அத்தியாயம் .. 21
கமலம் அழைத்ததால் இரண்டு நாள் கழித்து ஜெயா வந்திருக்க.. தன் அக்காவை பார்த்தே மூன்று மாதத்திற்க்கு மேலாகியிருக்க இன்று ஞாயிற்று கிழமையாதலால் பாலாஜியும் வந்திருந்தான்.
ஹாலிலிருந்து கமலம் திலகாவை அழைக்க.. தன் அம்மாவின் பேச்சரவத்தில் அச்சோ அம்மாகிட்ட எதாவது சொல்லியிருப்பாங்களா..? நம்மளை கொன்னே போட்டுடுமே என பயமெடுக்க.. ‘இதோ வரனே;த்தை..” என்றவள் பத்து நிமிடத்திற்க்கு மேலாகியும் வெளியே போகவில்லை.
அரை மணிநேரமாக ‡போன் பேசிக்கொண்டிருந்த சூர்யாவிற்கு தன் மாமியார் வந்திருப்பதெல்லாம் தெரியவில்லை.. பேசி முடித்த பிறகுதான் அவர்களின் பேச்சரவம் கேட்க.. இவள் ஏன் அவங்கம்மாவை பார்க்க போகாம இருக்கா..? என்ற கோபத்தோடு திலகவதியை பார்த்தான்.
இரண்டு நாளாக அவளின் முகத்தை பார்ப்பதை சூர்யா தவிர்த்திருக்க.. இன்று கோபமாக பார்க்கவும் இன்னும் பயம் சேர்ந்து கொள்ள.. கண்களும் லேசாய் கலங்க.. ‘உங்கம்மா வந்திருக்காங்க.. அவங்களைப் போய் பார்க்காம இங்க என்ன செய்திட்டிருக்க..?” என்று கடுகடுக்க..
இவள் தடுமாற.. ‘மாமா வீட்ல இருக்காங்களாம்மா..?” என்ற பாலாஜியின் குரல் கேட்கவும்.. ‘வா…” என்று அதட்டி சூர்யா வெளியே வந்தான்.
‘ம்ம் இருக்கான்.. தோ வந்திட்டான்..” என்று சொல்ல..
‘வாங்கம்மா..” என்று மாமியாரை வரவேற்றவன்.. ‘எப்படி இருக்க பாலா..?”என்று இன்முகமாய் கேட்டு பாலாவின் அருகிலமர்ந்து அவனின் தோளைச் சுற்றி தன் கையைப் போட..
‘நல்லா இருக்கேன் மாமா.. அக்கா என்ன பண்ணுது..?” என்று கேட்க..
‘ம் போதும் போதும் உன் அக்கா பாசம்.. கல்யாணம் முடிஞ்சி ஒரே ஒருமுறை ரிசல்ட் வந்ததும் பார்க்க வந்ததுதான்.. இத்தனை மாசம் கழிச்சி நீ பார்க்க வந்தா.. உடனே என் பொண்டாட்டி உன்னை பார்க்க வந்திடனுமா..?” என்று முறைப்பாய் கேட்க..
‘காலேஜ் போய்க்கிட்டே பார்ட்டைம் ஜாப் போறேன் மாமா.. அதான் வரமுடியல..” என்று சொல்ல..
‘சூப்பர் பாலா.. எங்க வேலைக்கு போற..?” என்று ஆவலாய் கேட்க..
சூர்யாவின் இலகுவான பேச்சு திலகவதிக்கு தைரியமளிக்க.. அன்னைக்கே அத்தை அடிக்கக் கூடாதுன்னு அம்மாவை கண்டிச்சாகங்தான..? இப்போ எல்லாரும் இருக்காங்க.. அம்மா ஒன்னும் பண்ணாது.. என நினைத்து மெல்ல வெளியே வந்தாள்.
திலகவதியின் அடிப்பட்ட நெற்றி வீக்கம் குறைந்திருந்தாலும் அவ்விடம் லேசாய் கருத்திருக்க.. ‘என்னடி பண்ண..?” என்று ஜெயா முறைப்பாய் கேட்க..
‘அக்கா எப்படி அடிபட்டுச்சி..?” என்று பாலாஜி பதற.. இருவருக்கும் மௌனத்தையே திலகா பதிலாய் கொடுக்க..
‘என்னக்கா ஆச்சி..?” என்று இம்முறை பாலா கவலையாய் கேட்க..
‘ஒன்னுமில்ல பாலா கீழ விழுந்திட்டேன்.. இப்போ சரியாய்டுச்சி..” என்றாள்.
சூர்யா அருகிலிருக்க ஜெயாவால் திலகவதியை திட்ட முடியாமல் போனாலும் மகளை முறைத்துக்கொண்டே.. ‘கண்ணை பொடனிலயா வச்சிருந்த..?” என்று தன் ஒட்டு மொத்த கோபத்தையும் ஒற்றைக் கேள்வில் காண்பிக்க..
முனைவி மீது எத்தனை கோபமாக இருந்தாலும் ஜெயா திலகவதியிடம் கோபத்தை காண்பிப்பது சூர்யாவிற்க்கு பிடிக்காமல் போக.. ‘அவளே கீழ விழுந்திட்டா.. நீங்களும் கோபத்தை காட்டினா எப்டிம்மா..?” என்றான்;.
மருமகனின் பாசத்தில் நெகிழ்ந்தாலும்.. வாழ்வு கொடுத்தவர்களின் நிம்மதியையும் கெடுத்து.. தானும் வாழாமல் இருக்கும் மகளை நினைத்த தாயுள்ளம் வெகுவாய் பரிதவிக்க.. ‘திலகா எப்படி கீழ விழுந்தாள்ன்னு அம்மா சொன்னாங்க டாக்டர்தம்பி..” என்று தளர்வாய் சொல்ல..
அதுக்குள்ள வேலைபார்த்திட்டிங்களா..? என்பதுபோல தன் அன்னையைப் பார்த்தவன்.. ‘எதுக்கு நின்னுட்டே இருக்க..? போய் எதாவது சாப்பிட எடுத்து வா.” என்று திலகாவிடம் சொல்ல.. ‘பாலா..” என்று தம்பிக்கு ஜாடை செய்து திலகவதி கிச்சனுக்குள் நுழைய..
சூர்யாவிற்க்கும் ஜெயாவிடம் தனித்து பேச வேண்டியிருக்க.. ‘அதான் உன் அக்கா ஜாடை காட்டிட்டு போறாள்ல..? எழுந்து போய் என்னன்னு கேளு..” என்று சூர்யா சிரிப்போடு பாலாவிடம் சொல்ல.. அசடு வழிந்தாலும் அக்காளுடன் தனித்து பேசும் சந்தோசத்தில் விரைந்து சென்றான் கிச்சனுக்குள்.
ஜெயாவிடம்.. ‘சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்கம்மா.. நீங்க எதாவது புத்தி சொல்லப்போய் அது அவளோட பழைய வாழ்க்கையை நியாபகப்படுத்திடப்போகுது.. அவளை நினைச்சி வருந்தாதிங்க.. அவமேல கோபமும் படாதிங்க.. திலகா இப்படித்தான்னு அவளைப்பத்தி நல்லா தெரிஞ்சிதான் கல்யாணம் செய்துகிட்டேன்.. எனக்கு அவகிட்ட எந்த குறையும் இல்ல.. வாழ்க்கையைப் பத்தின புரிதல் இல்லாம இருக்கா.. என் பொண்டாட்டிக்கு நானே சொல்லி புரிய வச்சிக்கிறேன்..“ என்றான் தன்மையாகவே.
சம்மதமாய் தலையசைத்த ஜெயா அத்தனை பெருமையாய் தன் மருமகனைப் பார்த்திருக்க.. சூர்யாவின் பார்வை மனைவியிடம் செல்ல.. நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் தம்பியிடம் ஒப்பித்துக்கொண்டிருக்கிறாள் என அவளின் பாவனையிலும் பாலாவின் முகவாட்டத்திலுமே தெரிய.. ம்ம் தம்பின்னா இவ்ளோ பிடிக்குமா..? என்பதுபோல இருவரையும் ஆழப்பார்த்திருந்தான் வாஞ்சையாக.
தம்பியாகினும் திலகவதியைக் காட்டிலும் விபரமானவனாதலால்.. ‘இப்ப நீ சூர்யா மாமாவோட பொண்டாட்டி.. இன்னமும் நீ பிரசாத் மாமாவையே நினைச்சிட்டிருக்கிறது தப்புக்கா..” என்று புரியவைக்க முயல..
பிரசாத் பேசிய வீடியோவை விளக்கி.. ‘அவங்க சாகும்போது கூட என் சந்தோசத்தை பத்தி யோசிச்கிருக்காங்க.. ஆனா.. நான் அவங்க இறந்ததுக்கு அப்புறம் இன்னொரு கல்யாணம் பண்ணி அவங்களுக்கு துரோம் செய்துட்டேனே…” என்று வெடித்தழுதாள்.
பிரசாத்தை தெய்வமாக நினைத்து தானும் கலங்கினாலும்.. தன் சகோதரியிடம் அதனை காட்டிக்கொள்ளாமல்.. ‘அப்போ சூர்யா மாமாவும் பிரசாத் மாமாக்கு துரோகம் செய்தாருன்னு சொல்றியா..?” என்றான் காரமாக.
‘இல்லயில்ல.. நான் அப்படி சொல்லல..” என்று கண்ணீரோடே தவிக்க..
‘தன்னோட பொண்டாட்டி மனசில வேற ஒரு ஆள் இருக்காங்கங்கிறதை எந்த ஒரு ஆம்பிளையாலும் சகிச்சிக்க முடியாது.. மாமாவா இருக்கப்போய் இத்தனை பொறுமையா இருக்கார்.. ஊர் உலகத்தில வேற பொண்ணே கிடைக்காமலா மாமா உன்னை கல்யாணம் செய்துகிட்டார்..? மாமாக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கவும்தான் கல்யாணம் செய்துகிட்டார்.. உன் கல்யாணம் தப்பில்லக்கா.. தயவு செய்து புரிஞ்சிக்கோ..” என்று உள்ளடக்கிய கோபத்தோடு பாலா எடுத்துரைக்க.. அண்ணனிடம் திட்டுவாங்கும் தங்கையாய் திலகவதி கண்கலங்க..
‘நீ மாமாகிட்ட பிரசாத் மாமா பத்தி பேசுறது மிகப்பெரிய தப்புக்கா.. ” என்று தளர்வாய் சொன்னவனின் கண்களும் கலங்க.. தன் தவற்றை புரிந்துகொண்டவள் சட்டென தம்பியை கட்டிக்கொண்டு அழ..
‘அழாதேக்கா.. மாமாவை புரிஞ்சிக்க முயற்ச்சி செய்க்கா..” என்று கால் மணி நேரம்வரை தன் அக்காவின் முதுகை தட்டிக்கொடுத்து தேற்றிக்கொண்டிருக்க..
ஹாலில் கமலமும் சூர்யாவும் தங்களையே அவ்வப்போது பார்த்திருப்பது புரிய.. ‘நான் வந்து எவ்ளோ நேரமாச்சி.. எனக்கு டீயாவது வச்சி தருவியா மாட்டியா..?” என்று தன் அக்காவை தன்னிடமிருந்து பிரிக்க முயல..
தன் மச்சினன் தன்னை கண்டுகொண்டான் எனப்புரிந்த சூர்யா எழுந்து கிச்சன் பக்கமாய் வர..
இரண்டு நாளாய் கனத்திருந்த மனம் தம்பியின் அணைப்பிலும் ஆறுதலிலும் சற்றே இளகியிருக்க.. பாலாவிடமிருந்து விலகியவள்.. ‘என்னை பார்க்க வரக்கூட உனக்கு நேரமில்லையா..? போ போ.. உனக்கு ஒன்னும் கிடையாது..” என்று பிணங்கித் திரும்ப.. அங்கே சூர்யா நின்றிருக்க..
சூர்யாவின் பார்வை இவளுக்கு முறைப்பாய் தெரிய.. ‘பாலா யார்கிட்டயும் சொல்லமாட்டான்..” என்று சன்னக்குரலில் திலகவதி சொல்ல..
யார்கிட்டயும் இதுபத்தி பேசக்கூடாதுன்னு எத்தனை மிரட்டியும் வீடியோவைப் பத்தி சொல்லிட்டாளா..? என நினைத்தவனுக்கு மீண்டும் கோபம் வந்ததுதான்.. ஆனால் பாலா அருகிலிருப்பதால்..
‘இரண்டு பேருக்கும் எதாவது சாப்பிடக்கொடு..” என்று வரவழைத்த இயல்போடு சொல்ல.. திலகவதி டீ வைக்க ஆயத்தமாக..
‘பாலா.. அம்மாகிட்ட இதுபத்தி எதுவும் பேசக்கூடாது..” என்று கண்டிப்போடு சூர்யா சொல்ல..
‘அம்மாகிட்டன்னு இல்ல.. வேற யார்கிட்டயும் இதுபத்தி பேசமாட்டேன் மாமா..” என்றான் நம்பிக்கை தரும் குரலில்.
டீ வைத்த திலகவதி.. அதனை இரண்டு டம்ளரில் ஊற்றி.. ‘பாலா இதப்போய் அம்மாக்கும் அத்தைக்கும் கொடேன்..” என்று கெஞ்சலாய் சொல்ல..
‘நீ போய் கொடு..” என்று சூர்யா அதட்ட..
‘எங்கம்மா என்மேல கோபத்தில இருக்கு..” என்று திலகவதி சிறு பயத்தோடே சொல்ல..
‘ஒன்னும் சொல்லமாட்டாங்க.. நீயே போய் கொடு..” என்று தைரியமளிக்க.. டீயோடு போன திலகா சற்று நேரத்திலேயே திரும்பி வந்தவள்.. ‘என்னை திட்டக்கூடாதுன்னு எங்கம்மாகிட்ட அத்தை சொல்லிட்டாங்களா..?” என்றாள் ஆச்சர்யமாக.
திலகவதிக்கு சிறு முறைப்பை பதிலாய் கொடுத்து அடுப்புத்திண்டில் ஏறி உக்கார்ந்தவன்.. ‘பார்ட் டைம் ஜாப்க்குப் போய் படிப்பை விட்ராத பாலா.. நல்ல பர்சன்ட்டேஜ்ல வெளில வந்தாதான் வேல்யூ..” என்று சொல்ல..
‘அதெல்லாம் விடமாட்டேன் மாமா.. பாலா படிப்புல கில்லிமாதிரி..” என்று சிரிப்போடு சொன்னவன்.. நியாபகம் வந்தவனாய் தன் பேன்ட் பாக்கட்டில் இருந்த சாக்லேட்டை எடுத்து திலகவதியிடம் நீட்ட..
‘பாலா..” என்று கண்களை அகலவிரித்தவள்… ‘அம்மாக்கு தெரியாம எப்படிடா வாங்கின..?” என்று ஆச்சர்யத்தோடும் ஆசையோடும் வாங்க..
இருநூறுரூபாய் சாக்லேட்டுக்கு திலகவதி காட்டிய ஆர்ப்பரிப்பையும்.. தன் அக்கா முகத்திலிருந்த சந்தோசத்தை அனுபவித்தபடி பார்த்திருந்த பாலாவையும் பார்க்கவே.. சூர்யாவிற்க்கு சிறுவயதில் ஒரு கேக்கிக்காக தான் அடம்பிடித்தது நியாபகம் வரவே.. சிறு புன்னகையோடு பார்த்திருந்தான் இருவரையும்.