‘அது எப்படி ஏற்பாடு பண்ணாம இருக்கமுடியும்..? நம்ம சொந்த பந்தமெல்லாம் என்ன நினைப்பாங்க..? ஐயர்கிட்ட சொல்லி நேரம்கூட குறிச்சாச்சி..” என்றார் அன்னபூரணி.
‘அப்பா.. அவளுக்கு கொஞ்சம் கூடு மெச்சூரிட்டியே இல்ல..” என்று மூர்த்தியிடம் முனுமுனுத்தான். அது அன்னபூரணியின் காதிலும் விழுந்தது.
‘இவ வயசிலதான் உங்கப்பா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார். நான் குடும்பம் நடத்தலையா..? இல்ல பிள்ளைதான் பெத்துக்கலயா..? எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ போய் உன் வேலையைப்பாரு..” என்று சொல்லி தன் வேலையை ஆரம்பித்தார் அன்னபூரணி.
இவர்களுக்கு சொல்லி புரியவைக்கமுடியாது என்று நினைத்தவன்.. தானாக ஒரு முடிவெடுத்துக்கொண்டான். மணமக்களுக்கான தனிமையும் வந்தது. பட்டுப்புடவையில் தலைநிறைய மல்லிகைப்பூவோடு உள்ளே வந்து.. இப்பொழுது சிறு வெக்கத்தோடு பால்சொம்பை பிரசாத்திடம் நீட்டினாள் திலகவதி. அவளின் வெக்கத்தை பார்த்த பிரசாத் ஆச்சர்யமானாலும் அதை காட்டிக்கொள்ளாமல்..
‘நீ குடிச்சிட்டு குடு..” என்றான்.
தப்பான வார்த்தையை சொல்லிவிட்டான் என்பதுபோல் பிரசாத்தை பார்த்தவள்..
‘நீங்கதான் முதல்ல குடிக்கனும்..” என்று சொல்லி அவனுக்கு பாடம் சொல்லிகொடுக்க..
சிரித்தபடியே.. ‘சரி கொடு..” என்று வாங்கியவன்.. குடித்துக்கொண்டிருக்கும்போதே..
‘பாதி பாலை என்னை குடிக்க சொன்னாங்க..” என்றாள்.
திலகவதியின் வார்த்தைகளில்.. எதாவது விபரமிருந்தால் இவளால் இப்படி தன்னிடம் இயல்பாக பேசமுடியுமா..? ம்ம்.. இதுகூட கொஞ்சம் வித்யாசமா நல்லாத்தான் இருக்கு என நினைத்தவன்… தான் குடித்த மீதிப்பாலை அவளிடம் கொடுத்தான். மறுக்காமல் வாங்கி குடித்தவள் அப்புறம் என்பதுபோல் அவனை பார்க்கவும்.. இம்முறை அவளின் பார்வையில் ஒரு கனம் திண்டாடிப்போனான்.
‘ம்ம்.. “ என தன்னை சமன்படுத்தி.. ‘காலைல இருந்து ரொம்ப அலைச்சல்.. தூங்கலாமா..?” என்றான்.
அவங்களுக்கும் வெக்கம் இருக்கும்போல என நினைத்தவள்.. ’ம்ம்.. தூங்கலாம்..” என்று லேசாய் சிரித்தபடி தலைகுனிந்தாள்.
‘சரி.. படு..” என்றதும் சிறிதும் தயக்கமின்றி கட்டிலில் படுத்தாள். பிரசாத் பெட்சீட்டை கீழே எடுத்துப்போடவும்.. ‘புருசன் பொண்டாட்டின்னா.. ஒரே கட்டில்லதான படுக்கனும்..? நீங்க ஏன் கீழ படுக்கிறிங்க..? மேல வந்து படுங்க..” என்று கபடமின்றி கணவனை படுக்கைக்கு அழைக்க..
மறுப்பின்றி மேலேவந்து படுத்தவன் எதுவும் பேசாமல் கண்மூடினான். சிறிதுநேரம் பிரசாத்தையே பார்த்திருந்தவள் சற்றுநேரத்தில் தூங்கிப்போனாள். அவளின் சிரித்த முகத்தை சற்று நேரம் ரசித்திருந்தவனும் கண்மூடி உறங்க முயற்ச்சித்தான்.
அதிகாலை எழுந்து வெளியே வந்தவளிடம் ‘போய் குளிச்சிட்டு வா..” என்றார் அன்னபூரணி. சரி என்பதாய் தலையசைத்து துணிகளை எடுத்துக்கொண்டு வெளியில் உள்ள பாத்ரூமிற்கு போனாள். குளித்து முடித்து.. தன் அத்தையிடம் சென்று
‘டீ வைக்கட்டுங்களா..?” என்றாள்.
‘ம்ம்.. போய் வை..” என்றார். சற்று நேரத்தில் தன் ரூமிலேயே குளித்து வந்த பிரசாத்.. ‘திலகவதி.. ” என்றழைத்தான்.
கணவனின் அழைப்பிற்க்கு அடித்துப்பிடித்து ஓடிவந்தவள்.. ‘என்ன வேணும்..?” என்றாள்.
‘நேத்தே இப்படி ஓடி வந்து விழப்பார்த்தயில்ல.? எதுக்கு இப்படி வேகமா வர..?” என்று கோபப்பட..
அவனின் கோபமெல்லாம் அவளுக்கு புரிந்ததாக தெரியவில்லை.. ‘என்ன வேணும்..? டீயா..? காபியா..?” என்றாள்.
‘டீ எடுத்திட்டு வா..” என்றான். உடனே சமையலறை விரைந்தாள்.
திலகவதியை பார்த்த அன்னபூரணிக்கு அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவாய் புரிந்தது. இது ஒரு மகனிடம் தாய் கேட்கும் விசயமில்லை.. என மனது சொன்னாலும்.. இன்னும் இருபது நாள்கழித்து பிரசாத் பணிக்கு திரும்பினான் என்றால்.. மறுபடி ஆறுமாதமோ.. இல்லை ஒரு வருடமோ.. எப்பொழுது வருவான் என்றே தெரியாது..
பணிக்கு சென்றபின் பிரிவினை தாங்கிகொள்ளும் அளவிற்க்கு.. இனிய நினைவுகள் இருவருக்கும் வேண்டும் என அந்த தாயுள்ளம் தவிக்க.. நேராக தன் மகனிடம் சென்றவர்.. ‘பிரசாத்.. நீ நினைச்சத சாதிச்சிட்ட அப்படித்தான…?” என்று கோபமாய் கேட்க..
எதை கேட்கிறார்கள் என்று புரிந்தாலும்.. ‘என்னம்மா..?” என்று சலிப்பாய் கேட்டான் பிரசாத்.
‘நீ சொன்னமாதிரி என் மருமக விபரமில்லாத பொண்ணுதான்.. நான் ஒத்துக்கிறேன். நீ ஊருக்கு போனதுக்கப்புறம் மத்த கல்யாணம் ஆன ஜோடிகளைப் பார்க்கும்போது.. அந்த புள்ளைக்கு ஏக்கம் வராதா..? நீ ஊருக்கு போய்ட்டு வரவரைக்கும் அந்த புள்ளைக்குன்னு ஒரு சந்தோசமான நியாபகம் இருக்க வேணாமா..? கடவுள் புண்ணியத்தில அந்த சந்தோசம் நீ ஆறுமாசம் கழிச்சி வரும்போது அவ வயித்தில ஒரு கருவாக்கூட உருவாகலாமில்ல..?
இருபத்தி ஒன்பது வயசில கல்யாணம் பண்ணியிருக்க.. உன் பொண்டாட்டி உண்டாகலைன்னா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க.. உன்மேலயே தப்புயிருந்தாலும்.. இந்த ஊர்உலகம் எப்பவும் பொம்பளைங்களைத்தான மலடின்னு முதல்ல சொல்லும்..” என்று புலம்ப ஆரம்பித்தார்.
‘போதும் நிறுத்துங்கம்மா.. நேத்துதான கல்யாணம் ஆனது.. அதுக்குள்ள இதுவரைக்கும் யோசிப்பிங்களா..?” என்று கத்தினான். அந்த நேரம் புது மணத்தம்பதியரை மறுவீட்டு விருந்திற்கு அழைக்க வந்த திலகவதியின் அம்மா மருமகனின் சத்தம்கேட்டு உள்ளே வராமல் வாசலிலேயே நின்றார்.
அவர்களை பார்த்தவன்.. ’வாங்கத்தை…” என்று அழைத்து.. ‘திலகவதி.. உங்கம்மா வந்திருக்காங்க வா..” என்றான்.
‘அம்மா..” என்றபடி வெளியே வந்தவளை.. மீண்டும் சமையலறைக்கே அழைத்துசென்று.. ‘மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துகிட்டாரா..? நீங்க சந்தோசமா இருக்கிங்களா..?” என்றார்.
‘அவர் என்னை நல்லா பார்த்துக்கிறார்மா.. நான் சந்தோசமாத்தான் இருக்கேன்.. ஆனா அவர்தான் சந்தோசமா இல்ல..” என்று சத்தமாகவே சொன்னாள்.
‘ஏய்.. மெதுவா பேசுடி..” என்று அதட்டியவர்.. ‘நீதான அவரை சந்தோசமா பார்த்துக்கனும்..? அதுக்குத்தான உன்னை அவருக்கு கல்யாணம் பண்ணிவச்சிருக்கோம்..” என்றார்.
‘நான் என்னம்மா பண்ணட்டும்..? அவங்கதான் தூக்கம் வருதுன்னு..” என்று திலகவதி சொல்வது பிரசாத்தின் காதில் விழவும்.. ‘திலகவதி..” என்று அவசரமாக அழைத்தான்.
‘இதோ வரேன்..” என்று அடுத்தநொடி அவனின் பக்கத்தில் வந்து நின்றாள்.
அந்த நேரம் அன்னபூரணிக்கு சூர்யாவிடமிருந்து அழைப்பு வரவும்.. ஆன் செய்து.. ’சூர்யா.. என்னப்பா இவ்ளோ நேரத்துக்கு போன் பண்ணியிருக்க..?” என்று இவர்கள் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க..
பிரசாத் திலகவதியிடம்.. ‘நான் சந்தோசமா இல்லன்னு யார் சொன்னது..? உன்னை மாதிரியே நானும் சந்தோசமாத்தான் இருக்கேன்..” என்றான் சிரித்தபடி.
‘அப்படின்னா நீங்க ஏன் எனக்கு முத்தம் கொடுக்கலை..? கல்யாணம் ஆனா.. கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுப்பாங்கதான..? நீங்க ஏன் அப்படி பண்ணல..?” என்று திலகவதி கேட்டதும்.. அவளை அவசரமாய் உள்ளே இழுத்துக்கொண்டு போனான்.
இதை கேட்டுக்கொண்டிருந்த சூர்யாவிற்கு ஏனென்றே புரியாமல் மனதில் ஒரு இனம்புரியாத நிம்மதி பிறந்தது. கூடவே தன் நண்பனை நினைத்து பாவமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.
‘இல்ல சூர்யா.. இன்னைக்கு அவங்க மாமியார் வீட்டுக்கு மறுவிருந்து சாப்பிட போறாங்க.. பிரசாத்தையும் திலகவதியையும் நான் அடுத்தவாரம் அனுப்பிவைக்கிறேன்..” என்றார் அன்னபூரணி.
அன்னபூரணியின் குரலில் தன்னுணர்வு பெற்றவன்.. ‘சரிங்கம்மா…” என்று கட்செய்தான் சூர்யா.
‘நம்ம பர்சனல் விசயத்தை இப்படியா.. எல்லார் முன்னாடியும் சொல்லுவ..?” என்று கோபமாக கேட்கவும் திலகவதி மிரண்டாள். அவளின் முகத்தை பார்த்தவன் தன் முகத்தை சற்று மென்மையாக்கி..
‘நான் அப்படி பண்ணினேன்னா.. உனக்கு கஷ்டமா இருக்கும்னுதான் பண்ணலை..” என்றான் இலகுவாய்.
‘எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. ஆனா நீங்க இப்படி பண்ணாததுனால.. எங்கம்மா நீதான உன் புருசனை சந்தோசமா பார்த்துக்கனும்னு என்னை திட்றாங்க..” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவளருகில் வந்தவன் அவளை அணைத்து.. அவளின் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டான்.
திலகவதி வெக்கத்தில் வெளியே போக எத்தணிக்க.. அவளை பிடித்து நிறுத்தியவன்.. ‘நான் இப்படி பண்ணலைன்னு நீ போய் உங்கம்மாகிட்ட சொல்லவும்தான அவங்க உன்னை திட்றாங்க..? இனிமே யார் கேட்டாலும் நாங்க சந்தோசமா இருக்கோம்னு சொல்லு.. உன்கிட்ட எப்ப எப்படி நடந்துக்கனும்னு எனக்கு தெரியும்.. புரியுதா..?” என்று அவளின் முகம் பார்த்தான்.
‘இனிமே நாங்க சந்தோசமாதான் இருக்கோம்னுதான் சொல்லுவேன்.. ஏன்னா நீங்கதான் இப்ப உண்மையாவே சந்தோசமா இருக்கிங்களே..” என்று முகம் சிவந்தாள்.
திலகவதியின் வெக்கத்தில் சற்றே தடுமாறியவன்.. அவளின் பக்கத்தில் வந்து..
‘கல்யாணம் ஆனா.. கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்கிறது மட்டும்தான் பண்ணுவாங்களா..?” என்றான் சன்னக்குரலில்.
‘ஆமாம்.. பின்ன வேற என்ன பண்ணுவாங்க..?” என்று கேள்வியாய் பார்த்தாள்.
முயன்று தன்னை கட்டுப்படுத்தியவன்.. ‘நெத்தியில குங்குமம் வைக்கமாட்டாங்களா..?” என்றான்.
‘அட.. ஆமாம்..” என்று நியாபகம் வந்தவளாய்.. உடனே தன் நெற்றிக்கு குங்குமம் இட்டவள்.. ‘இருங்க.. டீ கேட்டிங்கள்ல..? எடுத்திட்டு வரேன்..” என்று சிட்டாய் பறந்தாள் சமையலறைக்கு.
பிறகு.. விருந்து அழைப்பு.. என்று நான்கு நாட்களாய் சிறு சிறு அணைப்போடு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தான் பிரசாத். ஐந்தாம் நாள் பிரசாத்திற்கு அலைபேசி அழைப்பு வரவும்.. எடுத்து பேசியவன்.. அவர்கள் என்ன சொன்னார்களோ..
’எஸ்.சார்.. எஸ்.சார்..” என்று மட்டும் விரைப்பாய் சொல்லி கட்செய்தான்.
நான்கு நாட்களாய் திலகவதி குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும்.. வெளியே வந்துவிடுபவன்.. இன்று வந்த அலைபேசி அழைப்பால் தன்னை மறந்து உள்ளே வந்தான். திலகவதி பாவாடை ஜாக்கட்டோடு இருந்தாள். தூங்குவதற்காக அப்பொழுதுதான் சாரியை கழற்றிவிட்டு நைட்டியை கையில் எடுத்திருந்தாள்.
பிரசாத்தை பார்த்த திலகவதி.. பதறிப்போய் ‘வெளிய போங்க..” என்று அவசரமாக தன் சேலையால் தன் உடலை மூடினாள். நான்கு நாட்களாக முழுதாய் போர்த்திய சேலைக்கட்டோடு பார்த்திருந்தவனுக்கு.. இன்று பதட்டத்தில் மனைவியின் மூடியும் மூடாத அங்கங்கள் பிரசாத்தின் உணர்வுகளை தூண்டச்செய்ய.. கதவை தாழிட்டவன் திலகவதியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். தான் நிற்க்கும் நிலையறிந்து.. அவனிடம் இருந்து விலக போராடினாள்.
அணைப்பை கூட்டி மனைவியின் நெற்றியில் முட்டியவன்.. ‘நான் சந்தோசமா இருக்கனுமா..? வேணாமா…?” என்றான் சன்னக்குரலில்.
‘சந்தோசமாத்தான் இருக்கனும்.. கொஞ்ச நேரம் மட்டும் வெளில போங்க.. முதல்ல நான் நைட்டி போட்டுக்கிறேன்.. அப்புறம் வந்து நிறைய முத்தம் கூட கொடுங்க..” என்றாள் சமாதானமாக.
அவளின் வெள்ளந்தியான பேச்சில் தன்னிலை மறந்தான் பிரசாத். திலகவதியை தூக்கி கட்டிலில் விட்டு லைட்டை அணைத்தவன் அவள்மீது படர்ந்தான். கனவிலும் நினைத்துப்பார்க்காத செயல்கள் நடந்தேற.. பலமாய் போராடியவள் பிறகு பிரசாத்திற்கு மறுக்கக்கூட திராணியற்று அவனுள் அடங்கினாள். சிறிது நேரம் அல்ல.. மீண்டும் மீண்டும் என நள்ளிரவு வரை அவர்களின் கூடல் தொடர்ந்தது. நீண்ட நேரத்திற்க்குப் பிறகுதான் திலகவதியிடம் அசைவில்லை என்றதும் பதறிப்போய் லைட்டை போட்டான்.
மயக்க நிலைக்கு சென்றிருந்தாள் திலகவதி. என்ன காரியம் செய்துவிட்டோம் என்றெண்ணி தன் தலையில் கைவைத்தவன்.. அவளுக்கு தண்ணீர் புகட்டினான். அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவும்.. நேரத்தைகூட பார்க்காமல் உடனே சூர்யாவிற்கு அழைத்தான்.
‘என்னடா இந்த நேரத்தில..?” என்று தூக்கக்கலக்கத்தோடு வினவினான் சூர்யா.
பதறியவனாய்.. திலகவதியின் நிலையை சொல்லி.. சீக்கிரம் வாடா..” என்றான் பிரசாத்.