கார்டனில் கமலம் டீ குடித்துக்கொண்டிருக்க.. அன்னை அருகே போய் கீழே அமர்ந்தான். எப்பொழுதாவது டியூட்டியில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டால் தன் அன்னையோடு இப்படி அமர்ந்து கதையளப்பது சூர்யாவிற்க்கு மிகவும் பிடித்த ஒன்று..
இரண்டு வருடங்களுக்கு பின்னர்.. இப்படி ரிலாக்சாக அமரும் மகனை வாஞ்சையோடு பார்த்தார் கமலம். ‘என்னம்மா இப்படி பார்க்கிறிங்க..?” என்றான் சிரிப்போடு.
‘ம்ம்.. என் மகனுக்கு அம்மா நியாபகம் வந்திடுச்சி அதான்..” என்றார் சூர்யாவின் தலைகோதி தானும் சிரித்தவாறு.
சூர்யா தன் அம்மாவை செல்லமாய் முறைக்க.. ‘பிரசாத் இறந்ததுக்கப்புறம் என்னை மறந்தே போய்ட்டதான..?” என்றார். கண்களும் லேசாய் கலங்கியது.
‘ம்மா.. என்னம்மா நீங்க..?” என்று எழுந்து அவசரமாக தன் அன்னையின் கண்களை துடைத்தவன்.. பிரசாத்தின் நினைவு வரவும் பேச வார்த்தையின்றி அமைதியாகவே நின்றிருந்தான்.
மகனின் மனமறிந்த கமலம்.. ‘சூர்யா..” என அழைக்க..
தெளிவானவன்.. ஆமாம் அம்மா சொல்வது உண்மைதானே..? பிரசாத்தின் சோகம்.. அதற்க்கு பிறகு முழுதாய் தன்னை திலகவதி ஆக்ரமித்திருந்தது.. அதன் விளைவாக அம்மா கல்யாணத்திற்க்கு கேட்கும்போதெல்லாம் தன் அம்மாவிடம் கோபமாக பேசியது.. தன் அன்னையிடம் கல்யாண பேச்சை தவிர்க்கவேண்டி.. நீண்ட நேரம் மருத்துவமணையிலேயே தன் நேரத்தை செலவிட்டது.. அனைத்தும் நினைத்துப் பார்த்து.. மீண்டும் கீழே அமர்ந்தவன்..
தன் அன்னையின் மடிமீது தன் கைகளை ஊன்றி.. தன் அம்மா முகம் பார்த்து.. ‘சாரிம்மா..” என்றான் முகத்தை சுருக்கி பாவமாக.
‘டேய்.. என்னடா இது..? சாரி பூரின்னுட்டு..?” என்று அதட்டி.. தன் மகனின் தலைகோதி.. ‘சூர்யா.. நீ சந்தோசமா இருக்கியா..?” என்றார் வாஞ்சையாக.
தன் அன்னை அனைத்தும் புரிந்துதான் கேட்பார் என சூர்யாவிற்க்கு தெரியும் ஆதலால்.. ‘சந்தோசமா இருக்கேன்னு சொல்ல முடியலதான்.. ஆனா என் மனசுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் செய்ததால ரொம்ப நிம்மதியா இருக்கேன்மா.. “ என்றான் நிறைவாக.
‘எனக்கு உன் நிம்மதி மட்டும் பத்தாது.. நீ சந்தோசமா வாழனும்..” என்றவரின் குரலில் ஆசையும் கட்டளையும் சரிபாதியாய் இருந்தது.
‘ம்ம்.. ம்மா..” என்று சமாதனம் செய்தவன்.. ‘பாவம் திலகா.. இன்னும் பிரசாத்தோட அதிர்ச்சியிலயிருந்தே வெளிவரல.. பூ பொட்டு வைக்கிறதுக்கு கூட கில்டியா பீல் பண்றா.. கொஞ்ச நாள் ஆகட்டும்..” என்று சொல்ல..
‘எனக்கு என் மகன் சந்தோசம்தான் முக்கியம்..” என்று இம்முறை கட்டளையாக மட்டுமே சொல்ல.. சரி என்பதாய் தலையசைத்து தன் அன்னை மடிசாய்ந்தான்.
‘திலகவதி இன்னைக்குத்தான் என்கிட்ட பேசினா..” என்றார் மெல்ல..
இவன் ஆச்சர்யமாக பார்க்க.. ‘ம்ம்.. டீ குடிக்கிறாங்கிளாத்தைன்னு நீ வரதுக்கு கொஞ்சம் முன்னதான் கேட்டா..” என்றார்.
மதியம் தன் அன்னையைப் பற்றி சொல்லவும் கேட்டிருக்கிறாள் எனப்புரிய.. எப்படியோ இயல்பா இருந்தாள்னா சரிதான் என நினைத்தான்.
வாசலில் பார்சல்காரன் வந்து நிற்க்க.. சூர்யா உள்ளே அழைத்தான்.
‘சார்.. தையல்மிசின் ஆர்டர் செய்திருந்தாங்க.. இங்க திலகவதி சூர்யாங்கிறது..?” என கேட்க.. அப்பொழுதுதான் வெளியே வந்தாள் திலகவதி.
‘இங்க வா..” என அழைத்தான் மனைவியை. திலகவதி அருகில் வரவும்..
‘இவர் என்னவோ கேட்குறார்.. என்னன்னு பாரு..” என்றான்.
திலகவதி வந்தவனைப் புரியாமல் பார்க்க.. ‘இங்க திலகவதி சூர்யாங்கிறது நீங்களாம்மா..?” என்றான்.
இவள் சங்கடத்தோடு ஆமாம் என தலையசைக்க.. ‘இதுல கையெழுத்து போடுங்க..” என கேட்டு வாங்கியவன்.. கேட்டிற்க்கு வெளியில் நின்றிருந்த டெம்போவிலிருந்து அந்த டெய்லரிங் மிசினை உள்ளே எடுத்துவந்து வைக்க..
புதிய டெய்லரிங் மிசினை ஆசையாய் பார்த்திருக்க.. ‘திலகா.. மிசின் அப்புறம் பார்த்துக்கலாம்.. நம்ம ரூம்ல டேபிள்மேல என் பர்சிருக்கும்.. போய் எடுத்திட்டு வா..” என்று அனுப்ப.. அவள் எடுத்து வந்ததும்.. ‘அங்க உள்ள வச்சிடுப்பா..” என்று சூர்யா சொல்ல.. மிசினை உள்ளே வைத்து வந்தவனுக்கு பணம் கொடுத்தனுப்பி மனைவியைப் பார்க்க.. அவள் முகத்தில் புதுசந்தோசம் வந்திருக்க..
‘பிடிச்சிருக்கா..?” என்றான்.
சூர்யாவின் குரலைக்கேட்டதும் இவளின் முகம் மீண்டும் பழைய நிலைக்கே வந்திருந்தது.. ஆனாலும் பதில் சொல்லலைன்னா விடமாட்டானே என நினைத்தவள்..
‘ம்ம்.. ஆனா இந்த மிசின் விலை ரொம்ப அதிகம்.. எங்க கார்மென்சுலதான் இப்படி மிசினெல்லாம் இருக்கும்.. இதுக்கு எவ்ளோ பணம் கொடுத்திங்க..?” என்றாள் கவலையாக.
‘நீ புக் செய்தியா சூர்;யா..?” என்று கமலம் கேட்க..
‘இல்லம்மா ஆதவன் செய்திருக்கான்..” என்று சூர்யா சொல்ல..
கமலம் முகம் கோபத்தை காண்பிக்க.. திலகவதிக்கு இந்த மிசின் ரொம்ப பிடிச்சிருக்கு எனப் புரிய.. ‘நீ போய் மிசின் நல்லாயிருக்கா பாரு..” என்றான் இயல்பாக.
திலகவதி உள்ளே போனதும்.. ‘இவ துணி தைக்கிறதுதான் இப்போ ரொம்ப முக்கியமா..?” என்றார் கமலம்.
கமலத்திற்க்கு அவருடன் யாராவது பேசிக்கொண்டிருக்க வேண்டும்.. ஆதவனும் கீர்த்தியும் ஊரிலிருந்து வந்தார்கள் என்றால்.. கீர்த்தி அதிகநேரம் கமலத்திடம்தான் செலவிடுவாள்.. கமலத்திற்க்கு இது ஒரு அடிக்சன் என்றே சொல்லலாம்.
இதுவரை ஆதவனுக்கு திருமணம் முடிந்ததிலிருந்து கமலத்திற்க்கும் கீர்த்திக்கும் சிறு மனத்தாங்கல்கூட வந்ததில்லை. கீர்;த்திக்கும் தன் அன்னைக்கும் இருக்கும் புரிதல் கண்டு ஆதவன் பலமுறை வியந்திருக்கிறான். நீங்களும் என்னோடவே வந்தா கீர்த்தியோடவே இருக்கலாம்லம்மா… என்று தன் அன்னையை அமெரிக்கா வரசொல்லி பலமுறை அழைத்திருக்கிறான் ஆதவன். ஆனால் சூர்யா இங்கு தனித்திருப்பான் என்பதற்க்காகவே கமலம் அமெரிக்கா போக விரும்பவில்லை.
தன் மாமியாரின் குணமறிந்து கீர்த்தியும் முடிந்தவரை தினமும் வீடியோ காலில் பேசிவிடுவாள். இந்நிலையில் இன்றுதான் திலகவதி ஒரு வார்த்தை கமலத்திடம் பேசியிருக்க.. பேசும்போது அவள் முகத்திலிருந்த உண்மையான பாசம் கண்டு கமலத்திற்க்கும் திலகவதியோடு பேசும் எண்ணம் வந்திருக்க.. இந்த துணிதைக்கும் வேலையை திலகவதி செய்வது சுத்தமாக பிடிக்காமல் போனது.
தன் அன்னையைப் பற்றி சூர்யாவிற்க்கு தெரியும் ஆதலால்.. ‘இல்லம்மா.. சும்மாவே வீட்ல இருந்தான்னா அவளுக்கு பழைய நினைவு வரும்.. எதிலாவது கவனத்தை செலுத்தினா கொஞ்சம் இயல்பா இருப்பா.. அதுக்குத்தான்..” என்றான் கெஞ்சலாக.
‘நீ வீட்ல இருக்கும்போது அவ மிசின்ல உக்காரக்கூடாது.. மதியம் போல தைக்க சொல்லு.. சாங்காலம் நான் சாமி கும்பிடும்போது இந்த மிசின் சத்தமெல்லாம் கூடாது.. கண்டிசனெல்லாம் சொல்லி வச்சிடு உன் பொண்டாட்டிகிட்ட..” என்றார் கடுப்பாக.
‘ஆக.. நீங்க தூங்கும்போது மட்டும்தான் அவ தைக்கனும்னு சொல்லுங்க.” என்றான் சிரிப்போடு.
கமலமும் லேசாய் சிரிக்க.. ‘இன்னும் அவ சரியா கத்துக்கவே இல்லம்மா.. ஆதவன் யாரோ ஒரு டீச்சர்க்கு ஏற்பாடு செய்திருக்கானாம்.. நாளைலயிருந்து அவங்க வீட்டுக்கு வருவாங்க.. அவ கத்துக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. அதுக்கப்புறம் நீங்க சொல்றமாதிரி நடந்துக்குவா..” என்றான் தன்மையாக.
கமலம் முகம் மீண்டும் கடுமையையே காட்ட.. ‘அவ துணிதைச்சி ஒன்னும் இங்க ஆகப்போறதில்லம்மா.. பாவம் சின்னபொண்ணு.. பிறந்ததிலயிருந்து கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவ.. பிரசாத்தை கல்யாணம் செய்து வயசுக்கு மீறின வேதனையை அனுபவிச்சிட்டா.. கொஞ்சம் அதுலயிருந்து வெளிவரட்டும்.. சின்னபிள்ளையாட்டமா எவ்ளோ ஆசையா அந்த மிசினை பார்த்தா பார்த்திங்களா..? அவளுக்குன்னு எதாவது பொறுப்பு வந்தாத்தான் அவளுக்குள்ள மாற்றம் வரும்.. அவ மாறினாதான் என்னால சந்தோசமா இருக்க முடியும்.. என் செல்ல அம்மா இல்ல..? திலகா துணிதைக்க ஒத்துப்பிங்கதான..?” என்றான் கெஞ்சலாய்.
‘நீ நினைச்சி எதையாவது சாதிக்காம விட்ருக்கியா..?” என்றார் செல்ல முறைப்போடு.
‘சரி வாங்க உள்ள போலாம்.. கொசு வருது..” என்று தன் அன்னையின் வீல்சேரை தள்ளிக்கொண்டு உள்ளே வர.. திலகவதி இன்னும் மிசினையே பார்த்துக்கொண்டிருக்க..
‘திலகா.. சூர்யா வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரத்துக்கு மேல ஆச்சி.. ஒரு டீயாவது கொடுத்தியா..?” என்று கமலம் கடுகடுக்க..
‘அதானே..?” என்று தன் அன்னைக்கு மகன் ஜால்ட்ரா தட்ட..
இவள் பயந்தவளாய் சமையலறைக்குள் சென்று முத்துவிடம் நிற்க்க.. ‘தம்பி வழக்கமா தினமும் காபி குடிக்கமாட்டாப்ல.. காலைல மட்டும்தான் குடிக்கும்.. அதுவும் நேரமா எழுந்தாதான்.. இல்லன்னா டிபன் சாப்ட்டு கிளம்பிடும்.. நீ தம்பியை சரியா கவனிச்சிக்கனும்னுதான் அம்மா இப்படி பேசுறாங்க.. இனி புரிஞ்சி நடந்துக்கோ..” என்று அவளின் பயத்தை போக்கி.. முத்து அவளிடம் கா‡பியை கொடுத்தனுப்பினார்.
இவள் வருவதற்க்குள் கமலம் பூஜையறையில் இருக்க.. சூர்யா தனதறைக்குள் சென்றிருந்தான். உள்ளே சென்றவள் கா‡பியை நீட்ட.. சூர்யா முறைக்க..
‘காபி குடிங்க சூ..சூர்யா..” என்றாள் மெல்ல..
சிரித்தவன்.. ‘சும்மா சும்மா என்னால முறைச்சிட்டிருக்க முடியாது.. எதுவும் சொல்லாம இதுமாதிரி எதையாவது இனி நீட்டின.. அப்புறம் தண்டனை கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்.. புரியுதா..?” என்று சிரிப்போடே மிரட்டினான்.
இவன் கா‡பிகுடிக்கும் வரை காத்திருந்தவள்.. ‘அந்த மிசின் ரொம்ப விலை அதிகம்.. சோனு அப்பா சொன்னமாதிரியே நாளைலயிருந்து எனக்கு டெய்லரிங் கத்து கொடுக்க வீட்டுக்கு தினமும் டீச்சர் வரப்போறாங்களா..? அப்போ நிறை பணம் கேட்ப்பாங்களே.. எதுக்காக எனக்கு ஒருத்திக்காக இவ்ளோ பணம் செலவு பண்ணனும்..? வேணாம் எனக்கு கஷ்டமா இருக்கு..” என்றாள் பரிதாபமாக.
முதலில் கடுப்பானவன் பின் சுதாரித்து.. இன்னைக்குத்தான் நிறைய பேசுறா.. பொறுமையா பேசுடா சூர்யா.. என மனதில் நினைத்து..
‘ம்ம்.. நீ ஆதவனோட தம்பி பொண்டாட்டியில்ல.. ஆதவனுக்கு அவன் தம்பி சந்தோசம் ரொம்ப முக்கியம்.. நீ சந்தோசமா இருந்தாத்தான நான் சந்தோசமா இருக்கமுடியும்.. அதுக்காத்தான்.. நம்ம ரெண்டு பேரோட சந்தோசத்துக்காகத்தான்..” என்றான் நிதானமாக.
என்ன..? நம்ம ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கனுமா..? என்று மனதினில் நினைக்க.. முகம் பயத்தில் ஆழ்ந்தது.
ஓயாத கடலலைபோல் திலகவதியை மாற்றும் முயற்ச்சியில் சூர்யா இறங்க.. அலையின் காதல் புரியாத கரையாகவே இருந்தாள் திலகவதி.