அத்தியாயம் — 14
அடுத்து வந்த நாட்களில் இருந்து.. திலகவதி காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவாள். கமலத்தை கவனிப்பதுதான் அவளின் தலையாய பணிபோல் அவர்களை கவனிப்பாள். பிறகு பத்து மணிக்கெல்லாம் டெய்லரிங் சொல்லிக்கொடுக்க ஒரு பெண் வந்துவிடவே அதில் கவனத்தை செலுத்துவாள்.
இப்பொழுதெல்லாம் சூர்யாவிற்க்கு தாம் என்ன செய்தால் கோபம் வரும் எனப்புரிந்திருந்தாள். எனவே அவன் கோபப்படும்படி எதுவும் செய்வதில்லை. சூர்யாவைப் பொறுத்தவரை தினமும் திலகவதி அவனிடம் பேசியே ஆகவேண்டும்.. எழுந்திரு சூர்;யா.. காபிகுடி சூர்யா.. என அன்றாடம் அவன் செய்யும் வேலைகளை இவள் சொன்னால்தான் அவன் செய்வது. அதிலும் திலகவதி கொஞ்சம் இயல்பாய் செல்லிவிட்டாளென்றால் அன்று சிரித்த முகமாக மருத்துவமணை கிளம்புவான்.
இதோ திருமணம் முடிந்து ஐந்து மாதம் முடிந்துவிட்டது.. திலகவதியோடு தன் மகனின் கல்யாணம் சுத்தமாக பிடிக்காமல் இருந்த கமலத்திற்கு இப்பொழுதெல்லாம் திலகவதியை பிடித்திருந்தது.
திலகவதி சூர்யாவை பிடிக்காமல் கட்டாயத்தின் பெயரில்தான் திருமணம் செய்திருக்கிறாள்.. தன் வாழ்க்கை இழந்த போதும்.. சூர்யா திருமணம் செய்ய கேட்டபோதும் முடிந்தவரை மறுத்திருக்கிறாள். திலகவதி தன் மகனை மயக்கவில்லை.. தன் மகன்தான் அவளுக்கு வாழ்க்கை கொடுக்க எண்ணியிருக்கிறான்.. என்ற எண்ணமே கமலத்திற்கு திலகவதியை பிடிக்கசெய்தது.
திலகவதியை மனப்பூர்வமாக மருமகளாக ஏற்றுக்கொண்டதிலிருந்து.. மகனும் மருமகளும் இன்னும் சேர்ந்து வாழவில்லையே என்ற வருத்தம்தான் கமலத்திற்க்கு இப்பொழுதெல்லாம்.
துணி தைக்கும்போது இருக்கும் முகபாவம்.. சூர்யா வந்த பிறகு திலகவதியிடம் இருக்காது.. சூர்யா மிரட்டி மிரட்டித்தான் இந்தளவிற்க்கு இவளை கொண்டுவந்திருக்கிறான் என்பதை தன் முகத்தாலும் செய்கையாலும் அவளையறியாமலே காண்பித்து கொடுத்திருந்தாள் கமலத்திற்க்கு.
மதியம் ஒரு மணிபோல் வீட்டிற்க்கு வந்தான் சூர்யா. கமலம் சாப்பிட்டுக்கொண்டிருக்க.. திலகவதி பரிமாறிக்கொண்டிருந்தாள். தன்னை சுத்தம் செய்து வந்தவன் சாப்பிட அமரவே அவனுக்கும் பரிமாறினாள்.
எமர்ஜென்சி இருந்தால் தவிர.. மதியம் முடிந்தவரை சாப்பிட வீட்டிற்க்கு வந்திடுவான். வழக்கம்போல் சாப்பிட்டு கிளம்பிடுவான் என்றிருக்க.. சாப்பிட்டு முடித்தவன் ஹாலில் அமர்ந்து டி.வியை உயிர்ப்பித்தான்.
கமலம்.. ‘ஹாஸ்பிட்டல் போகலயா சூர்யா..?” எனக் கேட்க..
‘இல்லம்மா.. இன்னைக்கு ஈவ்னிங் எதுவும் கேசில்ல.. அதனால ஹோம்க்கு போலாம்னு இருக்கேன்.. என் கல்யாணம் முடிஞ்சதிலிருந்தே திலகவதியை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்காங்க.. அதோட நானும் அங்க போயே நாலுமாசம் பக்கம் ஆய்டுச்சி.. அங்கயிருக்க குழந்தைங்க பெரியவங்களெல்லாம் என்னை கேட்டுட்டே இருக்காங்களாம்.. நீங்க போய் கொஞ்சநேரம் படுங்க.. நான் ஒரு மூனு மணிபோல எழுப்புறேன்.. நம்ம மூனுபேரும் போய்ட்டு வந்திடலாம்..” என்றான்.
திலகவதி பிரசாத்தை மறந்து சூர்யாவை மனதாற ஏற்க்கும் வரை தன் மகன் திலகவதியை நெருங்கமாட்டான் என கமலத்திற்க்கு தெரியும்.. கல்யாணமாகி ஐஞ்சுமாசம் பக்கம் ஆகப்போகுது… இன்னும் தன் மகன் வேலைமுடிந்து வீட்டிற்கு வரும்போது ஒரு சின்ன முகமலர்ச்சி கூட பாhர்த்ததில்லை திலகவதியிடம்.. இவ எப்ப மனசு மாறுறது..? என் பையன் எப்போ சந்தோசமா இருக்கிறது..? என நினைத்து மருகியவர்..
‘உன் மாமியாரையும் கூப்பிடு.. அவங்களும் வரட்டும்..” என்றார்.
‘வீட்டுக்கு வந்து திலகவதியை அப்பப்ப பார்த்திட்டு போங்கன்னு நானும் எத்தனைமுறை பாலாகிட்ட சொல்லி சொல்ல சொல்லிட்டேன்.. அவனும் சொன்னேன்தான் சொல்றான்.. அவங்க இங்க வரதுக்கே சங்கடப்படுறாங்க.. அப்புறம் எப்படி அங்க வருவாங்க..? நான் கூப்பிட்டாலும் அவங்க வரமாட்டாங்கம்மா..” என்றான் சலிப்பாக.
‘அதெப்படி.. வராம போவாங்க..? பொண்ணை கட்டி கொடுத்தா போதுமா..?” என முனுமுனுத்தவர்.. இங்க வந்தாதான அவங்க பொண்ணு புருசனோட வாழ்ற லட்சணம் தெரியும்.. என மனதில் நினைத்தவராய்..
‘நீ போன் போட்டு கொடு.. நான் சொல்றேன்..” என்றார் கமலம். கமலம் கோபமாக சொல்லவும்.. சாப்பிட்டுக்கொண்டிருந்த திலகதிக்கு தொண்டைக்குள் உணவிறங்க மறுத்தது.. எதாவது நம்மைப் பத்தி தப்பு சொல்வாங்களோ..? அச்சோ இந்த அம்மா கோபம் வந்திட்டா மத்து கட்டையிலயே அடிக்குமே.. என பதறிப்போய் கமலத்தையே பயத்தோடு பார்த்திருந்தாள்.
அவர்களிடம் தன் அம்மா எதோ பேச நினைக்கிறார்கள்.. இதற்க்கு மேல் மறுப்பு தெரிவித்தால் தன் அன்னைக்கு கோபம் வரும் எனப்புரிந்தவன்.. பாலாவிற்க்கு போன் செய்தான்.
அச்சோ இவனும் போன் பண்றானே என்று திலகவதிக்கு பயத்தோடு பதட்டமும் சேர்ந்துகொண்டது. ‘மாமா..” என்றவனிடத்தில்..
‘அம்மா பக்கத்தில இருந்தா கொடு பாலா.. எங்கம்மா பேசனும்னு சொல்றாங்க..” என்றான்.
‘ஏதும் பிரச்சனையா மாமா..?” என பாலாஜி பதற..
‘ஹேய்.. அதெல்லாம் ஒன்னுமில்ல.. நாங்க கொஞ்சம் வெளில போகனும்.. அதுபத்தி பேசத்தான்.. நீ அம்மாகிட்ட கொடு..” என்றான் தன்மையாய்.
பாலா ஜெயாவிடம் விபரம் சொல்லி கொடுக்கவும்.. ‘சௌரியமா இருங்கிங்களா..?” என்றார் ஜெயா.
‘ம்ம் நல்லாயிருக்கோம்.. அம்மா உங்ககிட்ட பேசனும்னாங்க.. கொடுக்கிறேன்..” என்று கமலத்;திடம் கொடுத்தான்.
கமலத்திடமும்.. ‘சௌரியமா இருக்கிங்களா..?” என்றார் ஜெயா.
ஆனால் குரல் தயக்கத்துடன் வந்தது. ஜெயாவிற்க்கு தெரியும்.. கமலத்திற்க்கு தன் மகளை பிடிக்கவில்லையென்று. இருந்தாலும் கமலத்தை தவறாக ஒருபோதும் நினைத்தது கிடையாது. எல்லா அம்மாக்களும் தன் மகனுக்கு புத்தம்புதிய மனமகளைத்தானே தேர்ந்தெடுக்க விரும்புவார்கள்.. அவர்கள் கோபம் நியாமானதுதான்.. அதுவும் மகனை டாக்டருக்கு படிக்க வச்சிருக்காங்க.. அவர்கள் குடும்பத்திற்க்கும் நம் குடும்பத்திற்க்கும் ஏணிவச்சாலும் எட்டாது என்று ஜெயாவின் மனதில் பதிந்திருக்க.. கமலத்திடம் பேசுவதற்க்கு ஜெயாவிற்கு தடுமாற்றமாக இருந்தது.
திலகவதிக்கு காதுகேட்காத தூரத்தில் தனது வீல்சேரை தள்ளிக்கொண்டு வந்தவர்.. ‘நாங்க சௌரியமா இருக்கோமா இல்லையான்னு நேர்ல வந்து பார்க்கமாட்டிங்களா..?” என்றார். உரிமையும் கோபமும் கலந்த குரலில்.
‘அது.. வந்துங்க..” என்று ஜெயா இழுக்க..
‘நீங்க ஏன் உங்க பொண்ணை பார்க்கக்கூட வரல.. அம்மாவையும் பொண்ணையும் எதோ நாங்க பிரிச்சி வச்சிட்டமாதிரி.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க எங்களை..?” என்றார்.
‘என் பொண்ணை உங்க மகன் கல்யாணம் செய்துகிட்டதே பெரிய விசயம்.. எனக்கு கொஞ்சம் சங்கடமா இருக்குங்க.. மத்தபடி அவ நினைப்பேத்தான் எனக்கு..” என்று குரல் கமறினார் ஜெயா.
‘பெரிய விசயம்னு ஒன்னும் இல்லைங்க.. உங்க பொண்ணைத்தான் என் மகனுக்கு பிடிச்சிருந்தது.. அதோட திலகவதியை யாரும் இங்க குறையா பார்க்கல.. நீங்க வராம போகாம இருக்கிறதுதான் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. அன்னைக்கு சூர்யாதிலகவதி ‡பங்சன்க்கு கூட நீங்க வரல..” என்று குறைபட..
ஜெயா அமைதியாகவே இருக்க.. ‘சரிங்க நான் பேச வந்ததை சொல்லிடறேன்..” என்று கமலம் இல்லம் பற்றியும்.. திருநாவுக்கரசுன்னு ஒரு பெரிய டாக்டர்.. அவரும் சூர்யாவும்தான் அதற்க்கான மொத்த செலவையும் ஏற்க்கிறார்கள் என்பதையும் பெருமையோடு சொல்லி..
‘இன்னைக்கு சூர்யா என் மருமகளை இல்லத்துக்கு கூட்டிட்டுப்போறான்.. என்னையும்தான் கூப்பிட்டான்.. நீங்களும் வாங்க.. எல்லாருமா போய்ட்டு வருவோம்..” என்றார் உரிமையாக.
இல்லத்தை பற்றிய தகவல் ஜெயாவிற்க்கு புதிது ஆகையால்.. தன் மருமகன் மீது இன்னும் இன்னும் பெரிய மரியாதை உண்டாக.. உணர்ச்சிப் பெருக்கோடு அமைதிகாத்திருந்தார்.
‘என்னங்க சம்மந்தி.. பதிலே காணோம்.. லைன்ல இருக்கிங்களா..?” என கமலம் கேட்க..
‘இருக்கேனுங்க..” என்று தன் கண்களை துடைந்தவர்.. ‘நான் எதுக்குங்க..? நீங்க போய்ட்;டு வாங்க..” என்றார் சங்கடமாக.
‘எப்பவும் எல்லார் சந்தோசத்தைப் பத்திதான் என் பையன் யோசிப்பான்.. அவன் சந்தோசம் முக்கியம்னா.. உடனே நீங்க வீட்டுக்கு வாங்க.. எல்லாரும் சேர்ந்து போனோம்னா அவன் ரொம்ப சந்தோசப்படுவான்..” என்றார் அதிகாரமாகவே.
‘என்னங்க இப்படி சொல்லிப்புட்டிங்க..? நான் வரேனுங்க..” என்றார் ஜெயா.
‘ம்ம்.. வாங்க..” என்று கட்செய்தவர்.. ‘சூர்யா.. சம்மந்தி வரேன்னாங்க.. நான் போய் கொஞ்சநேரம் படுக்கிறேன்.. அவங்க வர எப்படியும் ஒருமணிநேரத்துக்கு மேல ஆகும்.. நீயும் போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு..” என்று தனதறைக்குள் போனார்.
திலகாவின் அருகில் சென்றவன்.. ‘இன்னும் கொஞ்சம் போடவா..?” என்று சாப்பாட்டை கையில் எடுக்க.. ‘இல்ல.. இல்ல.. போதும்..” என்று அவரசமாக எழுந்தாள்.
சூர்யா.. ‘அப்போ ஏன் கைய கழுவாம இப்படி காயவச்சிட்டிருக்க..? கை கழுவிட்டு ரூம்க்கு வா..” என்று அதட்டி தனதறைக்குள் போக..
ரூமிற்க்குள் வந்ததும்.. ‘அத்தை எதுக்கு அம்மாவை வரசொல்றாங்க..? என்னைப்பத்தி என்ன சொல்லப்போறாங்க..? நான் இப்பல்லாம் எந்த தப்பும் பண்றதில்iயே.. அழறதுக்கூட இல்ல..” என்றாள் பாவமாக.
‘நீ தப்பு பண்ணினாத்தான் உங்கம்மா இங்க வரனுமா..? உன்னை பார்க்க வரக்கூடாதா..?” என்றான் பொறுமையாக.
‘அது வரலாம்தான்.. ஆனா உங்க சந்தோசம் அது இதுன்னு.. இன்னும் என்னென்னவோ பேசினாங்க.. எனக்கு சரியா காதுலவிழல.. அத்தை முகமும் கோபமா இருந்துச்சி..” என்று தயங்கினாள்.
ம்ம்.. இதெல்லாம் நல்லாத்தான் யோசிக்கிற.. என மனதில் நினைத்தவன்.. ‘நாம எல்லாருமா இன்னைக்கு ஒரு இடத்துக்கு போகனும்.. அதுக்குத்தான் உங்கம்மாவை எங்கம்மா வரசொன்னாங்க.. நீ பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்ல.. மதியம் துணிதைக்க வேணாம்.. முகம் கழுவி ரெடியாகு.. நாலு மணிபோல போலாம்…” என்றான்.
‘எங்க போகப்போறோம்.. நான் எதுக்கு..? நான் வரல..” என்றாள் அவசரமாக.
‘ஏன் வரமாட்ட..?”என்றான் கோபமாக.
சட்டென குரலிறங்கியவளாய்.. ‘எனக்கு சங்கடமா இருக்கு..” என்றாள் உள்ளே போன குரலில். சூர்யா திலகாவை ஊன்றிப் பார்க்கவும்..
‘என்கூட வரதில உனக்கென்ன சங்கடம்..?” என்று அழுத்தமாக கேட்க..
‘இந்த புள்ளத்தான் இரண்டு கல்யாணம் செய்துகிட்டான்னு அசிங்கமா பேசுவாங்க.. ப்ளீஸ்… நான் வரல…” என்றாள் வேதனையாக.
பொறுமையை இழுத்துப்பிடித்தவன்.. ‘அன்னைக்கு நம்ம வீட்ல ‡பங்சன் நடந்துச்சே.. யாராவது நீ பயந்தமாதிரி நடந்துக்கிட்டாங்களா..?”என்றான் கோபமாக.
‘அவங்கள்லாம் உங்க கூட வேலை பார்க்கிறவங்க.. உங்களுக்கு பயந்திட்டு ஒன்னும் சொல்லல..” என்றாள் தலைகுனிந்து.
‘இன்னைக்கும் யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க..” என்றான் கோபமாகவே.
‘எனக்கு..” என்று அவள் மீண்டும் எதோ சொல்ல வருவதற்க்குள் அவளை நெருங்கியிருந்தான் சூர்யா.
‘எ.. ன.. எனக்கு பயமாயிருக்கு.. நான் வரல..” என்றாள் கண்ணீரோடு.
‘அப்போ என்னை பயமில்லாம சமாளிக்க நீ ரெடியாய்ட்ட..? அப்படித்தான..?” என்றான் துளைக்கும் பார்வையோடு.
‘என்ன..?” என்றாள் அதிர்வோடு.
‘ஆமா.. ஆமா..” என்று ராகமிழுத்தவன்.. ‘நான் எப்பவும் சொல்றதைத்தான் இப்பவும் சொல்றேன்.. என்பேச்சு கேட்டு இயல்பா இருந்தினா.. உனக்கு ஒரு தொல்லையும் வராது.. இல்ல என்னை சமாளிக்க ரெடியாய்க்கோ..” என்றான் அழுத்தமாக.
இவள் சிலையாய் நின்றிருக்க.. ‘என்னோட வந்தினா.. அங்க போய்ட்டு வந்ததும் நான் தூங்கிடுவேன்.. அப்படி நீ வரலன்னா நான் போய்ட்டு வரதுக்குள்ள இந்த ரூமை நீயே அலங்காரம் செய்து வைக்கனும்.. நம்ம முதல் ராத்திரிக்கு.. புரியுதா..?” என்று கண்ணிமைத்து கேட்டான்.. கண்ணிமைத்து கேட்டாலும் சூர்யாவின் முகத்தில் காதலும் இல்லை.. அன்பும் இல்லை.. ஆனால் நான் செய்தே தீருவேன் என்ற உறுதியிருந்தது.
‘என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்றிங்க..?” என்று திலகவதி கண்ணீர் விடவும்.. கொஞ்சநாள் சரியா இருந்தா.. இப்போ திரும்பவும் ஆரம்பிக்கிறா.. என நினைத்தவன்.. அவள் விடும் கண்ணீரை சகிக்க முடியாமல்..
‘உன்கிட்ட இப்படி பேசுறதுக்கு எனக்கும் கொஞ்சம்கூட பிடிக்கல.. ஆனா நீ பேசவைக்கிற..” என்று கோபமாக சொல்லி..
‘நல்லா யோசிச்சிப் பாரு.. நமக்கு கல்யாணமாகி ஐஞ்சு மாசமாகுது.. என் பேச்சுக்கு மறு பேச்சு பேசினால் ஒழிய.. மத்தபடி நான் உன்னை தேவையில்லாம எதுக்காவது தொல்லை செய்யிறேனா..?” என்றான் கொஞ்சம் கோபம் தளர்த்தி.
சூர்யா எதை சொல்லவருகிறான் என்று திலகவதிக்கு புரியவும்.. அமைதியாகவே நின்றிருந்தாள். ‘எனக்கு டைம் இல்லாததுனாலதான் இத்தனைநாளா உன்னை எங்கையும் வெளில கூட்டிட்டு போகல.. இனி நான் எங்க கூப்பிட்டாலும் என்னோட நீ வந்துதான் ஆகனும்.. தேவையில்லாத ஆர்பாட்டம் பண்ணாம ஒழுங்கா ரெடியாகுற வழியைப் பாரு..
அங்க ஹோம்ல இருக்கவங்களெல்லாம் நமக்கு கல்யாணம் ஆனதிலியிருந்து உன்னை பார்க்கனும்னு கேக்குறாங்க.. அதாவது இந்த சூர்யாவோட பொண்டாட்டியை..” என்றான் அவளின் கண்களைப் பார்த்து.
தன் துப்பட்டாவை பிசைந்தவாறு திலகவதி நின்றிருக்க.. ‘என்ன..? என்கூட வரியா..? இல்ல பூ ஸ்வீட்டுக்கெல்லாம் ஆர்டர் செய்யட்டுமா..? எனக்கு எதுன்னாலும் ஓ.கே.தான்..” என்றான் இம்முறை கொஞ்சம் கிண்டலாக.
‘வர்ரேன்..” என முனுமுனுக்க..
‘ம்ம் குட்..” என மெச்சுதலாய சொன்னவன்.. ‘ஆனாலும் நீ என்னை டென்சன் பண்ணிட்டல்ல..? அதுக்கான பனிஷ்மென்ட் இது..” என்று சட்டென அவளின் கன்னத்தில் ஒரு பட்டும் படாத முத்தத்தை கொடுக்க..
இவள் அதிர்ந்து நிற்க்க.. கன்னத்தில கொடுத்ததுக்கே இத்தனை ரியாக்சனா..? என நினைத்தவன்.. ‘ஏன் நின்னுட்டிருக்க..? போய் ரெடியாகு.. இல்ல இன்னொரு கன்னத்துக்கும் கொடுப்பேன்..” என்றான் சிரிப்போடு.
சட்டென பாத்ரூமினுள் நுழைந்தாள். தான் விழித்திருந்தாள் இவள் ரெடியாகமாட்டாள் என நினைத்தவன்.. மெத்தையில் படுத்து கண்மூடினான்.
முகம்கழுவி வெளியே வந்தவள்.. சூர்யா கண்மூடிப்படுத்திருந்ததைப் பார்த்ததும் சற்று ஆசுவாசமாகி தலையைப் பார்த்தாள்.. காலையில் சீவினது லேசாய் மட்டுமே கலைந்திருக்க.. அதை தன் கைகளால் ஒதுக்கியவள்.. பொட்டு வைத்து வகிட்டிற்க்கு குங்குமமிட்டு.. ஒருமுறை சூர்யாவைப் பார்த்து தூங்கிக்கொண்டிருக்கிறான் என உறுதிசெய்து.. துப்பட்டா பின்களைக் கழற்றி மூன்று மடிப்பிலிருந்ததை இரண்டு மடிப்பாக்கி.. கீழே வயிறு வரைக்கும்.. முழங்கை வரைக்கும் வரும்படி போட்டு இருபக்கமும் பின்குத்தி.. மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன்னை சரிபார்த்து.. பின் இவனையும் பார்த்து.. வழக்கம்போல் கீழே அமர்ந்து சோபாவில் தலைசாய்த்து படுத்துக்கொண்டாள்.
இவளின் செயல்களை பார்த்திருந்தவன்.. டிரெஸ்சுதான் மாத்துறாளான்னு பார்த்தா.. துப்பட்டாவை கழட்றதுக்கே இத்தனை முன்னெச்சரிக்கையா..? யப்பா.. என சிரிப்போடு நினைத்திருந்தான்.
சூர்யாவிற்கு பகலில் தூங்கும் பழக்கமில்லையென்பதால் வெறுமனே படுத்துக்கொண்டிருப்பது அதுவும் தூங்குவது போல் நடிப்பது சலிப்பை தரவும்.. எழுந்து தனக்கு மிகவும் பிடித்த சேன்‡பிலான் நடித்த… பியூட்டி‡புல் இன் வொய்ட் என்ற ஆங்கிலப் பாடலை ஒலிக்கவிட்டு கேட்டிருந்தான்.. பிறகு திலகவதிக்கும் போரடிக்குமே என நினைத்து தனது இயர்செட்டை கழற்றி.. ஒலியைக் கூட்டி மொபைலை கட்டிலில் வைத்தவன் கண்மூடி ரசித்துக்கொண்டிருக்க.. பாடல் முடிந்து அடுத்த பாடல் வரவும்.. இவளின் முகம் தேமேவென இருக்க..
ப்ச்.. ஆமாம்ல்ல..? இவளுக்கு பிடிச்சமாதிரி போட்டாதான இவ ரசிப்பா.. என நினைத்து தமிழ்பாடல் ஒலிக்கவிட.. ம்கூம் அப்பொழுதும் மனைவியின் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லாமல் போகவே..
‘திலகா..” என்றான்.
‘ம்ம்..” என்றாள்.. இப்போ என்னவோ என்பதுபோல.
‘உனக்கு எந்த நடிகர் பிடிக்கும்..?” என்றான் ஆவலாக.
எதையாவது சொன்னா அதிலயும் எதாவது வில்லங்கம் செய்வான்.. பதில் சொல்லலைன்னாலும் விடமாட்டான் என யோசித்திருக்க.. இவன் முறைக்க..
‘எம்.ஜி.யார் பிடிக்கும்..” என்றாள்.
‘என்ன..? எம்.ஜி.யாரா..?” என்று ஆச்சர்யமாக கேட்டு.. ‘அது எனக்கும்தான் அவரைப் பிடிக்கும்.. ஆனாலும் இப்போ நடிக்கிறவங்கள்ல யாருமே பிடிக்காதா..?” எனக் கேட்க..
‘எங்க வீட்ல டி.வி யே இல்லாம இருந்திச்சி.. வேறவங்க வீட்டுக்கெல்லாம் எங்கம்மா விடாது.. அப்புறம் கவர்ன்மென்ட்லயிருந்து டி.வி.கொடுத்தாங்க.. அதுலயும் பழைய படம் போட்டாத்தான் எங்கம்மா பார்க்கவிடும்.. இல்லன்னா ஆப் செய்திடும் என்று கடுப்பாக சொன்னவள்.. திடுமென குரலிறங்கி..
‘அப்புறம் எனக்கு கல்யாணம் ஆனதும்..” என்றவளின் வார்த்தை உள்ளே போக.. சூர்யாவின் முகமும் கடினத்துக்கு மாற.. இவனின் முகமாற்றத்தை கண்டுகொள்ளாமல்.. தன்போல்..
‘எனக்..கு.. அவர்.. போனதுக்கப்புறம்.. எதுவும்.. பார்க்க.. ப்.. பிடிக்கல..” என்று கண்கலங்கி தலைகுனிய.. கோபத்தோடு அவளிடம் நெருங்கியவனின் முகம் அருகிலிருந்த காலண்டரில் எதேச்சையாய் பதிய..
‘காட்.. இன்னைக்கு ஆகஸ்ட் டென்னா..?” என அதிர்வோடு நினைத்தவனின் கண்கள் தன்போல் கலங்க.. திலகவதியிடமிருந்து விலகியவன் அருகிலிருந்த சோபாவில் தொய்ந்து சரிந்தான்.
எப்பவும் என்னைத்தான அழவைப்பான்.. இவனுக்கு அழக்கூட தெரியுமா..? என்று அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள் அவனின் மனைவி.