அத்தியாயம் — 12
அடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு.. ஆதவன் கிளம்பிக்கொண்டிருந்தான்.
‘அக்கா.. இப்ப ஊருக்கு போனா எப்ப வருவிங்க..?” என்று திலகவதி தவித்தாள். காரணம் திருமணம் முடிந்ததிலிருந்து.. இப்பொழுது இரண்டு நாளாகத்தான் கீர்த்தியிடம் மட்டும் கொஞ்சம் பேச ஆரம்பித்தாள்.
பகலில் சாப்பிட மட்டுமே வெளியே வருவது.. அப்பொழுதும் குழந்தைகளை மட்டுமே பார்த்திருப்பாள். இனி இவர்களும் சென்றுவிட்டால் தாம் எப்படி இங்கே இருப்பது என்ற பெரும் கவலை மனதில் எழுந்தது.
‘குறைஞ்சது ஆறுமாசமாவது ஆகும் திலகா..” என்றாள் கீர்த்தி.
திலகாவின் முகம் வாடிவிடவும்.. ‘நீ கவலைப்படாத திலகா.. மாமா உனக்கு டெய்லரிங் கத்துகொடுக்க ஒரு டீச்சரை ஏற்பாடு பண்ணியிருக்காரு.. நாளைலயிருந்து அவங்க வீட்டுக்கு வருவாங்க.. மிசின்கூட புக் பண்ணிட்டோம்.. இன்னைக்கு வீட்டுக்கு வந்திடும்.. நீ டெய்லரிங் கத்துக்கிறதில உன் கவனத்தை செலுத்து.. அப்புறம் அத்தையை நல்லா பார்த்துக்கோ.. சூர்யா ரொம்ப நல்லவர்.. அவரை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்ச்சிசெய்.. நீயும் சந்தோசமா இரு..” என்று ஆறுதலளித்தாள் கீர்த்தி.
தியாவையும்.. சோனாவையும்.. மாறிமாறிப் பார்த்திருந்தாள் திலகவதி. சோனா திலகவதியின் கன்னத்தில் முத்தமிட்டு பாய் சித்தி என்கவும்.. திலகவதியும் இருகுழந்தைகளுக்கும் கன்னத்தில் முத்தமிட்டாள். அதை பார்த்துக்கொண்டிருந்த சூர்யா..
‘இப்படி பட்டும் படாமலும் முத்தம் கொடுக்கிறதுக்கு.. நீ கொடுக்காமலே இருக்கலாம்…” என்றான்.
’முத்தம்னா இப்படி கொடுக்கனும்…‚” என்று தியாவின் கன்னத்தில் சற்று அழுத்தமாய் முத்தமிட்டு காண்பிக்கவும்.. ‘சோனு..” என்று சோனாவின் பக்கம் திரும்பிக்கொண்டாள். அவள் பக்கத்தில் வந்தவன்..
‘எதாவது சொல்லிகொடுத்தா.. ஒழுங்கா கவனிச்சாதான சரியா கத்துக்கமுடியும்…? ம்ம்..?” என்று சிரிப்போடு சொல்ல.. திலகா தடுமாறி நிற்க..
திலகவதியிடம்.. ‘சூர்யாகிட்ட கொஞ்சம் அன்பு காட்டினா போதும்.. பத்து மடங்கா உனக்கு திருப்பித் தருவார்.. சூர்;யாவைப் பார்த்து பயப்படற அளவுக்கு அவர் கெத்து கிடையாது.. டம்மி பீஸ்..” என்று சூர்யாவைப் பார்த்தவாறு சிரிப்போடு சொன்னவள்..
‘சூர்யாகிட்ட தைரியமா இரு.. அத்தைகிட்ட அன்பா இரு..” என்று திலகவதிக்கு தைரியம் சொல்ல.. இவள் பொம்மைபோல் தலையாட்ட.. கமலத்திடமும் சூர்யாவிடமும் விடைபெற்று கிளம்பினர் ஆதவன் குடும்பத்தினர்.
அடுத்தநாள் சீக்கிரம் எழுந்தவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.. எப்பொழுதும் இவள் எழுந்து குளித்து வெளிவரும்போது சோனா ஹாலில் டி.வி பார்த்துக்கொண்டே மேலும் கீழும் சிந்தியவாறு சாப்பிட்டுக்கொண்டிருப்பாள்.. அவளிடமிருந்து வாங்கி தானே ஊட்ட ஆரம்பிப்பாள்..
இப்போ வெளில போனா சோனாவும் இருக்கமாட்டா.. அவங்கதான் இருப்பாங்க.. அவங்ககிட்ட என்ன பேசுறது..? அன்னைக்கு பூ வைக்காததுக்கே அப்படி திட்டுனாங்க.. என நினைத்தபடி சூர்யாவைப் பார்க்க.. இன்னைக்கு என்ன இத்தனை நேரம் தூங்கிட்டிருக்கான் என நினைக்க..
‘எதுக்கு இப்படி உக்கார்ந்திருக்க..?” என்றான்.
ஆங்.. முழிச்சிட்டானா என திரும்பிப் பார்க்க.. தெளிவாய் விழித்திருந்தவன்..
‘வள்ளி வந்திருப்பாங்க… போய் டீ வாங்கி குடி..” என்று குளிக்க சென்றான்.
இத்தனை நாட்களாக இவள் எழும்முன் சூர்யா கிளம்பியிருப்பான். எப்பொழுதும் காலையில் சற்று ஆசுவாசமாய் உணர்வாள். இன்று கணவன் இருக்கவும்.. ஏதோ இறுக்கிப்பிடித்தார் போன்று உணர்வு.. வேறு வழியின்றி வெளியே வந்தாள்.
அங்கே முத்துவின் மனைவி கமலம் அறைக்குள் செல்லவே.. அதைப்பார்த்தவள் இவங்க எதுக்கு இந்நேரத்துக்கு வந்திருக்காங்க..? அந்தண்ணாதான சமைப்பாங்க.. எப்பவும் பத்துமணிக்கு மேலதான வந்து வீட்டுவேலைப்பார்ப்பாங்க.. என்ற யோசனையோடே வெளியிலேயே நின்றிருந்தாள்.
பூ வைக்க மிரட்டியதிலிருந்து கமலம் மீது திலகவதிக்கு பயம் வந்திருக்க.. அமைதியாய் நின்றிருந்தாள். அரைமணிநேரத்திற்க்குப் பிறகு வெளியே வந்த வள்ளி..
‘அம்மாக்கு டீ போடப்போறேன்.. உனக்கும் வேணுமா..? டீ குடுத்திட்டு கிளம்பினேன்னா.. திரும்ப பத்து மணிக்குத்தான் வருவேன்.. அவரும் ஏழுமணிக்குதான் சமைக்க வருவார்..” என்று சொல்ல..
‘நானே டீ வச்சிக்கிறேன்க்கா..” என்று சொல்ல..
‘அம்மாக்கு கிரீன் டீதான் கொடுக்கனும்..” என்று சொல்ல.. பால் டீ தெரியும்.. கறுப்பட்டி ல வைக்கிற சுக்கு டீ தெரியும்.. அதென்ன கிரீன் டீ..? என நினைத்தவள்..
‘இன்னைக்கு நீங்க வைங்க.. நான் பார்க்கிறேன்..” என்று வள்ளி பின்னோடே கிச்சனுக்குள் போனாள். வெந்நீர் வைத்து அதை ஒரு டம்ளரில் ஊற்றி.. அதனுள் ஒரு பாக்கட்டை போட்ட வள்ளி.. பின்னர் ஒரு அடுப்பில் பாலை வைத்து மறு அடுப்பில் டிகாசனை வைத்து.. அடுப்பின் தணலை குறைத்து.. இந்த கீரீன் டீ பாக்கட்டை டம்ளரிலிருந்து எடுத்தவள்.. டீயோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து..
‘இரு கண்ணு.. இதை அம்மாகிட்ட கொடுத்திட்டு வந்து உனக்கு டீ போட்டு தரேன்..” என்று கமலம் அறைக்குள் செல்ல.. இதென்ன என்னென்னவோ பண்றாங்க..? என நினைத்தவாறு கிச்சனை நோட்டமிட..
தன்போல் பிரசாத் வீட்டின் கிச்சன் நினைவு வரவும்.. பாவம் அம்மா.. எத்தனை வேலைகளை ஒருத்தரே செய்வாங்க..? நான் இல்லாம அவங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கும்.. என்று அன்னபூரணியை நினைத்தவளுக்கு..
பிரசாத் இறந்தபிறகும் கூட ஒரு வருடமாக தன்னை மகள்போல் பார்த்துக்கொண்டது நினைவு வரவும் கண்கள் தானாய் கொட்டியது கண்ணீரை.
வள்ளி வந்து டீ போட்டது கூட கவனத்தில் இல்லாமல் நின்றிருந்தவள்..
கமலம் வீல் சேரை தள்ளிக்கொண்டு வெளியே வரவும்.. சூர்யா குளித்து வெளியே வரவும்.. ‘மகளைப் போல பார்த்துக்கிட்டிங்களேப்பா.. அப்புறம் ஏன்ப்பா என்னை வீட்டை விட்டு போன்னு சொன்னிங்க..?” என்று சத்தமாகவே சொல்லி மூர்த்தியை நினைத்து அழவும்..
திலகவதியின் நிலையைப் புரிந்த வள்ளி.. ‘இந்தா கண்ணு டீ குடி..” என்று திலகவதியின் கவனத்தை கலைக்க.. பிறகுதான் மலங்க விழித்துப்பார்த்தாள் வள்ளியை.
பிரசாத் வீட்டின் மீதான திலகவதியின் நினைவு கமலத்திற்கும் பெருத்த சங்கடமாகிப்போனாலும்.. தன் மகனும் அருகிலிருப்பதால் தான் எதாவது பேசி கணவன் மனைவிக்குள் சண்டையாகக் கூடாதென எண்ணி.. வெளியே பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச போவதுபோல் தன் நாற்காலியை நகர்த்தினார்.
கமலம் வெளியே சென்றதும்.. வள்ளி தன் கண்களால் சூர்யாவை காண்பிக்க.. பிறகுதான் கோபத்தில் முகம்சிவக்க நின்றிருந்த சூர்யாவைப் பார்த்து வெகுவாய் பயந்துபோனாள்.
சூர்யா வள்ளியைப் பார்க்க.. டீ யை அடுப்புத்திண்டில் வைத்து வள்ளி வெளியேற.. ‘அப்பா நியாபகம் வந்திடுச்சி.. அதான்..” என திணறியவள்.. ‘இனி அழமாட்டேன்..” என்று கெஞ்சியபடியே மீண்டும் கண்ணீர்விட..
நல்லவேளை பிரசாத் நியாபகம் வரல என ஆசுவாசமானாலும்… கொஞ்ச நேரம் தனியா இருந்தா.. உடனே உனக்கு பிரசாத் வீட்டு நியாபகம் வருதா..? முதல்ல அதுக்கு ‡புல்ஸ்டாப் வைக்கிறேன் என நினைத்து.. ‘எனக்கு காபி போடு..” என்றான்.
அழுததுக்கு திட்டுவான்னு பார்த்தா.. அதிசயமா விட்டுட்டான்.. ஒருவேளை ரூமுக்கு போய் திட்டுவானோ என அதிர்ந்து நிற்க்க.. ‘கா‡பி போடுன்னு சொன்னேன்..” என்றான் கொஞ்சம் சத்தமாக.
‘இங்க.. என்னென்னவோ போட்டு அந்தக்கா அவங்களுக்கு டீ போட்டாங்க.. காபி எப்படி போடறது..?” என்றாள் பயத்தோடே.
என் அம்மா உனக்கு அவங்களா..? என கோபமாக நினைத்தவன்..
‘எவங்களுக்கு..?” என்றான் அழுத்தத்தோடு.
‘உங்க அம்மாக்கு..” என்றாள் சன்னக்குரலில்.
‘நான் உனக்கு யாரு..?” என்று கேட்டவாறே கிச்சனுக்குள் நுழைய..
புருசன்னு சொல்லலைன்னா அன்னைக்கு மாதிரியே எதாவது செய்திடுவான்.. என நினைத்தவள்.. ‘பு.. புருசன்…” என்றாள் காற்றோடு கரைந்த குரலில்.
பரவால்லையே.. இரண்டாவது புருசன்னு சொல்லலை.. என மனதில் மெச்சியவன்.. ‘அப்போ எங்கம்மா உனக்கு என்ன வேணும்..?” என்றான் அவளிடம் நெருங்கி நின்றபடி.
‘கீர்த்தி அக்கா.. அத்தைன்னு சொல்ல சொன்னாங்க.. இனி அப்படியே சொல்றேன்..” என்று பதட்டப்பட..
ஓ.. அண்ணி சொல்லவும்தான் என் அம்மாவை அத்தைன்னு சொல்ல நியாபகம் வருதா..? இனி உனக்கா தோண வைக்கிறேன் என நினைத்தவன்..
‘எனக்கு கா‡பி போடு..” என்றான் மீண்டும்.
பாலை பத்தவைத்து.. காபித்தூளுக்காக ஒவ்வொரு கபோர்டாக தேட.. ஒவ்வொன்றிலும் வௌ;வேறு இருக்க.. அதற்க்குள் முத்து வந்திருந்தார்.
‘முத்து.. இவளுக்கு கா‡பித்தூள் எங்கயிருக்குன்னு காட்டுங்க..” என்றவன்..
‘சீக்கிரம் கா‡பி எடுத்திட்டு ரூம்க்கு வா..” என்று தனதறைக்கு போனான்.
சற்றுநேரத்தில் திலகவதி கா‡பியோடு உள்ளே வர.. அவளையே பார்த்திருந்தான். ‘இந்தாங்க..” என்று நீட்டினாள்.
‘சூர்யா.. கா‡பி குடின்னு சொன்னாதான் நான் குடிப்பேன்..” என்றான்.
இவள் கண்களை அகலவிரிக்க.. ‘கா‡பி சூடு ஆறதுக்குள்ள சொல்லனும்.. இல்ல.. வேற எதாவது செய்வேன்..” என்றான் பிடிவாதக்குரலில்.
இவளுக்கு கண்கலங்க.. ஐந்து நிமிடம் வரை பொறுமையாய் இருந்தவன்.. பின்னர் எழுந்து அவளிடமிருந்த கா‡பியை வாங்கி டேபிளில் வைத்து நெருங்கி நிற்க்கவும்..
‘குடிங்க..” என்றாள் கெஞ்சலாக.
‘ம்கூம்..” என்றான் மீண்டும் பிடிவாதமாக.
அவள் அமைதியையே கையிலெடுக்க.. ‘சூர்யா கா‡பி குடின்னு ஒருமுறை மட்டும் சொல்லு.. உன்னை விட்டுடறேன்.. இல்ல.. குளி சூர்யா.. டிபன் சாப்பிடு சூர்யா.. ஹாஸ்பிட்டல்க்கு போய்ட்டு வா சூர்யான்னு.. இன்னும் நிறைய சொல்லவேண்டி வரும்.. இங்கன்னா இது ஒன்னோட போய்டும்..” என்று மிதமான குரலில் மிரட்ட.. திலகவதி இயலாத பார்வை பார்க்க..
‘சாப்பிடும்போது.. எங்கம்மா முன்னாடியே சாப்பிடு சூர்யான்னு சொல்ல சொல்வேன்..” என்றான் அவளின் தாடையை செல்லமாய் ஆட்டியபடி.
‘பேர் சொல்றது தப்புதான..?” என்றாள் பாவமாக.
‘என்னைப் பொருத்தவரை நான் சொல்றதை செய்யலன்னா.. அதுதான் பெரிய தப்பு.. “ என்றான் தன்மையாகவே.
தலைகுனிந்தவள்.. இரண்டு நிமிடம் கழித்து.. ‘காபி குடிங்க.. சூ.. சூர்யா..” என்றாள் வெளிவராதக் குரலில்.
‘ம்ம்..?” என்று காதுகேளாதவன் போல் சைகை செய்தவன்.. ‘என் பேரு சூ.. சூர்யா இல்ல.. சூர்யபிரகாஷ்.. கா‡பியை எடு..” என்றான் சிரிப்போடு.
எடுத்தவள்.. ‘ஆறிடுச்சி.. வேற எடுத்திட்டு..” என்று பாதியில் நிறுத்த..
‘நம்ம வீட்ல ‡பர்ஸ்ட் டைமா கா‡பி போட்ருக்க.. இதையே கொடு..” என்று கை நீட்ட..
அவள் கொடுக்க வாங்கி குடித்தவன்.. ‘நீ குடிச்சிட்டியா..?” என்றான்.
இல்லையென்பதாய் தலையசைக்க.. ‘சரி.. இந்தா..” என்று தான் குடித்திருந்ததை நீட்ட.. இவள் இரண்டடி பின்னே நகர..
முத்து வெளியிலிருந்து ‘பாப்பா.. “ என்றழைக்க..
‘டீ கொடுக்கத்தான் கூப்பிடுவார்.. போய் வாங்கிட்டு வா..” என்றான்.
‘நான் வெளிலயே குடிச்சிக்கிறேன்..” என்று சொன்னபடியே நகர..
இவளுக்கு முன் சென்று டீயை வாங்கியவன்.. கதவை சாத்தி.. ‘எனக்கு மட்டும் ஆறின கா‡பி.. உனக்கு மட்டும் சூடா டீ யா..?” என்றவன்..
கா‡பி கப்பை நீட்டி.. ‘இந்த பாதியை குடி.. சூடா டீ தரேன்..” என்றான்.
‘எனக்கு எதுவும் வேணாம்..” என்றாள் மன்றாடலாய்.
‘உனக்கு வேணுமா வேணாமான்னு நான் கேட்கலயே.. நான் சொன்னமாதிரி நீ உடனே சொல்லியிருந்;தினா.. நானும் சூடா கா‡பி குடிச்சிருப்பேன்.. அப்போ நீயும் சூடா டீ குடிச்சிருக்கலாம்.. லேட்டா சொல்லி நீதான என் கா‡பியை ஆறவச்ச..? அப்போ உன்மேலதான தப்பிருக்கு..?” என்று கேட்க..
திலகவதி கண்கலங்க ஆரம்பிக்க.. ‘சீக்கிரம் இதை குடிச்சிட்டு டீ குடி.. டீயும் ஆறிடுச்சினா.. அப்புறம் அதுக்கு எதாவது செய்யிற மாதிரி ஆகிடும்..” என்று சொல்ல..
அவனிடமிருந்து காபியை வாங்கியவள்.. ஒரே முழுங்கில் குடித்து முடித்தாள்.
‘இதென்ன கா‡பியை இப்படி தூக்கி குடிக்கிற..? வாய்வச்சிதான குடிக்கனும்..?” என்று சிரிப்போடே கேட்டவன்.. பிறகு டீயை எடுத்து நீட்ட..
‘இல்ல.. இப்போதான காபி குடிச்சேன்.. எனக்கு வேணாம்..” என்றாள்.
‘அது ஜில்லுன்னு நல்லாவே இருந்திருக்காது.. டீ சூடா இருக்கு.. குடி..” என்றான் இயல்பாக.
‘நல்லாதான் இருந்தது.. எனக்கு டீ வேணாம்..” என்றாள்.
கொஞ்சம் சத்தமாக சிரித்தவன்.. ‘ம்ம்.. அப்போ நான் குடிச்சிட்டு குடுத்த கா‡பின்னா ஆறினாலும் நல்லாயிருக்கும்னு சொல்லு..” என்றான் சிரிப்போடே.
இவள் திகைத்து நிற்க்க.. ‘இந்தா..” என்றான் மீண்டும் டீ கப்பை நீட்டி..
டீ யை குடிக்கலன்னா விடமாட்டான் என நினைத்தவள்.. வாங்கி நான்கு முழுங்கு குடித்திருக்க.. அவளிடமிருந்து டீ யை வாங்கியவன்.. தான் குடிக்க ஆரம்பிக்க.. இவள் நின்ற இடத்திலேயே அமர்ந்து முகத்தை முழங்காலுக்குள் புதைக்க..
இருடி.. காலைல டீ குடிக்கிறதுல ஆரம்பிச்சி.. நைட் தூங்கற வரைக்கும் என்னை மட்டுமே நினைக்க வைக்கிறேன்.. என நினைத்தபடி சூர்யா டீ யை குடித்து முடித்திருக்க.. ‘ம்ம்.. இந்த டீயும் சூடு கொஞ்சம் கம்மிதான்.. ஆனாலும் நல்லாத்தான் இருந்தது..” என்று சிரிப்போடு சொன்னவன்..
‘பாரேன்.. உனக்கு டீதான் பிடிக்கும்.. ஆனா இன்னைக்கு கா‡பி நல்லாயிருக்குன்ற.. அதேபோல எப்பவும் நான் கா‡பிதான் குடிப்பேன்.. ஆனா இன்னைக்கு சூடு கம்மியாயிருந்தும் டீ கூட பிடிச்சிருந்தது..” என்றான் ஆச்சர்யப்படுபவன் போல்.
நம்ம அம்மா நம்மளை அடிக்கிற மாதிரி இவனையும் அப்படியே மத்துகட்டையில சாத்து சாத்துன்னு சாத்தனும்..” என்று வெறியாய் நினைக்க.. குனிந்திருந்தவளின் உடல் கோபத்தில் ஏறி இறங்கியது.
அவள் விடும் மூச்சுக்காற்றில் அவளின் கோபம் உணர்ந்தவன்.. ‘திலகவதி..” என்றான் மென்மையாய்.
‘ம்ம்..” என்றாள் தலை நிமிராமலேயே..
‘இந்தா..” என்றான் மென்மையாக.
இவள் நிமிர்ந்து பார்க்க.. அவனின் கையில் பெல்ட் இருக்க.. இது எதற்க்கு என்பதுபோல் பார்த்தவளிடம்.. ‘என்னை துவம்சம் பண்ற கோபத்தில இருக்கதான..? எதுக்கு அடக்கி வைக்கிற..? பிடி..” என்றான் இலகுவாக.
அச்சோ.. மனசில நினைக்கிறதை கூட கண்டுபிடிக்கிறானே.. என்று பயத்தோடு பார்க்க.. ‘வேணாமா..?” என்றான் சிரிப்போடே.
இவள் தடுமாற.. ‘சூர்யா.. சாப்பிட வா..” என்று கமலம் குரல் கொடுக்க..
‘தோ வரேன் மா..” என்றவன்.. ‘வா.. சாப்பிடலாம்..” என்றான்.
‘இப்போதான டீ குடிச்சேன்.. எனக்கு பசிக்கல..” என்றாள்.
‘என்னோடவே உக்கார்ந்து சாப்ட்டினா முத்து பரிமாறுவார்.. இல்ல நீதான் எனக்கு பரிமாறனும்.. எங்கம்மா முன்னாடியே சாப்பிடு சூர்யான்னு சொல்லனும்.. எது வசதி..?” என்றான்.
அமைதியாக சூர்யாவோடு வெளியே வந்தாள். சூர்யா சாப்பிட அமரவும்.. முத்து டிபன் எடுத்து வரவும்.. ‘உக்காரு..” என்றான் சூர்யா.
‘சூர்யா சாப்பிட்டதுக்கப்புறம் நீ சாப்பிடு.. இப்போ அவனுக்கு பரிமாறு..”என்றார் கமலம்.
யார் சொல்வதை செய்வதென புரியாமல் திலகவதி நிற்க்க.. ‘அம்மா..” என்றான் முகம் சுருக்கி ராகமாக.
‘என்னடா..? இழுக்கிற..? பரிமாறினாதான புருசனுக்கு என்ன பிடிக்கும்..? எவ்ளோ சாப்பிடுவங்கிறதெல்லாம் ஒரு பொண்டாட்டிக்கு புரியும்..” என சூர்யாவை முறைத்து..
‘ஏன் நின்னுட்டிருக்க..? இட்லி.. பொங்கல்.. கோதுமை தோசைன்னு மூனு இருக்கு.. அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு பரிமாறு..” என்று கமலம் கடுகடுக்க.. திலகவதி மீதான அம்மாவின் பொய்யான கோபத்தில் சூர்யாவின் முகம் மென்னகை பூச.. ஆவலாய் பார்த்தான் மனைவியை.
‘என்ன வைக்கட்டும்..?” என்றாள்.
சூர்யா தன் அம்மாவை காண்பிக்க..
‘உங்களுக்கு என்ன வைக்கட்டும்..?” என்றாள் கமலத்திடம்.
‘அம்மா எப்பவும் இட்லிதான் சாப்பிடுவாங்க..” என்று முத்து பதிலளிக்க.. திலகவதி முதலில் இரண்டு இட்லிகளை வைத்தவள்.. பின்பு இன்னும் இரண்டை எடுக்க.. ‘போதும்.. போதும்..” என்று கமலம் சொல்ல..
அப்புறம் வாங்கிக்குவாங்களா இருக்கும் என நினைத்தவள்.. அதற்கு சட்னி சாம்பார் போட்டு.. சூர்யாவைப் பார்க்க.. கோதுமை தோசையைக் கைகாட்ட.. பரிமாறியவள் அமைதியாய் நின்றிருக்க.. கமலம் சாப்பிட்டு கைகழுவவும்..
‘அச்சோ.. ஏன் கைகழுவிட்டிங்க..? இரண்டு இட்லி எப்படி பத்தும்..?” என்று திலகவதி தவிக்க.. மனைவியின் அக்கறையை மனதில் மெச்சினாலும்..
‘இதென்ன..? யார்கிட்டயோ பேசுறமாதிரி பேசுற..? எங்கம்மா உனக்கு மத்தவங்களா..?”என்று முறைக்க..
அச்சோ.. அப்போ கோபமா கை கழுவிட்டாங்களா..? என தனக்குத்தானே சத்தமாக முனுமுனுத்தவள்.. ‘இன்னும் இரண்டு இட்லி சாப்பிடுங்கத்தை..” என்றாள் அவசரமாக.
‘நான் எப்பவும் இரண்டுதான் சாப்பிடுவேன்.. உன் புருசன் அவ்ளோதான் சாப்பிட சொல்லியிருக்கான்.. பதினொரு மணிக்கு ஜூஸ் குடிச்சிப்பேன்..” என்றவர்..
‘உனக்கு டைம் ஆகலையா சூர்யா..?” எனக் கேட்க..
‘ம்மா.. இன்னும் ஒருவாரத்துக்காவது ஹாஸ்பிட்டல் பக்கமே வரக்கூடாதுன்னு எங்க டீன் திட்ருறார். எதாவது எமர்ஜென்சின்னா கூப்பிடுறாங்களாம்.. அப்போ வந்தா போதுமாம்..” என்றான் சிறு வெக்கத்தோடு.
சந்தோசமடைந்த கமலம்.. ‘ஹப்பா.. ஒரு வாரத்துக்கு என் பையனை எந்நேரமும் நான் பார்த்திட்டே இருக்கலாம்..” என்றார் நிறைந்த புன்னகையோடு.
என்ன..? ஒரு வாரத்துக்கு வீட்லியே இருக்கப்போறானா..? என நினைத்த திலகவதியின் முகம் பேரதிர்ச்சியைக் காட்ட.. மனைவியின் முகவாட்டத்தை ரசித்தவன்..
‘ம்ம்.. பாருங்க பாருங்க.. உங்களையும் என் பொண்டாட்டியையும் படுத்தி எடுக்கிறதுதான் என்வேலை..” என்று வில்லன் சிரிப்போடு கமலத்திடம் சொல்லி…
‘ஒரு இட்லி வை திலகா…” என்று அவளின் கவனத்தை கலைத்தான்