‘சூர்யா..” என்று உணர்வுப்பூர்வமாய் அவனை கட்டியணைத்தவன்.. ‘நீ எப்படிடா இவ்ளோ நல்லவனா இருக்க..? உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா..” என்று சந்தோசமாய் சொல்ல..
‘இதுல நல்லவனெல்லாம் ஒன்னும் இல்ல ஆதவா.. நான் அவளை ரொம்ப லவ் பண்றேன்.. இந்த விசயத்தில அவ மனசு கஷ்ட்டப்படும்படி என்னால நடந்துக்கவே முடியாது..” என்றான் சிறு வெக்கத்தோடு.
சூர்யாவை மீண்டும் பெருமையாய் பார்த்தவன்.. ‘ஆனாலும் இந்த விசயத்தில.. அதுவும் தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட.. ரொம்ப நல்லவனா இருக்கனும்னு அவசியமில்ல.. ஒரு புருசனா நடந்துக்கலைன்னாலும்.. அட்லீஸ்ட் ஒரு லவ்வர் பாயாவாவது இரு..” என்று இலகுவாய் சிரித்தான் ஆதவன்.
‘அதெல்லாம்.. அப்படி.. இப்படின்னு.. நாங்க அப்படித்தான் இருக்கோம்.. நீ முதல்ல கிளம்பு..” என்று சிரித்தபடியே ஆதவனை வெளியே தள்ள..
தம்பியை எதிர்த்து நின்ற அண்ணன்.. ‘இந்த விசயத்தை பொருத்தவரை பொண்டாட்டிகிட்ட மல்லுக்கு நிக்கக்கூடாது தம்பி.. மயங்கி நிக்கனும்..” என்று கண்ணிமைத்து சொல்ல..
‘டேய்… நீ முதல்ல கிளம்பு..” என்று ஆதவனை இழுத்துவந்து வெளியே தள்ளியவன் நிறைந்த சிரிப்போடு கதவை சாத்தினான்.
———– ———————————–
‘பிரசாத்துக்கு இப்படி ஆகும்ன்னு யாரும் நினைக்கவே இல்ல.. அவர் இறந்ததுக்கப்புறம் உன்னை பத்திரமா பார்த்துக்கனும்.. எப்படியாவது உன் வாழ்க்கையை சரிசெய்யனும்னு எப்பவும் உன் நினைப்பாவே இருந்திருக்கார். தினமும் சோனுதியாகிட்ட பேசாம இருக்கவே மாட்டார்.. உன்னை நினைச்சி நினைச்சி குழந்தைங்ககிட்ட கூட பேசுறதை குறைச்சிட்டார்..
இந்த சூழல்லதான் அன்னைக்கு பார்க்குல வச்சி பூரணிம்மா உனக்கு கல்யாணம் பண்ணனுங்கிற மாதிரி பேசினதும்.. எல்லாரும் ஒருசேர கூடியிருக்கோம்.. கிடைச்ச சான்சை விட்டுடக்கூடாதுன்னு அன்னைக்கே கல்யாணம் பத்தி பேசிட்டார்.. உனக்கு வேற சூர்யாவை கண்டாலே ஆகாது.. எப்படியும் கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கமாட்டன்னு சூர்யாக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு..
அதனாலதான் உன்கிட்ட அவரோட காதலை சொல்லாம.. மிரட்டி உருட்டி கல்யாணம் செய்துகிட்டார்..” என்று சூர்யாவின் நிலையை எடுத்துரைக்க.. குறுக்கே பேசாமல் திலகவதி பேசுவதை கண்ணீரோடு அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘எதுக்கு இப்படி அழற..?” என்று அனுசரனையாய் கீர்த்தி கேட்க..
‘ஒரே ஒருமுறை நான் அவங்களை பத்தி பேசட்டுமா..?” என்று பயத்தோடே கேட்க.. தாமும் இவளிடம் பிரசாத் பற்றி பேசினது தெரிந்தால் சூர்யா கோபப்படுவான் என்று புரிந்திருந்தும்.. இன்னைக்கோட இதுக்கு ஒரு முடிவு கட்டனும் என நினைத்தவளாய்.. ‘ம்ம்..” என்று அனுமதிக்க..
‘நான் களங்கப்பட்டவக்கா.. அவருக்கு நான் தகுதியில்லாதவ..” என்று அழுகையோடு சொல்ல..
திலகவதி சொல்ல வருவது கீர்த்திக்கு புரிய.. ‘புருசன் பொண்டாட்டின்னா இப்படி இருந்திருப்பிங்கன்னு தெரியமாலா சூர்யா கல்யாணம் செய்திருப்பார்..? சூர்யா அப்படி நினைக்கமாட்டார்.. அதோட இதுல உன் தப்பு எதுவும் இல்ல..” என்று திலகவதியை தேற்ற..
ஆமாம்ல..? நமக்கு மயக்கமானதும் இவரை வரவச்சிதான நம்மளை பார்த்ததா அவங்க சொன்னாங்க என்று நினைக்க.. இந்த விசயம் வரை தெரிந்துமா என்னை கல்யாணம் செய்துகிட்ட என்று நினைக்க கண்ணீர்தான் பெருகியது..
‘பிரசாத்தோட நீ வாழ்ந்ததெல்லாம் சூர்யாவுக்கு பிரச்சனை இல்ல.. ஆனா சூர்யா உன்னை கல்யாணம் செய்ததுக்கப்புறமும்.. நீ பிராசத்தை நினைச்சிட்டிருக்கிறதுதான் அவருக்கு பிடிக்கல..
பிரசாத்தோட இரண்டு மூனுநாள் வாழ்ந்ததையே நினைச்சி நினைச்சி சூர்யாவோட நிம்மதியை கெடுக்கப்போறியா..?” என்று சற்று கோபமாக கீர்த்தி கேட்க.
‘இல்லயில்லக்கா..” என்று அவசரமாய் பதிலளித்தவள்.. ‘அவங்க இறந்ததுக்கப்புறம் அந்த வயசில.. அப்போதைக்கு.. என்னை அந்த வீட்ல இருந்து அனுப்பிடுவாங்களோங்கிற பயந்திட்டிருந்தேன்.. ஆனா அவங்க அப்படி பண்ணல.. என்னை பெத்த பொண்ணாட்டம் பார்;த்துகிட்டாங்க..
நானும்.. அவங்க அம்மாப்பாவை நல்லா பார்த்துக்கனும்.. அவங்க மகன் இல்லாத குறையை நாம போக்கனும்னுதான் நினைச்சிட்டிருந்தேன்.. நாட்டுக்காக உயிரை விட்டவங்களோட அப்பாம்மாவை நானும் விட்டுட்டேன்னு மனசு உறுத்துது.. ரொம்ப சுயநலமா இருக்கமாதிரி இருக்கு.. ” என்று ஏதேதோ பேதலித்து கண்ணீர் வடித்தாள்.
‘பிரசாத்தோட அப்பாம்மாவை எப்பவும்போல பத்து நாளைக்கு ஒருமுறையாவது போய் சூர்யா பார்த்திட்டு வந்திட்டுதான் இருக்கார்.. உன்னை கல்யாணம் செய்துக்கலைன்னாலும் சூர்யா அவங்களை பார்த்திட்டுதான் இருந்திருப்பார்.. சூர்யாக்கு அவங்க இன்னொரு அம்மாப்பா மாதிரி.. அதோட இப்ப அவங்க தனியா இல்ல.. நவீன் அவங்களோடதான் இருக்கார்.. நவீனோட குழந்தைகளை பார்த்துக்கிட்டு ரொம்ப சந்தோசமாத்தான் இருக்காங்க.. ரிங்கு சிஸ்டர் அவங்களை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க.. அவங்களை பத்தி நீ இனிமே கவலைப்படாத..” என்று கீர்த்தி சொல்ல..
‘நிஜமாவாக்கா..?” என்றாள் பூரிப்பாக.
‘சூர்யா உன்னை கல்யாணம் செய்ததுக்கப்புறம்தான் அவங்க நிம்மதியா இருக்காங்களாம்.. இதை நிறைய முறை என்கிட்ட சொல்லியிருக்காங்க..” என்றாள்.
‘யாராச்சம் இந்த மாதிரி சொல்லுவாங்களா…? அவங்க ரொம்ப நல்லவங்க..” என்றாள் உளமாற.
‘பிரசாத்தோட அம்மாப்பாவை எங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் திலகா.. ஆனா நீ அவங்களை பத்தி பேசறது நினைக்கிறது.. இப்படி எதுவும் சூர்யாக்கு பிடிக்காது.. சூர்யா சந்தோசமா இருக்கனும்னா இனிமே நீ அவங்களை பத்தி பேசக்கூடாது.. பேசறதுன்னு இல்ல நினைக்கக் கூட கூடாது..” என்று கண்டிப்புடன் சொல்;ல..
‘அவர் அவங்களைப் பார்த்துக்குறார்.. ரிங்க்கு அக்கா குடும்பமும் இங்கையே வந்துட்டாங்கதான..? அவங்க தனியா இல்லல்ல..? சந்தோசமாத்தான இருக்காங்க.. அதனால இனிமே நான் அவங்களை நினைக்கமாட்டேன்..” என்று உடனே பதிலளித்தாள்.
‘இனியாவது சூர்யாவை புரிஞ்சி நடந்துப்பியா..?” என்று கீர்த்தி கேட்க.. சரி என்பதாய் தலையசைத்தாள்..
‘அத்தையால குழந்தைகளை ரொம்ப நேரம் சமாளிக்க முடியாது.. வா வெளில போலாம்..” என்று இருவரும் ஹாலுக்கு வர.. ஆதவன் சோனுவோடு கேரம் விளையாடிக்கொண்டிருக்க.. கமலம் டி.வி. பார்த்துகொண்டிருக்க..
‘தியா எங்கத்தை.. அவளுக்கு ஊட்டனும்..” என்று கீர்த்தி கேட்க..
‘சூர்யாவோட இருக்கா..” என்று கமலம் சொல்ல..
‘திலகா தியாவை தூக்கிட்டு வா..” என்று கீர்த்தி சொல்ல..
‘எனக்கு பயமாயிருக்குக்கா..” என்று திலகவதி பயத்தோடே சொல்ல..
தானே சென்று தியாவை தூக்கிவந்தவள்.. அவளுக்கு ஊட்டிவிட்டு சோனுவையும் சாப்பிடவைத்து.. மீண்டும் சிறிது நேரம் விளையாடி குழந்தைகளை தூங்க வைத்தவள்.. ‘சூர்யாவை சாப்பிட கூப்பிடு திலகா..” என்று சொல்ல..
இவள் தயங்கி நிற்க்க.. ‘சூர்யா..” என்று கீர்த்தி வெளியிலிருந்து அழைப்புவிட..
வெளியே வந்தவன்.. ‘பொண்ணுமாங்க தூங்கிட்டாங்களாண்ணி..?” என கேட்க..
‘அவங்க தூங்கிட்டாங்க.. நீ சாப்பிட வா..” என்று சொல்ல..
‘திலகாகிட்ட கொடுத்தனுப்புங்க.. ரூம்லயே சாப்டுக்கிறேன்..” என்று இயல்பாகவே சொல்லி உள்ளே சென்றிட..
‘சூர்யாக்கு கோபம் போய்டுச்சி.. பயப்படாம டிபன் எடுத்திட்டு போ..” என்று கீர்த்தி சொன்னாலும் டி‡பனை எடுத்துக்கொண்டவள் பயத்தோடுதான் உள்ளே போனாள்.
திலகவதி முகத்திலிருந்த பயத்தை பார்த்ததும் முதல்ல சாப்பிடட்டும் என நினைத்தவன்.. ‘இப்டியே நின்னுட்டிருக்கப்போறியா..? இல்ல சாப்பிட கொடுப்பியா..?” என்று முறைக்க..
அவசரமாக எடுத்து வைத்து சூர்யாவை பார்க்க.. ‘நீ சாப்பிடு.. நான் அப்புறம் சாப்டுக்கிறேன்..” என்று சூர்யா சொல்ல..
‘இல்ல.. நீங்க சாப்பிடமாட்டிங்க..” என்று இறங்கிய குரலில் சொல்ல..
‘இப்ப சாப்டப்போறியா இல்லையா…?” என்று மிரட்ட..
‘நீங்களும் சாப்ட்டாதான்..” என்று பயந்தாலும் உறுதியாக சொல்ல..
அடக்கப்பட்டிருந்த ஆத்திரமெல்லாம் வெளிவர.. ‘நீ விதவையா..?” என்றான் அழுத்தமாக.
‘இல்ல..” என்று அவசரமாய் மறுக்க..
‘நீ விதவையா..?” என்று குறையாத கோபத்தோடு மீண்டும் கேட்க..
‘இல்ல..” என்றாள் கண்ணீரோடு.
அவளின் கன்னத்தை அழுத்திப்பிடித்து.. ‘நீ விதவையா..?” என்று மீண்டும் கேட்க..
பிறகுதான் சுதாரித்தவளாய்.. ‘நான் சுமங்கலி.. சூர்யாவோட சுமங்கலி..” என்று அவனின் பிடியில் கன்னம் வலித்தபோதும் உறுதியான குரலில் சொல்ல..
கோபம் குறைந்தவனாய் அவளின் கன்னம் விடுவித்தவன்.. ‘எதுக்குடி உன்னையும் வறுத்திகிட்டு என்னையும் இப்படி டென்சன் பண்ற..?” என்றான் வேதனையாய்.
சூர்யாவின் கோபத்தை தாங்கிக்கொண்டவளுக்கு அவனின் வேதனையை தாங்க முடியாமல் போகவே.. ‘இனி இப்படி எப்பவும் பேசவும் மாட்டேன்..” என்று உறுதியோடு சொல்ல..
மனம் நிம்மதியாய் உணர.. ‘நிஜமா உனக்கு என்னை புரியலையா..?” என்றான் தளர்வாக.
‘புரியுது.. புரியுது..” என்றாள் தாமதமின்றி.
‘என்ன புரியுது..?” என்றான் எரிச்சலாக.
‘உங்க நண்பனோட கடைசி ஆசையை நிறைவேத்துறதுக்காக என்னை கல்யாணம் செய்துகிட்டிங்க.. நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறிங்க..” என்று பிணாத்திவைக்க..
‘என் நண்பன் உனக்கு இன்னொரு கல்யாணம்தான் பண்ணி வைக்க சொன்னான்.. என்னையே பண்ணிக்க சொல்லலை.. அவன் ஆசையை நிறைவேத்தனும்னா நான் உனக்கு வேற மாப்பிளைதான பார்த்திருக்கனும்..‚ உன்னை எதுக்கு நானே கல்யாணம் பண்ணிக்கனும்..?” என்றான் காட்டமாக.
‘வேற ஒருத்தருக்கு கல்யாணம் செய்து வச்சி அவங்க என்னை நல்லா பார்த்துக்கலைன்னான்ற பயம்.. அதுனாலதான் நீங்களே என்னை கல்யாணம் செய்துகிட்டிங்க..” என்றாள் கணவனை உயர்வாய் பார்த்தபடி.
அடிப்பாவி.. காதலா பார்க்கலன்னா கூட பரவால்ல.. இப்படி கடவுளைப்போல பார்த்து கொல்றாளே என நொந்தவனுக்கு ஆதவன் சொன்னது நினைவு வர.. மயங்கி நின்னாலும்.. இல்ல மயக்கமே போட்டாலும் இவளுக்கு நம்ம காதல் புரியப்போறதில்ல.. குறைஞ்சது மல்லுக்கு நிக்காமலாவது இருக்கலாம் என நினைத்தவன்..
‘வா சாப்பிடலாம்..” என்றான்.
இவள் அமர்ந்து ஒரு வாய் சாப்பிட.. சூர்யா அமைதியாகவே இருக்க..
‘சாப்பிடுங்க..” என்றாள்.
இவன் வாயை பெரிதாய் திறக்க.. இவள் விழிவிரிக்க.. ‘என்னை டென்சன் செய்தல்ல..? ஊட்டிவிடு..” என்று கட்டளையாய் சொல்ல.. சங்கடமாய் இருந்தாலும் சூர்யாவின் கோபம் குறைந்ததே போதுமானதாய் இருக்க.. எழுந்தாள்.
‘எங்க போற..?” என்று கேட்க..
‘கை கழுவிட்டு வந்துடறேன்..” என்று சொல்ல.. உள்ளுக்குள் சிரித்தவன்..
‘அப்படியே ஊட்டு..” என்று அடம்பிடிக்க.. இவள் சங்கடமாய் பார்க்க..
‘இப்போ ஊட்டல.. அப்புறம் வேற எதாவது செய்வேன்..” என்று மிரட்ட..
அமர்ந்தவள் இட்லியை எடுத்து சூர்யாவின் வாயருகே நீட்ட.. அவளருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தவன்.. ‘ஆ..” என்ற சத்தத்தோடு வாங்கியவன்.. ‘நீ ஒருவாய்.. நான் ஒரு வாய்.. சரியா..? சாப்பிடு..” என்று சொல்ல..
கொஞ்சமாய் இட்லியை எடுத்தவள் தன் வாயில் பட்டும் படாமலும் போட்டுக்கொள்ள.. பார்த்திருந்தவன்.. அடுத்தமுறை இட்லியை வாங்கியவன் அவளின் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலாக ருசிபார்க்க.. சிலிர்த்து சிவந்தாள் மொத்தமாக.
மனைவியின் சிலிர்த்த நிலை சூர்யாவிற்க்கு உற்ச்சாகத்தை கொடுக்க..
‘உனக்கு கஷ்டம்ன்னா மீதியை நான் ஊட்டவா..?” என்றான் குழைவாக.
தன் விரலை விட்டால் போதும் என்று நினைத்தவள்.. சம்மதமாய் தலையசைக்க.. தனக்கொரு வாய் மனைவிக்கு ஒரு வாய் என ஒருவழியாக சாப்பிட்டு முடித்திருக்க.. ‘நான் உன் விரலை க்ளீன் செய்தமாதிரி நீயும் என் விரலை க்ளீன் செய்..” என்று தன் ஆள்காட்டி விரலை அவளின் வாயினில் திணிக்க..
தைரியமாய் சூர்யாவின் கையை விலக்கிவிட்டதுமில்லாமல்.. ‘முடியாது போங்க..” என்று அசால்ட்டாய் சொல்லி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நிதானமாகவே கிச்சனுக்குள் செல்ல.. மனைவியின் தைரியத்தில் ஆச்சர்யப்பட்டவன்.. பத்து நிமிடம் கழித்து வந்தவளிடம்..
‘உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நான் சொன்னதை செய்யாம போவ..?” என்று மிரட்ட..
கணவன் மிரட்டலுக்கு மிரளாமல் கதவை தாழிட்டு கட்டிலில் படுத்தவள்..
‘எதாவது படம் போட்டு விடுங்க..” என்றாள் சிரிப்போடு.
ஆ.. என ஆச்சர்யப்பட்டவனாய் அவளருகில் படுத்தவன்.. ‘என்ன.? பயம் போய்டுச்சா..? எனக்கு கோபம் வந்தது..” என்று மிரட்டிவன் குரல் குழைந்திருக்க..
‘கோபம் வந்தாலும் தப்பா எதுவும் செய்யமாட்டிங்க..” என்று மீண்டும் தைரியமாக பேசி மேலும் அவனை ஆச்சர்யமூட்ட.. மனைவியருகே நெருங்கிப் படுத்தவன்..
‘ம்ம்.. உன் அனுமதியில்லாம எதுவும் செய்யமாட்டேன்தான்.. ஆனாலும் அதைத்தாண்டி சந்தோசமா இருக்க இன்னும் நிறைய இருக்கு.. அதனால என்மேல அவ்ளோ நம்பிக்கைல்லாம் வைக்காத..” என்று சொல்லி அருகிலிருந்தவளை தன்மீது புரட்டி போட்டுக்கொள்ள.. தன் மொத்த உடலும் சூர்யா மீதிருக்க.. இதனை சற்றும் எதிர்பார்க்காத திலகவதி இறங்க முயல.. அவனின் பிடியும் அதிகரிக்க..
கணவனின் கண் படாத பாகங்களெல்லாம் அவனுடலில் அழுந்தப்படிய.. பெரும் அவஸ்த்தைக்கு உள்ளானவள் கெஞ்சலோடு கணவன் முகம் பார்க்க.. மனைவியின் பார்வையை புறக்கணித்தவன்..
‘தூங்கும்போது கூட இதை கழட்டமாட்டியா..?” என்று கேட்டு அவளின் துப்பட்டாவை உருவ முயல.. இருபக்கமும் பின் குத்தியதால் அது வரமறுக்க..
துப்பட்டாவை எடுக்கவேண்டி பின்னின் மீது சூர்யா கைவைக்க..
பெருகிய தைரியமெல்லாம் மொத்தமாய் வடிந்திட.. திலகாவின் கண்கள் கலக்கத்தை காண்பிக்க.. ‘ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்..” என்றவன் மீண்டும் ஒருமுறை இறுக சேர்த்தணைத்து சிரிப்போடு கீழிறக்கியவன் திலகவதியின் கையோடு தன் கையை பிணைத்து.. ‘படம் பார்க்கிறியா..?” என்றான் கனிவாக.
வேண்டாம் என அவசரமாய் தலையசைத்தவள் கண்களை இறுக மூடிக்கொள்ள.. சிரித்தவன் லைட்டை அணைத்து தானும் கண்மூடினான்.