இப்பொழுது இரண்டு வருடம் முன்பாக தன் மகன்.. மகள் இருவரும் சொத்துப் பிரச்சனையில் பேசிக்கொள்ளாதிருப்பதை நினைத்து பெரும் வேதனையில் இருந்தார். இதற்கும் கோடிக்கணக்கான சொத்து சேர்த்து வைத்தும் அங்கே சொத்து பிரச்சனை பெரும் பூதாகரமாக மாறவும்.. அதில் மனம் நொந்தவர்.. இந்த இடம் தனதென்று தெரிய வந்தாலும் இங்கிருக்கும் மொத்த பேரையும் காலிசெய்யக் கூட தயங்கமாட்டார்கள் தம்மக்கள் என நினைத்து..
எவ்வளவோ பணம் சேர்த்தாகிவிட்டது.. இதாவது இல்லத்திற்க்கென்று கொடுத்திடலாமே என்று தான செட்டில்மென்ட் செய்துவைத்தார். இதற்கும் சூர்யா பிள்ளைகளின் விருப்பமின்றி வேண்டாமென அறவே மறுத்தான்.
வேதனையோடு தன் பிள்ளைகளின் குணங்களை சொல்லி.. எத்தனை இருந்தாலும் அவர்களுக்கு பத்தாது.. என் ஆத்ம திருப்திக்காக வாங்கிக்கொள் என்று வறுபுறுத்திய பிறகுதான் பெற்றுக்கொண்டான். அன்றிலிருந்து இன்று வரை மாதத்தில் பத்துநாளுக்கான தனது வருமானத்தை அங்கு பணிபுரியும் பெண்களுக்கு சம்பளமாக கொடுத்து வருகிறார் திருநாவுக்கரசு.
சூர்யாவும் அனைவரிடமும் இலவசம் காட்டமாட்டான்.. வசதியற்றவர்கள் என்றால் கட்டணமே வாங்கமால் சேவகம் செய்வன்… மிகவும் வசதி வாய்ந்தவர்களிடம் சரியாக வசூலித்திடுவான். அதில் வரும்தொகை இல்லத்தில் உள்ளவர்களுக்கு குறைந்தது ஒருமாத சாப்பாட்டு செலவுக்காகுமே என்று யோசிப்பான்..)
டாக்டரின் பேச்சிற்க்கு வரவழைத்த புன்னகை புரிந்த திலகவதியின் பார்வை சற்று தள்ளிநின்று தன்னைப் பார்த்து எதோ பேசிக்கொண்டிருக்கும் செவிலியர்களிடம் நிலைத்து நிற்க்க..
‘நேச்சுரல் பியூட்டி.. சோ ஸ்வீட் அன்ட் சிம்பிள்..” என்று அனைவரும் திலகவதி பெருமைபேச.. இரண்டு கல்யாணம் செய்ததால் தன்னை கிண்டல் செய்கிறார்களோ என நினைத்தவளாய் தவிப்போடு தன் துப்பட்டாவை பிசைந்து கொண்டிருக்க..
திலகவதியின் மனம் உணர்ந்த டாக்டர்.. ‘அவங்கள்லாம் நீ ரொம்ப அழகாயிருக்கேன்னு சொல்றாங்க..” என்றார் சிரிப்போடு.
திலகவதி தலைகுனிந்துகொள்ள.. இவர்களை நோக்கி இல்ல நிர்வாகியோடு வந்தவன்.. ‘இந்த திலகவதியோட புருசன்தான் நான்..” என்று சிரிப்போடு தன் மனைவியை அறிமுகப்படுத்த..
‘ஹோம்ல இருக்கிறவங்க வரலையா சூர்யா..?” என டாக்டர் கேட்க..
‘ஒரு சில பெரியவங்களுக்கு உடம்பு சரியில்லையாம்.. குழந்தைகளும் கொஞ்சம்பேருக்கு காய்ச்சலாம் சார்.. கொஞ்சம்பேரை விட்டுட்டு எப்படி வரதுன்னு மத்தவங்களையும் கூட்டிட்டு வரலையாம்.. இங்க ஆர்டர் செய்திருக்கிற இதே டிஸ்.. அங்கிருக்கவங்களுக்கும் ஆர்டர் செய்திருக்கோம்..” என்று விளக்கமளித்தவன்..
‘என்ன ப்ராப்ளம்னா..? அவங்கதான் திலகாவை பார்க்க ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.. அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.. ‡ப்ரீடைம் கிடைக்கும்போது நானும் திலகாவும் ஹோம்க்கு போய் பார்த்துக்கிறோம்..” என்றான் ஆங்கிலத்தில்.
இங்கே அதற்க்குள் இல்ல நிர்வாகி திலகாவிடம் சூர்யாவின் பெருமையைப் பேச.. ஓரிரு வார்த்தைகளிலேயே அவர்களுக்கு தடைபோட்டவன்.. ‘சாப்பிடலாம் வாங்க..” என்று அனைவருக்கும் உணவு வழங்கும் பணியினை துவங்க..
சாப்பிட்டதும் டாக்டர்கள் விடைபெற்றிருக்க.. பெரிய டாக்டர்கள் போனதும் செவிலியர்கள் கொண்டாட்டமாய் திலகவதியிடம் வரவே.. சூர்யாவும் ஆதவனும் இல்ல நிர்வாகிகளை வழியனுப்பிக்கொண்டிருக்க.. கீர்த்தி சோனாவையும் தியாவையும் சாப்பிட வைத்துக்கொண்டிருக்க.. சாப்பிடும் பேத்திகளுக்கு கமலம் கதை சொல்லிக்கொண்டிருக்க.. திலகவதி தனித்திருக்கவும் தைரியம் வரப்பெற்றவர்களாய்..
‘என்னங்க மேம்..? கண்ணெல்லாம் சிவந்திருக்கு..? நைட் தூங்க லேட்டாகிடுச்சோ.?” என செவிலியர்கள் திலகாவிடம் விசமமாய் கண்சிமிட்டி கேட்க..
முன்பிருந்த திலகவதி ஏதும் அறியாப்பெண்.. ஆனால் தற்போது இவர்களின் கிண்டல் பேச்சினை தாங்கமுடியாமல் தடுமாறி தலைகுனிந்தாள்.
திலகவதியின் முகமாற்றமறிந்த சூர்யா இவர்களை நோக்கி வர.. ’மேம்.. சார் வரார்.. நாங்க சும்மா கிண்டல்தான் செய்தோம்.. சார்க்கு இப்படிப் பேச்செல்லாம் பிடிக்காது.. எங்களை போட்டுக் கொடுத்திடாதிங்க..” என்று செவிலியர்கள் கெஞ்ச..
சூர்யா அருகில் வந்ததும்.. ‘சார் நாங்க கிளம்பறோம்..” என்றவர்கள் திலகவதியிடம் கெஞ்சல் பார்வை விடுக்க.. திலகவதி சம்மதமாய் தலையசைக்க.. பிறகு நிம்மதியோடு விடைபெற்றனர்.
செவிலியர்களில் சிலருக்கு வாய் துடுக்கு அதிகம் என்றறிந்தவனாய்.. ‘அவங்க என்ன சொன்னாங்க..?” என்றான்.
‘தப்பா ஒன்னும் சொல்லல..” என்றாள் அவசரமாக.
‘அப்போ எதுக்கு உன் முகம் மாறுச்சி..?” என்றான் சந்தேகமாக.
‘எனக்கு தண்ணி குடிக்கனும்..” என்று நழுவப்பார்க்க..
அவளின் கைப்பிடித்து நிறுத்தியவன்.. ‘இப்போ நீ சொல்லலை.. அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்..” என்றான் கோபமாக.
திலகவதியின் கண்களில் முனுக்கென கண்ணீர் எட்டிப்பார்க்க.. இவர்களிடம் வந்த ஆதவன்.. ‘என்ன சூர்யா இது..? எப்பப்பாரு திலகாவை மிரட்டிட்டே இருக்க..?” என கடிந்து.. ‘அம்மா பார்க்குறாங்கடா.. முதல்ல திலகா கையை விடு..” என்று கோபமாய் முனுமுனுக்க..
திலகாவின் கையை விட்டவன்.. ‘எனக்கு சாப்பாடு எடுத்திட்டு ரூமுக்கு வா..” என்று அவ்விடம் விட்டு நகர.. சூர்யாவின் கோபமறிந்தவன்..
‘இன்னைக்கு உன்னோட டே.. எல்லாருமா ஒன்னா உக்கார்ந்து சாப்பிடலாம் வா..” என்று சூர்யாவை கட்டாயப்படுத்தி சாப்பிட அமரவைத்தான் ஆதவன்.
முத்துவும் அவரின் மனைவியும் அனைவருக்கும் பரிமாற.. ‘நீங்க சாப்ட்டிங்களா முத்து..?” என்று ஆதவன் கேட்க..
‘வந்திருக்கவங்க கிளம்ப நேரமாகும்.. அவங்க கிளம்பினதுக்கப்புறம் எங்களுக்கு பரிமாறனும்.. நீங்களும் இவங்களோடவே உக்கார்ந்து சாப்டுருங்கன்னு சூர்யா தம்பி சொன்னதால எல்லாரும் வரதுக்கும் முன்ன நாங்க சாப்டுட்டோம்.. நீங்க சாப்டுங்க தம்பி..” என்றார் சூர்யாவை பெருமையாக பார்த்தபடி.
சாப்பிட உக்கார்ந்ததும் தியா திலகவதியிடம் தாவி செல்ல.. ‘நீங்க சாப்பிடுங்கக்கா.. நான் பாப்பாவை பார்த்துக்கிறேன்..” என்று தியாவோடு தனியே வந்தாள்.
கமலம் சாப்பிட்டு உறங்கச்சென்றிட.. திலகவதி பசியோடிருப்பாள் என்று வேகமாய் சாப்பிட்ட கீர்த்தி… ‘பாப்பாவை தூங்க வைக்கப்போறேன்.. சூர்யா திட்டினாருன்னு நீ சாப்பிடாம தூங்க போய்டாத.. முதல்ல சாப்பிடு..” என்று தியாவை தோள்மேல் போட்டவள்.. சோனாவையும் அழைத்துச் சென்றாள் தனதறைக்கு.
திலகவதி சாப்பிட அமர.. முத்து பரிமாற வரவும்.. ‘ரொம்ப நேரமா எல்லாருக்கும் நின்னு பரிமாறிட்டிருந்திங்க.. உங்களுக்கு அலுப்பா இருக்கும்.. நான் போட்டுக்கிறேன் ண்ணா..” என்று தானே போட்டு சாப்பிடவும்..
அண்ணிகிட்டயும் முத்துகிட்டயுமாவது வாயை திறந்து பேசுறாளே என நினைத்தவன்.. ‘நீங்க கிளம்பறதுனா கிளம்புங்க முத்து..” என்றான் இயல்பாக.
‘எல்லாரையும் நல்லா கவனிச்சிட்டு.. திலகாட்ட மட்டும் ஏண்டா முறைச்சிட்டே இருக்க..? கல்யாணம் ஆகி இப்போதான் நாலுநாள் ஆகுது.. அதுவும் திலகாக்கு பிடிக்காத கல்யாணம்.. எதுன்னாலும் கொஞ்சம் பொறுமையா சொன்னா ஆகாதா.?” என்று ஆதவன் முறைக்க..
‘ப்ச்.. முறைப்போட சொன்னாத்தான் அவ காதுல விழுது.. இல்லன்னா தேமேன்னு இருக்கா..” என்று சலித்தவன்..
‘இப்போகூட அந்த நர்ஸ்சுங்க இவகிட்ட எதுவோ சொல்லியிருக்காங்க.. அவங்க பேசும்போது இவ முகம் ரொம்ப வாடிடுச்சி.. யார் என்ன சொல்வாங்களோன்னு ஏற்கனவே பயந்திட்டிருக்காளேன்னு.. அவங்க என்ன சொன்னாங்கன்னு மிரட்டாம இயல்பாத்தான் கேட்டேன்.. ஒன்னும் சொல்லலைங்கிறா.. அதுக்குத்தான் மிரட்டிக்கேட்டேன்..” என்றான் வருத்தமாக.
‘சரி.. சரி.. எதுன்னாலும் கொஞ்சநாள் பொறுமையா இரு.. ரூம்க்கு போனதும் திரும்பவும் இதைப்பத்தியே பேசி சண்டையை வளர்க்காத.. நர்சுங்க என்ன சொன்னாங்கன்னு கீர்த்தியை கேட்க சொல்றேன்..” என்றான்.
‘சரி..” என்றான் சம்மதமாய்.
‘எனக்கும் டையர்டா இருக்கு சூர்யா.. குட்நைட்..” என்று தனதறைக்கு ஆதவன் போய்விட.. மெயின்டோரைப் பூட்டியவன்..
‘இது கொஞ்சம் சாப்பிடு.. ரொம்ப நல்லாயிருந்தது..” என்று பன்னீரை எடுக்க..
‘இல்ல வேணாம்.. எனக்கு அது பிடிக்காது..” என்று திலகவதி மறுக்க..
‘சாப்பிடாமையே எப்படி பிடிக்காதுன்னு சொல்ற..?” என்று தன்மையாக கேட்க..
‘வீட்டுவேலை செய்யிறவங்க வீட்லயிருந்து எங்கம்மா கொண்டுவந்து கொடுத்திருக்காங்க.. அந்த வாடை எனக்கு பிடிக்காது..” என்று சொல்லும்போதே அவளின் முகம் அஸ்டகோணலாய் மாற..
‘சரி.. சரி.. இது பிடிக்கலன்னா வேணாம்.. வேற என்ன வேணும்..?” என்றான் ஆசையாக.
‘எல்லாத்திலயும் நெய் போட்ருக்காங்க.. எனக்கு நெய்வாடை பிடிக்காது. இட்லி சாப்ட்டேன் அது நல்லா இருந்தது.. நாலு சாப்ட்டேன்..” என்றாள்.
‘சரி..” என்றவன் அங்கேயே நின்றிருக்க..
‘நீங்க போய் தூங்குங்க.. நான் இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வரேன்..” என்றாள் அக்கறையாக.
‘என்னடா இது..? ரொம்ப அக்கறையா பேசுறா..” என்று சற்று சத்தமாகவே முனுமுனுத்து திலகவதியையே ஆழ்ந்த பார்க்க.. பாத்திரத்தை எடுத்து வைத்திருந்தவளின் முகத்தில் அத்தனை பயம் இருந்தது.
இன்னைக்குத்தான் இரண்டு வார்த்தை நல்லா பேசுனா.. நானும் ஒன்னுமே சொல்லலையே.. அப்போ எதுக்கு பயப்படுறா..? என யோசிக்க.. ஓ.. அந்த நர்ஸ் பொண்ணுங்க சொன்னதுதான் எதோ இவளை பாதிச்சிருக்கும்போல.. என நினைத்தவன்.. மிரட்டாம தன்மையா கேட்டு பார்க்கலாம் என முடிவெடுத்து..
‘இந்த வேலையெல்லாம் முத்துவோட வொ‡ப் நாளைக்கு வந்து பார்த்துப்பாங்க.. நீ வா தூங்கலாம்..” என அழைக்க.. திலகவதி தடுமாறி நிற்க்க..
‘ப்ச்.. வா..” என கைப்பிடித்து அழைத்துப்போனான். ரூமிற்க்குள் சென்றதும் அவனிடமிருந்து கையை உருவியவள்.. நின்ற இடத்திலேயே அமர்ந்து தன்முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்க..
‘ஏய்.. திலகா.. என்ன ஆச்சு..? எதுக்கு அழற..? ப்ச்.. முதல்ல எழுந்திரி..” என்று அவளைப்பிடித்து தூக்க.. அவள் சூடியிருந்த மல்லிகை அவன் இழுத்த வேகத்திற்க்கு பின்னிருந்து அவளின் நெஞ்சினில் படர.. அம்மல்லிகையின் மீது திலகவதியின் கண்ணீர் விழ.. அவசரமாக பின்னே எடுத்து போட்டவள்.. ‘அப்படி செய்திடாதிங்க..” என்று சத்தமாய் அழ..
‘நீ என்ன சொல்ல வரன்னே எனக்கு புரியல.. முதல்ல அழுகையை நிறுத்து..” என்றான் கோபமாக.
வெகுவாய் போராடி தன் அழுகையை அடக்கியவள்.. வேண்டாம் என்பதுபோல் பாவமாய் அவனின் முகத்தை பார்க்க.. ‘எதுக்கு அழற..?” என்றான்.
‘எல்லார் முன்னாடியும் அழக்கூடாதுன்னு நீங்க சொன்னதுக்கப்புறம் நான் அழாமத்தான் இருந்தேன்.. அந்த பொண்ணுங்க என்ன சொன்னாங்கன்னு நீங்க கேக்கவும்தான் எனக்கு அழவந்திடுச்சி..” என்று அழுகையோடே சொல்ல..
‘சரி.. ஆதவன் சொன்னதுக்கப்புறம் நான்தான் அதுப்பத்தி பேசலயே.. இப்போ எதுக்கு அழற..?” என்றான் பொறுமையாக.
திலகவதி தடுமாற.. சூர்யா கோபமாய் அருகே நெருங்க.. ‘மத்தவங்க முன்னாடி இனி அழமாட்டேன்.. வேணாம் கொடுத்திடாதிங்க..” என்று மன்றாட..
எதைக் கொடுக்க வேணாம்னு சொல்றா..? என யோசிக்க.. சூர்யாவின் நெருக்கத்தில் பயந்தவள்.. தன் கைகளை மார்புக்கு குறுக்கே வைக்க.. பிறகுதான் நினைவு வந்தவனாய்.. தன் முகத்தை மென்மையாக்கி லேசாய் சிரித்தான்.
‘கையை எடு..” என்றான் சிரிப்போடே.. திலகவதி பாவமாய் மாட்டேன் என்பதுபோல் தலையசைக்க..
‘அந்த பொண்ணுங்க உன்கிட்ட என்ன சொன்னாங்கன்னு உண்மையை சொல்லு.. அப்போதான் உன் உடம்புல பூ பட்ட இடத்தில நான் முத்தம் கொடுக்கமாட்டேன்.. இல்ல..” என்று சிரிப்போடே மல்லிகையை முன்னே எடுத்துவிட..
சூர்யாவின் மிரட்டலில் முயன்று தன்னை திடப்படுத்தி.. ‘அவங்க எதுவும் தப்பா சொல்லல.. நீங்க அழகாயிருக்கிங்கன்னாங்க..” என்றாள்.
பொய் சொல்கிறாள் எனப்புரிந்தவன்.. ‘சரி.. நான் அவங்ககிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.. உன்னை எதாவது அவங்க தப்பா சொல்லியிருக்கட்டும்… அப்புறம் இருக்கு அவங்களுக்கும்.. உனக்கும்..” என பொய்யாய் மிரட்ட..
‘வேணாம் அவங்களை எதுவும் கேட்காதிங்க..” என மன்றாட..
‘அப்போ உண்மையை சொல்லு..” என்றான் கொஞ்சம் கோபமாக.
‘க.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. நைட் தூ.. தூங்க லேட்டாய்டுச்சா..ன்னு.. கேட்டாங்க..” என்று திக்கித்திணறி தலைகுனிய..
அவளறியாத ரகசிய சிரிப்பு சிரித்தவன்.. ‘இதுக்கா இப்படி தடுமாறின..? நான் என்னவோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன்..” என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டு..
‘இனி நைட்ல அழறதை நிறுத்திட்டு சீக்கிரம் தூங்கிடு..” என்றான் அவர்களின் கிண்டல் புரியாதவன்போல்..
இவளின் முகம் பதட்டத்தையே காண்பிக்க.. ‘சாதாரண பேச்சுக்கெல்லாம் எதுக்கு இப்படி பயப்படுற..? யார் என்ன சொன்னாலும் நீ எதுக்கும் கவலைப்படாத.. நீ ஒரு தப்பும் செய்யல.. புரியுதா..?” என்று தன்மையாய் சொல்ல..
விட்டால் போதுமென ‘ம்ம் “ என்று தலையசைக்க.. ‘தூங்கு..” என்றான்.
தனக்கும் சோர்வாய் இருக்கவே.. இன்று புத்தகத்தைக்கூட புரட்டாமல் தானும் படுத்தவன் கட்டிலின் ஓரத்தில் முதுகுகாட்டி படுத்திருந்தவளிடம்..
‘கட்டில் நுனியில படுத்து தூக்கத்தில கீழ விழுந்திடப்போற.. நமக்கு நடுவில எவ்ளோ இடைவெளியிருக்கு.. கொஞ்சம் இந்தப் பக்கம் தள்ளி வசதியாப் படு திலகா.. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்..” என்றான் தன்மையாக.
திலகவதியிடம் ஒரு அசைவுமில்லை.. தூங்கிவிட்டவள் போல் பாவனை செய்த மனைவியை உணர்ந்தவனாய்.. ‘துப்பட்டாவைக்கூட கழட்டாம எப்படித்தான் இப்படியே படுத்துக்கிறாளோ..” என அவளுக்கு கேட்கும்படியே சிடுசிடுத்து கண்மூடினான்.