அத்தியாயம் — 25
காலை வழக்கம்போல் சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிகொண்டிருந்தான். திலகவதியை நினைக்கும்போதெல்லாம் அவளை ஆளும் எண்ணமே சூர்யாவை ஆட்டிப்படைக்க.. கடந்த ஒரு வாரமாக அவளின் முகம் பார்ப்பதையும் கூட தவிர்த்திருந்தான்.
‘ஊருக்கு போனதில இருந்து மாமா இன்னும் ‡போனே பண்ணல.. அத்தைக்கு அங்க சௌகரியமா இருக்கான்னு ஒரு ‡போன் பண்ணி கேக்கலாமா..?” என்றாள்.
‘நான் கேட்டுட்டேன்… உனக்கு தெரிஞ்சிக்கனும்னா நீயே கேட்டுக்கோ..” என்றான்.
‘எப்ப பேசுனிங்க..? ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல..?” என்று கோபித்தாள்.
‘எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டே இருக்கனுமா..? உனக்குதான் உன்மாமா புதுசா மொபைல் வாங்கி கொடுத்திருக்கானில்ல..? கால் பண்ணி கேட்டுக்கோ..” என்று சொல்லி
‘முத்து.. டிபன் எடுத்து வைங்க..” என்றான்.
இட்லி எடுத்து வந்த முத்துவிடம்.. ‘அண்ணா நான் பார்த்துக்கிறேன்.. நீங்க போங்க..” என்று சொல்லி.. தட்டில் இட்லியை வைத்தாள்.
சூர்யா எப்பொழுதும் எதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவான் என்பதால் ஏன் இன்னைக்கு எதுவுமே பேசாம சாப்பிட்டு கிளம்பிட்டான்..? என்று யோசித்தவள்.. இன்னைக்கு எதாவது ஆப்ரேசன் இருக்குமாக்கும்.. என்று நினைத்துக்கொண்டாள்.
மதியம் சாப்பாட்டிற்கு சூர்யா வரவுமில்லை.. போன் செய்தும் சொல்லவில்லை. இரவு எட்டுமணிபோல் வீட்டிற்கு வந்தான். ‘ஏன் இன்னைக்கு மதிய சாப்பாட்டிற்கு வரலை..? மதியம் சாப்டிங்களா..?” என்று அக்கறையாய் கேட்டாள்.
‘ம்ம்.. நீ சாப்டியா..?”என்றான்.
‘ம்ம்.. சாப்பிட்டேன்..” என்று திலகவதி சொல்லவும்.. ‘பாப்பா சாப்பிடலைங்க தம்பி..” என்று முத்து பதில் கொடுத்தார்.
‘நீ கவனிச்சிருக்கமாட்ட முத்து.. என் பொண்டாட்டி என்கிட்ட பொய் சொல்லமாட்டா..” என்று அமர்த்தலான பார்வையோடு சூர்யா சொல்ல..
‘இல்ல… நான் பொய்தான் சொன்னேன்.. மதியம் நான் சாப்பிடலை..”என்று உடனே தன் தவறை ஒத்துக்கொண்டாள்.
‘ஓ.ஹோ.. பொய் சொன்னியா..?” என்று இழுத்தவன் அமைதியாய் ரூமிற்குள் போனான். சூர்யா குளித்து வந்ததும்.. ‘டிபன் எடுத்து வைக்கட்டுமா..?” என்றாள்.
‘நீ போய் சாப்பிடு.. நான் அப்புறம் சாப்டுக்கிறேன்..” என்றான்.
‘எனக்கு பசியில்ல.. நானும் அப்புறமா உங்ககூடவே சாப்டுக்கிறேன்..”என்றாள்.
‘மறுபடியும் பொய்யா..?” என்று சூர்;யா முறைக்க..
‘பசிக்குதுதான்.. ஆனா நீங்க சாப்பிடும்போது சாப்டுக்கிறேன்..” என்று பிடிவாதமாய் அவனருகே அமர்ந்துகொண்டாள்.
இரண்டு முறை சொல்லியும் ஒரு மணிநேரமாகியும் திலகவதி சாப்பிடாமல் இருக்கவே.. ‘சாப்பிடலாம் வா..” என்று சாப்பிட அமர்ந்தான். இருவரும் சாப்பிட்டதும்.. சூர்யா தன் மொபைலை எடுத்துகொண்டு அதில் கவனமானான். திலவதிக்கு என்ன செய்வதென்று புரியாமல் அவனின் மொபைலை எட்டிபார்த்தாள். ஒன்றும் புரியாமல் போகவே டி.வியை ஆன் செய்து அதில் சேனலை மாற்றிக்கொண்டிருந்தாள்.
தூங்கிவிடுவாள் என நினைத்திருக்க.. விழித்திருந்து இம்சை செய்யும் மனைவிமீது எரிச்சலடைந்தவனாய்.. ‘நீ டி.வி.பாரு.. நான் ஆதவன் ரூம்க்கு போய் இதை கொஞ்சம் பார்த்திட்டு வரேன்.. இங்க டி.வி.சௌன்ட் எனக்கு டிஸ்டர்ப் ஆகுது..” என்று வெளியே போகவும்…
‘இல்ல.. இங்கையே பாருங்க..” என்று சொல்லி உடனடியாக டி.வி.யை ஆ‡ப் செய்தாள். அவன் மீண்டும் அமர்ந்து தனது மொபைலில் கவனமானான். அமைதியாக வந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள். பகலெல்லாம் துணி தைத்ததில் படுத்தது இடுப்பிற்கு இதமாய் இருக்க.. சற்று நேரத்தில் தூங்கிபோனாள். அவள் தூங்கியதை உறுதிசெய்தவன் தானும் படுத்தான்.
காலையிலும் வழக்கம் போலவே கிளம்பிச்சென்றுவிட்டான். சூர்யா திலகவதியிடம் பேசாமலும் இருப்பதில்லை.. எனினும் முன்புபோல் அதிகம் பேசுவதும் இல்லை. இதுபோலவே மீண்டும் ஒரு வாரத்தை கடத்தினான் சூர்யா. முன்பிருந்த கலகலப்பு அவனிடம் இல்லாமல் போகவும் திலகவதிக்கு எதையோ இழந்தது போல் ஆனது.
அடுத்தநாள் காலை ஒரு முடிவிற்கு வந்தவளாய்.. குளித்து சாரி கட்டிக் கொண்டாள். அதுவும் முன்பு கட்டுவது போலவே இழுத்து போர்த்தியிருந்தாள். தலை பின்னாமல் கொண்டைதான் போட்டிருந்தாள். அப்பொழுதுதான் எழுந்தவன் திலகவதியைப் பார்த்ததும் எரிச்சலடைந்தான். எதுவும் சொல்லாமல் குளிக்கப் போனான். குளித்து வந்தவன் தம்மிடம் கோபப்படுவான் என எதிர்பார்த்து கணவனையே பார்த்திருக்க..
அவளின் பார்வையை ஒதுக்கியவன்.. வெளியே வந்து ‘முத்து.. எனக்கு ஒரு கா‡பி..” என்று சோபாவில் வந்தமர்ந்தான்.
‘தம்பி.. திலகாப்பொண்ணு பகல்ல சரியா சாப்பிடறதே இல்லைங்க.. நைட்ல உங்ககூட சாப்பிடறது மட்டும்தான்.. மத்தபடி டீ மட்டும்தான் குடிக்கிறாங்க..” என்று சொன்னபடி கா‡பியை கொடுத்துவிட்டு போனார்.
அவ்வளவு கோபமாக எழுந்து உள்ளே போனவன்.. ‘உன் மனசில என்ன நினைச்சிட்டிருக்க…?” என்று கோபமாக கேட்டான்.
திலகா அமைதியாகவே இருந்ததும்.. ‘கேக்கிறது காதுல விழலையா..?”
‘பதில் சொல்லலைன்னா தண்டனை கொடுப்பிங்கல்ல..” என்றாள். ஆனால்.. அன்று போல் திணறாமல் நேர்கொண்ட பார்வையோடு தெளிவாக கேட்டாள்.
சூர்யாவிற்கு மனதில் மின்னலடித்தது. இருந்தாலும் இவளை நம்பமுடியாது.. நம்மளை சூடேத்திட்டு இவ அதுல குளிர் காய்வா.. என நினைத்தவன்..
‘அப்போ வேணும்னேதான் எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும்.. இந்த கொண்டை இப்படி சாரிகட்றது இதெல்லாம் பண்ணிட்டிருக்கியா..?” என்றான் கோபமாக.
சூர்யாவின் கோபத்திற்க்கு சின்ன சிரிப்பை பதிலாய் தந்தவள்.. ‘ஆமாம்.. குங்குமம் கூட வைக்கல.. வச்சிவிடுங்க..” என்று தலைகவிழ்ந்தாள்.
மனைவியின் சிரிப்பில் எரிச்சலடைந்தவன்.. ‘குங்குமம் தான..? இதோ வச்சிவிடறேன்..” என்று இயல்பாக அவளின் நெற்றியில் குங்குமம் வைத்துவிடவும்..
‘இதென்ன..? முத்தம் கொடுக்காமலே வச்சி விட்டுட்டிங்க..?” என்றாள் சன்னக்குரலில்.
‘என்னை சந்தோசப் படுத்தனும்ங்கிறதுக்காக நீ பண்ற வேலையெல்லாம் என்னை கோபம்தான் படுத்துது.. இருந்தாலும் உன்கிட்ட இருந்து என்னால முழுசா விலகி நிற்க முடியலை.. அதுக்காக என்னை ரொம்ப சோதிக்காத.. என் பொறுமை போய்டுச்சின்னா அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது..” என்றான்.
சிரிப்பை ஒதுக்கி பொறுப்புள்ள மனைவியாய்.. ‘நீங்க சந்தோசமா இருக்கனும்னு நான் நினைக்கிறது தப்பா..?” என்றாள் பரிதாபமாய்.
‘நான் சந்தோசமா இருக்கனும்னு நீ நினைக்கிறது தப்பில்லை.. ஆனா.. உன் மனசை கஷ்டப்படுத்திக்கிட்டு நான் சந்தோசமா இருப்பேன்னு நீ நினைக்கிறதுதான் தப்பு..‚ எப்படி சொன்னாலும் புரிஞ்சிக்காம பேசுற உன்கிட்ட.. என்னத்தை நான் பண்றது..?” என்று கடுகடுத்தவன்..
‘உனக்கு இப்ப என்ன வயசிருக்கும்..?”என்றான் காரமாக.
‘இருபது..” என்றாள் பெருமையாக.
‘அப்புறமென்ன..? மெச்சூரிட்டி வயசுதான..? இந்த வயசில எத்தனை பொண்ணுங்க லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிறாங்க தெரியுமா..? இந்த காதல்.. காதல்ம்பாங்கலே.. அதுபத்தி எதாவது தெரியுமா..?”என்றான் கடுப்பாக.
‘அதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்.. உங்களுக்குதான் அதை புரிஞ்சிக்க தெரியலை…” என்றாள் கேளியாக.
‘அப்படியா…? தெரியுமா…? சரி.. காதல் பத்தி உனக்கென்ன தெரியும்னு எனக்கு சொல்லிகொடு.. நான் அதை புரிஞ்சிக்கப் பார்க்கிறேன்..” என்றான்.
‘காதலிக்கிறவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப அன்பா இருக்கனும்.. கல்யாணம் செய்துகிட்டவங்களும் அப்படித்தான் இருக்கனும்.. நீங்க எனக்கு என்ன தேவைன்னு பார்த்து பார்த்து செய்றிங்க.. ஆனா.. நான் உங்களுக்கு எதாவது செய்லாம்னா மட்டும் ஒத்துக்க மாட்டுகிறிங்க..” என்றாள்.
‘நான் உன்னை என்ன செய்ய விடலை..?” என்றான்.
‘என்மேல பாவப்பட்டு என்னை நீங்க கல்யாணம் செய்துகிட்டதே பெரியவிசயம்.. ஆனா.. எனக்கு பிடிக்காதோன்னு நினைச்சிகிட்டு என்னை விட்டு தள்ளியே இருக்கிங்க…” என்று கண்கலங்கியவள்..
‘அன்னைக்கு அந்த பார்ட்டியில.. அங்க வந்திருந்த உங்க பிரெண்ட்செல்லாம் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க.. ஆனா.. நீங்க மட்டும்தான் என்னால எந்த சந்தோசமும் கிடைக்காம கஷ்ட்டப்படுறிங்க..
சாப்பாட்டுக்கு கஷ்டப்படும்போது கூட எங்கம்மா என்னை ரெண்டாந்தாரமா யாருக்கும் கட்டிக்கொடுக்க கூடாதுன்னு நினைச்சாங்க.. ஆனா நீங்க.. நிறைய படிச்சிருக்கிங்க.. அழகா இருக்கிங்க.. அப்படியிருந்தும் என்னை ரெண்;டாந்தாரமா கட்டிகிட்டிங்க.. அப்படித்தான் கட்டிகிட்டிங்களே.. மத்ததெல்லாம் மிரட்டி செய்ய வச்சமாதிரி.. என்னை மிரட்டியாவது நீங்க சந்தோசமா இருக்கலாமில்ல..? எனக்காக உங்க சந்தோசத்iதையும் விட்டுக்கொடுக்கிறிங்க.. நான் என்னதான் பண்ணட்டும்..? என்னால யாருக்கும் நிம்மதியில்ல..” என்று மடை திறந்த வெள்ளமாய் தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிக்கொண்;டிருந்தாள்.
நீண்ட நேரம் அவளை பேசவிட்டவன்.. ‘சரி.. அழாத..” என்று அவளை தேற்றி..
திலகவதியை ஆழ்ந்து பார்த்தவன்.. ‘நான் சந்தோசமா இருக்கனுமா..? இல்ல நம்ம ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கனுமா..?” என்றான் காதலாக.
‘எனக்கு உங்க சந்தோசம்தான் முக்கியம்.. உங்க சந்தோசத்திலதான் அத்தையோட சந்தோசம் இருக்கு.. என்னோட சந்தோசமும் இருக்கு.. என் சந்தோசத்திலதான் என் அம்மா.. தம்பியோட சந்தோசம் இருக்கு..” என்று கெஞ்சுவதுபோல் சொல்ல..
அடுத்தநொடி சூர்யாவின் அணைப்பில் இருந்தாள் திலகவதி. முகமெங்கும் முத்தமிட்டு இதழில் கதை எழுத.. திமிறாமல் திண்டாடாமல் தன்னை ஒப்புக்கொடுத்தாள் கணவனுக்கு.
அந்த நேரம் சூர்யாவின் ‡போன் அடிக்கவும்.. அவளிடம் இருந்து விலக முயல.. நீண்ட நேரம் தொடர்ந்த முத்தத்தில் சூர்யாவிடம் மொத்தமாய் மயங்கியிருந்தவள்.. கண்மூடிய நிலையிலேயே அவனின் சட்டையை இறுகப்பற்றிக்கொள்ள..
அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்.. ‘யாரோ கால் பண்றாங்க.. ஹாஸ்பிட்டல்ல இருந்து எதாவது எமர்ஜென்சியா இருக்கப்போகுது.. நான் பேசிட்டு வந்திடறேன்.” என்று அவளின் கையை தன் சட்டையிலிருந்து விடுவித்து மொபைலை எடுத்தான்.
‘ஹலோ..” என்றதும்.. ‘சார் எமர்ஜென்சி.. பத்துவயசு குழந்தை.. ஆக்சிடண்ட் கேஸ்..” என்றதும்.. ‘ஐ வில் பி தேர் இன் ஹா‡ப் ஆன் ஆர்..” என்று கட்செய்தான்.
அவளின் முன்னால் உடை மாற்றுகிறோம் என்ற நினைவே இல்லாமல் அவசரமாக உடை மாற்றிக்கொண்டே.. ‘திலகா கொஞ்சம் அர்ஜெண்ட்.. நான் உடனே போகனும்.. முடிஞ்சா லன்ச்சுக்கு வரேன்.. நான் வர லேட்டானா நீ சாப்பிடு..” என்று சொல்லி அவசரமாக காருக்கு ஓடினான்.
காரில் போகும்போதுதான் டைம்பார்க்க.. பதினொன்றானது. எப்பொழுதும் அதிகபட்சம் எட்டு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவடுவதால்.. இவ்ளோ டைம் ஆய்டுச்சா..? என்று வேகமாக போனான்.
அவசர சிகிச்சை பிரிவில் அரைமணிநேரம் இருந்தவன்.. பிறகு ஓ.பி. பார்த்து முடிக்க இரண்டரை மணியானது. அதன் பிறகு அந்த குழந்தை கிரிட்டிக்கல் பொசிசனை தாண்டிவிட்டாள்.. என்றதும்தான் சூர்யாவிற்கு திலகவதியின் நினைவே வந்தது. காலையில் திலகவதி தன்னிடம் மயங்கியதை நினைத்து லேசாய் சிரித்தான்.
சூர்யா சிரிப்பதை பார்;த்ததும்… ‘சார்.. அந்த குழந்தை பிழைச்சிட்டான்னதும் இவ்ளோ சந்தோசப்படுறிங்க.. உண்மையாவே நீங்க கிரேட் சார்..” என்று புதிதாய் சேர்ந்த மருத்துவர் சொல்லவும்.. அவருக்கும் சிறு புன்னகையை மட்டுமே பதிலாய் கொடுத்து வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டிற்கு சென்றால் திலகவதி காலையில் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலோ.. அதே நிலையில் தான் இருந்தாள். ‘திலகா..” என்ற சூர்யாவின் குரல் கேட்டதும் சூர்யாவின் முகம் காண இயலாமல்.. வெக்கத்தோடு கட்டிலில் படுத்து தன் முகத்தை மூடினாள்.
அவளை தன் பக்கம் திருப்பி.. முகத்தை மூடியிருந்த கையை விலக்கி..
‘காலைல நான் உன்கிட்ட நடந்துகிட்டது உனக்கு பிடிக்கலையா..?” என்று அவளின் முகத்தை உற்று நோக்கினான்.
‘பெரிய கண்டுபிடிப்புதான் போங்க..‚ ஆமா.. எதுக்கு அவ்ளோ அவசரமா கிளம்பினிங்க..?” என்று கேட்டவளின் முகம் ஏமாற்றத்தை காண்பிக்க..
‘பத்து வயசு குழந்தை.. ஆக்சிடெண்ட் ஆய்டுச்சி.. தலைல அடி.. நான் கரெக்ட் டைம்க்கு போகாம இருந்திருந்தா அந்த குழந்தையை காப்பாத்தியிருக்க முடியாது.. அர்ஜெண்ட் வேலைன்னு உன்கிட்ட சொல்லிட்டுதான போனேன்..? நான் சொன்னது உன் காதுல விழவே இல்லையா..? என்ன யோசனைல இருந்த..?” என்றான்.
‘என்கிட்ட எங்க சொன்னிங்க..? பொய் சொல்லாதிங்க.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம.. அவசர அவசரமா என்முன்னாடியே டிரெஸ் மாத்திட்டு போனிங்க..” என்றாள் சிவந்த முகத்தோடு.
அப்போ நாம சொன்னதை கவனிக்கவே இல்லையா..? என நினைத்தவன்.. அவளின் சிவந்திருந்த முகத்தை ரசனையுடன் பார்த்து..
‘என் பொண்டாட்டி முன்னாடி டிரெஸ் பண்றதுக்கு நான் எதுக்கு வெக்கப்படனும்..? ம்ம்…” என்று கேட்டுக்கொண்டே சூர்யா அவளை நெருங்;கவும்.. திலகவதியின் இதயம் தாறுமாறாய் படபடத்தது. தனது படபடப்பை மறைக்க…
‘டிபன் எடுத்து வைக்கட்டுமா..?”என்றாள்.
அவளின் தடுமாற்றம் சூர்யாவிற்கு உற்சாகத்தை கொடுக்க.. திலகவதியை ஆழ்ந்து பார்த்தான். சூர்யாவின் புதுவிதமான பார்வையை சந்திக்க முடியாமல்.. தனது டைலரிங் அறையில் புகுந்து கதவை தாழிட்டு கொண்டாள்.
கணவன் அருகாமை வேண்டும் என்ற ஒரு உணர்வு.. தன்னை கண்டுகொண்டான் என்று பதட்டம்.. பயம்.. எல்லாம் ஒன்று சேர.. அவனை நேர்கொண்டு காண முடியாமல் இந்த அறையில் புகுந்துகொண்டாள்.
‘கதவை திற திலகா…” என்று கெஞ்சி பார்த்தான்.. மிரட்டிப்பார்த்தான்.. திலகவதி கதவை திறக்கவே இல்லை.
‘என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்களேன்.. கொஞ்ச நேரம் பொறுத்து நானே வெளிய வந்திடறேன்..” என்று கெஞ்சலாய் உள்ளிருந்தபடியே சொன்னாள்.
‘சீக்கிரம் வந்திடனும்..” என்று சொல்லி ஹாலில் அமர்ந்து டி.வி.யை ஆன் செய்தான். இரவு எட்டு மணியாகியும் திலகா வெளியே வராமல் போகவும்.. தனது கைபேசியிலிருந்து அவளின் கைபேசிக்கு அழைப்பு விடுத்து..
‘திலகா.. உங்கம்மாகிட்ட இருந்து ‡போன்..” என்று சொல்ல..
‘நீங்க பொய் சொல்றிங்க..” என்று உள்ளிருந்தபடியே சொன்னாள்.
சிரித்தவன்.. ஆமா பொய்தான் சொன்னேன்..‚ ஆனா இப்ப உண்மையாவே நீ வெளிய வரலைன்னா.. உங்கம்மாக்கு கால்பண்ணி எனக்கு பசிக்குதுன்னு சொல்லியும் உங்க பொண்ணு எனக்கு சாப்பாடு கூட போடமாட்டுக்கிறான்னு சொல்லபோறேன்..‚” என்றான்.
‘அச்சோ அப்படியேது செய்திடாதிங்க..” என்று உடனே கதவை திறந்தாள். சூர்யா திலகவதியை மீண்டும் ஒரு மார்க்கமாக பார்க்க.. தலைகுனிந்துகொண்டு தனது துப்பட்டாவின் ஒரு முனையை பிடித்து சுருட்டிக்கொண்டிருந்தாள்.
‘ரொம்ப பசிக்குது..” என்று பாவமாய் சொன்னான்.
அதிர்ச்சியாய் அவனின் முகத்தை பார்த்தவள்.. வேகமாக வெளியே போக.. அவளின் கைபிடித்து நிறுத்தியவன்… ‘இரு.. இரு.. என்ன அவசரம்..? பசிக்குதுதான்… ஆனா.. சாப்பிடறதுக்கு முன்னாடி..” என்று தனது அறைக்கு அழைத்து சென்று கதவை தாழிட்டவன்.. அவளின் இடையை வளைத்து கன்னத்தோடு கன்னம் தேய்க்க.. உடல் சிலிர்த்து சிவந்தாள் திலகவதி.
கூடவே.. பிரசாத்தோடு நடந்த நிகழ்வில் உணர்ந்த வலியும்.. வேதனையும் அந்த நேரம் நினைவுக்கு வரத்தான் செய்தது.. அதன் தாக்கத்தினால் பயமும் தொற்றிக்கொள்ள..
‘முதல்ல.. சா.. ப்..டுங்க..” என்று திணறினாள்.
அவள் கண்களில் பயத்தை பார்த்தவன்.. நிச்சயமாக திலகவதிக்கு பிரசாத்தின் நினைவு வந்திருக்கும் என்று புரிந்துகொண்டவன்.. ‘கொஞ்ச நேரம் கழிச்சி சாப்டுக்கலாம்..” என்று அவளின் கண்களில் முத்தமிட்டு கட்டிலில் சரித்து.. ‘ஆமா.. காலைல நான் அழகாயிருக்கேன்னு சொன்னியே..? நிஜமாவே நான் அழகா இருக்கேனா..? நீ பொய்தான சொல்ற..? உன்னைவிட கலர்கூட நான் கம்மிதான் பாரு..” என்று அவளின் உதட்டருகே மிக நெருக்கமாக தன் உதட்டை குவித்துக் காட்ட..