அத்தியாயம் –19
அடுத்தநாள் காலை சூர்யா குளிக்கச் சென்றதும்.. வெளியே வந்தவள்தான்.. எத்தனை முறை சூர்யா அழைத்தும் திலகவதி உள்ளே செல்லவில்லை. கமலத்திற்க்கு டிபன் பரிமாறிக்கொண்டு அவர்களோடே நின்றுகொண்டாள்.
‘அவன்தான் கூப்பிடறானில்ல..? போய் என்னன்னு கேட்டுட்டு வா..” என்று கமலம் அதட்ட..
வேறு வழியின்றி ரூமருகே வந்தவள்.. தலையை மட்டும் உள்ளே நீட்டி.. ‘நான் அத்தைக்கு டிபன் போட்டுட்டிருக்கேன்..” என்று சொல்லி மீண்டும் கமலத்திடமே வந்து நின்றுகொண்டாள்.
இவன் ரெடியாகி வெளியே வர.. அப்பாடி பேன்ட்டை போட்டுட்டான் என்று தப்பித்த பாவனையை திலகாவின் முகம் காட்ட.. பிறகுதான் இவள் ஏன் தான் அழைத்தும் உள்ளே வரவில்லை என்று சூர்யாவிற்க்கு புரிய.. சின்ன சிரிப்போடு சாப்பிட அமர்ந்தான்.
கமலம் சாப்பிட்டு வெளியேற.. சூர்யாவிற்க்கு இவள் பரிமாற.. ‘இன்னைக்கு பேன்ட் போட்டுவிடறதுலயிருந்து எப்படியோ தப்பிச்சிட்ட.. பரவால்ல விடு.. நாளைக்கு பொழுது விடியாமலா போய்டும்..” என்று சிரிப்போடு கேட்க..
இவள் அதிர்வோடு தடுமாற.. ‘சரி விடு.. இன்னைக்கு போலவே நாளைக்கும் மறந்திடறேன்..” என்று அவளின் தடுமாற்றத்தை குறைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
சூர்யா சாப்பிடும்வரை பொறுமையாக இருந்தவள்.. சாப்பிட்டதும்.. ‘உங்களுக்கு நேரமாகிடுச்சா..?” என்றாள் சன்னமாக.
‘இல்ல ஒரு ஒன்பது மணிபோல போனா போதும்..” என்று சூர்யா சொல்ல..
‘இந்த நம்பர்க்கு ஒரு ‡போன் பண்ணிகொடுக்கறிங்களா..?” என்றாள் திலகவதி.
இத்தனை நாளில் இதுவரை இவளின் அம்மாவிடம் கூட பேசக் கேட்டதில்லையே என நினைத்தவன்… ‘யார்கிட்ட பேசனும்..?” என்றான்.
‘இல்ல.. நான் ஒரு அம்மாக்கு பிளொஸ் தைச்சி கொடுத்தேன்.. அது நல்லாயிருந்ததுன்னு மறுபடியும் இருபது பிளொஸ் கொடுத்து தச்சி கொடுக்க சொன்னாங்க.. எல்லாம் கல்யாண விசேசத்துக்கானதாம்.. நேத்து மதியமே ரெடியாய்டுச்சான்னு கேட்டாங்க.. நானும் தைச்சி முடிச்சிருந்தேன்தான்.. ஆனா அவ்ளோ பணத்தை என்கையில வாங்க எனக்கு பயமாயிருந்தது… அத்தைகிட்ட கொடுக்க சொல்லலாம்னு பார்த்தா அத்தை தூங்கிட்டிருந்தாங்க.. இன்னைக்கு அத்தை தூங்கும் முன்ன வந்து வாங்கிக்க சொல்லனும்.. அவங்களுக்குத்தான் போன் செய்யனும்..” என்றாள்.
திலகாவிற்க்கு மொபைல் அவசியமாக தேவைப்படுகிறது எனப்புரிந்திருந்தாலும்.. எனக்கு ‡போன் வேணும்னு உரிமையா கேட்குறாளோ அன்னைக்கு பார்த்துக்கலாம் என நினைத்து.. ‘நீ பயப்படுற அளவுக்கு அப்படி எவ்ளோ பணம் கொடுக்கப்போறாங்க..?” என்றான் பெருமையாக.
‘நாப்பதாயிரம் ரூபா தருவாங்க..” என்றாள் கண்களை பெரிதாக்கி பெருமையாக.
சூர்யாவின் கண்களும் தன்போல் ஆச்சரியத்தில் பெரிதாக.. ‘பிளொஸ் தச்சா இவ்ளோ பணம் கிடைக்குமா…?” என்றான்.
‘இதுவே கம்மிதானாம்.. இப்பவெல்லாம் ஒரு ஆர்யா ஒர்க் பிளொசுக்கு ஐந்தாயிரம் கூட வாங்குறாங்களாம்.. ஒரு பிளொசுக்கு மூவாயிரமாவது வாங்கியிருக்கலாமில்லைன்னு அன்னைக்கே கீர்த்தி அக்கா திட்டினாங்க..” என்றாள்.
‘ஒரு பிளொஸ் தைக்க எவ்ளோ நாளாகும்..?” என்றான் குறையாத ஆச்சர்யத்தோடு.
‘இங்கதான் வீட்டு வேலை செய்யவெல்லாம் ஆள் இருக்காங்கல்ல..? அதனால ஒரு பிளொசை ஒருநாள்லையே தைச்சி முடிச்சிடுவேன்.. இப்போ ஒருமாசமா இவங்க வேலைமட்டும்தான் பார்த்தேன்..” என்றாள்.
இவன் பிரம்மிப்போடு திலகாவையே பார்த்திருக்க… ‘அவங்களுக்கு போன் செய்ங்க.. பாவம் ரெண்டு மூனுமுறை நேர்ல வந்திட்டு போய்ட்டாங்க..” என்றாள்.
இவனும் அவளிடம் இருந்த சிறிய நோட்டை வாங்கி அவள் காண்பித்த எண்ணுக்கு அழைத்து.. திலகாவிடம் கொடுக்க.. ‘ம்ம்.. நான் டெய்லர் பேசுறேன்.. பிளொஸ் ரெடியாய்டுச்சி.. மதியம் பனெண்டு மணிக்குள்ள வந்து வாங்கிக்கோங்க..” என்று சொல்லி சூர்யாவிடம் போனை கொடுத்தாள்.
அடுத்த அரை மணிநேரத்திற்க்குள் அவர்கள் வர.. இவள் ஒரு பெரிய பேகை எடுத்து வந்து.. ‘எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க.. இங்கயிருந்து எடுத்திட்டு போய்ட்டு.. பின்ன வந்து எதுவும் காணோம்னு சொல்லக்கூடாது..” என்று கண்டிப்போடு சொல்ல..
ம்;ம்.. பரவால்லையே.. நல்ல உசாராத்தான் இருக்கா.. என மனதில் மெச்ச.. வந்த பெண்மணி எல்லாம் சரிபார்த்து.. திருப்தியோடு பணத்தை எடுத்து நீட்ட..
‘இவர்கிட்ட கொடுங்க..” என்று சூர்யாவை கைகாட்ட.. பணத்தை வாங்கியவன் எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்க..
‘பக்கத்தில நிறைய பேர் தைக்க கேட்டாங்கம்மா.. என் கல்யாண வேலை முடிஞ்சதும் அவங்களை அழைச்சிட்டு வந்து வீட்டைக் காட்டுறேன்..” என்று சொல்லி கிளம்ப..
‘இப்போ நான் போன் செய்த நம்பர்க்கேது திரும்பவும் போன் செய்யாதிங்க.. இவர் ஹாஸ்பிட்டல்க்கு போய்டுவார்.. எதாவது தேவைன்னா நேர்லதான் வரனும்..” என்று மீண்டும் கண்டிப்போடே சொல்ல..
‘சரி..” என சொல்லி அவர்கள் கிளம்ப.. பார்டா.. இப்போல்லாம் ரொம்பத்தான் எனக்காக யோசிக்க ஆரம்பிச்சிட்டா.. என பெருமையாக நினைத்தவன்…
‘அம்மா நம்பரை கொடுக்கலாமில்ல..?” என்று சூர்யா கேட்க..
‘இல்லயில்ல.. நிறைய பேர் தைக்க கொடுத்திருக்காங்க.. ரெடியாய்டுச்சான்னு சும்மா சும்மா போன் செய்திட்டே இருப்பாங்க.. அது அத்தைக்கு தொல்லையாய்டும்..” என்றாள்.
இத்தனை தேவையிருந்தும் என்கிட்ட ஒரு மொபைல் வாங்கி கொடுங்கன்னு உரிமையா கேக்கமாட்டியா..? என ஏமாற்றமாய் நினைத்தவன்.. பிறகு அவளின் சந்தோச முகத்தை பார்த்து.. தானும் சந்தோசமடைந்து.. ‘ம்ம்.. ரொம்ப சந்தோசமா இருக்க போல..” என்றான் பெருமையாக.
‘ம்ம்.” என வேகமாய் தலையாட்டிவள்.. ‘முன்னமே சம்பாதிச்சிருக்கேன்தான்.. ஆனா மத்தவங்ககிட்ட வேலைக்கு போய்தான் சம்பாதிச்சேன்.. இப்ப எனக்கு நானே முதலாளியா.. முதன்முதலா வாங்குற பணம்.. அதுவும் இவ்ளோ பணம்.. அதான்..” என்றாள் பெருமையாக.
அன்றுபோல் எதாவது கிறுக்குத்தனமாக உளறுவாளா என யோசித்து.. ‘சரி.. இந்த பணத்தை என்ன பண்ணபோற..?” என்றான்.
‘எனக்கு இவ்ளோ பணமெல்லாம் என்ன பண்ணனும்னு தெரியாது.. அடுத்த மாசம் மாமா இங்க வராங்கயில்ல.. நேர்ல வந்து ஏதோ ஐடியா சொல்றாங்களாம். நேத்து சொன்னாங்க..” என்றாள்.
‘மாமாவா..? அதுயாரு…?” என்றான் யோசனையாய்.
‘அது நம்ம தியாகுட்டியோட அப்பாதான்.. கீர்த்தி அக்காதான் அவங்க இவங்கன்னு சொல்லகூடாது.. மாமான்னுதான் சொல்லனும்னு சொன்னாங்க..” என்றாள்.
‘ஓ.ஹோ.. என் அண்ணன் உனக்கு மாமான்னா.. அப்ப நான் யாரு..?” என்று ஆர்வமாய் பார்த்தான் திலகாவை.
இத்தனை நேரமிருந்த இலகுத்தன்மை போய்.. திலகா தடுமாறவும்..
இன்று தன்னிடம் வெகுநேரம் மனைவி இயல்பாய் பேசிய சந்தோசத்தில்.. அவளின் தடுமாற்றத்தை ஒதுக்கியவனாய்.. ‘ம்ம்.. சொல்லு..” என்றான் விடாமல்.
‘நீ..ங்க.. என்னோட வீட்டுக்காரங்க…” என்று சொல்லி தலைகுனிந்தாள்.
‘அப்படியா..?” என்று கண்கள் மின்ன அவளைப்பார்த்தான். அவள் அவ்விடம் விட்டு நகர முற்படவும்.. ‘பேசிட்டிருக்கும்போதே போனின்னா… அப்புறம் பனிஷ்மென்ட் கொடுப்பேன்.. பரவாயில்லன்னா போ பின்னாடியே வரேன்..” என்றான். ஸ்விட்ஆ‡ப் செய்த பொம்மைபோல் நின்றாள்.
‘ஹா..ஹா..” என்று வாய்விட்டு சிரித்தவன்.. ‘சரி.. என்னையும் எப்பவும் இல்லன்னாலும்.. எப்போவாவது மாமான்னு சொல்லனும்..” என்றான் ஆசையாக.
வழக்கம்போல் அதிர்ச்சியில் திலகவதி அமைதியாக.. ‘சரி..சரி.. நான் கிளம்பறேன்.. நீ உன் பிஸ்னசை பாரு.. போற போக்கைப் பார்த்தா என்னைவிட நீதான் ரொம்ப பிசியாய்டுவ போல..” என்று அவளை இலகுவாக்கி தன் அன்னையிடமும் திலகா சம்பாதித்த பணத்தைப் பற்றி பெருமையுடன் சொல்லி கிளம்பினான் பணிக்கு.
ஹாஸ்ப்பிட்டல் வந்தவனுக்கு வழக்கமான பணிகள் முடியும் வரை பம்பரமாய் சுழன்றிருந்தவன்.. பதினொரு மணிபோல் ஓய்வு நேரம் வர.. உடனே மனைவிதான் கண்முன் வந்தாள்.
இத்தனை வேகமாக திலகவதி கைத்தொழில் கற்றுக்கொண்டதையும்.. அதன்மூலம் கிடைத்த வருவாயில் அவளின் முகம் பூரித்திருந்ததையும் நினைத்து.. ம்ம் எல்லார்க்குள்ளயும் ஏதோ ஒரு திறமை ஒளிஞ்சிருக்குங்கிறது உண்மைதான் என பெருமையாக நினைத்தவன்.. கூடவே துணி தைக்கப்போய்தான் பழசை கொஞ்சம் மறந்திருக்கா.. ஆதவா உனக்குதாண்டா தேங்க் பண்ணனும்.. என்று திலகவதிக்கு இதை ஏற்படுத்திக் கொடுத்த தன் அண்ணனுக்கு மனதில் நன்றி தெரிவித்தான்..
ம்ம்.. ஒருவழியா என் பொண்டாட்டி என் சந்தோசத்தை யோசிக்க ஆரம்பிச்சிட்டா.. என சந்தோசமாய் நினைத்தவன்.. திலகவதியை பயமுறுத்த வேண்டி ஒருமுறை அவளின் நெற்றியிலும் பாதத்திலும் தான் கொடுத்த முத்தத்தை நினைத்தவன்.. இன்னைக்கு ஆழ்ந்து அனுபவிச்சி குறைஞ்சபட்சம் ஒரு முத்தமாவது கொடுக்கனும்.. எங்க கொடுக்கலாம்..? கண்டிப்பா உதட்ல வேணாம்.. அப்புறம் நம்மளால நம்மை கன்ட்ரோல்; செய்யமுடியாது.. என ஏக்கப் பெருமூச்சுவிட்டவன்.. ம்ம் அப்போ எப்படி மூட் இருக்கோ அப்படி பார்த்துக்கலாம்.. என நினைக்க.. கட்டின பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுக்க இத்தனை ப்ளானா..? நீ வேஸட் டா சூர்யா.. என நினைக்க சிரிப்புதான் வந்தது.
‘சார்..” என வெளியிலிருந்து அழைப்பு வர.. சிரிப்போடே செவிலிப்பெண்ணுக்கு உள்ளே வர அனுமதிக்க.. இவனின் சிரிப்பைப் பார்த்து வந்தவள் தயங்க.. ‘எனி எமர்ஜென்சி..?” என சூர்யா கேட்க..
‘ஓ.பி. ல முப்பது பேர்க்கு டோக்கன் கொடுத்தாச்சி.. எல்லாரும் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க.. “ என்று சொல்ல..
காட்.. ஒரு மணிநேரமா தேவையில்லாம வெய்ட் பண்ண வச்சிட்டோமே என வருந்தி.. ‘முன்னமே சொல்லியிருக்கலாமே..” என்று கடிய…
‘சார்.. நீங்க எப்பவும் இப்படி இருந்ததில்ல..” என்று நர்ஸ் இழுக்க..
‘சரி..சரி.. போய் பேசன்ட்டை அனுப்புங்க.. “ என்று நர்சையும் துரத்தி.. தானும் பணியில் கவனமானான். அனைவரையும் பார்த்து முடித்து மணிபார்க்க.. நான்கை காட்டியது. ஒ.பி. பார்க்கும்போது எப்பொழுதும் போனை சைலன்ட்டில் போட்டுவிடுவான்.. இப்போது போனை எடுத்து பார்க்க.. அம்மாவேற மூனுமுறை போன்செய்திருக்காங்க.. லன்ச் சாப்பிடாம வேலைசெய்ததுக்கு வீட்டுக்கு போனதும் அம்மாகிட்ட அர்ச்சணை உண்டு என நினைத்தவன்.. எமர்ஜென்சின்னா மட்டும் கால் பண்ணுங்க.. மாலை வரமாட்டேன் என்று தகவலளித்து வீட்டிற்க்கு கிளம்பினான்.