அத்தியாயம் — 18
முத்துவின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவும்.. திலகவதிதான் கமலம் குளிக்க உதவி செய்துகொண்டிருக்கிறாள். ம்ம்.. நாட்கள் நிற்காமல் ஓட.. இதோ முடிந்துவிட்டது மேலும் ஒரு மாதம்.
என்ன இயல்பாக பேசினாலும் கமலத்திடம் இன்னும் பயம்தான் திலகாவிற்க்கு.. மாலையிலும் தன்னை சுத்தப்படுத்தி சாமிக்கு பூ தொடுத்து வைப்பது.. சிறிதேனும் தானும் வைத்துக்கொள்வதென இருக்க.. சூர்யாவிற்க்கும் திலகவதியின் மீது கோபம் வருவதில்லை.
எல்லாவற்றிற்க்கும் மேலாக சூர்யாவின் நற்குணங்கள் தெரிந்ததிலிருந்து.. இத்தனை நல்லவனின் சந்தோசம் தம்மால் வீணாகிக்கொண்டிருக்கிறது என்று அனுதினமும் நினைக்க ஆரம்பிக்க.. திலகவதிக்கு பெரிய குற்ற உணர்வு மனதில் எழ ஆரம்பித்தது.
ஒரு சில முறை உங்களுக்கு நான் வேண்டாம்.. என்னைவிட அழகான மெத்த படித்த பெண் கிடைப்பாள் என்று சூர்யாவிற்க்கு அறிவுரை சொல்ல யோசிப்பாள். அவனின் கோபமுகம் கண்முன்னே வந்தால் இவளுக்கு அனைத்தும் மறந்துபோகவே பலமுறை முயற்ச்சித்து ஒத்தை வார்த்தை பேசாமல் தடுமாறி தலைகுனிவாள்.
அவளின் முகத்தை வைத்தே.. என்னவோ சொல்ல வந்த போல என்னன்னு சொல்லு என்று சூர்யா நச்சரிப்பான்.. இன்னைக்கு புதுசா ஒரு பிளொஸ் தைச்சேன்.. ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னாங்க.. என்பது போல் வேறு எதாவது சொல்லி இவள் சமாளிக்க.. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் இயல்பாக பேசுகிறாள் என்ற நிம்மதியிலிருந்தான் சூர்யா.
தன் மகனோடு மருமகள் சேர்ந்து வாழவில்லை என்பதைத் தவிர திலகவதியை குறை கூற கமலத்திடம் ஒன்றுமில்லைதான். அதற்க்காக மகனின் வாழ்வை இப்படியே விட்டு விட முடியாது.. இதுங்க ரெண்டுகளுக்கும் இனி மறைமுகமாக சொன்னால் ஒன்றும் வேலைக்காகாது.. இனி நேரடியாக பேசிவிடுவது என முடிவெடுத்தார் கமலம்.
காலையில் டிபன் சாப்பிட உக்கார்ந்ததும் ஆதவனிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘என்ன ஆதவா..? இந்த டைம்ல கூப்பிட்டிருக்க..?” என்றான்.
‘இந்த சோனு தொல்லை தாங்கமுடியலை.. உன்கிட்ட பேசி ஒருவாரமாய்டுச்சின்னு நச்சரிக்கிறா.. பேசு..” என்று சோனாவிடம் கொடுத்தான். இருவரும் பேசியபின்..
‘சூர்யா.. இங்க கொடு.. ஆதவன்கிட்ட நான் பேசனும்..” என்று வாங்கிய கமலம்..
‘ஆதவா.. நீ எத்தனை வருசமா என்னை அமெரிக்காக்கு வரசொல்லிட்டிருந்த..? எனக்கு இப்ப வரலாம்னு தோணுது.. வந்து என்னை கூட்டிட்டு போ..” என்றார் கமலம்.
‘அத்தை… ஏன் அங்க போறன்றிங்க..?” என்று பதறினாள் திலகவதி.
‘நிஜமாவாமா சொல்றிங்க..? நான் அங்க வந்ததுக்கப்புறம் நான் வரமாட்டேன்னு சொல்லகூடாது..” என்றான் ஆதவன்.
‘நான் உண்மையாத்தான் சொல்றேன்.. நீ வந்து என்னை கூட்டிட்டுப்போ..” என்றார் மீண்டும் உறுதியாகவே.
‘சாரிம்மா.. என்னால இப்ப வரமுடியாது.. இன்னும் இரண்டு மாசம் கழிச்சி.. சோனுவுக்கு லீவ் விடுவாங்க.. அப்ப நாங்க எல்லாருமே வரோம்.. அப்போ நீங்க என்னோட வந்திடுங்க..” என்றான்.
‘ம்ம்..ம்ம்..” என்று கமலம் உற்ச்சாகமாய் சொல்ல.. ‘சூர்யாகிட்ட கொடுங்கம்மா..” என்றான்.
‘சூர்யா.. அம்மாக்கு பாஸ்போர்ட்க்கு ஏற்பாடு செய்.. அவங்க சொல்லும்போதே அழைச்சிட்டு வந்தாதான் ஆச்சு.. இல்ல மூடு மாறிடுவாங்க..” என்றான் ஆதவன்.
‘ம் பார்க்கிறேன் ஆதவா..” என்றதும் இணைப்பு துண்டிக்கப்பட.. ‘அத்தை ஏன் அங்க போறேன்னு சொல்றிங்க..?” என்று மீண்டும் பதட்டமாய் கேட்டாள்.
‘சூர்யா தனியா இருப்பானேன்னுதான் நான் இவ்ளோ நாளா அங்க போகனும்னு நினைக்கல.. இப்பதான் அவனை பார்த்துக்க நீ வந்திட்ட இல்ல.. நான் கொஞ்ச நாளைக்கு என் பெரிய பையனோட இருந்துட்டு வரேன்.. இன்னும் வெளிநாடெல்லாம் நான் போனதில்ல..” என்றவர் சற்று நேரம் கழித்து..
‘உன் புருசனும் முக்கால்வாசி நேரம் ஹாஸ்பிட்டல்லதான் இருக்கான்.. நீயும் துணிதைக்க போய்டுற.. அங்க போனாவாச்சம் என் பேரப்பிள்ளைங்களோட சந்தோசமா இருக்கலாம்.. இங்க ஒத்தையிலயே எத்தனை நேரம் இருக்கிறது..?” என்றார்.. திலகவதியை அர்த்தமாய் பார்த்தபடி..
இங்கையும் குழந்தை குட்டின்னு வரட்டும்.. அப்புறம் இங்கையே வந்திடறேன்..” என்று சொல்லி மருமகளின் முகத்தை ஆராய்ந்தார்.
இறுக்கமாக தன் துப்பட்டாவை பிடித்துக்கொண்டாள்.. பெரிய தவறு செய்தவள்போல் தடுமாறினாள். கமலம் சாப்பிடும் வரை அருகிலிருந்தவள்.. சூர்யா சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ரூமிற்குள் சென்றுவிட்டாள். ரூமினுள் சென்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வழக்கம்போல் சோபாவில் தலைகவிழ்த்து அழுது கொண்டிருக்க..
‘அம்மா அண்ணன்கூடதான போறேன்னு சொன்னாங்க..? அதுக்கு எதுக்கு நீ அழற..? அவங்க சந்தோசமா போய்ட்டு வரட்டும்.. பாரின் சுத்தி பார்த்தமாதிரி இருக்கும்.. ஆதவனோட ரொம்ப நாள் ஆசை இது..” என்றான் தன்மையாக.
‘இல்ல.. அத்தை ஆசைப்பட்டு போகலை.. இங்க இருக்கபிடிக்காம போறாங்க.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க..? நான் சரியில்லாததுனால அத்தை வீட்டைவிட்டு போய்ட்டாங்கன்னு நினைப்பாங்கல்ல..? என்னால யாருக்கும் நிம்மதியில்ல..” என்று தன் அழுகையை கூட்டினாள்.
‘அம்மாக்கு இங்க இருக்கப்பிடிக்காத அளவுக்கு நீ ஒரு தப்பும் செய்யல. லூசாட்டம் நீயே எதாவது நினைச்சிட்டிருக்காத..” என்றான் கெஞ்சம் கோபமாக.
‘நான் குழந்தை பெத்துக்கனும்னு அவங்க ஆசைப்படுறாங்க..? என்னால எப்படி அது முடியும்..? நீங்க ஏன் என்னைப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க..?” என்று திலகவதி அழவும்..
ஓ.. இதுதான் விசயமா..? என நினைத்தவன்.. ‘இப்ப என்ன..? நான் உன்னை எதுவும் பண்ணக்கூடாது… அவ்ளோதான..? அப்படி எதுவும் நடக்காமலே உன் வயித்தில குழந்தையை வரவைக்கலாம்.. போதுமா.?” என்றான் அவளை அமைதிப்படுத்தும் நோக்கோடு.
‘அதெப்படி முடியும்…? நீங்க பொய் சொல்றிங்க..” என்றாள் நம்பாதவளாய்.
‘அதெல்லாம் முடியும்.. உனக்கு சொன்னா புரியாது.. நாளைக்கே என்னோட ஹாஸ்பிட்டலுக்கு வா.. உனக்கு புரியவைக்கிறேன்..” என்றான்.
‘நான் உங்களோட எங்கையும் வரமாட்டேன்.. ஊமை மாதிரி இருந்திட்டு டாக்டரையே வளைச்சி போட்டுட்டான்னு எங்க வீட்டு பக்கத்தில அப்பவே சொன்னாங்க.. இப்ப உங்களோட வந்தா அங்க இருக்கிறவங்களும் அப்படிததான சொல்வாங்க..? எனக்கு ரொம்ப கேவலமா இருக்கு.. நீங்க கல்யாணத்துக்கு கேட்டப்பவே நான் செத்திருந்தா.. இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது…” என்று மீண்டும் அழுதாள்.
‘இப்படித்தான் கண்டவங்க பேசறதையெல்லாம் நினைச்சிட்டு இன்னமும் உன் மனசை போட்டு வருத்திட்டிருக்கியா..?” என்று கடுப்பாக கேட்டான்.
‘கண்டவங்க பேசினாலும்… அவங்களெல்லாம் உண்மையைத்தான பேசறாங்க..? ஒரு பொண்ணு அவங்களோடயும்.. இருந்..” என்று பேசியவளுக்கு வார்த்தையை முடிக்கமுடியவில்லை.. சற்று நேரம் கழித்து..
‘உங்களோடயும் எப்படி…? இதெல்லாம் புரியாம அத்தைவேற குழந்தை வேணும்னு சொல்றாங்க.. நான் இப்ப என்ன பண்றது..?” என்று கண்ணீர் விடவும்..
திலகவதியின் அழுகையை தாங்கமுடியாதவனாய்.. ‘எத்தனை வருசமானாலும் உனக்கு என்னை பிடிக்கிற வரைக்கும் என்னால காத்திருக்க முடியும்.. என் அம்மாவோட ஆசைக்காக நான் எதாவது பண்ணிடுவேனெல்லாம் நீ பயந்துக்காத.” என்றான் மனைவியை தேற்றும் விதமாக.
‘எத்தனை வருசம் நீங்க காத்திருந்தாலும்.. என்னால உங்களோட வாழவே முடியாது.. என்னை புரிஞ்சிக்கோங்களேன்..” என்றாள் குரலிறங்கி மன்றாடலாக.
தற்போது ஒரு மாதமாக தன் அம்மாவிடமும் தன்னிடமும் சகஜமாக இருக்கிறாள்.. இனி போகப் போக வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்வாள்.. நம்மையும் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையில் சூர்யா இருக்க.. திலகவதி தற்போது பேசிய பேச்சில் மனதளவில் வெகுவாய் ஏமார்ந்துதான் போனான்.
எனினும் அவளிடம் காட்டிக்கொள்ளாமல்.. ‘சரி பரவால்ல.. என்னோட வாழ வேண்டாம்.. எனக்கு உன்னோட நிம்மதிதான் முக்கியம்.. வேற எதுவும் வேணாம்..” என்றான் தன்மையாகவே.
‘இப்படியே எத்தனை நாளுக்கு நீங்க இருக்கப்போறிங்க..? என்னால உங்க வாழ்க்கை வீணாகுது.. உங்க வாழ்க்கை சந்தோசமா இல்லன்னா அத்தையால எப்படி நிம்மதியா இருக்கமுடியும்..? உங்க ரெண்டு பேரோட நிம்மதியையும் கெடுத்திட்டு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்..?” என்றாள் சற்றே குரலுயர்த்தி.
சற்றுமுன் திலகா பேசிய வார்த்தையில் ஏமார்ந்தவனுக்கு தற்போது பேசிய வார்த்தை மருந்தாய் இருக்க.. அவளின் கோபத்தில் சந்தோசமானவன்.. பார்டா.. என் வாழ்க்கை வீணாப்போகுதுன்னு கூட உனக்கு யோசிக்கத் தெரியுமா..? என ஆச்சர்யப்பட்டவன்.. நீ என்னோட சேர்ந்து வாழ்றதுக்கு இந்த நினைப்பு ஒன்னு போதும்டி.. உன்னை என்பின்னாடி எப்படி சுத்தவிடறேன் பார் என அவளையே பார்த்திருந்தான்.
என்ன..? நாம கோபமா பேசிக்கூட நம்மளை ஒன்னும் சொல்லாம இருக்கான்.. என்னை புரிந்துகொண்டானா..? என்ற ஆச்சர்யத்தோடு திலகவதி சூர்யாவை பார்க்க..
‘என் வாழ்க்கை வீணாப்போகல.. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணோட ரொம்ப சந்தோசமா வாழ்ந்திட்டிருக்கேன்..” என்றான் நிறைந்த மனதோடு அவளின் கண்பார்த்து.
‘பொய் சொல்லாதிங்க.. நீங்க சொல்றதை நம்புறதுக்கு நான் ஒன்னும் சின்ன பிள்ளையில்ல..” என்றாள் மீண்டும் கோபமாக.
‘ம்ம்.. பார்டா.. பெரிய பிள்ளையா நீ..? கொஞ்சம் பெரிய பிள்ளையா..? இல்ல ரொம்ப பெரிய பிள்ளையா..?” என்று மனைவியை ஆராய்ந்தபடியும் ஆச்சர்யத்தோடும் கேட்கவும்..
‘என் நிலைமை உங்களுக்கு கிண்டலா இருக்கா..? ஒரு புருசனை கொன்னுட்டு இன்னொரு புருசனை வாழவிடாம செய்திட்டிருக்கான்னு எல்லாரும் என்னைத்தான அசிங்கமா நினைப்பாங்க..?” என்று முடிக்கக்கூட இல்லை..
இத்தனை நேரமிருந்த இலகு குணம் சட்டென மாற.. ‘நிறுத்து திலகா..” என்று கர்ஜித்தவன்.. அத்தனை கோபமாக தன் கையை அருகிலிருந்த டேபிளில் அடித்துக்கொண்டான்.. அவனின் கோபத்தில் திலகவதியின் வாய் தன்போல் பேச்சை நிறுத்தியது.
அழுத்தமாய் அவளருகில் வந்தவன்.. அவளின் கன்னத்தை அழுத்திப்பிடித்து…
‘இன்னொரு முறை ஒரு புருசன்.. இன்னொரு புருசன்னு பேசுன..” என்று உச்ச பச்ச கோபத்தோடு பற்களை நெறித்தபடி கூறியவன்.. அவளின் கீழுதட்டை அழுத்தமாய் பிடித்து நெறிய.. திலகவதிக்கு வலியில் உதடோடு சேர்ந்து முகமும் சிவக்க.. பிறகு விடுவித்தவன்..
‘இந்த உதட்டுக்கு ஏற்பட்ட நிலைதான் உன் உடம்புல இருக்கிற அத்தனை பார்ட்சுக்கும்.. ஐ மீன்.. இந்த கன்னம்.. கழுத்து..” என தன் விரலை அழுத்தத்தோடு நகர்த்திக்கொண்டே கழுத்திற்க்கு கீழே வர.. திலகவதி சூர்யாவின் கையைப் பிடிக்க.. அவளை திருப்பியவன்.. அவளின் பின்னலை ஒட்டியபடி.. முதுகிலிருந்து தன் விரலால் கோலமிட்டு அவளின் இடையை தாண்ட.. நின்ற இடத்திலேயே கூனிக்குருகி அமர்ந்தாள்.