சந்தோசத்தோடும் நிம்மதியோடும் சரி என்பதாய் தலையசைத்து கிளம்பினான். நேற்றிலிருந்து இருந்த பயம் போய்.. மனது லேசானது.. முத்துவின் மனைவி மருத்துவமணையில் இருப்பதால் முத்துவை வேலைக்கு வரவேணாம் என்று முன்னமே சொல்லயிருக்க.. தானே அனைத்து வேலையும் உற்ச்சாகமாக செய்தாள்.. சந்தோசத்தோடு துணி தைத்தாள்.
அன்றிரவு ஒன்பது மணியாகியும் சூர்யா வராமல் போகவே.. முதன் முறையாக கணவனுக்கு ‡போன் செய்யும் எண்ணம் தோன்ற.. கமலத்திடம் சென்றாள்.. மாத்திரையின் உபயத்தால் கமலம் தூங்கியிருக்க.. செய்வதறியாது தவித்தவள்.. கதவைத்திறந்து வைத்து வாசலிலேயே அமர்ந்திருந்தாள்.
அரைமணிநேரம் கழித்து வந்த சூர்யாவைப் பார்த்ததும் திலகவதியின் முகத்தினில் அத்தனை நிம்மதி பிறக்க.. மனைவியை புரிந்தவனாய்.. ‘அதான் பூஜை செய்தாச்சில்ல..? திரும்பவும் பயந்திட்டிருந்தியா..?” என்று கேட்டுக்கொண்டே தனதறைக்கு சென்றிருந்தான்.
பத்து நிமிடத்தில் குளித்து வந்தவன்.. தன் அன்னை அறையை பார்வையிட..
‘மாத்திரை சாப்டுட்டுதான் படுத்தாங்க.. நீங்க சாப்பிட வாங்க..” என்றாள்.
தன் அம்மாவின் அறையை லேசாய் மூடியவன்.. திலகவதியிடம் வர.. சாப்பிட எடுத்து வைத்து சூர்யாவை பார்க்க.. அவன் இவளைப் பார்த்திருக்க..
‘ஏற்கனவே ரொம்ப லேட்டாய்டுச்சி.. பசிக்கும்ல..? சாப்பிட உக்காருங்க..” என்றாள் அக்கறையாக.
அருகில் வந்தவன் திலகாவை அணைக்கவும்.. அவனின் உடல் மட்டுமல்லாது அவனின் வாசம்.. சூடான மூச்சுக்காற்று.. உணர்வு.. என அவனின் எல்லாமும் அவளை அணைக்க.. உடலில் சின்ன சின்ன மீட்டல்கள் போல் ஏதோ இசைக்க பெரிதாய் தடுமாறினாள்..
லேசான அணைப்பு மட்டும்தான்.. வேறொன்றும் செய்யவில்லை சூர்யா. மனைவியையே காதலாய் பார்த்திருந்தான்.. ‘சா.. சாப்பிடுங்க..” என்றாள் வெளிவராத குரலில்.
‘எனக்கொரு ஹெல்ப் பண்றியா..?” என்றான் கரைந்த குரலில்.
‘ம்ம்..”
‘என்னை எவ்ளோ அசிங்கமா வேண்ணாலும் திட்டிக்கோ.. ஆனா இப்படி அக்கறை காட்டாத..” என்றான் கெஞ்சலாக.
இவள் அதிர்ச்சியாய் பார்க்க.. ‘எப்பவும் காலைல எட்டு மணிக்கெல்லாம் ரௌன்டஸ் போக ஆரம்பிச்சிடுவேன்.. இன்னைக்கு பத்து மணிக்குத்தான் போனேன்.. நல்லவேளை இன்னைக்கு எதுவும் முக்கியமான ஆப்ரேசன் இல்ல.. என் வேலை ல எப்பவும் நான் இப்படி இருந்ததேயில்ல..” என்றான் அவளின் கண்பார்த்து.
‘ஏன் இப்போ என்னாச்சி..?” என்றாள் அவனிலிருந்து விடுபட முயன்றபடியே.
‘என்ன ஆச்சா..? ஏதேதோ ஆச்சி..” என்று மனைவியை ஆழ்ந்து பார்த்தவன்..
‘என் நலனுக்காக.. எனக்கே எனக்காக என் பொண்டாட்டி என்னை கட்டிப்பிடிச்சாளா..? நாளெல்லாம் இதே நினைப்புதான்.. சாய்ங்காலம் அஞ்சி மணிலயிருந்து ‡ப்ரீயாத்தான் இருந்தேன்.. வீட்டுக்கு வந்ததும் உன்னை படுத்திடக் கூடாதுன்னு அங்கையே இவ்ளோ நேரம் இருந்தேன்..” என்றான் மைய்யலாக.
என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்து நிற்க்க.. மனைவியின் திகைப்பு அத்தனை அழகாய் இருக்க.. ப்பா.. முடியலடா சாமி என நினைத்து பெருமூச்சிழுத்தவனாய் அவளை விடுவித்து சாப்பிட அமர்ந்தான். இவள் சூர்யாவையே பார்த்திருக்க..
‘இப்படியெல்லாம் பார்க்கக் கூடாது.. சூர்யா பாவம்..” என்று பாவமான குரலில் சொல்லி சாப்பிட ஆரம்பிக்க.. இவள் தடுமாறி திரும்ப..
‘நீ சாப்ட்டியா..?” என்றான்.
இல்லை என்பதாய் தலையசைக்க.. ‘ப்ச்.. முதல்ல உக்காரு..” என்று முன்புபோல் மிரட்ட..
பொம்மை போல் உக்கார்ந்தவளுக்கு பரிமாறியவன்… ‘ம்ம் சாப்பிடு..” என்றான் அதட்டலாக. பின் திலகவதியும் சாப்பிட.. இருவரும் சாப்பிட்டு முடிந்ததும்..
இவள் பாத்திரங்களை கிச்சனுக்கு எடுத்து போக.. மீதமுள்ள இரண்டு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தானும் பின்னே போனான். சட்டென திரும்பியவளின் அருகே சூர்யா நின்றிருக்க.. ‘நா.. நானே எடுத்து வச்சிருப்பேனே..” என்று மீண்டும் தடுமாற..
‘முத்துவும் அவர் சம்சாரமும் வேலைக்கு வராதால உனக்கு வேலை அதிகமிருக்கும்.. அதான் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணலாம்னு எடுத்து வந்தேன்..” என்று கையை கழுவியவன்.. அவளின் துப்பட்டாவில் கை துடைத்துக்கொண்டே அவளின் சோல்டரில் தன் வாயை துடைக்கவும்.. திண்டாடிப் போனாள்.
அவளின் கையைப் பிடித்தவாறே தனதறைக்கு வந்தவன்.. கதவை தாழ்போட்டு அறையின் வெளிச்சம் குறைத்து கட்டிலில் படுக்கப்போக.. திலகவதியின் கை இவனின் பிடியில் இருப்பதால் வேறு வழியின்றி இவளும் படுக்க.. மனைவியின் கையை தன்னைநோக்கி சுண்டியிழுக்க..
சற்றும் எதிர்பாராதவளாய் ஒரு புரளு புரண்டவள் இருவருக்கும் இடையில் ஒரு ஆள் படுக்கும் இடைவெளியில் முயன்று நிதானித்திருந்தாள்.. ‘பார்டா.. அவ்ளோ ஸ்ட்ராங்கா நீ..?” என்றவாறு அவளருகில் சூர்யா நெருங்கியிருக்க..
திருமணமான புதிதில் இருந்த முகம்போல் அவளின் முகம் மிரண்டிருக்க.. கண்களும் கலங்க.. வேண்டாம் என்பதுபோல் திலகவதியின் தலை தன்போல் ஆட..
அவளின் நிலைபுரிந்தவன்.. ‘பயப்படாதடா.. நான் எப்பவும் சொல்றதுதான் இப்பவும் சொல்றேன்.. உனக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்.. என் மனசுக்கு பிடிச்சவளை என்னால கஷ்டப்படுத்த முடியாது.” என்று இலகிய குரலில் சொல்ல.. திலகவதியின் முகம் நிம்மதியைக் காட்ட..
மனைவியின் கையை தன் நெஞ்சின் மேல் வைத்து அழுத்திக்கொண்டவன்.. ‘திலகா…” என ஆழ்ந்தழைக்க.. பரிதவிப்போபோடு இவள் கணவன் முகம் பார்க்க..
‘என்ன திடீர்ன்னு என்மேல பாசம்…?” என்றான் அத்தனை ஆசையாக. இவள் அமைதியாகவே இருக்க.. பதில் சொல்லவில்லையென்றால் முன்பெல்லாம் மிரட்டுபவன்.. தற்போது.. ‘சொல்லுடா..” என்று இறைஞ்சினான்..
‘நல்லவங்க நல்லாயிருக்கனும்..” என்று இவள் பழமொழி போல் சொல்ல..
‘நான் எப்ப உனக்கு நல்லவனானேன்..?” என்று சிரிப்போடு கேட்க.. இவளின் கண்கள் அலைபாய.. ‘ம்ம் சொல்லு சொல்லு..” என்றான் ஆவலாக.
‘அது.. இப்போ கொஞ்சநாளா..” என்று தயங்கியவள் தன் கையை அவனிடமிருந்து உருவப்பார்க்க.. அதனை அழுத்திப் பிடித்தவன்..
‘அப்போ கொஞ்ச நாளுக்கு முன்ன என்னை என்னன்னு நினைச்சிருந்த..?” என்றான் ஆவலாக..
‘அது..” என்று தயங்க..
‘தப்போ ரைட்டோ.. என்னை நீ நினைச்சதே எனக்கு சந்தோசம்தான்.. எதுன்னாலும் சொல்லு.. நான் ஒன்னும் நினைக்கமாட்டேன்..” என்று ஊக்கப்படுத்த..
‘அப்போ நம்பியார்ன்னு நினைச்சேன்.. இப்போதான் எம்.ஜி.யார்ன்னு புரிஞ்சது..” என்று சொல்லி திட்டுவானோ என நினைத்து மறுபுறம் திரும்பிப்படுக்க.. இவளின் கை லேசாய் முறுக்கிக் கொள்ள..
‘ஏய்.. கை வலிக்கும்..” என்று அவளோடு ஒன்றியவன்.. திலகவதி தன்னை புரிந்து வைத்திருக்கும் அழகை நினைத்து பலமாய் சிரிக்க.. சூர்யா இப்படி சிரித்து இன்றுதான் பார்க்கிறாள்.. தன்னை சரி செய்வதற்க்காகவே உன் சந்தோசம் சிரிப்பு என எல்லாமும் தொலைத்தாயா..? என்பதுபோல் பார்த்திருக்க..
தன் நெருக்கத்தை மறுக்காமல் தன்னையே பார்த்திருந்தவளின் பார்வையில் சூர்யாவின் கட்டுப்பாடுகள் சோதனைக்குள்ளாக.. பெருமூச்சிழுத்து தன்னை சமன் செய்தவன்.. ‘என்னடா இப்படி பார்க்குற..?” என்றான் மென்மையாக.
‘என்ன திடீர்ன்னு இப்படி பேசுறிங்க..?” என்றாள் தடுமாற்றமாக.
‘எப்படி..?” என்றான் புரியாமல்.
‘இல்ல.. பசங்களை பேசுற மாதரி.. என்ன டா.. ன்னிங்க..” என்று சன்னக்குரலில் சொன்னாலும்.. திலகவதியின் முகம் இப்படி பேச்சு பிடித்திருப்பதை காண்பிக்க..
‘அதுவா..? என் பொண்டாட்டி எப்பவும் என்கிட்ட நடுங்குவா.. இல்ல மல்லுக்கு நிப்பா.. இல்ல மனசுக்குள்ள திட்டுவா.. இல்ல நான் ஹாஸ்பிட்டல் போனதும் விட்டதுடா தொல்லைன்னு நிம்மதியா இருப்பா.. இப்போ அந்த பொண்டாட்டியைக் காணோம்.. என் பொண்டாட்டி இருக்க வேண்டிய இடத்தில புதுசா ஒரு பொண்ணு படுத்திருக்கா.. அதுவும் என் பக்கத்தில படுத்திருக்கா.. அதான் இப்படி டா ன்னு சொல்லிட்டேன் போல..” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான் ராகமாக.
சூர்யாவிடமிருந்து கையை உருவப்பார்க்க.. அது வராமல் போக.. ‘விடுங்க.. எனக்கு தூக்கம் வருது..” என்றாள். கோபம் போல் சொல்வதாய் நினைத்து திலகவதி சிணுங்கியிருக்க.. முகமும் லேசாய் சிவந்திருக்க..
‘திலகா…” என்றான் ஏக்கமாக..
‘ம்ம்..”
‘இன்னைக்கு இப்படி தூங்கட்டுமா..?” என்று பிடித்த கையை விடாமல் அவளின் இடையோடு சேர்த்தணைக்க.. திலகவதியின் உடல் அதிர்வைக் காட்ட..
‘ஹேய்.. பயப்படாதடா.. என் கை இங்கவிட்டு வேற எங்கையும் நகராது.. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்… ஜஸ்ட் இப்படி பிடிச்சிக்கனும்.. அவ்ளோதான்.. நான் தூங்கினதுக்கப்புறம் என் கையை எடுத்து விட்டுடு..” என்று சமாதனப்படுத்த..
‘ம்ம்..” என்றாள் வெளிவராதக் குரலில்.
‘தேங்ஸ்டா..” என்றவன் நன்றாக அவளின் முதுகை ஒட்டிப்படுத்து.. நிம்மதியாய் கண்மூடினான்.. திலகவதிக்குத்தான் தூக்கமே வரவில்லை.. தன்னால் எந்த சந்தோசமும் இல்லாமல் இருக்கிறான்.. தன் நிம்மதியே பெரிதென நினைக்கும் இவனுக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் என எண்ணங்கள் வலம் வர.. மனம் உறுத்தியது.. கண்கள் கசிந்தது.. சூர்யா நன்றாக உறங்கியிருந்த போதும் தன்னை அணைத்திருக்கும் அவனின் கையை எடுத்துவிட மனமில்லாமல் அவனின் அணைப்பிலேயே உறங்கினாள்..
அடுத்தநாள் காலை திலகவதி முதலில் எழவே.. இரவு எப்படி படுத்திருந்தானோ அப்படியே படுத்திருந்தான் சூர்யா. சொன்னதுபோலவே அவனின் கை அவளின் இடைதாண்டி வேறிடம் நகரவில்லை.. அவனின் கையை விலக்கி எழலாம் என நினைத்து லேசாய் அசையவும்.. அவள் மீதிருந்து கையை சூர்யா எடுக்க.. முழித்துதான் இருந்தானா.? என்பதுபோல் திலகவதி பார்க்க..
‘முன்னமே முழிச்சிட்டேன்.. எழுந்துக்க மனசே வரல.. அதான் நீ முழிக்கிற வரைக்கும் இப்படியே இருக்கலாம்னு படுத்திருந்தேன்..” என்று சிரிப்போடு சொல்ல.. அவனிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் குளியலறை சென்றவளின் மனமெல்லாம் குற்ற உணர்வே ஆட்கொண்டது.
இப்படி சின்ன சின்ன இன்பங்களைக் கூட அனுபவிக்காமல் இருக்கிறானே என வேதனையடைந்தவள்.. இப்படி வாழ்க்கை வாழ்ந்தும் தன்மேல் எந்த கோபமும் இல்லாமல் எப்படி இவனால் இருக்க முடிகிறது..? அணைத்தவாறு தூங்கியதற்க்கே இத்தனை சந்தோசமா…? அதுவும் தாம் சம்மதித்தப் பிறகே என நினைக்க அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது