நாலரை மணிபோல் சூர்யா வீட்டிற்க்கு வரவும்.. மகனின் முகம் பார்த்தே இன்னும் சாப்பிடாமல் இருக்கிறான் எனப்புரிந்த கமலம் முறைக்க..
‘என் செல்ல அம்மால்ல.? நான் சாப்பிட்டதும் திட்டுவிங்களாம்..” என்று கமலத்தின் தாடையைப் பிடித்து கொஞ்ச.. ‘குளிக்க ஓடிடாத.. முகம் கை மட்டும் கழுவிட்டு வந்து சாப்பிடு முதல்ல..” என்று கமலம் கடுப்பாக சொல்ல..
சூர்யாவின் பேச்சரவத்தில் டெய்லரிங் அறையிலிருந்து வெளியே வந்த திலகா.. பதட்டத்தோடு நின்றிருக்கும் முத்துவைப் பார்த்து அவரருகில் போனவள்..
‘என்னாச்சி அண்ணா..?” என கேட்க..
‘தம்பி ஹாஸ்ப்பிட்டல்ல சாப்ட்டுக்கும்னு நினைச்சி இருந்ததை என் வீட்டுக்கு கொடுத்தனுப்பிட்டேன் பாப்பா..” என்று வருந்த..
கமலம் முத்துவை முறைக்க.. ‘அம்மா முத்து மேல எந்த தப்பும் இல்ல.. வழக்கமா இந்த நேரம் வரை ஆனதுன்னா நான் ஹாஸ்ப்பிட்டல்லையே சாப்டுக்குவேன்தான..? இந்த டைம்ல நான் பசியோட வருவேன்னு அவருக்கு எப்படி தெரியும்..?” என்று தன் அன்னையிடம் சொல்ல..
‘தம்பி.. பத்து நிமிசத்தில நான் செய்திடறேன்..” என்று முத்து சமையலறை செல்ல.. அவர் பின்னோடே போனவள்.. ‘சாதம் இருக்கான்ணா..?” எனக் கேட்க..
‘எனக்கு சாப்பிட எடுத்து வச்சேன்.. என்னவோ தெரியல இன்னைக்கு சாப்பாடே இறங்கல.. பாதி சாப்பிட்டேன்.. பாதி இருக்கு.. ஆனா அது தம்பிக்கு பத்தாதே..” என்று எடுத்துக்காட்ட..
முட்டை இருக்கா எனப் பார்த்தவள்.. இருக்கவும்.. ‘நீங்க கவலைப்படாதிங்க.. இந்த சாதமே மீதி ஆகிடும்.. நான் சமைக்கிறேன்..” என நான்கு முட்டையை எடுத்து வெளியே வைத்தவள்.. கிச்சனிலிருந்து கணவனை எட்டிப்பார்த்து
‘நீங்க போய் முகம் கழுவிட்டு வாங்க..” என்று சொல்ல.. சூர்யா தனதறைக்குள் போனான். இவள் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடிசாய் நறுக்கிக்கொண்டே.. ‘அண்ணா ஒரு தக்காளி கட் பண்ணுங்க..” என்று சொன்னவள் இரண்டு நிமிடத்தில் வெங்காயம் கட் செய்து.. சிறிது நல்லெண்ணைய் ஊற்றி.. இரண்டு பச்சை மிளகாய்.. வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை போட்டு வதக்கி.. சிறிது கரம் மசாலாவும் போட்டு முட்டையை உடைத்து ஊற்றி வறுத்தவள்.. அதோடு சாதத்தையும் போட்டு நாலு பிரட்டு பிரட்டி.. இறக்கும் தருவாயில் ப்ரைட்ரைஸ் மசாலா கொஞ்சம் சேர்த்து மல்லியிலையும் போட்டு மீண்டும் கொஞ்சம் நல்லெண்ணைய் விட்டு ஒருகிளறு கிளறி இறக்கி..
‘அண்ணா நீங்களும் சரியா சாப்பிடலன்னு சொன்னிங்கதான..? அவர் இவ்ளோ சாப்பிடமாட்டார்.. உங்களுக்கும் ஒரு ப்ளேட் எடுங்க..” என்று சொல்ல.. ‘இல்ல பாப்பா எனக்கு பசியில்ல.. தம்பி சாப்பிடட்டும்..” என்று சொல்ல.. தட்டின் ஓரமாய் கொஞ்சம் தக்காளி சாசும்.. மிளகாய் சாசும் வைத்து ஆவி பறக்க டைனிங் டேபிளில் எடுத்து வைக்க.. சூர்யா இன்னும் வெளிவராமல் இருக்க.. தனதறை அருகே சென்றவள்..
‘சாப்பாடு ரெடி.. வாங்க.” என்றழைக்க..
‘பத்து நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ள எப்படி ரெடியானது..?” என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தவன்.. ‘ஹோட்டல்ல வாங்கியதா…?” என கேட்க..
‘இல்லயில்ல.. இங்க செய்ததுதான் சாப்பிடுங்க..” என்றாள்.
ஒருவாய் சாப்பிட்டவன்.. ‘ம்ம் செம்மையா இருக்கே..” என்று முத்துவைப் பார்த்தவாறு சொன்னவன் வேகமாய் சாப்பிட்டு முடிக்க.. ‘இன்னும் கொஞ்சம் போடவா..?” என்றாள்.
‘போதும்.. போதும்…” என்று ஏப்பம் விட்டபடி சூர்யா எழவும்.. ‘சமையல் பாப்பா செய்துச்சி தம்பி..” என்றார் முத்து.
‘ம்ம்..?” என்றான் மனைவியிடம் ஆச்சர்யமாய்.
இவள் ஆமாம் என தலையசைத்து.. ‘பாலாக்கு இந்த சாதம் ரொம்ப பிடிக்கும்.. நானும் அவனும் சேர்ந்து அடிக்கடி செய்து சாப்பிடுவோம்..” என்றவள்..
‘அண்ணா இவர் இவ்ளோதான் சாப்பிடுவார்ன்னு நான்தான் சொன்னேன்ல..? பாருங்க போதும்னு எழுந்துட்டாரு.. சூடு ஆறதுக்குள்ள நீங்க சாப்பிடுங்க..” என்று திலகவதி சொல்ல..
பார்டா.. நான் எவ்ளோ சாப்பிடுவேன்னு கூட உனக்கு தெரியுமா..? என்பதுபோல் சூர்யா திலகவதியை மெச்சுதலாய் பார்க்க.. மகனை கவனித்த கமலம்..
‘அவள்லாம் சரியாத்தான் இருக்கா.. நீதான் பொண்டாட்டி நினைப்பில்லாம ஹாஸ்ப்பிட்டலே கதின்னு சுத்திட்டிருக்க.. “ என்று மகனை குற்றம் சொல்ல..
சிரித்தவன்.. ‘ஆமாம்ல மா..? சரி என் பொண்டாட்டி எனக்கு முதன் முதலா சமைச்சிகொடுத்திருக்கா.. அவளுக்கு என்ன கொடுக்கலாம்..?” என்று தன் அன்னையிடம் வம்பளக்க.. இவள் தடுமாற..
தனது வீல் சேரை வெளியே நோக்கி திருப்பியவாறே.. ‘எதையோ கொடுத்துக்க.. ஆனா எதுவும் கொடுக்காம இருக்காத..” என்று சொல்லி கமலம் வெளியே கார்டனுக்கு செல்ல..
அம்மா என்ன சொல்றாங்க என நினைத்து சூர்யா குழம்ப.. முத்து வெக்கச் சிரிப்போடு கிச்சனுக்குள் போக.. பிறகுதான் புரிந்தவனாய் இவனும் வெக்கத்தோடு சிரிக்க.. தனது டெய்லறையை நோக்கி செல்லவிருந்தவளின் கையைப் பிடித்து தனதறைக்கு அழைத்துப்போனான் சூர்யா.
தடுமாற்றத்தோடு அவனிடமிருந்து தன் கையை உருவப்பார்க்க.. அவளின் கையை விடுத்து இடையை வளைத்தவன்.. ‘என் பசிக்காக ‡பர்ஸ்ட் டைமா சமைச்சிருக்க தேங்க்ஸ்..” என்று உள்ளார்ந்து சொல்லி.. மனைவியை தன்னுள் சேர்க்க.. மெல்லிய அணைப்புதான்.. ஆனால் தனது மொத்த உடலும் திலகவதியின் உடலோடு உரசியிருக்க..
‘இதெல்லாம் ஒரு விசயமா..?” என்று அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயற்ச்சிக்க.. சூர்யாவின் போன் அடிக்க.. ‘ப்ம்ச்..” என சலித்தவாறே திலகவதியை விடுத்து போனை எடுக்க.. இவள் வெளியே போக எத்தணிக்க.. அவளின் ஜடையை எட்டிப்பிடித்தவன்.. தன்னோடு இருத்திக்கொண்டவாறே அட்டன் செய்ய..
‘சார்.. நாளைக்கு ஆப்ரேசன் செய்ய இருக்கிற வினயான்ற பேசன்ட்க்கு ‡பிட்ஸ் வந்திருச்சி..” என்று நர்ஸ் பதற..
‘மிருனாளினிகிட்ட கொடுங்க..” என்று சூர்யா சொல்ல.. அந்த டாக்டரிடம் ஐந்து நிமிடம் வரை பேசியவன்.. ‘திரும்பவும் எதாவது ப்ராப்ளம்ன்னா கூப்பிடுங்க..” என்று முடிக்க.. இவள் திமிற.. கையிலிருந்து ‡போன் நழுவி கீழே விழ..
அவளின் ஜடையை பிடித்தவாறே ‡போனை எடுத்து வேலைசெய்கிறதா எனப்பார்;க்க.. அது சரியாய் இருக்கவும்.. ‘முப்பதாயிரம் தப்பிச்சது..” என்று தனக்குத்தானே சொல்ல.. இவள் மீண்டும் அவனிடமிருந்து விலகப்போராட.. அவனின் கை எதேச்சையாக காலரியில் டச் ஆக..
அதில் சோனுவைப் பார்த்தவள்.. ‘இது யாரு..? நம்ம சோனுக்குட்டியா..? விளம்பரத்துல வர குழந்தைமாதிரியே இருக்கா..” என்று திலகவதி பேச்சை மாற்ற..
இவளின் அருகாமை கிடைத்தால் அதுவே போதும் என நினைத்தவன்.. ‘ம்.. பார்க்கிறியா..?” எனக்கேட்டு சோனுவைக்காட்ட.. அதில் சூர்யா குழந்தையோடு விளையாடியது வர.. அதனைப் பார்த்தவள்..
‘இது என்ன..? நாம அன்னைக்கு போனோமே.. அந்த இடமா..?” என கேட்க.. ‘ம்ம்.. கமலம் ஹோம்தான்..” என்றவன் அதனையும் காட்டி.. இவன் திலகவதியின் முகத்தையே ரசனையாய் பார்த்திருக்க.. அதையும் பார்த்து முடித்தவள்.. சூர்யா செய்ததுபோல் அருகிலிருந்த இன்னொரு பிச்சரைத் தொட..
‘சூர்யா..” என்ற பிரசாத்தின் குரல் வரவும்.. பதறியடித்து அவளிடமிருந்த ‡போனை சூர்யா பிடுங்க..
‘எனக்கு அதை பார்க்கனும்..” என்று திலகா தவிப்போடு கேட்க..
‘அதுல ஒன்னுமில்ல.. பிரசாத் போட்டோதான்..” என்று சூர்யா சமாளிக்க..
‘இல்ல.. என்னவோ சொல்லியிருக்கார்.. எனக்கு அதைப் பார்க்கனும்…” என்று பிடிவாதமாய் குரலுயர்த்த.. ச்ச.. முன்னமே இதை டெலிட் செய்திருக்கனும்.. என்று தன்னைத்தானே நொந்து கொண்டவனாய்..
‘நான்தான் சொல்றேன்ல…?” என்று சூர்யா மிரட்ட..
அவனின் மிரட்டலுக்கு அசராதவளாய்.. ‘காட்ட மாட்டிங்களா..? காட்ட மாட்டிங்களா..?” என கர்ஜித்தவள் சூர்யாவிடமிருந்து விலகி சுற்றிலும் எதையோ தேட.. எதுவும் கிடைக்காமல் போக வேகமாக முட்டிக்கொண்டாள் சுவற்றினில்.
மறுமுறை அவள் முட்டுவதற்க்கு முன்பு.. ‘ஏய்..” என்று சட்டென பதறித்தடுக்க..
‘என்னை விடுங்க..” என்று கோபத்தோடு திலகவதி திமிற.. சூர்யா அவளை தேற்ற முயற்ச்சிக்க.. ‘நீங்க காட்றவரைக்கும் இந்த ரூமைவிட்டு வெளில போகமாட்டேன்.. எதுவும் சாப்பிடமாட்டேன்..” என்று சபதமிடுவதுபோல் கத்தி..
‘ஒரே ஒருமுறை எனக்கு அவங்களை காட்டுங்களே..” என்று அழுது கரைய..
செய்வதறியாது சூர்யா அமைதிகாக்க.. ‘எனக்கு அதை பார்க்கனும்…” என்று உரக்க கத்தியவள்.. அழுதுகொண்டே தானாய் கணவனை கட்டிக்கொண்டவள்..
‘இப்போ காட்டுவிங்களா..?” என கேட்க..
‘லூசு..” என திட்டி தன்னிடமிருந்து மனைவியை பிரிக்க முயல..
தன் அணைப்பை மேலும் கூட்டியவள்.. ‘எனக்கு அதை காட்டுங்க.. என்னை என்னவும் செய்துக்கோங்க.. நான் அவங்களை பார்க்கனும்..” என்று கதறியழ..
‘ஏய்.. ச்சீய்.. என்ன பேசுற..?” என்று கோபமாய் திட்டி தன்னிடமிருந்து அவளை பிரித்தான்.
எதுவும் காதில் விழாதவளாய்.. ‘எனக்கு அதை காட்டுங்க.. ஒரே ஒருமுறை காட்டுங்க..” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி கண்ணீர் வடிக்க.. பத்து நிமிடங்களாக எத்தனை முயற்ச்சி செய்தும் சூர்யாவால் திலகவதியை சமாளிக்க முடியாமல் போக..
வேறு வழியே இல்லாமல்.. ‘சரி.. காட்றேன்..” என்றான் சிறிதும் மனமில்லாமல்.