ஒரு மணிநேரம் வரை பே வென பார்த்திருந்து.. டாக்டர் வேலை எத்தனை சுலபமான வேலை என முன்பு நினைத்திருந்தவள்.. இன்றுதான் கணவன் படும் கஷ்டம் புரிய.. பாவமாய் பார்த்திருந்தாள் டாக்டர் சூர்யாவை.
நர்சிடம் ஐந்து நிமிட இடைவெளி சொல்லி வெளியே அனுப்பியவன்.. மனைவியிடம்.. ‘டையர்டா இருக்கும்போது இதை குடிக்க சொன்னேன்தான..?” என்று மிரட்ட..
‘பாதி ஜூஸ் உன்னிடம்.. மீதி ஜூஸ் என்னிடம்..” என்று பாட்டு பாட..
‘ப்ச்.. இந்த இம்சைக்குத்தான் உன்னை போக சொன்னேன்..” என்று திட்ட..
‘வெளில அத்தனை பேர் காத்திருக்காங்க.. என்கிட்ட வம்பு செய்திட்டிருக்கிங்க.. குடிங்க..” என்று தானும் திட்டி அவனின் வாயில் அந்த பழரச பாட்டிலை வைக்க.. மறுப்பின்றி கொஞ்சம் குடித்தவன்..
திலகவதியை குடிக்க செய்து.. மீண்டும் தன் பணியினை தொடர்ந்தவன் அதனை முடிக்க மாலை ஐந்தானது. வீட்டிற்க்கு வந்ததும் குளித்தவன்.. திலகாவை குளிக்க சொல்ல.. ‘சலுப்பா இருக்கு..” என்று கெஞ்சி முகம் கைகால் கழுவி வெளியே வந்தாள்.
சூர்யா ஆயாசமாக கட்டிலில் படுத்திருக்க.. கணவனின் இரு கால்களைளும் எடுத்து தன்மடிமீது வைத்தவள்.. இதமாய் பிடித்துவிட ஆரம்பிக்க.. ‘ஏய்.. விடு திலகா..” என்று உருவியவனின் கால்களை மீண்டும் எடுத்து மடிமீது வைத்தவள்..
‘ச்சு.. அமைதியா படுங்க..” என்று மிரட்டி மீண்டும் பிடித்துவிட..
எழுந்தமர்ந்தவன்.. ‘என்னையே மிரட்றியா நீ..” என்று மனைவியை அணைத்து தன்னோடு படுக்கையில் சரித்துக்கொள்ள..
‘காலைலயிருந்து இப்போ வரைக்கும் உங்களுக்கு ரெஸ்ட்டே இல்ல.. பிடிச்சிவிட்டா நல்லாயிருக்கும்.. விடுங்க..” என்று எழப்பார்க்க..
இன்னும் சேர்த்தணைத்தவன்.. ‘இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.. அப்புறம் சூர்யாக்கு வேற மூடாகிடும்..” என்று கிசுகிசுப்பாய் சொல்ல..
முறைத்தவள்.. ‘என் விருப்பத்துக்கு எதாவது செய்ய விடுறிங்களா..?” என்று சண்டைக்கு கிளம்ப..
‘ஏய்.. இன்னைக்கென்னாச்சி உனக்கு..?” என்று கேட்க..
‘இல்ல.. டாக்டர்ன்னா நோகாம நோன்பு கும்பிடறவங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்.. இன்னைக்குத்தான் உங்க கஷ்டம் புரிஞ்சிசுச்சி..” என்று பாவமாய் சொல்ல..
சிரித்தவன்.. ‘கஷ்டமில்லாத வேலைன்னு எதுவும் இல்ல..” என தேற்றி..
‘ம்ம்.. எல்லாம் புரிஞ்சி என்ன செய்ய..? என்னைக்காவது நான் சொல்றதை கேட்டுருக்கியா..?” என்று முறைக்க..
‘நான் என்ன கேக்குல..?” என்று இவள் பதற..
‘நைட்ல..” என ஆரம்பிக்கும்போதே சூர்யாவின் வாயை பொத்தியவள்..
‘கேக்காமத்தான் வாந்தி எடுத்திட்டிருக்கேனா..?” என்று சிவந்த முகத்தோடு தலைகுனிய.. ‘மொத்தமும் என் உழைப்பு.. நம்ம பாப்பா விசயத்தில நோகாம நோன்பு கும்பிட்டது நீதான்..” என்று முனுமுனுக்க..
‘ம்ம்..” என்று வெக்கத்தோடு சூர்யாவை உதறி எழுந்தவள்.. ‘உங்களுக்கு போய் கால் பிடிச்சிவிடாலாம்னு நினைச்சேன் பாருங்க.. என்னை சொல்லனும்..” என்று வெளியே ஓடப் பார்;க்க..
‘ஏய்.. வா இங்க..” என்று அருகில் அமர்த்திக்கொண்டவன்.. ‘அம்மாக்கு ஆதவன்க்கெல்லாம் சொல்லலாம்..” என்று மொபைலை எடுக்க..
‘இவ்ளோ நாளா ஏன் சொல்லலைன்னு அத்தை திட்டப்போறாங்க..” என்று இவள் பயப்பட..
‘உறுதியா தெரியாம சொல்லவேணாம்தான் சொல்லவேணாம்னேன்.. அம்மா புரிஞ்சிப்பாங்க.. ஒன்னும் சொல்லமாட்டாங்க..” என்று சூர்யா கால் செய்ய.. ஆதவன் அட்டன் செய்ய..
‘பொண்ணுமாங்க நல்லாயிருக்காங்களா ஆது..?” என்று வழக்கம்போல் நலம் விசாரித்து.. ‘சோனு தியாகிட்ட இன்னும் ஏழே மாசத்தில புது குட்டிப்பாப்பா வரப்போகுதுன்னு சொல்லிடு..” என்று சூர்யா சிரிப்போடு சொல்ல..
‘டேய்…”என்று குதூகலித்தவன் ‘திலகா எப்படியிருக்கு..?” என்று கேட்க..
‘இங்கதான இருந்தா..” என தேட.. திலகவதி சூர்யாவின் பின் ஒளிந்துகொள்ள.. திலகவதியின் நிலைபுரிந்த ஆதவன் கீர்த்தியிடம் சொல்ல.. கீர்திக்கும் தன் முகத்தை காட்ட மறுக்க.. கீர்த்தி கமலத்திடம் சொல்ல..
‘திலகா..” என்று பாசத்தோடு கமலம் அழைக்க.. தன் அத்தையை மறுக்க முடியாமல் சூர்யா முதுகுக்கு பின்னிருந்த திலகவதி தன் முகத்தை கொஞ்சமாய் காட்ட.. மகன் முன் சில விசயங்களை கேட்க சங்கடப்பட்ட கமலம்..
‘டேய்.. அந்த பக்கம் போடா..” என்று விரட்ட..
‘அம்மா..” என ராகமிழுத்தவன்.. பின்னே சிரிப்போடு விலகிக்கொள்ள.. மல்லிகையாய் பூத்திருந்த மருமகளின் முகம் கமலத்திற்க்கு பெருத்த சந்தோசத்தை கொடுக்க.. ‘டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனானா..? எத்தனை மாசமா தலைக்கு குளிக்கல..? உன்னை சரியா பார்த்துக்கிறானா..? இல்ல வேலை வேலைன்னு ஓடிட்டிருக்கானா..? தனியா இருக்காத.. உங்க அம்மாவை இங்கையே வந்து இருக்க சொல்லு..” என்று அரைமணிநேரம் வரை பேசி முடித்தவர்..
‘சூர்யாவை கூப்பிடு..” என்று கமலம் சொல்ல..
‘ஹ..ஹா.. நீங்க பேசினதெல்லாம் கேட்டுட்டு நான் இங்கதான் இருந்தேன்..” என்று சிரிப்போடு தன் அன்னைக்கு தரிசனம் கொடுக்க..
‘சூரிப்பயலே…” என முறைத்தவர்.. ‘அவளை துணியெல்லாம் தைக்க வேணாம்னு சொல்லு.. வாந்தி வருதுன்னு சாப்பிடாம இருந்திடப் போறா.. அவங்கம்மாவை பக்கத்திலயிருந்து பார்த்துக்க சொல்லு.. “ என்று மகனுக்கும் புத்தி சொல்லி சந்தோசமாக இணைப்பை துண்டித்தார்.
பிறகு வந்த நாட்களிலும் செக்கப் போகும்போதெல்லாம் டாக்டரையும் சூர்யாவையும் படுத்திவிடுவாள் திலகவதி. எப்போதும் மகளை திட்டிக்கொண்டே இருக்கும் ஜெயா.. தற்போதெல்லாம் அதிர்ந்து கூட பேசுவதில்லை.. கைக்குள் வைத்து தாங்கினார் கர்பினி மகளை.
அனைவரும் திலகவதியை அரவணைக்க.. சூர்யா மட்டும் மனைவியை இதை செய்யாதே அதை செய்யாதே என்றெல்லாம் சொல்வது கிடையாது.. ஒரு டாக்டராக ஒவ்வாததை சாப்பிடாதே என்பதை மட்டும்தான் சொல்வான்..
ஐந்தாம் மாதத்திலிருந்து வாந்தி வருவது நின்றிருக்க.. அம்மாவிற்க்கு தெரியாமல் தினமும் இரண்டு மணிநேரம் துணிதைக்க அனுமதித்திருந்தான்.. திலகவதிக்கு பிடித்த எம்.ஜி.ஆர் பாடல்கள் கேட்பது.. தோட்ட பராமரிப்பு… வீட்டை சுத்தம் செய்வதென குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதையும் அனுமதித்திருந்தான். காலை மாலை என மனைவியோடு நடைபயிற்ச்சி செய்வான். அதுவும் இவ்வளவு நேரம் நடக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.. திலகவதிக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் மட்டும் நடப்பார்கள்.
திலகவதிக்கு எட்டு மாதம் முடிய இரண்டு நாள் இருக்க.. கமலம் ஆதவன் ஒருமாத விடுப்பில் அனைவரும் வந்திருந்தனர்.. ஒன்பதாம் மாதம் சிறப்பாக வளைகாப்பு நடத்தினர். தன் அப்பாம்மா ஸ்தானத்தில் இருக்கும் மூர்த்தியும் அன்னபூரணியும் இல்லாததுதான் சூர்யாவிற்க்கு பெரிய வருத்தமாக இருந்தது.
அறியா பருவத்திலிருந்தே சூர்யாவை மகனாய் பார்த்தவர்.. அதுவும் இராஜேந்திரன் இறந்த பிறகு முழுதாய் அரவணைத்தவர்.. திலகவதியோடு தன் திருமணத்திற்க்கு பிறகும் தம்மீதான மூர்த்தியின் பாசத்தில் இதுவரை ஒருகுறையும் காணவில்லை சூர்யா.. திலகவதியும் தன்னுள் முழுதாய் கலந்துவிட்டாள்.. எது நடப்பினும் சமாளிக்கலாம் என முடிவெடுத்து..
திலகா வளைகாப்பை சொல்லி மூர்த்தியையும் அன்னபூரணியையும் சூர்யா அழைக்க.. ‘என்னோட ஆசிர்வாதம் எப்பவும் திலகாக்கு இருக்கும்.. பிரசாத் போனதுக்கப்புறம் எங்களோடவே ஒருவருசம் திலகா இருந்திட்டா.. தப்பி தவறிகூட எங்க வருகை உங்க வாழ்க்கைய வீண் செய்திடக்கூடாது..” என்று மூர்த்தி வர மறுக்க..
வந்தே ஆகவேண்டும் என்று சூர்யா அடம்பிடிக்க.. சிரித்த மூர்த்தி.. ‘சின்ன வயசில கேக்குக்கு அடம்பிடிச்ச சூர்யா மாதிரியே இப்பவும் செய்வியா..?” என்று தன் வளர்ப்பு மகனை கட்டியணைத்தவர்.. ‘அப்பா உன் நல்லதுக்குத்தான் சொல்வேன்..” என்று சூர்யாவை தேற்றி அனுப்பிவைத்தார் மூர்த்தி.
வளைகாப்பு முடிந்து அடுத்து வந்த பத்தாவது நாளே பிரசவ வலி எடுக்க.. அவசரமாய் அழைத்து வந்தார்கள் மருத்துவமணைக்கு.. அங்கே இரண்டு நர்சுகள்.. ஒரு டாக்டர் என பிரசவம் பார்க்க தாயாராய் இருக்க..
விட்டு விட்டு வலியெடுத்து கொண்டிருக்க.. அத்தனை வலியோடும்.. ‘இத்தனை பேருக்கும் காட்டனுமா..? அந்த நர்சுங்களை வெளில போக சொல்லுங்க..” என்று கணவனிடம் முனுமுனுப்பாய் கடிய..
பிரசவ வலியிலும் மனைவி பேசும் பேச்சு சிரிப்பை கொடுக்க.. ‘சரி.. சரி.. அவங்களை இந்த பக்கம் நிக்க சொல்றேன்.. ரேவதி டாக்டர் மட்டும் பார்ப்பாங்க.. சரியா..?” என்று சமாதானம் செய்ய..
‘வெளில போக சொல்லுங்களே..” என்று மீண்டும் முகம் சுருக்கியவளுக்கு வலியின் தன்மை அதிகரிக்க.. ‘அம்மா…” என்று பெரிதாய் அலறியவள்.. ‘ரொம்ப வலிக்குது சூர்யா…” என்று கண்கலங்க..
மனைவியின் கண்ணீர் கணவனை அசைக்க.. தானாய் உடைப்பெடுத்தது சூர்யாவின் கண்கள்.. ‘கோஆப்ரேட் செய்தா ஒரு மணிநேரத்தில குழந்தை பிறந்திடும்..” என்று பரிசோதித்த டாக்டர் ஆங்கிலத்தில் சொல்ல..
மனைவியின் தலைப்பக்கம் நின்றவன்.. அவளின் இருகரங்களையும் ஆதரவாய் பற்றிக்கொள்ள.. செவிலிப்பெண்கள் குழந்தை அசைவிற்க்கு தோதாக திலகவதியின் வயிற்றை தடவிக்கொடுக்க.. வலியின் தன்மை உச்சத்தை அடைய.. ‘சூர்யா.. “ என்று பெரிதாய் அலர.. ‘என் கையை பிடிச்சிக்கோ.. கடிச்சிக்கோ..” என்று மனைவியை கண்ணீரோடு சமாளித்தவன்.. ‘டாக்டர் சொல்ற மாதிரி செய்டா..” என்று கெஞ்ச..
‘சார்.. நீங்க வெளில போங்க..” என்று ரேவதி கடுகடுக்க.. திலகவதி கணவன் கையை விட மறுக்க.. ‘நான் சொல்றமாதிரி பண்ணலன்னா குழந்தைக்கு மூச்சு முட்டும்..” என்று திலகவதியை டாக்டர் மிரட்ட.. குழந்தைக்கென்றதும் டாக்டர் சொன்னதைபோல் செய்ய.. மீண்டும் அரைமணிநேரம் தன் மனைவியை படுத்திய பிறகே பிறந்தான் சூர்யாபிரகாஷின் மகன்.
திலகவதியின் கத்தலில் சூர்யாவின் தொண்டைதான் வறண்டுபோனது. அரை மணிநேரத்திற்க்கு பிறகு குழந்தையை காண அனுமதிக்க.. கமலம் கீர்த்தி ஜெயா என அனைவரும் உள்ளே வர.. திலகவதி லேசாய் சிரிக்க.. சூர்யாவின் முகம் இன்னும் சோர்ந்தே இருக்க.. ஆசையோடு தன் தம்பி மகனை பார்த்து ரசித்த ஆதவன்..
‘அடேய் நல்லவனே.. குழந்தை பெத்த திலகவதியே சிரிக்குது.. உனக்கென்னடா..?” என்று கிண்டலடிக்க..
‘மாமா.. அவர் இன்னும் குழந்தையை பார்க்கவே இல்ல.. பிரசவ வலி இன்னும் போகல போல..” என்று திலகவதியும் கிண்டலடிக்க..
இருவரையும் முறைத்த சூர்யா.. ‘அம்மா.. உங்க பேரன் என் அப்பா போலவே இருக்கான்ல்ல..?” என்று சந்தோசிக்க.. ‘ஆமாம் சூர்யா.. “ என்று கணவனின் நினைவில் கண்கலங்கினார் கமலம். ஒருமணி நேரம் கழித்து திலகவதி உறக்கத்திற்க்கு சென்றிட..
மூர்த்திக்கு அழைத்தான் சூர்யா.. இரண்டு மணிநேரமாக வெளியில் காத்திருந்த மூர்த்தியும் அன்னபூரணியும் உள்ளே வந்தனர். ஆண் குழந்தையை கண்ட மூர்த்திக்கும் அன்னபூரணிக்கும் கண்கலங்க..
மூர்த்தியின் மனவோட்டம் அறிந்த சூர்யா.. ‘எங்கப்பா ரூபத்தில பிரசாத் பிறந்திருக்கான்ப்பா..” என்று கண்ணீர்விட..
‘ச்சு.. திலகாக்கு கேட்டிடப்போகுது..“ என்று அவசரமாய் சூர்யாவின் வாயை பொத்தியவர்.. தன் கண்களை துடைத்து.. ‘இராஜேந்திரனைப் போலவே இருக்கான் சூர்யா.. உன்பேரையும் என் நண்பன் பேரையும் சேர்த்துவச்சி பிரகாஷ்ராஜ் ன்னு பேர் வை..” என்று சந்தோசத்தோடு சொல்ல..
‘சரிப்பா..” என்றான் தன் கண்களை துடைத்தபடி. பத்து நிமிடம் மட்டுமே இருந்தவர்கள்.. ‘திலகா முழிக்கிறதுக்குள்ள நாங்க கிளம்பறோம் சூர்யா.. நாங்க வந்ததை திலகாகிட்ட யாரும் சொல்லக்கூடாது..” என்று கட்டளையாய் சொல்லி..
‘என் பேரன் உக்காருற ஸ்டேஜ் வந்ததும்.. அவனில்லாம என் வீட்டுப்பக்கம் நீ வரக்கூடாது புரியுதா..?” என்று சூர்யாவிற்க்கு அன்பு கட்டளையிட்டு சந்தோசமாய் கிளம்பினார் சூர்யாவின் மற்றொரு பெற்றோர்.