப் புரிந்தவன்.. மனைவயின் ஒரு பாதத்தில் அழுத்தமாக தன் இதழைப் பதிக்க.. திலகவதி தன் காலை உருவ வெகுவாய் போராட.. சற்று நேரம் அழுத்திப்பிடித்திருந்தவன் பிறகு தானே விடுவித்து.. மற்றொரு காலை கையில் ஏந்த.. அதிர்ச்சியோடு விழிவிரித்த திலகவதி.. பின்பு அறுவறுப்போடு முகம் சுழிக்க..
அவளின் பார்வையில் நிம்மதியடைந்தவன்.. இந்த மெட்டியை நீ வெறுப்பா பார்த்தாலும் பரவால்ல.. என் முத்தம் உனக்கு அறுவருப்பை கொடுத்தாலும் பரவால்ல.. ஆகமொத்தம் இதை பார்க்கும்போது உனக்கு என் நினைப்புதான் வரனும்.. பிரசாத் நினைப்பு வரக்கூடாது.. என நினைத்தவன்..
மற்றொரு பாதத்திலும் தன் இதழை அழுத்தமாய் பதித்து.. ‘இந்த மெட்டியைப் பார்க்கும்போது என்னோட இந்த முத்தம்தான் உனக்கு நினைப்புல இருக்கனும்..” என்று கட்டளையாய் சொல்லி உறுத்துப் பார்த்தான் மனைவியின் முகத்தை.