அரைமணி நேர மௌனத்திற்க்கு பிறகு.. தன் கோபம் குறைத்து.. ‘திலகா..” என்றழைக்க..
அச்சோ ஆரம்பிச்சிட்டானே.. இனி கோபம் குறையறதுக்குள்ள என்னென்ன சொல்வானோ என பதறியவள்.. பதிலில்லையென்றால் அதுக்கும் எதாவது செய்வானே என பயந்து.. ‘ம்ம்..” என்றாள் தலைநிமிராமல்.
‘எனக்கு கா‡பி வேணும்..” என்றான் பிடிவாதக்குரலில்.
அவள் எழவும்.. ‘உன் அழுமூஞ்சை கழுவிட்டு போ..” என்றான் கடுப்பாக.
முகம் கழுவி அதைனை துடைக்காமல் கூட வெளியே போனவள் சற்று நேரத்தில் கா‡பியோடு வரவும்.. வாங்கி குடித்துக்கொண்டே.. ‘எனக்கு உன்னோட சந்தோசமா வாழ்றேனாங்கிறதெல்லாம் முக்கியமில்ல.. நீ இயல்பா இருக்கனும்.. இருந்தேதான் ஆகனும்..” என்று கட்டளையாக சொன்னவன்.. ‘ம்ம்.. நீயும் கொஞ்சம் குடி..” என்று மீதியை நீட்ட.
பயத்தில் அவளின் கை தன்போல் காபியை வாங்கியது. குடிக்கும்போது அவளின் முகத்தையே பார்த்திருந்தான். தான் குடித்த காபி என்ற முகசுழிப்பில்லாமல் குடிப்பதே சூர்யாவிற்க்கு போதுமானதாக இருக்க.. ச்ச.. இவளை எப்படியெல்லாம் பார்த்துக்கனும்னு நினைக்கிறேன்.. ஒரு வார்த்தைதான்னாலும் பெருசா சொல்லி நம்மளை வில்லனாக்கிடறா.. என்று கோபத்தோடு அவளின் முகம் பார்க்க.. அவளின் பயந்த முகமும்.. தான் நெறித்ததால் கன்னிச்சிவந்திருந்த உதட்டை பார்த்ததும் அவனின் கோபமெல்லாம் பஞ்சாய் பறக்க.. பரிதாபத்தோடு அவளையே பார்த்திருந்தவன்..
‘நான் சந்தோசமா இல்லன்னா எங்கம்மா வருத்தப்படுவாங்கன்னு நினைக்கிறது எல்லாம் சரிதான்.. அதேபோல நம்ம பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு ஒரு பெத்த தாயா உங்கம்மாக்கு எப்படியிருந்திருக்கும்..?
நம்ம கல்யாணத்துக்கப்புறம் இப்போதான் அவங்க நிம்மதியா இருக்காங்க.. எப்பவும் உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்காத.. உன்னை சுத்தியிருக்கிறவங்களைப் பத்தியும் கொஞ்சம் நினைச்சிப்பாரு..” என்று பொறுமையான ஆசான் போல் அறிவுருத்தியவன்..
‘நம்ம கல்யாணத்துனால நம்ம குடும்பத்தை சேர்ந்த எல்லாரும் சந்தோசமா இருக்காங்க.. நீ சுடிதார் போட்டதுக்கே பாலா எத்தனை சந்தோசப்பட்டான் தெரியுமா..? உனக்கு ஊர்ல இருக்கிறவங்க பேசறது முக்கியமா..? இல்ல உங்கம்மாவோட நிம்மதி.. எங்கம்மாவோட நிம்மதி.. முக்கியமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ..” என்றான் தன்மையாக.
‘சுத்தி.. இருக்..” என ஆரம்பித்தவள் சூர்யாவிற்க்கு பயந்து.. வார்த்தைகளை முழுங்க.. ‘என்ன சொல்ல வந்த…? சொல்லு..” என்று சூர்யா கேட்க..
ஒன்னுமில்லை என்பதுபோல் திலகவதி தலையை ஆட்ட.. ‘உன் மனசில என்ன இருக்கோ சொல்லு.. அது தப்பா ரைட்டான்னு நான் உனக்கு புரிய வைக்கிறேன்..” என்றான் தன்மையாகவே.
‘இப்போ இப்படித்தான் சொல்விங்க.. நான் சொன்னதுக்கப்புறம் கோபப்படுவிங்க..” என முனுமுனுத்தாள்.
‘கோவப்படமாட்டேன்.. சொல்லு..” என்றான் இலகுவாக.
எப்படி சொல்றது..? என மீண்டும் ஒருமுறை யோசித்து.. ம்ம்.. இவன் சந்தோசமா இருந்தாத்தான நாம குழந்தை பெத்துக்க முடியும்..? என யோசித்தவள்..
‘சுத்தியிருக்கவங்க எல்லார் சந்தோசத்துக்காகவும் நான் வாழ்ந்தேன்னா.. உங்க சந்தோசத்தை நீங்க இழந்திடுவிங்களே..” என்று பாவமாய் சொல்ல..
பேசியது திலகவதிதானா..? என ஆச்சர்யமடைந்து அவளையே உற்று நோக்க.. சூர்யாவின் பார்வையில் நாம வேற எதாவது சொல்லிட்டமா..? என்று திலகவதி தடுமாறி தலைகுனிய.. தன் சந்தோசத்தை பற்றி யோசிக்கும் மனைவியை.. உதடு பிரியாத சின்னசிரிப்போடு ரசனையாக பார்த்தான்.
இவனின் சிரிப்பில் திலகவதிக்கு அவன்மீதுள்ள பயம் போய் கோபம் வர..
‘நான் என்ன சொல்ல வரன்னே உங்களுக்கு புரியல..” என்றாள் எரிச்சலாக.
எது..? எனக்கு புரியலையா..? எல்லாம் நேரம்டி என நினைத்தவனின் சிரிப்பு இன்னும் அதிகமாக.. திலகவதிக்கு மீண்டும் கோபம் வரவும்.. சூர்யாவை ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரத்தில் வழக்கம்போல் தன் துப்பட்டாவை நெறித்தாள்.
அவளின் கோபத்தை ரசித்தவாறே.. ‘நான் ஒரு டாக்டர்.. உனக்கு புரிஞ்சது.. எனக்கு புரியதா..?” என்றான் கரைந்த குரலில்.
‘டாக்டர்ன்னா.. எப்படி ஊசி போடனும்.. எந்த காய்ச்சல்க்கு எந்த மருந்து கொடுக்கனும்னுதான சொல்லிகொடுப்பாங்க.. இதெல்லாமுமா சொல்லிகொடுப்பாங்க..?” என்று புத்திசாலியாய் முனுமுனுக்க..
இன்னும் இன்னும் மனைவியை ரசித்தவன்.. ஏதும் அறியா சிறுவன்போல் முகத்தை வைத்து… ‘எதெல்லாமும்..?” என கொஞ்சும் குரலில் கெஞ்சலாய் கேட்க..
இவள் தடுமாற.. சூர்யாவின் ‡போன் அழைக்க.. ஒரு மார்க்கமாக மனைவியை பார்த்துக்கொண்டே அழைப்பை ஏற்றான். அவர்களோடு ஒரு பேசன்டைப் பற்றிய ஆங்கில உரையாடல். ஐந்து நிமிடம் வரை பேசியவன் இணைப்பை துண்டித்து..
இவனும் முகம் கழுவி.. மாற்றுடையை எடுத்து அங்கிருந்த மறைவிற்க்கு சென்று மாற்றி வந்தவனுக்கு.. ம்ம் இன்னைக்குத்தான் என்னோட சந்தோசத்தைப் பத்தி பேசினா.. அப்படி இப்படின்னு எதாவது கொஞ்சம் பேசலாம்னு பார்த்தா.. இந்த ஹாஸ்ப்பிட்டல் நம்மை விடமாட்டுக்குது.. என சலிப்பாய் நினைத்தவனுக்கு இன்று ஹாஸ்பிட்டல் போகவே மனமில்லைதான்..
ஐந்து நாள் முன்பு சர்ஜரி செய்த பேசன்ட்டின் கண்டிசன் அறிய வேண்டும். பாவம் வசதி வாய்ப்பில்லாதவர்கள்.. ஐ.சி.யு வில் சார்ஜ் அதிகமாகும்.. அவர்களை ஐ.சி.யு.விலிருந்து ரூமிற்க்கு மாற்ற வேண்டும்.. இதுபோல இன்னும் நாலைந்து முக்கிய பணிகளை நினைத்தவாறே பேன்ட்டை போட்டவனுக்கு என்றுமில்லாமல் இன்று மனைவியின் அருகாமை தேவைப்பட..
‘திலகா.. வந்து சர்ட் பட்டன் போட்டு விடு..” என்றான்.
‘என்ன..? நானா..” என்று தடுமாற..
மனைவியருகே வந்தவன்.. அவளின் சிவந்திருந்த கீழுதட்டினை மென்மையாய் வருடியபடி.. ‘இன்னைக்கு நீ பேசின பேச்சுக்கு உன்னை இத்தோட விட்டதே பெரிய விசயம்.. இப்ப வந்து சர்ட் பட்டனை போட்டு விடலன்னா.. நாளைக்கு பேன்ட்டையும் நீதான் போட்டு விடறமாதிரி வரும்..” என்றான் பொய் மிரட்டலாக.
‘ஆங்..” என வாய் பிளக்க..
உள்ளுக்குள் சிரித்தவன்.. ‘ப்ச்.. டைம் ஆச்சு சீக்கிரம் போட்டுவிடு..” என்று சிடுசிடுக்க..
அவனின் சிடுசிடுப்பு வேலைசெய்ய.. கவனமாக அவனுடலில் கைபடாமல் பட்டனையும் சர்ட்டையும் கொஞ்சம் முன்னே இழுத்து ஒவ்வொரு பட்டனாக போட்டுவிட ஆரம்பிக்க..
ம்ம்.. இந்த சீரியல்ல எல்லாம் கதாநாயகனுங்க எதுக்கு வேணும்னே பட்டனை பிச்சிவிடறானுங்கன்னு இன்னைக்குத்தான் தெரியுது.. இதுவும் நல்லாத்தான் இருக்கு என உல்லாசமாய் நினைத்தவன்.. அவளின் பின்னலின் நுனியை பிடித்து மென்iமாய் இழுக்க.. அவள் ஒரு அடி முன்னே வர நேரிட.. அவளின் பின்னலை தன் கழுத்தில் சூர்யா போட்டுக்கொள்ள.. திலகவதி சர்ட் பட்டனை சட்டென விட..
‘ம்ம்.. நான் கொஞ்சம் லேட்டாக்கூட போய்க்கிறேன்.. நீ பொறுமையாவே போட்டுவிடு.. மிச்சமிருக்கிற நாலு பட்டனையும் நீ எப்போ போட்டு முடிக்கிறியோ அதுவரை இப்படியே இருப்போம்..” என்றான் குழைவாக.
எப்படியும் போட்டுவிடாமல் விடமாட்டான் என நினைத்து மீதமிருந்த பட்டனையே பார்த்திருந்தவளுக்கு.. இவனின் குழைவெல்லாம் புரியவில்லை.. தன் பணியினை செவ்வனே செய்ய ஆரம்பிக்க.. இவன் தனது மேல் பட்டனை கழற்றி விட.. கீழ் பட்டன் வரை போட்டு முடித்தவள்.. ‘என் ஜடையை கொடுங்க..” என தலைகுனிந்தவாறே முனுமுனுக்க..
‘உன் ஜடை வேணும்னா.. நீயே எடுத்துக்கோ..” என்று கிசுகிசுப்பாய் சொல்ல..
இவனின் கழுத்தைநோக்கி இவளின் கை நீள.. அவளின் கையைப் பிடித்தவன்.. ‘முதல்ல பட்டனை சரியா போட்டு முடி..” என்று தன் முதல் பட்டனை காண்பிக்க..
‘இப்ப போட்டேனே..” என யோசனையாய் முனுமுனுத்தவள்.. பிறகு சூர்யாவை முறைக்க.. சிரித்தவன்.. ‘நான் ஒன்னும் பண்ணல.. நீ சர்ட்டை இழுத்து பிடிச்சிட்டு மத்த பட்டன் போடும்போது இந்த பட்டன் கழண்டுருச்சி..” என்று சொல்ல..
பலமுறை கோபமாய் இப்படி நெருங்கிருக்கிறான்தான்.. அப்பொழுதெல்லாம் இவளுக்கும் கோபமே பெருக்கெடுக்கும்.. ஆனால் இன்று இவனின் நெருக்கத்தில் கோபம் வராமல் வேறு எதுவோ போலாக.. இந்த நிலை பெரும் தடுமாற்றத்தை கொடுக்க.. இந்த ஒன்னையும் போட்டு தொலையலாம்.. இல்ல விடமாட்டான் என நினைத்து.. அவனுடலில் கைபடாமல் பட்டனை பிடித்தவள்.. மறுகையால் அவனின் சர்ட்டை பிடித்து முன்புபோல் சற்றே முன்னே இழுக்க..
இவனின் கை கீழ் பட்டனுக்கு போக.. இவள் முறைக்க.. ‘சர்ட்டை இழுக்காம போடு.. அப்போதான் இந்த பட்டன் கழடாது..” என்று சூர்யா குழைவாக சொல்ல..
இவன் எதோ பெரிய சீட்டிங் செய்ததைபோல பாவனை காண்பித்து..
‘போங்க..” என முனுமுனுப்பாய் சொல்லி கோபித்து அவனின் சர்ட்டை உதறியவள்.. தன் பின்னல் அவனின் கழுத்தை சுற்றியிருப்பதை மறந்து.. வேகமாக திரும்ப.. இவள் திரும்பிய வேகத்தில் இவனின் கழுத்திலிருந்து தன்போல் நழுவிய பின்னலை சூர்யா பிடிக்க..
அந்தப்புறம் திரும்பியவள் நகரமுடியாமல்.. செய்வதறியாது தன் துப்பட்டாவை நெறிய.. கோபமா திரும்பினாக்கூட தாங்கிக்கலாம்.. இப்படி கோவிச்சி கொல்றாளே.. என சூர்யா ஏக்க பெருமூச்சு விட.. அவனின் ‡போன் மீண்டும் அவனை அழைக்க.. மனைவியின் பின்னலை விடுவித்தவன்..
அவள்முன் வந்து நின்று தன் பட்டனை போட்டுக்கொண்டே.. ‘நான் சொன்ன வேலையை நீ சரியா செய்யல.. அதனால..” என நிதானமாய் சொன்னவன்.. நன்றாக குனிந்து அவளின் முகம் பார்த்து.. ‘நாளைக்கு நீதான் எனக்கு பேன்ட் போட்டு விடனும்..” என்று சின்ன சிரிப்போடு சொல்லி கிளம்பினான் மருத்துவமணைக்கு.