இவள் கிச்சனுக்குள் செல்ல.. ‘முதல்ல போய் முகம் கை கால் கழுவிட்டு வா.. எங்கையாவது வெளில போய்ட்டு வந்தா முதல்ல இதைத்தான் செய்யனும்.. நேரா கிச்சனுக்கு போகக்கூடாது..” என்று சற்று உயர்த்திய குரலில் சொல்ல..
திலகவதி தனதறைக்குள் போக.. ‘நீ இரு சூர்யா..” என்று மனைவியின் பின்னோடு போனவனை தடுத்த கமலம்..
‘என்ன பிரச்சனை சூர்யா..? உன் முகமே சரில்லையே..?” என்று கவலையோடு கேட்க.. தன் முகத்தை வைத்தே அம்மா கண்டுகொள்வார்கள்.. தனது மாமியார் அருகிலிருக்கவும்தான் இல்லத்திற்க்கு கிளம்பும்போது அமைதியானார்கள் என்று சூர்யாவிற்க்கு தெரியும்.. விசயத்தை வாங்காமல் அவர்களுக்கு தூக்கம் வராது என்றுணர்ந்தவனாய்..
தன் அன்னையை தள்ளிக்கொண்டு கார்டனுக்கு போனவன்.. அந்த அரையிருட்டில் கீழே அமர்ந்து அன்னை மடிமீது தலைசாய்த்து.. ‘இன்னைக்கு பிரசாத்தோட பிறந்தநாள் ம்மா..” என்றான் கரகரத்த குரலில்.
முதலில் அதிர்ந்தவர்… பிறகு மகனின் தலைகோதி.. ‘என்ன சூர்யா இது..? இன்னும் எத்தனை நாளுக்குத்தான் போனதையே நினைச்சிட்டிருப்ப..?” என்றார் தானும் கரகரத்த குரலில்.
‘சாவற வயசாமா அவனுக்கு..? நாடு நாடுன்னு ஒரு சின்ன சந்தோசத்தை கூட அனுபவிக்காம போய்ட்டானேம்மா..” என்று தாளமுடியாமல் கண்ணீர் விட்டான்.
‘ப்ச் சூர்யா.. திலகா முகம் கழுவிட்டு வந்திருப்பா.. அழாதே..” என்றார் தன் கண்ணீரையும் துடைத்தபடி.
திலகா என்றதும் சட்டென அழுகையை நிறுத்தி.. அம்மாவின் சாரியில் அவசரமாய் முகம் துடைத்து எழுந்தவன்.. ‘வாங்கம்மா..” என்று உள்ளே அழைத்துப்போக.. அங்கே திலகவதி தன் துப்பட்டாவை கசக்கியபடி இவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தாள் பயத்தோடு.
மனைவியை கண்டுகொள்ளாமல் தனதறைக்கு சென்று ‡ப்ரஸ்சாகி வெளியே வந்தான். திலகா ரொம்ப லேட்டாகிடுச்சி.. நீயும் உக்கார்ந்து சாப்பிடு.. சூர்யாக்கு நான் ஊட்டுறேன்..” என்று தட்டை கையிலெடுத்த கமலம் சூர்யாவிற்க்கு ஊட்ட..
இவனும் குழந்தையாய் வாங்கிக்கொள்ள.. பே வென பார்த்திருந்தாள் இருவரையும். இரண்டு வாய் சாப்பிட்டவன்.. ‘என்ன அப்படி பார்க்குற..? நீயும் ஊட்டிக்கிறாயா..? நான் ஊட்டி விடுறேன்..” என்று சின்ன சிரிப்போடு சூர்யா சொல்ல..
அச்சோ.. என்னயிது..? இவங்கம்மா முன்னாடியே இப்படி பேசுறான்…? என நினைத்து அவசரமாய் தலைகுனிந்தவள்.. மளமளவென உள்ளிரக்கினாள் இட்லியை.
இருவரும் சாப்பிட்டதும் மெயின்டோரை காண்பித்து.. ‘கதவை பூட்டிட்டு நீ போய் படு.. நான் அம்மாக்கு மாத்திரை எடுத்து கொடுத்துட்டு வரேன்..” என்று தன் அன்னை அறைக்கு சென்றான்.
சூர்யா மாத்திரை எடுத்து கொடுக்க.. வாங்கி குடித்த கமலம்.. ‘சூர்யா..” என்றழைத்தார் ஆழ்ந்த குரலில்.
‘ம்மா..” என்று சிறுவனாய் தன் அன்னை மடியினில் படுத்துகொள்ள.. மகனின் கேசத்தை வருடிக்கொடுத்தவர்..
‘பிரசாத்தால அதிகமா பாதிக்கப்பட்டது திலகாதான்.. அவளை மீட்கனும் பிரசாத்தை மறக்கடிக்கனும்னு நினைச்சி நினைச்சி.. திலகாவை விட நீதான் எந்நேரமும் பிரசாத்தை நினைச்சிட்டிருக்க..” என்று கண்ணீர் விட..
‘ம்மா..” என்று சூர்யா தன் அன்னையின் கண்ணீர் துடைத்துவிட..
‘பிரசாத்தை நினைச்சி நினைச்சி நீ உன் வாழ்க்கையை வீணாக்கிட்டிருக்க.. உன் வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு எனக்கு பயமாயிருக்கு..” என்றார் கவலையாக.
எழுந்தவன்.. ‘ச்ச.. ச்ச.. அப்படியில்லம்மா.. நான் என்ன சின்னபையனா..? நிதர்சனம் புரியாதவனா..? எனக்கு இருபத்தி ஒன்பது வயசாக்கும்..” என்றான் கலங்கிச் சிவந்திருந்த முகத்தோடே கெத்தாக.
‘ம்ம்.. நீ ஒன்னும் சின்னபையனில்ல.. அதான சொல்ல வர..? அப்போ இனி என் மடியில படுத்துக்கிறதெல்லாம் பண்ணக்கூடாது.. இனிமே என் பேரனுக்கு மட்டும்தான் அந்த உரிமை.. உனக்கு வேணும்னா உன் பொண்டாட்டிகிட்ட போ..” என்று மகனின் முகம்பாராமல் தன் தலையணையை சரிசெய்யும் பாவனையோடு சொல்லி.. ‘குட்நைட்..” என்று கண்மூடிக்கொண்டார்.
பக்கத்தில போனாலே பதறுறா.. ஒரு சைவ முத்தம்கூட இன்னும் அனுபவிச்சி குடுக்கல.. மருத்துவ முத்தம் மாதிரியும் கட்டிப்புடி வைத்தியம் மாதிரியும்.. அப்பப்போ அதிர்ச்சி கொடுத்து என் பொண்டாட்டியை என் வழிக்கு கொண்வரதுக்குள்ள.. நான் படுற பாடிருக்கே.. ஷப்பா என நினைத்து.. இங்க நீங்க அதுக்குள்ள பேரப்புள்ளைக்கு அடித்தளம் போடுறிங்களா..? என நினைத்தவன்..
‘அதெல்லாம் முடியாது.. என் அம்மாகிட்ட எப்பவும் எனக்குத்தான் முதல் உரிமை.. என் பையனுக்கு வேணும்னா அவனோட அம்மா மடியை வச்சிக்கட்டும்..” என்று சின்ன சிரிப்போடு சொல்லி.. ‘குட்நைட் ம்மா..” என்றவன்.. முற்றிலும் மனபாரம் நீங்கியவனாய் அவனறைக்கு வந்தான்.
கட்டிலில் படுத்திருந்தவள் இவனைப் பார்த்ததும் எழுந்து அமர.. ‘ஏன் எழுந்திட்ட..? தூக்கம் வந்தா தூங்கு..” என்றான் தன்மையாக.
‘எனக்கு ஒன்னு கேக்கனும்..” என்றாள் மெல்ல..
‘பார்டா..” என்று சத்தமாகவே முனுமுனுத்தவன்.. ‘ம்ம்.. என்ன கேக்கனும்..?” என்றான் ஆர்வமாக.
‘கோபப்படுவிங்களா..?” என்றாள் சற்றே பயத்தோடு.
‘ம்கூம்.. கேளு..” என்றான் கனிவாக.
‘அது.. உங்க.. அம்மா.. நல்லவங்களா..? இல்ல..” என்று வார்த்தையை நிறுத்த..
‘கெட்டவங்களான்னு தெரியனுமா..?” என்றான் அவளைப்போலவே சன்னக்குரலில்.
இவள் ஆர்வமாய் தலையசைக்க.. ‘உனக்கேன் இந்த சந்தேகம்..?” என்றான் முகத்தில் ஏதும் காட்டாமல்.
‘இல்ல.. எப்பவும் எதுன்னாலும் கடுகடுன்னுதான் சொல்லுவாங்க.. இப்பவும் அப்படித்தான்..” என்று நீட்டிமுழக்கியவள்..
‘அவங்க எப்படி பேசினாலும் எனக்கொன்னும் பிரச்சனையில்ல.. நீங்க அத்தைகிட்ட எதுவும் சொல்லிடாதிங்க..” என்று அவசரமாய் சொல்ல..
‘உனக்கென்ன தெரியனும்..? அதை கேளு..” என்று ஊக்க..
‘என்னை வெளில போன்னு ரூமைவிட்டு வெளியனுப்பிட்டிங்கள்ல..? அப்போ எனக்கு ரொம்ப பயமாய்டுச்சி.. நீங்கவேற இன்னைக்கு ரொம்ப அழுதிங்களா… எதுக்கு அழறிங்கன்னு பயத்தோட யோசிச்சிட்டிருந்தேனா..? நீங்க கதவை வேகமா சாத்தினதும் எங்கம்மா நான் தப்பு செய்திட்டன்னு நினைச்சி என்னை அடிக்க வந்துட்டாங்க.. அத்தைதான் என் மருமகளை அடிக்கக்கூடாதுன்னு தடுத்தாங்க..” என்று தப்பித்த பாவனையோடு சொன்னவளின் கண்களில் கொஞ்சம் பெருமையும் தெரிய..
உங்கம்மா உன்னை அடிப்பாங்களா..? என அதிர்ச்சியானாலும்.. எதாவது கேட்டு அது பிரசாத் விசயத்தோடு ஜாயின் ஆகிவிடும் என நினைத்தவன்..
‘எங்கம்மாதான் உன்னை உங்கம்மாகிட்ட இருந்து காப்பாத்திட்டாங்கள்ல..? அப்போ எங்கம்மா நல்லவங்களா கெட்டவங்களான்னு நீயே முடிவு செய்துக்க..” என்றான் தன்மையாகவே.
‘அதுதான எனக்கு புரியவே மாட்டுக்குது.. என்கிட்ட கடுகடுன்னு இருக்காங்க.. ஆனா அம்மாகிட்ட என்னை விட்டும் கொடுக்கல.. என்னைப்பத்தி எதுவும் தப்பும் சொல்லல.. அம்மாவும் மகனும் ஒரே மாதிரி இருக்கிங்க.. நான் எப்படி புரிஞ்சிக்கிறது..?” என்றாள் குழப்பமாக.
‘எங்கம்மாவைப் பத்தி போகப்போக புரிஞ்சிக்கோ.. பட் உன்னைப் பொருத்தவரை நான் பயங்கர அயோக்கியன்தான…? இதுல புரியறதுக்கு இன்னும் என்ன இருக்கு..?” என்றான் கோபமில்லாமல்.
இவள் தடுமாற்றமாய் பார்க்க.. ‘அதையும் இதையும் யோசிக்காம.. பேசாம தூங்கு..” என்று லைட்டை அணைத்தவன் தானும் படுத்தான்.
வழக்கம்போல் இவனுக்கு முதுகுகாட்டி படுத்தவள்.. தனது துப்பட்டாவை கசக்கிக்கொண்டே இருக்க.. கால்மணிநேரம் வரை பார்த்திருந்தவன்..
எழுந்து டி.வியை ஆன்செய்ய.. எஸ்.பி.பி. ஜானகி ஹிட்ஸ் ஓடிக்கொண்டிருக்க.. ரிமோட்டை அவளிடம் நீட்டி.. ‘தூக்கம் வரலன்னா.. டி.வி. பாரு.. நான்ல்லாம் எம்.ஜி.ஆர் படம் மட்டும்தான் பார்க்கனும்னு சொல்லமாட்டேன்.. எதுன்னாலும் பாரு.. தூக்கம் வந்தா எழுந்து ஆப் செய்ய வேணாம்… இரண்டு மணிநேரம் கழிச்சி தானா ஆ‡ப் ஆகிடும்..” என்றான்.
‘இல்ல.. டி.வில்லாம் வேணாம்.. நீங்க எதுக்கு அழுதிங்க..?” என்றாள் பட்டென்று.
ஆச்சர்யமடைந்தாலும்.. ‘சொல்லமாட்டேன்..” என்றான் அவளின் வேகத்திற்க்கு இணையாக.
ஏன் என்பதுபோல் பார்க்க.. ‘இன்னைக்கு நீ என்னை பழிவாங்கறியா..? உனக்கு ஒரு சான்ஸ் தரேன்..” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
நாம என்ன கேட்டோம்..? இவனென்ன சம்மதமில்லாம பேசுறான்..? என்று திலகவதி புரியாமல் பார்க்க.. எதுவாகினும் தான் அழுதது இவளை பாதித்திருக்கிறது.. என்ற உணர்வே சூர்யாவிற்க்கு பேரானந்தத்தை கொடுக்க..
‘நான் எதுக்கு அழுதன்னு சொல்லல இல்ல..? அப்போ எனக்கு முத்தம் கொடு.. என் கண்ணீர் இங்கல்லாம் பட்டுச்சி..” என்று ஏக்கத்தோடு சொல்லி.. அவளின் விரல்பிடித்து தனது கண்ணிலிருந்து தாடை வரை கோலமிட்டு காண்பிக்க.. இவள் பே என விழிக்க..
அவளின் விரல் விடுத்து கட்டிலில் தனது இடத்தில் வந்து படுத்தான்.. இவனின் செய்கையில் தடுமாறியவள்.. சூர்யா தன்;னை விடுவித்த அடுத்த நொடி கட்டிலில் சுருண்டு கொண்டாள் தூங்கும் பாவனையோடு.
இன்று மாலையிலிருந்து மனைவி தன்னிடம் இயல்பாய் பேசிய சந்தோசத்தோடு.. தன் அன்னை பேரப்பிள்ளையை பற்றி பேசியது வேறு ஒரு இனிய உணர்வை கொடுக்க.. தனக்கு முதுகு காட்டி படுத்திருக்கும் மனைவியிடம்..
‘திலகா..” என ஆழ்ந்து அழைத்தான் கெஞ்சலாய்.
நாம் படுத்துவிட்டால் எப்பொழுதும் இப்படி கூப்பிடமாட்டானே.. எதற்கு கூப்பிடுகிறான்..? அச்சோ இப்பத்தான முத்தம் கேட்டான்.. மறந்துட்டான்னு நினைச்சனே.. மறுபடியும் கேப்பானோ..? என்று பயம் வந்தாலும்.. கூப்பிட்டு பதில் பேசவில்லையென்றால் அதற்க்கும் கடிவானே என நினைத்து.. ‘ம்ம்..” என்றாள் திரும்பாமலேயே.
‘எனக்கொரு ஹெல்ப் பண்றியா..?” என்றான் கனிந்த குரலில்.
இத்தனை மாதங்களில் அவ்வவ்போது தன்னை தொல்லை செய்தாலும்.. என்றுமே சூர்யா வரம்பு மீறியதில்லை என்பதை உணர்ந்தவள்.. தவறாய் எதுவும் கேட்கமாட்டான் என்ற நம்பிக்கையோடும்.. ‘ம்ம்..” என்றாள் .
தனது உடலை ஒரு புரட்டு புரட்டி கொஞ்சம் அவளருகில் வந்தவன்..
‘இன்னைக்கு எனக்கு உன் கையை பிடிச்சிட்டே தூங்கனும்..” என்றான் ஏக்கமாக.
ஏதோ மனசு சரியில்லாமல் இருக்கிறான்.. அவனின் அம்மாவிடம் சொல்லியிருப்பான்போல.. அதனால்தான் அவர்கள் இவனுக்கு ஊட்டிவிட்டார்கள் போல.. இவனுக்கு என்னதான் ஆச்சு..? என்று யோசித்திருக்க.. தவறாக எதுவும் கேட்க மாட்டான் என்று நினைத்திருந்தவளுக்கு தற்போது அந்த எண்ணம் சந்தேகத்திற்க்கு உள்ளாக அதன்பொருட்டு பதட்டம் தோன்ற.. வழக்கம்போல் அவள் உடல் வேகமாய் ஏறி இறங்க.. மனைவியின் பதட்டத்தை பார்த்தவன்..
‘எனக்கெதாவது வேணும்னா நேரா உன் கண்ணைப் பார்த்து சொல்வேன்.. எனக்கு உன் கை மட்டும் போதும்.. சொன்ன வார்த்தையை மீற மாட்டேன்..” என்றவன்.. ஒருகளித்து படுத்திருந்தவளின் கன்னத்தை தாங்கியிருந்த கைகளில் ஒன்றை மெல்ல உருவ.. பயத்தோடு அவள் பார்க்க..
‘நிமிர்ந்து படு.. அப்போதான் என் கை உன்மேல படாது..” என்று சொல்ல..
இவளின் ஒருகை அவனின் கைப்பிடியிலிருக்க.. நிமிர்ந்து படுத்தவளின் துப்பட்டா சற்றே விலக.. மற்றொரு கையால் அவசரமாய் கழுத்துவரை போர்வையை இழுத்து விட.. திலகாவை சிரமப்படுத்தாமல் அவள் மீதிருந்த தன் பார்வையை விலக்கி..
தானும் நிமிர்ந்து படுத்து.. அவளின் ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் தனது விரல்களால் மென்மையாய் பிணைத்தவன்.. ‘இது போதும் எனக்கு..” என்று குழைவாய் சொல்லி கண்மூடிக்கொண்டான் நிறைவான மனதோடு.