அத்தியாயம் — 17
காலையில் எழும்போதே சூர்யா அருகிலில்லை. மணி பார்க்க.. ஆறுதான ஆகுது..? என நினைத்தவளுக்கு மீண்டும் தூக்கம் கண்ணை கட்டியது. இரவு சூர்யா தன் கையை பிடித்ததும் இதோடு விடுவானா..? இல்லை வேறு எதாவது.. என்ற பயத்தில் இருந்தவளுக்கு நள்ளிரவு வரை உறக்கம் வராமல் போகவே தற்போது மீண்டும் கண்மூடினாள்.
இன்று அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம் ஹாஸ்பிட்டலில் இருந்து அவசர அழைப்பு வரவும்.. ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தான் சூர்யா.
திலகவதி எழுந்து குளித்து வெளியே வர.. மணி எட்டரையை காட்ட.. கமலத்தை நினைத்து பயந்தவளாய் மெல்ல கண்களை சுழற்றினாள். வீட்டினுள் இல்லாமல் போகவே வெளிய தோட்டத்துக்கு தண்ணி பாய்சுவாங்களா இருக்கும் என நினைத்தவள்.. சமைத்துக்கொண்டிருக்கும் முத்துவிடம் சென்றாள்.
‘உடம்பு சரியில்லையா பாப்பா..? இவ்ளோ நேரம் தூங்க மாட்டியே…?” என முத்து கேட்க..
கமலம் திட்டினால் தலைவலி என்று சொல்லலாம் என நினைத்திருந்தவள்.. தற்போது அதையே முத்துவிடமும் சொல்ல.. ‘சூடா டீ குடி.. சரியாய்டும்..” என்று முத்து டீயை நீட்ட.. வாங்கி குடித்தவள் வெளியே வர..
அங்கே கமலத்தோடு தன் அன்னையை எதிர்பாராதவள்.. ஒரு அடி பின் வாங்கி அவர்களுக்கு தெரியாவண்ணம் மறைந்து நின்றாள்.
‘காலங்காத்தலயே வர சொல்லவும்.. நேத்து டாக்டர் தம்பியோட வெளில போனவ எதாவது ஏடாகுடம் செய்திட்டாளோன்னு நான் பயந்தே போய்ட்டேனுங்க..” என்றார் ஜெயா.
‘நேத்து பொருத்தவரை என் மருமகமேல எந்த தப்பும் இல்லைங்க.. என் பையன்தான் ரொம்ப வேதனைல இருந்திருக்கான்.. எனக்கும் கொஞ்சம் மனசு சரியில்ல.. அதான் கோவிலுக்கு போலாம்னு உங்களை கூப்பிட்டேன்..” என்று கமலம் கண்கலங்க..
‘அச்சோ.. எதுக்குங்க கலங்குறிங்க..? டாக்டர் தம்பிக்கு அப்படி என்ன வேதனைங்க..?” என்று ஜெயா பதற..
‘நேத்து பிரசாத்தோட பிறந்த நாள்..” என்று ஆரம்பித்தவர் அவர்களின் சிறுவயது முதல் இரண்டு வருடத்திற்கு முன்பு வரை நண்பர்களின் மறக்க முடியாத சந்தோசமான தருணங்களையும்.. இரு குடும்பத்திற்க்குமான நெருக்கத்தையும் ஒரு மணிநேரம் வரை வேதனையோடு சொல்லிமுடித்தவர்..
‘பிரசாத் மறக்க முடியாம தவிச்சிட்டிருக்கான். நைட்கூட என் மடியில படுத்து குழந்தை மாதிரி அழுதான். அப்படி இப்படின்னு பேசி கொஞ்சம் சரிசெய்து தூங்க அனுப்பினேன்.. என்னதான் நான் பேசினாலும் ஒரு வயசுக்கப்புறம் பொண்டாட்டியோட ஆறுதல் வார்த்தைக்குதான் சக்தி அதிகம்.. தாய்க்குப் பின் தாரம்னு சும்மாவா சொல்லி வச்சாங்க..? ம்ம்.. சாப்பாடு கூட இன்னும் பயந்து பயந்துதான் போடறா.. எப்பதான் என் பையனை புரிஞ்சிப்பாளோ..? அந்த கடவுள்கிட்டயாவது போய் கெஞ்சிபார்க்கலாம்..” என்றார் ஏக்கமாக.
பேச்சற்று கேட்டுக்கொண்டிருந்த ஜெயா.. ‘சரி வாங்க.. போலாம்..” என்றார் தன் கண்களை துடைத்தபடி.
‘முத்து…” என்று கமலம் குரல் கொடுக்க.. சமையலறையிலிருந்து வெளியே வந்த முத்து கண்ணீரோடு நின்றிருந்த திலகவதியை வருத்தத்தோடு பார்த்து.. பிறகு கமலத்திடம் செல்ல..
‘முத்து.. இங்க பக்கத்தில விநாயகர் கோவிலுக்கு போய்ட்டு வரோம்.. சூர்யா வந்தா அம்மா தனியா போகல.. சம்மந்தியோடதான் போயிருக்கேன்னு சொல்லு.. நான் ஒரு அரைமணி நேரத்தில வந்திடறேன்..” என்று கிளம்பினார்.
திலகவதியிடம் வந்த முத்து.. ‘பாப்பா..” என்றார் கனிவாக.
‘அண்ணா.. “ என்று ஆரம்பித்தவள்.. அழுகையோடே தன் அத்தையும் அன்னையும் பேசிக்கொண்டிருந்ததை விளக்கி.. உண்மையா என்பது போல் பார்க்க..
சூர்யாவின் சேவை மனப்பாண்மை.. இரக்க குணம்.. பிரசாத் ஆதவன்.. சூர்யா என மூவரும் அடிக்கும் லூட்டிகள் என அவர்கள் பேசாத இன்னும் பல விசயங்களை ஒரு மணிநேரம் வரை விளக்கிய முத்து..
‘கமலாம்மாக்கு உடம்பு சரியில்லாம ஆனதுக்கப்புறம்தான் எங்களை வேலைக்கு சேர்த்தாங்க.. இந்த வீட்ல ஆறு வருசமா வேலைசெய்றேன்.. அம்மாவோட இருக்கும்போது உன் புருசன் ஒரு டாக்டான்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க.. அந்தளவுக்கு சின்ன பிள்ளையாட்டமா அவங்கம்மாகிட்ட அத்தனை கொஞ்சு கொஞ்சுவார்.. சூர்யா தம்பி மாதிரி இந்த உலகத்தில எங்கையும் பார்க்க முடியாது பாப்பா.. பிரசாத் தம்பி இறந்ததுக்கப்புறம் சூர்யா தம்பியோட சிரிப்பே காணாம போச்சி.. அவரோட சந்தோசம் இனி உன் கையிலதான் இருக்கு..” என்றார் பொறுமையாக.
கண்ணீர் வழிய கேட்டுக்கொண்டிருந்தவள்.. தாளமுடியாத துக்கத்தோடு தனதறைக்குள் போய் அடைந்து கொண்டாள். அவங்களை நினைச்சித்தான் நேத்து அப்படி அழுதிங்களா..? நேத்து நைட் ஆறுதலுக்காகத்தான் என் கையை பிடிச்சிக்கிட்டிங்களா..? என்று அரைமணிநேரம் வரை தானும் அழுது கரைந்தவள்.. நண்பன் இறந்தாலும் அவங்க குடும்பத்துமேல இத்தனை அக்கறையா..?
நண்பனால என் வாழ்க்கை வீணாய்டுச்சேன்னு என்னை சரி செய்யத்தானா..? என் நிம்மதிக்காகவா..? இதுக்காகத்தான் மூர்த்திப்பாவும் என்னை வீட்டைவிட்டு வெளிய அனுப்பினாரா..? சூர்யா ரொம்ப நல்லவன்னு அவரும்தானே சொன்னார்..? என நினைக்க இன்னும் அழுகை கூடியது.
பிரசாத்தோடு திருமணத்திற்க்கு முன்புவரை தன் குடும்பத்திற்கென நல்லது செய்வதென்ன..? சொல்வதற்க்கு கூட யாரும் இருந்ததில்லையே.. அக்கம் பக்கத்திலும் குத்தி காட்டி பேசத்தானே அத்தனை பேர் இருந்தனர்..?
ஆனால் இன்று தன்னை சுற்றி இத்தனை பேரும் தன் வாழ்க்கைக்காக பார்த்திருக்கிறார்களா..? இத்தனை நல்லவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் கடவுளே..? சூர்யாவோட சந்தோசம்தான அவங்கம்மாக்கு சந்தோசத்தை கொடுக்கும்..? என் கை மட்டும் போதும்ன்னு சொன்னிங்களே..? வாழ்க்கை முழுதும் அதுமட்டும் போதுமாக உங்களுக்கு..? ஆனாலும் நான் எப்படி உங்களுக்கு சந்தோசம் கொடுக்க..? என நினைக்க நினைக்க வழியறியாத சிறுமியாய் தவித்த திலகவதி..
‘எனக்காக செய்யனும்னா வேற எதவாது செய்திருக்கலாமே சூர்யா.. நான் எப்படி உங்களோட..? என்னை கல்யாணம் செய்து உங்க வாழ்க்கையையும் கெடுத்துக்கிட்டிங்களே..?” என்று தானாக புலம்பினாள்.
ஒரு மணிநேரம் கழித்து கமலமும் ஜெயாவும் வீட்டிற்க்கு வரவே.. ‘திலகா இன்னும் வெளில வரலையா..?” என்று கமலம் கேட்க..
‘காபி குடிச்சிட்டு திரும்பவும் உள்ள போய்டுச்சிம்மா..” என்று முத்து சொல்ல..
ஜெயாவின் முகம் கோபத்தை காட்ட.. ‘நீங்க வெளில பேசினதை பாப்பா கேட்டுருச்சி.. அழுதிட்டே இருந்தது.. இதுதான் சமயம்னு நானும் சூர்யா தம்பி பத்தி எடுத்து சொன்னேன்..” என்று முத்து சொல்ல..
ஜெயாவிடம்… ‘கடவுள் எந்த ரூபத்திலயும் வருவார்.. நாம கோவிலுக்கு போய்ட்டு வரதுக்குள்ள முத்து மூலமா என் மருமகளுக்கு புரியவச்சிட்டார்.. அவளே அழுதிட்டிருந்தாளாம்.. நீங்க எதுவும் அவளை திட்டாதிங்க..” என்றார் கமலம்.
‘சரிங்க.. திலகாவை இன்னொரு நாளுக்கு வந்து பார்த்துக்கிறேன்.. நீங்க அவசரமா கூப்பிடவும் வேலை செய்யிற இடத்துல சொல்லாம கூட வந்திட்டேன்.. நேரமாய்டுச்சி நான் கிளம்புறேனுங்க..” என்று சந்தோசமாய் கிளம்பினார் ஜெயா.
மதியம்போல் கமலம் சூர்யாவிற்க்கு அழைக்க.. அழைப்பை ஏற்றவன்.. ‘அம்மா.. நான் இங்கையே சாப்டுட்டேன்.. வீட்டுக்கு வர நைட் ஆகும்.. எனக்கு கால் செய்யாதிங்க..” என்று அவசரமாய் சொல்லி இணைப்பை துண்டித்தான்.
எப்பொழுதும் தான் சாப்பிடும் நேரம் வெளியே வருவாளே என நினைத்த கமலம்.. டெய்லரிங் அறை சென்று பார்க்க.. அங்கு துணிதைக்கும் சத்தம் வராமல் போகவே.. சூர்யா அறைக்கு சென்றார். தாழ் போட்டிருக்காளா என்ற சந்தேகத்தோடே கதவை திறக்க முயல.. ம்ம் தாழ்போடவில்லை.. கீழே அமர்ந்து சோபாவில் தலைவைத்திருந்தவள்.. கதவு திறந்ததும் சூர்யா என நினைத்து சட்டென எழவும்..
‘என்ன திலகா..? காலைலயும் சாப்பிடலயாம்.. இப்பவும் சாப்பிட வரல..? உடம்புக்கு எதாவது படுத்துதா..?” என கமலம் கனிவாய் கேட்க..
எப்படியும் சாப்பிட சொல்வார்கள்.. ஆனால் தான் சாப்பிடும் நிலையில் இல்லையே என நினைத்தவள்.. ‘ஆமாங்கத்தை.. கொஞ்சம் தலைவலியா இருக்கு..” என்றாள்.
இவள் சொல்லும் தோரணையிலேயே பொய் என புரிந்தவர்.. ‘எழுந்து வா.. நான் மாத்திரை தரேன்..” என்றார் கட்டளையாக.
எதுக்குன்னாலும் மகனைப் போலவே இவங்களும் மிரட்டுறாங்க என சலிப்போடு எழுந்தவள்.. அமைதியாய் வெளியே வர.. கமலம் சாப்பிட அமரப்போக.. கமலத்திற்கு பரிமாறி தன்போல் நின்றிருந்தவளிடம்.. ‘நீயும் சாப்பிடு..” என்றார்.
‘தலைவலி சரியானதும் சாப்பிடறேன்..” என்று தயக்கத்தோடே சொல்ல..
‘சரி இரு.. சூர்யாக்கு ‡போன் செய்து உன் பொண்டாட்டி தலைவலின்னால காலைலயும் சாப்பிடல.. இப்பவும் சாப்பாடு சாப்பிட முடியாத அளவுக்கு தலைவலி இருக்கும்போலன்னு சொல்லி.. தலைவலிக்கு என்ன மாத்திரை கொடுக்கன்னு கேக்குறேன்..” என்று தனது போனை எடுக்க..
‘வேண்டாம் வேண்டாம்.. இப்போ கொஞ்சம் பரவால்லையா இருக்கு.. நான் சாப்பிடறேன்…” என்று அவசரமாய் சாப்பிட அமர்ந்தாள்.. அவள் சாப்பிடும் வரை அமைதியாய் இருந்தவர்..
‘இன்னைக்கு துணியும் தைக்கல போல.. அந்த பொண்ணுகிட்ட நாளைக்கு வர சொல்லி அனுப்பிட்டியாம்.. உனக்கு தலைவலி இல்லன்னு எனக்கு தெரியும்.. சும்மா அதையும் இதையும் நினைச்சிட்டு சாப்பிடாம இருந்து.. உன் உடம்பையும் கெடுத்து என் மகன் நிம்மதியையும் கெடுக்கக் கூடாது..” என்று கண்டிப்போடு சொல்லி தனதறை நோக்கி தன் வீல்சேரை நகர்த்தினார்.
ஆத்தீஈஈ பொய்ன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா..? என அதிர்ச்சியானவள்.. அச்சோ இவங்க மகன்கிட்ட சொல்லிடுவாங்களா..? என பயந்து அங்கேயே அமர்ந்துகொண்டாள்.
மாலை நான்கு மணிபோல் கமலம் வெளியே வர.. அவரின் கோபம் தணிக்க.. ‘டீ வைக்கட்டுங்களா..?” என்றாள் சன்னக்குரலில்.
‘ஐஞ்சி மணிபோல குடிச்சிக்கிறேன்.. பூ கட்ட தெரியுமா..?” என்றார்.
பொய் சொன்னா கண்டுபிடிச்சிடுவாங்களே என நினைத்தள்.. தெரியும் என்பதாய் தலையசைக்க.. ‘ஜாதிமல்லி நிறைய மொட்டு விட்டுருக்கு.. மலர்ந்தா கட்டுறது கஷ்டம்.. முகத்தை கழுவிட்டு பூ பறிச்சி கட்டி.. சாமிக்கு வச்சி வணங்கிட்டு.. மீதியை உன் தலைக்கு வை..” என்று கட்டளையிட..
பூ கட்டுறதுக்கு கூட முகம் கழுவனுமா..? என கடுப்பாய் நினைத்து உள்ளே செல்ல முயல.. ‘திலகா..” என்று அழைக்க.. அவள் பார்க்க..
‘பூ கட்டறதுக்கு முகம் கழுவ தேவையில்லதான்.. அதை சாமிக்கு வைக்கனும்னா சுத்த பத்தமாதான் செய்யனும் புரியுதா..?” என்றார் தன்மையாக.
ஆ.. இதையும் கண்டுபிடிச்சிட்டாங்களே என விழிவிரித்தவள்.. சரியென்பதாய் மண்டையை உருட்டி வேக நடைபோட்டு மறைந்தாள்.
கமலம் சொன்னதை செய்தவள்.. ஐந்து மணிபோல் டீ யோடு கமலத்திடம் வந்தாள். முகம் பளிச்சென இருக்க.. வகிட்டிற்க்கு குங்குமமிட்டு.. தலையில் மல்லிகை சூடியிருக்க.. கண்கள் மட்டும் பதட்டத்தை காண்பிக்க.. அந்த சோக மூஞ்சிக்கு இது தேவலை என நினைத்து..
‘நீ குடிக்கல..” என்றார்.
‘ம்ம்.. குடிக்கனும்..” என்று சொல்ல..
‘போய் எடுத்திட்டு வா.. இங்கையே குடிப்ப.. எந்நேரமும் ரூம்ல அடைஞ்சிட்டு..” என்று கரறாய் சொல்ல.. பொம்மைபோல் சொன்னதை செய்தாள்.