அத்தியாயம் .. 13
ஒரு வாரம் வீட்டில் இருப்பேன் என்றவன்.. இரண்டு நாள்தான் இருந்தான்.. ஆனால் திலகவதிக்கு அவனோடு இரண்டுமாதம் பசைபோட்டு ஒட்டிக்கொண்டு திரிந்ததை போன்ற உணர்வு..
எழுந்திரி சூர்யா என்றால்தான் எழுவான்.. குளிச்சிட்டு வாங்க சூர்யா.. சாப்பிடுங்க சூர்யா.. என திலகவதி சொன்னால் மட்டுமே செய்வான்.. உடை கூட அவள் எடுத்து கொடுப்பதைதான் அணிந்தான். இல்லை எத்தனை நேரமானாலும் டவலோடுதான் நிற்ப்பது.. அதுவும் திலகவதி உடை எடுத்துக்கொடுக்க சிறு தாமதமானாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளருகில் நெருங்குவான்.. நெருங்கும்போதே உடல்மேல் போர்த்தியிருக்கும் டவலை எடுப்பான்.. முதல்நாள் இதுபோல செய்யவும் அடுத்தநாள் அவன் குளித்து வரும்போதே உடையை எடுத்து வைத்திருந்தாள்.
அதையும் இந்த டிரெஸ் போட்டுக்கோ சூர்யா என திலகவதி சொன்னால் தவிர போடமாட்டான்.. பின்னே எத்தனை நேரம்தான் அவனின் வெற்றுடம்பை பார்த்திருப்பாள்..? அதுவும் கீழுள்ள டவலையும் கழட்டிடுவானோ என்ற பயம் கூட வந்திருந்தது.. எதையும் செய்வான் எமகாதகன்.. என வறுத்தெடுப்பாள் மனதில்.
மூன்றாம் நாள் சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு போகனும் என்று கமலத்திடம் சொல்ல… அத்தனை வசைபாடினார் கமலம்.. அன்னையின் திட்டுக்களை இன்பமாய் வாங்கிக்கொண்டவன்.. மனைவியின் முகத்திலிருந்த சந்தோசத்தையும்.. பெருத்த நிம்மதியையும் கண்டு.. உள்ளுக்குள் சிரித்தவன்..
‘தப்பிச்சிட்டேன்னு நினைக்காத.. எப்பன்னாலும் ஒரு மாசத்துக்கு லீவ் போட்ருவேன்..” என பயமுறுத்தி கிளம்பினான்.
உண்மையில் சூர்யா சர்ஜன் ஆனதிலிருந்து இப்படி இரண்டு நாள் முழுதாய் வீட்டில் இருந்ததே இல்லை. முதலிலேயே இரண்டுநாள் வீட்டில் இருப்பேன் என்றிருந்தால் கமலம் சந்தோசம்தான் அடைந்திருப்பார்.. ஒரு வாரம் என சொல்லிவிட்டு இரண்டு நாளில் கிளம்பவும் அவருக்கு கோபம் வந்தது.
‘ம்க்கூம் ஒரு மாசத்துக்கு லீவ் போட்டுட்டாலும்..” என கமலம் நொடித்தார். இவள் ஆசுவாசப்பட்டவளாய் தனதறைக்குள் புகுந்தவள்தான் பின் வெளியில் வரவேயில்லை.
மதியம் இரண்டுமணிபோல் கொஞ்சம் ‡ப்ரீ ஆனவன்.. என்ன செய்துகொண்டிருப்பாள் என்ற எண்ணம் தோன்ற.. பிறகுதான் அவளிடம் மொபைல் இல்லை என்ற நினைவு வர.. ‘ம்ம்.. இன்னைக்கு போகும்போது வாங்கிட்டு போலாம்..” என சொல்லிக்கொண்டவன்.. முத்துவிற்க்கு அழைத்தான்.
முத்துவிடம்; திலகவதியைப் பற்றி கேட்க.. திலகவதியிடம் முத்து ‡போனை கொடுக்க.. ‘ம்ம்..” என்றாள்.
‘என்ன ம்ம்..?” என்றான் கோபமாக.
எதற்க்கு திட்டுகிறான் எனப்புரியாமல் இவள் அமைதியாக இருக்க.. ‘டைம் என்ன..?” என்றான்.
‘இரண்டு..” என்றாள்.
‘சாப்டியா..?” என்றான் அதிகாரமாக.
‘இல்ல..” என்றாள் குரலிறங்கி.
‘அம்மா சாப்ட்டாங்களா..?” என்றான்.
‘தெ.. தெரியல..” என்று இவள் முடித்ததுதான் தாமதம்.. ‘பார்த்துக்கமாட்டியா அவங்களை..? பத்து வருசம் பக்கமா படிப்பு வேலைன்னு எங்கம்மாகிட்ட அதிகம் பேசக்கூட எனக்கு டைம் இருக்காது.. ஆதவனும் எட்டு வருசமா வெளிநாட்ல இருக்கான்.. ரொம்ப வருசமா தனியாவே இருக்காங்க.. மருமகள் வந்தா அவளோடவாவது சந்தோசமா இருக்கலாம்னு எத்தனை கனவு கண்டிருப்பாங்க..? அவங்களோட சந்தோசமா பேசலன்னாகூட பரவால்ல.. சாப்ட்டாங்களான்னு கூட கவனிக்க மாட்டியா..?” என்றான். முழுதும் கோபக்குரல்தான் என்றாலும் கோபத்திலும் கொஞ்சம் வருத்தமிருக்க..
திலகவதிக்கு ஏதோ பெரிய தவறு செய்ததுபோல் தோன்ற.. ‘என்னை மன்னிச்சிடுங்க.. நான் பார்க்கிறேன்..” என்றாள் உடனே.
‘இப்போ வேணாம்.. ஒரு மணிக்கெல்லாம் அவங்க சாப்ட்டிருப்பாங்க.. இப்போ தூங்குவாங்க.. நீ போய் சாப்பிடு..” என்றான் கொஞ்சம் தன்மையாக.
‘ம்ம்..” என்று இறங்கிய குரலில் சொல்ல.. இவனும் கோபம் குறைத்து..
‘நான் சாப்ட்டனான்னு கேட்க மாட்டியா..?” என்றான் ஏக்கமாக.
அவனின் ஏக்கம் எங்கே புரிந்தது..? கேட்கலன்னா வீட்டிற்கு வந்து எதாவது வில்லங்கம் செய்வான் என்ற பயத்தில்.. ‘சாப்ட்டிங்களா.?” என்றாள்.
‘ம்ம்.. சாப்டப்போறேன்.. நீ போய் சாப்பிடு..” என்று கட்செய்தான்.
இவள் ரூமிலிருந்து வந்து பார்க்கவும்.. சூர்யா சொன்னதுபோல் கமலம் தூங்கிக்கொண்டுதான் இருந்தார். முத்துவிடம்.. ‘அவங்க சாப்ட்டாங்களான்ணா..?” எனக் கேட்க.. ‘அம்மா ஒரு மணிக்கெல்லாம் சாப்டுருவாங்க பாப்பா.. உனக்கு எடுத்து வைக்கிறேன்.. வா..” என்றார்.
‘எந்த வேலையும் செய்யாம வெட்டியாத்தான இருக்கேன்.. நானே போட்டுக்கிறேன் ண்ணா..” என்று சாப்பிட அமர்ந்தவளுக்கு உண்மையில் பசி இல்லை.. சாப்பிடவில்லையென்றால் அதையும் கண்டுபிடித்து எதாவது வம்பளப்பான் என்ற பயத்தில் சாப்பிட அமர்ந்தாள்.
‘ஏன் பாப்பா இதென்ன இத்துணூன்டு சாப்பாடு சாப்பிடற..? வயசுபுள்ள நல்லா சாப்பபிடனும்..” என்று இன்னும் கொஞ்சம் வைக்க வரவும்..
‘வேண்டாம் ண்ணா.. என்னவே இங்க வந்ததிலயிருந்து மதியத்தில பசிக்கவேமாட்டுக்குது.. ஆனா சாப்பிடலன்னா திட்டுவாங்களே..” என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவள் மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
மாலை ஐந்து மணிபோல்.. தோட்டத்தில் காத்துவாங்கிக்கொண்டு நாவல் படித்துக்கொண்டிருக்கும் கமலத்திடம்.. ‘அத்தை டீ எடுத்திட்டு வரட்டா..?” என்றாள்.
கமலம் ஆச்சர்யமாய் பார்க்க.. ‘டீ குடிக்கிறிங்களா..?” என்றாள் மீண்டும். அவளின் கண்களில் கொஞ்சம் பாசமும் தெரிய..
‘முத்து எடுத்திட்டு வருவான்.. நீ போய் முகத்தை கழுவிட்டு தலைபின்னி கொஞ்சம் பளிச்சினு இரு.. வெளில போய் நாளெல்லாம் உழைச்சிட்டு புருசனுக்கு.. வீட்டுக்கு வந்து பொண்டாட்டி முகத்தை பார்த்ததும் அவங்க களைப்பு அடங்கிடனும்..” என்று தன்மையாக சொல்ல..
இன்னைக்கென்ன திட்டாம சொல்றாங்க..? என அதிசயித்தவளாய்.. மண்டையை உருட்டி தனதறைக்கு போனாள். சிங்காரிக்க பிடிக்கவில்லைதான்.. ஆனால் என்ன செய்ய..? தான் சொல்லியும் உன் பொண்டாட்;;;டி கேக்கலன்னு அவன்கிட்ட சொல்லிட்டாங்க.. வேற வெனையே வேணாம் என நினைத்தவள்.. முகம் கழுவி தலைபின்னி வெளியே வர.. அதற்குள் வள்ளியை அனுப்பி கமலம் பூ வாங்கி வர சொல்லியிருக்க.. இவள் வரவும் மல்லிகையை நீட்டினார் கமலம்.
வேணாம் என்று சொன்னால் திட்டுவார்கள் என பயந்து வாங்கியவளுக்கு.. தலையில் சூடும்போது என்னமுயன்றும் கண்கள் லேசாய் கலங்கத்தான் செய்தது.
பூ வைத்து முடித்தவள் கமலம் அறியாமல் தன் கண்களை துடைக்கவும் சூர்யா உள்ளே வரவும் சரியாய் இருக்க.. அக்னிப்பார்வை பார்த்தான் கண்கலங்கியிருந்த மனைவியை.
‘ம்ம்..” என்று தன் கையில் வைத்திருந்த பேகை கொடுத்தவன்.. ‘வா..” என்று சொல்லி வேக நடைபோட்டான் தன் அறையை நோக்கி.
இவள் மெல்ல உள்ளே வரவும்.. பாத்ரூமில் அரவம் கேட்க.. என்ன சொல்வானோ.. அழறதை வேற பார்த்திட்டானே என்று தவிப்போடு நின்றிருந்தாள்.
வெளியே வந்து சட்டென அவளருகில் வந்தவன்.. அவள் வைத்திருக்கும் பூ முன்னே வரும்படி வன்மையாக உலுக்க.. அவன் நினைத்தவாறே அவள் சூடியிருந்த மல்லிகை முன்னே வந்ததும்..
‘அன்னைக்கே பூ பட்ட இடமெல்லாம் முத்தம் கொடுத்திருந்தேன்னா.. இன்னைக்கு பூவைப் பார்த்ததும் உனக்கு அழவந்திருக்காது.. என் முத்தம்தான் நியாபகம் வந்திருக்கும்.. ஆக இன்னைக்கு நீ அழுததுக்கு நான்தான் காரணம்.. தப்பு என்பேர்லதான்.. இரு என் தப்பை இப்பவே சரிசெய்றேன்..” என்று அவளின் மார்பை உரசிக்கொண்டிருக்கும் பூவினை வெறித்தபடி சொன்னவன்.. கதவை தாழ்போடவும்..
‘வேண்டாம்..” என்று கூனிக்குறுகினாள்.
சூர்யாவிற்க்கும் அவளிடம் வரம்புமீறும் எண்ணம் சிறிதும் இல்லை. ஆனால் தாம் வீட்டில் இல்லாத நேரம் இதுபோல் ஒவ்வொன்றிற்க்கும் பழைய நினைவுகளை நினைத்து திலகவதி அழுவதையும் அவனால் தாளமுடியவில்லை..
அவளை பூப்போல தாங்கவேண்டும்.. கடந்த ஒன்றரை வருடமாக அவளின் கண்களில் திடமாய் அமர்ந்திருக்கும் சோகத்தை போக்கவேண்டும்.. பிரசாத்தை விருந்திற்க்கு அழைக்கப்போகும்போது.. திலகவதியிடமிருந்த வெள்ளந்தியான முகத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.. என்பதுபோன்ற இன்னும் நிறைய நிறைய எதிர்பார்ப்பு உண்டு திலகவதியின் மீது..
சண்டைக்கோழியாய் நிற்ப்பவளிடம் என்னதான் செய்வது..? வேறு வழியில்லாமல் மனதை திடமாக்கி எண்ணத்தால் ஆக்ரமிக்க முடிவெடுத்தான். அதற்க்காக கொஞ்சம் வரம்பு மீறித்தான் ஆகவேண்டியுள்ளது.. மனைவிதானே.. பின்னால் சரிசெய்துகொள்ளலாம் என நினைத்தவன்.. உறுதியோடு அவளின் மார்புநோக்கி தன் முகத்தால் நெருங்க.. உச்சபச்ச அதிர்வோடு கண்களை இறுக்கி மூடியவள்..
‘வேண்டாம்.. வேண்டாம்..” என்று கெஞ்ச.. அவளின் கெஞ்சலை கண்டுகொள்ளாமல் நெருங்கியவனின் முகம் அவளின் துப்பட்டாமீது உரச.. அவளின் மார்புக்கூடு ஏறி இறங்க.. அவனின் மூச்சுக்காற்று அவளின் நெஞ்சைச் சுட.. ‘வே.. வேண்டாம் சூ..சூர்யா..” என்று கதறினாள் கண்மூடிய நிலையிலேயே.
தன் பேரை சொன்னதும் சந்தோசத்தோடு அவளிடமிருந்து விலகியவன் அவளின் முகம் பார்க்க.. சுவற்றோடு ஒட்டியிருந்தவளின் முகத்தினில் அத்தனை பதட்டம்..
‘திலகா..” என அழைத்தான் மென்மையாக.
‘வேணாம்.. வேணாம்.. “ என்றாள் மந்திரச்சொல்லாக.
‘திலகா..” என்று மென்மையாய் அவளின் கன்னத்தில் தட்ட..
பட்டென விழித்தாள் பயத்தோடு. ‘வா..” என்று தன்மையாய் அவளின் கைபிடித்து அழைத்து வந்து பெட்டில் அமரவைத்தான். இன்னும் அவளின் முகம் பயத்திலேயே இருக்க.. சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்தவன்..
‘உன்கிட்ட இப்படி நடந்துக்க எனக்கும்தான் கஷ்டமா இருக்கு.. ஆனா இதெல்லாத்துக்கும் காரணம் நீதானே..?” என்றான் தன்மையாகவே.
திலகவதி புரியாமல் பார்க்க.. ‘நீ என் பொண்டாட்டி.. அப்போ மத்தவங்க நினைப்பு உனக்கு வரலாமா..?” என்றான் கொஞ்சம் குரலுயர்த்தி.
இவள் தலைகுனிய.. அவளின் தாடைத் தொட்டு நிமிர்த்தியவன்.. ‘இதுதான் உன்வீடு.. நான் உன் புருசன்.. என் அம்மா உன்னோட அத்தை.. இந்த நினைப்போட நீ இயல்பா இருந்தினா.. நான் உன்னை ஒரு தொல்லையும் பண்ணமாட்டேன்..” என்றான் பொறுமையாக.
‘ம்ம்..” என்று தலையாட்டினாள்.
நிம்மதியானவன்.. ‘இப்போ கூட என்பேரை சொல்லி நீ வேண்டாம்னு சொல்லவும்தான் உன்னை விட்டேன்.. இல்ல..” என்று சின்ன சிரிப்போடு ஒரு மார்க்கமாக பார்க்க..
திலகவதி தடுமாற.. ‘அதான் விட்டுட்டேன்ல..? இன்னும் எதுக்கு பயந்துக்கிற..?” என சின்னதாய் அதட்டி.. ‘வா.. கொஞ்ச நேரம் அம்மாவோட பேசிட்டிருக்கலாம்..” என்றான் கனிவாக.
‘நீங்க போங்க.. நான் வரேன்..” என்றாள் தன் முகத்தை துடைத்தபடி.
சூர்யா கார்டனுக்கு போக.. ‘அம்மாடி..” என்று ஆசுவாசப்பட்டவளாய் தன் தலைமீது கைவைத்து அமர்ந்தவள்.. நாம தப்பான முடிவுக்கு போனாலும்.. இவனோட வாழலன்னாலும்.. நம்ம அம்மா செத்துருவேன்னுது.. இவனை நல்லவன்னு நினைச்சிட்டு பாலாவும் இதையே சொல்றான்.. இவன் என்னடான்னா நம்மளை ஒரேடியா கொல்லாம இப்படி சித்தரவதை செய்தே சாகடிக்கிறான்.. நான் என்னதான் செய்றது கடவுளே.. என வேண்டும்வரை அழுதாலும்.. அச்சோ கொஞ்ச நேரத்தில வெளில போகலன்னா அதுக்கும் எதாவது செய்வானே.. என முகம் கழுவ சென்றாள்.