தான் பேசிய வார்த்தையின் வீரியம் தற்போதுதான் புரிய.. ‘தெரியாம பேசிட்டேன்..” என்றாள் இறங்கிய குரலில்.
மேற்கொண்டு பிரசாத்தை பற்றி திலகவதியிடம் பேச விரும்பாதவனாய்.. கண்மூடி தன்னை சமன்செய்தவன்.. ‘நீ போய் சாப்பிடு.. எனக்கு பசியில்ல..” என்றான் கடுப்பாக.
திலகவதி நின்றே இருக்க.. சூர்யா அவளை முறைக்க.. அவனிற்க்கு பயந்து தலைகுனிந்தாலும் அவ்விடம் விட்டு நகராமல் நின்றிருக்க.. ‘என்ன..? எனக்கும் பசியில்லன்னு பொய் சொல்லப்போறியா..?” என்றான் கடுப்பாக.
சூர்யா தன்னை தவறாக நடத்தமாட்டான் என்ற நம்பிக்கை வலுப்பெற்றிருக்க.. ‘ம்கூம் அப்படி சொல்லமாட்டேன்.. எனக்கு பசிக்குது.. ஆனா நீங்க வராம சாப்பிடமாட்டேன்..” என்றாள் தைரியமாக.
பிரசாத்தின் வீடியோவை பார்க்கும் முன்.. திலகவதி இப்படி பேச்சு பேசியிருந்தால் பித்தாகியிருப்பான் சூர்யா. ஆனால் தற்போது அவளின் பேச்சை கேட்க விரும்பாதவனாய்.. ‘என் கோபத்தை கிளறாம ஒழுங்கா போய்டு..” என்றான் எரிச்சலாக.
திலகவதி கண்ணீர் வடிக்க.. அவளை சமாதனப்படுத்தும் எண்ணம் கூட தோன்றவில்லை.. கண்மூடிப் படுத்தான் அமைதியாக.
‘சரி.. நான் உங்களை தொடல.. வந்து சாப்பிட்டு படுங்க.” என்று சொல்ல..
அத்தனை வேகமாக எழுந்தவன் அவளின் கன்னத்தை அழுத்திப்பிடித்தவாறு..
‘என்ன..? என்னை தொடமாட்டியா…? அப்போ அவனையே நினைச்சிட்டிருக்கப் போறியா…?” என்று அழுத்தமாக கேட்க..
அச்சோ.. இதுக்கு இப்படி வேற அர்த்தமிருக்கா..? இன்னைக்கு ஏன் தப்பு தப்பாவே பேசுறேன் என பதறியவள்..
‘இல்லயில்ல.. அவங்களை நினைச்சிட்டு உங்களை தொடமாட்டேன்னு சொல்ல நினைச்சேன்.. மாத்தி சொல்லிட்டேன்… மன்னிச்சிடுங்க..” என்று தவிப்போடு சொல்ல..
‘அப்பவும் பிரசாத்தை இனி நினைக்க மாட்டேன்னு சொல்ல மாட்ட..? ம்ம்..?” என்று பல்லைக்கடித்தவாறு சொன்னவன்.. ‘என் பக்கத்தில படுத்துக்கிட்டு தினமும் அவனை நினைச்சி கனவு காணு..” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு நிதானமாய் சொல்லி இயர் செட்டை காதில் மாட்டி படுத்து கண்மூடினான்.
அதன் பிறகு தன் தவறுணர்ந்து திலகவதி எத்தனை மன்னிப்பு வேண்டியும் சூர்யா அசையவில்லை.. வழக்கமாய் விட்டால் போதுமென உறங்குபவளுக்கு.. இன்று ஏனோ சூர்யாவை சமாதானம் செய்யவேண்டுமென மனம் பரிதவிக்க.. தாம் என்ன பேசினாலும் அது தப்பாகிறதே என பயந்த திலகவதிக்கும் இன்று சூர்யாவை எப்படி கையாளவேண்டும் என புரியவில்லை.. சாப்பிடாமல் படுக்கிறான் என மனம் அடித்துக்கொள்ள.. தனக்கும் சாப்பிட பிடிக்காமல் போக.. அவனின் தூக்கம் கலையா வண்ணம் மெல்ல கட்டிலில் படுத்தாள்.
தாமாவது மாலை சாப்பிட்டோம்.. எனவே பசியில்லை.. திலகவதி பசியோடு படுக்கிறாள் எனத் தெரிந்தும் எதையும் கண்டுகொள்ளாமல்.. என்னையே அசிங்கமா பேச வச்சிட்டா ச்ச.. என்று கோபத்தோடு கண்மூடியவன் தூங்கியும் போனான்.
————————————————–
காலை ஐந்து மணிக்கே திலகவதிக்கு தூக்கம் கலைய.. முதலில் சூர்யாவைப் பார்த்தாள். நல்ல உறக்கத்தில் இருந்தான். கூடவே நேற்று பார்த்த வீடியோவும் நினைவு வரத்தான் செய்தது. உடனே கண்களும் கலங்க.. வேண்டாம் அவங்களை நினைக்கக் கூடாது.. தம் வாழ்வை சரிசெய்ய இவன் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து தன் கண்களைத் துடைத்தவள்..
சூர்யாவின் கோபம் குறைய இன்று நல்ல உடையாக போடலாம் என யோசித்து எழுந்தவள்.. கப்போர்டை திறக்க.. அங்கே மைல்ட் கலரில் விலையுயர்ந்த சுடிதார்கள் நிறைய இருந்தாலும்.. இவளுக்கு எந்த கலரும் பிடிக்காமல் போக..
‘என்ன துணி எடுத்திருக்காங்க..? ஒரு கலரும் நல்லாயில்ல.. எல்லாம் பழைய துணிமாதிரி இருக்கு.. இல்ல மினுக்கிட்டிருக்கு..” என முனுமுனுத்துக்கொண்டே ஒரு சுடிதாரை எடுத்தவள்.. ‘சரி பளிச்சின்னு இல்லன்னாலும் மங்களகரமா இருக்கு..” என்று ஒரு இளமஞ்சள் சுடிதாரை எடுத்தவள்.. பின்னர் குளித்து முடித்து தலையில் டவலை கட்டிக்கொண்டு வெளியே வர.. சூர்யா இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான்.
சூர்யாவின் தூக்கம் கலைக்காமல் மெதுவாக கதவைத்திறந்து வெளியே வந்தவள் வீட்டின் முன் இருக்கும் செம்பருத்திகளை பறிக்கப்போக..
முன்னமே விழித்திருந்த கமலம் வீட்டின் கதவு திறந்த சத்தத்தில்.. சூர்யாதான் கோபமாக இந்த நேரத்திலேயே ஹாஸ்பிட்டல் போக எழுந்துட்டானா..? நைட் சாப்பிட்டாங்களா..? இல்ல சண்டை போட்டாங்களான்னு தெரியலையே என பலவாறு யோசித்தபடி.. நழுவியிருந்த உடையை சரிசெய்து தனது படுக்கையிலிருந்து எழுந்து வீல்சேரில் அமர்ந்து வெளியே வருவதற்க்குள் பத்து நிமிடம் முடிந்திருக்க..
அங்கு பூஜையறையில் அனைத்து சுவாமிக்கும் புதுமலர் சூட்டி.. அழகான உடையில் கண்மூடி வேண்டிக்கொண்டிருந்த மருமகளை கண்டதும் பெருத்த நிம்மதியடைந்தார் கமலம்.
வழக்கமாக காலையில் கமலம்தான் பூஜை செய்வார். திலகாவிற்க்கு பூஜிக்கும் பழக்கமே இல்லை என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால்தான் பழக்கம் வரவேண்டும் என எண்ணி மாலையில் பூஜை செய்ய பணித்திருந்தார்.
இன்று தாம் சொல்லாமலே திலகா சுவாமி முன் நின்றிருக்க.. ம்ம் சூர்யா சொன்னது போல கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
‘அத்தை எழுந்திட்டிங்களா..? வாங்க குளிப்பிங்களாம்..” என்று நேற்றிருந்த முக சுணக்கம் எதுவும் இல்லாமல் இயல்பாய் சொல்ல..
‘ம்ம்..” என்றபடி தனதறை நோக்கி உள்ளே போக.. இவள் முன் கதவை தாழிட்டு கமலம் அறைக்கு போனாள். பின்னர் கமலம் குளிக்க.. உடைமாற்ற என வழக்கமாக செய்யும் உதவிகளை செய்து முடித்து.. ‘நான் போய் உங்களுக்கு டீ வைக்கிறேன்..” என சொல்லி சமையலறைக்கு வந்தாள்.
இவள் கிரீன் டீ யோடு வெளியே வர.. கமலமும் கடவுளை வணங்கி வந்து இவளிடம் டீ யை வாங்கியவர்.. ‘நீ குடிக்கல..?” என்றார்.
‘பால் அடுப்புல வச்சிருக்கேன்..” என்று சொல்லும்போதே வெளியிலிருந்து முத்து அழைக்க.. கதவைத்திறந்தவள் ‘வாங்க அண்ணா.. இன்னைக்கென்ன சீக்கிரம் வந்துட்டிங்க..?” என்று அவரிடமும் இயல்பாய் பேச..
‘நேத்து நைட் வள்ளிக்கு ரொம்ப முடியாம போய்டுச்சி.. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன்.. பெட்ல சேர்த்த சொல்லிட்டாங்க.. இங்க சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்பலாம்னு வந்தேன்..” என்று சோர்வாக சொல்ல..
‘அண்ணா இங்க நான் பார்த்துக்கிறேன்.. நீங்க போய் அக்காவை பாருங்க..” என்று திலகவதி சொல்ல..
‘இல்ல பாப்பா.. தம்பி வேலை பார்க்குற ஆஸ்பத்திரிலதான் சேர்த்திருக்கேன்.. அங்க எல்லாருக்கும் வள்ளியை தெரியும்.. நர்ஸ் பொண்ணுங்க நல்லா பார்த்துப்பாங்க.. நான் டிபன் செய்திட்டே போறேன்..” என்று சொல்ல..
நர்ஸ் பார்த்துக்கிறாங்களா..? என யோசித்தவள்.. ‘ஏண்ணா உங்க பிள்ளைங்க வேற ஊர்ல இருக்காங்களா..?” என கேட்க..
‘திலகா இங்க வா..” என அவசரமாக அழைத்தவர்.. ‘நீ போய் வேலை பாரு முத்து..” என்றனுப்பி.. திலகவதியிடம்.. ‘முத்துக்கு குழந்தைங்க கிடையாது.. இனி அவன்கிட்ட இப்படி பேசாத…” என்று கமலம் சொல்ல..
‘அச்சோ பாவம்..” என்று திலகவதி முனுமுனுக்க..
‘ம்;ம்.. பாவம்தான்.. பொண்ணோ பையனோ.. அவனுக்குன்னு இருந்திருந்தா இப்படி அடுத்தவங்களை நம்ப தேவையிருக்காது..” என்று சோர்வோடு சொல்ல..
‘ஆமாம் அத்தை..” என்று திலகவதியும் சோகமாய் சொல்ல..
‘என் மகனுக்கும் முத்துவோட நிலைமை வந்திடக்கூடாதுன்னுதான் தினமும் கடவுளை வேண்டிக்கிறேன்..” என்று சொல்லி திலகவதியை ஆழ்ந்து பார்த்தார்.
தடுமாறி தலைகுனிந்த திலகவதியின் கண்கள் குளமானது. இனி பிரசாத்தை நினைக்கக் கூடாது.. சூர்யாவை கோபப்படுத்தக் கூடாது.. அவன் விரும்பும் வகையில் நல்ல உடையணிய வேண்டும் என நினைத்திருந்தவளுக்கு.. இன்னும் சூர்யாவோடு சேர்ந்து வாழ்வதைப் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை.
அதை அவளின் முகமும் அப்பட்டமாய் காட்டிக்கொடுக்க.. ‘என் மகனுக்கு இன்னும் நாலு மாசத்தில இருபத்தொன்பது தொடங்கப்போகுது… காலா காலத்தில குழந்தை பிறந்தாதான் அவன் ஆஞ்சி ஓஞ்சி உக்காரும் போது.. உங்களைப் பார்த்துக்க உங்க பிள்ளைங்க பருவத்தில இருப்பாங்க..
இல்ல நீங்க கிழவன் கிழவி ஆகிடுவிங்க.. அப்போதான் உங்க பிள்ளைங்களும் அறியா பருவத்தில இருப்பாங்க.. அந்த வயசில உங்களாலத்தான் குழந்தைகளை சரியா வளர்க்க முடியுமா..? இல்ல உங்களுக்கு ஒன்னுன்னா குழந்தைகளுக்குத்தான் பார்க்கத் தெரியுமா..?” என்றார் கடுப்பாக.
பேச்சற்ற நிலையில் திலகவதி தலைகுனிந்த நிலையிலேயே இருக்க.. சூர்யா ரெடியாகி வெளியே வந்தான. கமலம் குழந்தைப் பிறப்பு பற்றி பேசியதை உள்ளிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தான். எதையும் வெளிக்காட்டாமல் வெளியே வந்தான்.
‘என்ன சூர்யா..? இந்நேரத்துக்கே ரெடியாய்ட்ட..?” என்று கமலம் கேட்க..
‘ஹாஸ்பிட்டல்ல இருந்து ‡போன் வந்ததுமா.. கொஞ்சம் சீக்கிரம் போகனும்.. டைம் இருந்தா லன்ச்சுக்கு வரேன்.. இல்ல அங்கையே பார்த்துக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே வெளியேற எத்தணிக்க..
‘கா‡பியாவது குடிச்சிட்டு போங்க..“ என்று அவசரமாய் கிச்சனுக்குள் ஓட.. ஒரு நிமிடம் தயங்கி நின்றவன்.. மீண்டும் வெளியேற எத்தணிக்க..
‘அவதான் சொல்றாள்ல..? காபி குடிச்சிட்டு போ..” என்று கமலம் கடுகடுக்க..
சோபாவில் வந்தமர்ந்தான் அழுத்தமான முகத்தோடே..