அத்தியாயம் .. 22
அடுத்தநாள் காலை கமலம் எழுந்து வெளியே வர.. திலகவதி பயபக்தியோடு ஏதோ முக்கிய வேண்டுதல் போல் சாமி கும்பிட்டு கொண்டிருக்க.. ஐந்து நிமிடம் கழித்து கண்திறந்தவள்.. நெற்றிக்கு குங்குமமிட்டு வெளியே வர.. கமலத்தை பார்த்ததும்.. ‘எழுந்துட்டிங்களா..? வாங்க குளிப்பிங்க..” என்று ஆரம்பித்தாள் அவளின் பணியினை.
எட்டரை மணிபோல் சாப்பிட்டு முடித்த கமலம்.. ‘சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட..?” என்றார் ஆர்வமாக.
இவள் தயங்க.. ‘ரகசியம்னா சொல்ல வேணாம்..” என்று இயல்பாய் சொல்ல..
கமலம் தன்னிடம் இயல்பாய் பேசியதில் சந்தோசமடைந்த திலகவதி..
‘மன்னிப்பு வேண்டிகிட்டேன்.” என்று சன்னக் குரலில் சொல்ல..
இவளின் பதிலில் இன்னும் ஆர்வமாக.. ‘தப்பு செய்தாதான மன்னிப்பு வேண்டனும்..? நீ எதுக்கு வேண்டின..?” என்று கேட்க..
இவள் மீண்டும் தடுமாற.. ‘அப்போ ஏதோ தப்பு செய்திருக்க.?”என்று சற்றே குரலுயர்த்த..
இவளுக்கும் லேசான பயம் துளிர்க்க.. ‘அது இவரைப் பத்தி புரியாதப்ப.. தெரியாம சாமிகிட்ட அப்படி சொல்லிட்டேன்..” என்று பயத்தோடு சொல்ல..
‘சாமிகிட்ட என் மகனை என்னன்னு தண்டிக்க சொன்ன..?” என்று கேட்க..
இவள் முகம் பயத்தை பூச.. ‘நீ என்னன்னு சொன்னாதான் அதுக்கான பரிகாரம் செய்ய முடியும்.. இப்படி சும்மா வேண்டிக்கிட்டா போதாது.. அததுக்குன்னு ஒரு முறையிருக்கு..” என்று கமலம் சொல்ல..
அச்சோ.. அப்படியும் இருக்குமோ.. இருந்தாலும் இருக்கும்.. இவங்கதான் எந்நேரமும் சாமி புக்கை படிக்கிறாங்களே.. இவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்.. சூர்யாக்கு எதுவும் ஆகக்கூடாது என்று மண்டையில் பலதும் ஓட.. திட்டு வாங்கினாலும் பரவால்ல.. உண்மையை சொல்லிடலாம் என்றெண்ணி..
‘அது.. நண்பன் செத்ததுக்கப்புறம் அவங்களோட பொண்டாட்டி மேல ஆசை வைக்கிறியே.. நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட.. சாமி உன்னை சும்மாவே விடாது.. அப்படி இப்படின்னு இன்னும் என்னல்லாமோ அப்போ தெரியாம வேண்டிட்டேன்..” என்று திலகவதி கண்கலங்க..
திலகாவின் பேச்சில் கமலத்திற்க்கு மருமகளை இன்னும் பிடித்து போக.. முகமும் இலகுவாக.. தனதறையின் கதவருகே நின்றபடி இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சூர்யாவிற்க்கும் மனைவி மீதுள்ள கோபம் முற்றிலும் குறைய.. இவர்களின் பேச்சும் சுவாரஸ்யமாக இருக்க.. கதவின் பின்னாலேயே நின்றான்.
‘சரி.. சரி.. காலங்காத்தால அழாத.. பரிகாரம் செய்து சாமிக்கிட்ட மன்னிப்பு வேண்டிக்கலாம்..” என்று மருமகளை தேற்ற..
‘இதுக்கு பரிகாரம் இருக்கா..? இந்த பரிகாரத்தை நீங்களே செய்திடுவிங்களா..?” என்று திலகவதி ஆவலாய் கேட்க..
‘ம்ம்.. செய்திடுவேன்.. பூஜைக்கு என்ன தேவை.. எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும்.. ஆனா அதை உன் புருசனும் நீயும்தான் சேர்ந்து செய்யனும்.. அவன்கிட்ட சொன்னா என்ன சொல்வான்னு தெரியலையே..” என்று யோசனையான பாவனையோடு சொல்ல..
‘அச்சோ அத்தை.. அவருக்குதான் நண்பனோட பொண்டாட்டின்னு சொன்னா செம்மையா கோபம் வந்திடுமே… நான் அப்போ வேண்டினதா இருந்தாலும்.. இப்போ அவர்கிட்ட உண்மையை எப்படி சொல்றது..? ..” என்று பரிதவிக்க..
‘ஆமாம்மா.. நீ அப்படி சொல்லும்போது எனக்கும்தான் செம்மையா கோபம் வருது.. ஆனாலும் இப்போ என் மகனை நீ புரிஞ்சிக்கிட்டதால உன்னை சும்மா விடறேன்..” என்று கண்டிக்கும் பாவனையோடு சொன்னவர்..
‘சூர்யாகிட்ட உண்மையை சொல்லாம கூட பூஜை செய்திடலாம்.. ஆனா அதுக்கு முன்ன ஒன்னு நடக்கனும்.. அதுக்கு நீதான் மனசு வைக்கனும்..” என்று பீடிகை போட.. தன் அம்மா எங்கு சுத்தி எப்படி வருகிறார்கள் எனப்புரிந்த சூர்யாவின் முகம் சிரிப்பை உதிர்க்க..
‘என்ன செய்யனும் சொல்லுங்க.. நாக்குல அலகு குத்தறது.. தீச்சட்டி எடுக்கிறதுன்னு எதுன்னாலும் செய்திடறேன்..” என்று திலகவதி ஆவலாக கேட்க..
‘சூர்யா நல்லாயிருக்கக் கூடாதுன்னுதான கடவுளை வேண்டிக்கிட்ட..? இப்போ அவன் உன் புருசன்ங்கிறதால.. முதல்ல நீயும் அவனும் புருசன் பொண்டாட்டியா வாழனும்.. இரண்டு பேரும் ஒத்த மனசோட பூஜை செய்ததாதான் அது பரிபூர்ணமாகும்.. இல்ல நீ வேண்டிகிட்டது நடக்கவும் வாய்ப்பிருக்கு..” என்று எச்சரிக்கும் பாவனையோடு சொல்ல..
இதனை எதிர்பார்க்காத திலகவதி வெகுவாய் கலங்கி போனாள். கல்யாணம் முடிஞ்சி இப்போ ஒரு அறேழு மாசம்தான ஆச்சி..? அதுக்குள்ள குழந்தைக்கு இப்ப என்ன அவசரம்..? பாவம் திலகா.. இந்த அம்மா இப்படியா வெளிப்படையா படுத்தும்..? இனியும் நாம வெளில போகலன்னா இவ ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவா என்று நினைத்தபடியே வெளியே வந்தான் சூர்யா.
‘என்னம்மா பிரச்சனை..?” என கேட்டவாறே சாப்பிட அமர்ந்தான்.
‘ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல.. நாங்க சும்மா சாமி கும்பிடறதைப் பத்தி பேசிட்டிருந்தோம்..” என்று திலகவதி அவசரமாய் பதிலளிக்க.. கமலம் கார்டனுக்கு போக.. பரிமாறிக்கொண்டிருந்த திலகவதியின் கைகள் லேசாய் நடுங்க..
அவளின் கையை ஆதரவாய்ப் பிடித்தவன்.. ‘எங்கம்மா சும்மா உன்னை பயமுறுத்தத்தான் அப்படி சொல்றாங்க.. நீ பயப்படாத..” என்றான் தன்மையாக.
‘நாங்க பேசுறதை நீங்க கேட்டுட்டிருந்திங்களா..?” என்று விழிவிரிக்க..
‘ம்ம்.. கேட்டுட்டுதான் இருந்தேன்..” என்று அவளின் ஒரு கையை பிடித்தவாறே சாப்பிட்டு கொண்டிருக்க.. தன்னிடமிருந்து திலகவதி கையை உருவாமல் இருந்ததே சூர்யாவிற்க்கு சந்தோசத்தை தர.. ‘எப்படி இவ்ளோ நல்லா சமைக்க கத்துக்கிட்ட..?” என்றான் ஆச்சர்யமாக.
அச்சோ நாம சாமிகிட்ட வேண்டிகிட்டதெல்லாமும் அத்தைகிட்ட சொன்னோமே.. அதையும் கேட்டிருப்பானோ..? என்று நினைத்தவளுக்கு பயம் உண்டாக.. அவளின் பயந்த முகத்தை பார்த்து சிரித்தவன்..
‘அம்மாகிட்ட சொன்னது மட்டும்தானா..? இல்ல இன்னும் கேவலமா கெட்டவார்த்தைல எல்லாம் திட்டினியா..?” என்றான் இலகுவாக.
‘ச்சீ.. சீய்.. எனக்கு அப்படியெல்லாம் பேச வராது.. நீ நல்லாவே இருக்கமாட்ட.. நாசமா போய்டுவன்னு மட்டும்தான் திட்டினேன்..” என்று பதட்டத்தோடு சொல்ல..
‘பரவால்லையே.. கொஞ்சமாத்தான் திட்டியிருக்க.. உனக்கு பெருந்தன்மையான மனசு..” என்று சிரிப்போடே சாப்பிட்டு முடித்திருக்க.. (stomadentlab.com) ஹாஸ்பிட்டலுக்கு நேரமாகவே அவளின் கையை விடுவித்து தனதறைக்குள் சொல்ல..
பின்னோடே வந்தவள்.. ‘உங்களுக்கு கோபம் வரலயா..?” என்று கேட்க..
‘கோபம் வந்துச்சிதான்.. அப்போ தெரியாம வேண்டிகிட்டேன்னு நீ அம்மாகிட்ட சொன்னதும் என் கோபம் போய்டுச்சி..” என்றான் ரெடியாகிக்கொண்டே.
‘சரி.. நான் கிளம்பறேன்..” என்று சொல்ல.. திலகவதியின் முகத்தினில் அத்தனை தவிப்பு.. ‘ஏய்.. நிஜமாவே எனக்கு உன்மேல கோபமில்ல..” என்று சிரித்த முகமாய் சொல்ல..
‘ம்ம்..” என்று ஏதோபோல் சொல்ல.. சூர்யா வெளியே வர எத்தணிக்க..
‘பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க..” என்று திலகவதி சொல்ல.. திருமணமானதிலிருந்து திலகவதி பேசும் அக்கறையான முதல் வார்த்தையில் ஆச்சர்யப்பட்டவனாய் திரும்ப.. திலகவதியின் முகத்தில் இருந்த பயம் சொன்னது அவளின் மனதை.
‘திலகா.. அம்மா ஏதோ சொல்லி உன்னை பயமுறுத்தியிருக்காங்க.. எனக்கு ஒன்னும் ஆகாது..” என்று சொல்ல..
சூர்யாவின் பேச்சை காதில் வாங்காதவளாய்.. ‘பூஜை செய்யனுமே..” என்று கலங்கிய கண்களோடு தலை கவிழ..
ஓ.. இதுதான் உன் பிரச்சனையா..? என நினைத்தவன்.. ‘நான் நல்லாயிருக்கனும்னு நீ மனசாற நினைச்சாலே போதும்.. நான் நல்லாதான் இருப்பேன்..” என்று தன்மையாய் எடுத்துரைக்க..
‘இல்ல.. அதுக்கு.. வேற பரி.. பரிகாரம் இருக்கு..” என்று திக்கித் திணறியவள் மீண்டும் கண்ணீர்விட..
திலகாவின் அறியாமையில் இவனுக்கு சிரிப்பு வந்தாலும்.. அவளின் உணர்வை மதித்தவனாய் கதவைத் தாழிட்டு.. ‘பூஜை செய்ய முழுமனசோட புருசனும் பொண்டாட்டியும் கட்டிப்பிடிச்சா கூட போதும்.. அதுவே நாம ஒன்னா இருந்த மாதிரிதான்..” என்று கனிந்த குரலில் சொன்னவன்.. தன் கைகளை அகல விரிக்க..
சிறு தாமதமுமின்றி பாய்ந்தோடி அணைத்துக்கொண்டாள் கணவனை. உண்மையில் சூர்யா இதனை எதிர்பார்க்கவே இல்லை.. தயங்குவாள்.. தாம் அணைத்து அவளை சரிசெய்யலாம் என்றுதான் நினைத்தான்.. மனைவியின் செயல் பெருத்த சந்தோசத்தை கொடுக்க.. தன் கைகளை தளர இறக்கியவன்.. ஆழ்ந்து அனுபவித்தான் தன்னவளின் முதல் அணைப்பை.
சில நிமிடம் கழித்துதான் அணைப்போடு திலகாவின் நடுக்கத்தையும் உணர்ந்தவன்.. தானும் அணைத்து.. ‘எனக்கு ஒன்னும் ஆகாது..” என்று தேற்ற முயல..
சூர்யாவிடமிருந்து விலக முயற்ச்சித்தவளை விலகவிடாமல் அணைக்க.. மறுப்பின்றி கணவனோடு ஒன்றியவாறு.. ‘சீக்கிரம் பூஜை செய்திடலாம்.. இனி என்னால எதையும் தாங்க முடியாது.. எனக்கு பயமாயிருக்கு..” என்று நடுங்கிய குரலில் சொல்ல..
‘சரி.. சரி.. செய்திடலாம்..” என்றான் சம்மதமாக.
‘நாளைக்கே செய்திடலாமா..?” என்று தவிப்போடு கேட்க..
திலகாவின் பயம் சூர்யாவின் மனதை அசைக்கவே.. ‘அந்த பூஜை எப்படி செய்யனும்னு எனக்கே தெரியும்.. இன்னைக்கே இப்பவே செய்யலாம் வா..” என்று பூஜையறை அழைத்து வந்தவன்.. ஏதேதோ சாங்கியம் செய்பவன் போல்.. அங்கிருந்த பொருள்களையே மாற்றி மாற்றி வைத்து.. ‘போய் அம்மாவை கூட்டிட்டு வா..” என்றனுப்பினான்.
கமலம் வரவே.. ‘ம்ம் வந்து கும்பிடு.. “ என்று தானும் கடவுளை வணங்கி.. தன் கையால் குங்குமம் வைத்துவிட்டு.. சுவாமிக்கு சூடியிருந்த மல்லிகையில் கொஞ்சம் எடுத்தவன் அதை தன் மனைவிக்கு சூடி.. ‘எனக்கு நீ வச்சிவிடு..” என்று திருநீரை காண்பிக்க… அவள் வைத்து விடவும்.. கமலம் முன்பாகவே மனைவிக்கு நெற்றி முத்தம் வைத்தவன்..
‘அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா பூஜை முடிஞ்சிடும்..” என்று அவளின் கையை பிடித்தவாறு தன் அன்னை பாதம் பணிந்தவன்.. ‘எங்களை ஆசிர்வாதம் செய்ங்கம்மா..” என்றான்.
‘நல்லாயிருங்கப்பா..” என்று கமலம் சந்தோசத்தோடு சொல்ல..
‘நீங்க சொன்ன பூஜை சிறப்பா முடிஞ்சதுன்னு இவளுக்கு தைரியம் சொல்லுங்கம்மா.. ரொம்ப பயந்துக்கிறா..” என்று கட்டளையான குரலில் சொல்ல..
நான்கூட ஏதோ சேர்ந்து சாமி கும்பிடுறான்னு பார்த்தா.. இந்த ஐடியாக்கும் டிமிக்கி கொடுத்திட்டானே.. என்ற கடுப்போடு கமலம் முறைக்க.. ‘ம்ம்மா.. எனக்கு டைம் ஆகுது.. நீங்க சொன்னாத்தான் இவ நம்புவா.. சீக்கிரம் சொல்லுங்க..” என்று பிடிவாதக் குரலில் சூர்யா சொல்ல..
‘ம்ம்.. ம்ம்.. இப்படித்தான் செய்யனும்.. இனி பயம் வேணாம்..” என்று மகனை முறைத்துக்கொண்டே சொல்ல.. நிம்மதியானவள்.. ‘அத்தை நீறு இட்டுக்கோங்க..” என்று திருநீர் தட்டை நீட்ட.. திருநீர் இட்டவர் தனதறைக்கு செல்ல..
‘இப்போ சந்தோசமா..?” என்று கேட்க.. ‘ம்ம்..” என்று வேகமாய் தலையாட்டி
‘பத்திரமா போய்ட்டு வாங்க..” என்றாள்.