அத்தியாயம் — 3
குப்பென்று தூக்கம் தெளிந்த சூர்யாவோ.. அரைமணிநேரத்தில் பிரசாத்தின் வீட்டிற்கு வந்தான். பதட்டத்தில் திலகவதிக்கு நைட்டி போட்டுவிடும் எண்ணம்கூட இல்லாமல்.. பாவாடை ஜாக்கட்டோடே தன் மடிமீது படுக்கவைத்திருந்தான்.
வெளியில் இருந்து பிரசாத்திற்கு அழைப்புவிடுக்கவும்.. ‘வா.. சூர்யா..” என்று அவனை உள்ளே அழைத்துப்போனான். உள்ளே போனதும் பக்கத்தில் இருந்த பெட்சீட்டை எடுத்து சூர்யாதான் திலகவதியின் மீது போட்டுவிட்டான். பிறகு அவளின் பல்சை செக்செய்தவன் ஒரு இன்ஜெக்சனை போட்டு..
‘நான் கொஞ்சம் வெளிய இருக்கேன்.. நீ முதல்ல இவங்களுக்கு நைட்டி போட்டுவிடு..” என்று வெளியே வந்தான் சூர்யா.
திலகவதிக்கு நைட்டி போட்டுவிடும்போதுதான் அவளின் நிலையை அறிந்து துடித்துப்போனான் பிரசாத்.
சற்று நேரம் கழித்து வெளியிலிருந்து.. ‘ஆச்சா..” என்றான் சூர்யா.
‘வா..சூர்யா.. “ என்றவனுக்கோ குரலே வெளி வரவில்லை.
உள்ளே வந்த சூர்யா பிரசாத்திடம்.. ‘இப்ப உனக்கே அவங்களோட நிலை என்னன்னு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னான்.
‘நிஜம்மா இப்படி நடந்துக்கனும்னு நான் நினைக்கவே இல்லடா.. நாலுநாளா இவளை நெருங்காமத்தான் இருந்தேன்.. ஆனா இன்னைக்குத்தான்..” என்று கண்கலங்கி தலைகுனிந்தான் பிரசாத்.
‘உன்னை நெருங்க வேணாம்னா சொன்னேன்..? சின்னப்பொண்ணா இருக்காங்க.. பார்த்து நடந்துக்கோன்னுதான சொன்னேன்..? பொண்டாட்டின்னாலும் இப்படியாடா..?” என்று மிகுந்த வருத்தத்தோடும் உரிமையோடும் நண்பனை அதட்டிக்கொண்டிருக்க..
இவர்களின் பேச்சரவத்திலும்.. ஹாலின் லைட் வெளிச்சத்திலும் எழுந்த அன்னபூரணி.. ‘பிரசாத்..” என்று குரல் கொடுக்கவும்..
‘வாங்கம்மா..” என்றான் சூர்யா.
‘என்ன ஆச்சி சூர்யா..? நீ என்ன இந்த நேரத்தில இங்க இருக்க..?” என்றார்.
‘இவன் சந்தோசத்துக்காக திலகவதி மயக்கமாய்ட்டாங்க..” என்று சுருக்கமாக முடித்தான் சூர்யா.
சட்டென நிலைமையை புரிந்துகொண்ட அன்னபூரணி.. ‘நான் போய் டீ வச்சிட்டு வரேன்..” என்று அங்கிருந்து சங்கடத்தோடும் சந்தோசத்தோடும் வெளிவந்தார்.
‘சூர்யா.. நான் நாளைக்கு ஊருக்கு போகனும்.. இங்க வீட்லயே நீ கொஞ்சம் வந்து பார்த்துக்கோ.. உன்னை நம்பித்தான் நான் போறேன்..” என்றான்.
‘என்ன பிரசாத்..? ஒருமாசம் லீவ் இருக்குன்னுதான சொன்ன..? இப்ப என்ன நாளைக்கே போகனும்ங்கிற..? இந்த மாதிரி நேரத்தில நீ பக்கத்தில இல்லன்னா.. பாவம்டா இவங்க..” என்றான் சூர்யா.
‘ஆர்மில ஒரு சில நேரம் இப்படி லீவ் கேன்சலாகறது சகஜம்தான்.. குடும்பத்தை பார்த்தா நாட்டை பார்க்க முடியாதுடா.. எங்கம்மாக்கே ஒன்னுன்னாலும் எனக்கு நாடுதான் முக்கியம்..‚ மறுபடியும் சொல்றேன்.. உன்னை நம்பித்தான் நான் ஊருக்கு போறேன்.. இவளை பத்திரமா பார்த்துக்கோ..” என்று அவனின் கையை பிடித்து கெஞ்சுவதுபோல் சொன்னான்.
டீயோடு வந்தவர்.. ‘என்ன பிரசாத் நாளைக்கே போகனும்ங்கிற..? பாவம்டா.. திலகவதி..” என்றார் அன்னபூரணியும்.
தான் செய்த செயலுக்கு தன் அம்மாமீது கோபம் கொண்டு.. ‘என் வேலை இப்படின்னு தெரிஞ்சிதான இவளை எனக்கு கல்யாணம் பண்ணிவச்சிங்க.? நான் பக்கத்தில இல்லன்னாலும் இவளை சந்தோசமா பார்த்துக்க வேண்டியதும் உங்க பொறுப்புதான்..” என்று கட்டளையாக சொன்னவன்.. மணி பார்க்க நள்ளிரவு ஒன்றரையை காட்டியது கடிகாரம்.
இன்னும் மூன்று மணிநேரம்தான் நம்மால் இவளோடு இருக்கமுடியும்.. என்று வேதனையாக நினைத்தவன்.. ‘நான் கொஞ்சம் என் பொண்டாட்டியோட தனியா இருக்கனும்.. நீங்க ரெண்டுபேரும் கிளம்புங்க..” என்றான் தலைகுனிந்து.
‘இன்னும் கொஞ்சநேரத்தில இவங்க மயக்கம் தெளிஞ்சிடும்.. அவங்க எழுந்ததும் இந்த டேப்லெட்டை கொடு..” என்று சொல்லி கிளம்பினான் சூர்யா.
சூர்யாவோடே அன்னபூரணியும் வெளியே வந்ததும்.. திலகவதின் நெற்றியிலும் கண்களிலும்.. மாறி மாறி முத்தமிட்டு கண்ணீர் வடித்தான் பிரசாத். அதில் மயக்கம் தெளிந்த திலகவதி.. பிரசாத்தை மிரண்டுபோய் பார்த்தாள்.
குரலிறங்கியவனாய்.. ‘என்னை மன்னிச்சிடு..” என்று அவளின் கைகளை தன் கண்களில் ஒற்றியவன்.. கலங்கிய கண்களோடு மனைவியைக் காணவும்..
‘பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு.. பெரிய வேலையெல்லாம் பார்க்கிறிங்கன்னு எங்கம்மா சொன்னாங்க.. அப்போ எதுக்கு இப்படி கெட்ட விசயம்ல்லாம் செய்திங்க..? எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. நான் கூட செத்தே போய்டுவேன்னு நினைச்சேன்..” என்று அழுதுகொண்டே இன்னும் என்ன சொல்ல வந்தாளோ.. அவளின் வார்த்தைகளை தாங்கமுடியாதவனாய்.. மனைவியின் வாயை தன் கரம் கொண்டு மென்மையாய் மூடியவன்..
‘உன் அனுமதி இல்லாம எத்தனை வருசமானாலும் இனிமே உன்கிட்ட இப்படி தப்பா நெருங்கவேமாட்டேன்.. இது எங்கம்மா மேல சத்தியம்..” என்றான் குரலிறங்கியவனாய்.
‘நிஜம்ம்மா..?” என்றாள் கண்களை உருட்டி.
‘நிஜம்மாதான் சொல்றேன்.. உனக்கு எந்த சாமி பிடிக்கும்னு சொல்லு.. அந்த சாமிமேல சத்தியம் செய்றேன்..” என்றான் அவளை தேற்றும் விதமாக.
பிரசாத்தின் வார்த்தையில் உண்மை இருப்பதாய் உணர்ந்த திலகவதிக்கு.. சற்று நிம்மதி பிறக்க.. ‘சத்தியம் செய்ய வேண்டாம்.. நான் உங்களை நம்புறேன்..” என்று திலகவதி சொல்ல.. சற்றே நிம்மதியடைந்தவன்..
‘இந்த மாத்திரைய குடி..” என்றான் அனுசரனையாக.
திலகவதி பயந்துபோய் பார்க்கவும்.. வேதனையோடு.. ‘உனக்கு வலி இல்லாம இருக்கத்தான் இந்த மாத்திரை.. டாக்டர் கொடுத்ததுதான் பயப்படாம குடி..” என்று தண்ணீர் எடுத்துக்கொடுத்தான். திலகவதி மாத்திரையை குடித்ததும்..
‘ரெண்டு நாளைக்கு முன்னாடி என் பிரெண்டு சூர்யா வந்திருந்தான்ல..? அவன்தான் இப்ப வந்து உன்னை செக்பண்ணிட்டு மாத்திரை கொடுத்திட்டுப்போனான்.. நாளைக்கும் வருவான்.. ஒரு டாக்டரா உன்னை செக்பண்ணும்போது.. அன்னைக்கு கைகுடுக்காம இருந்தியே அதுமாதிரி அவனை தொட வேணாம்னு சொல்லகூடாது.. புரியுதா..?” என்றான் தன்மையாகவே.
‘பொம்பளை டாக்டரை கூப்பிட்டிருக்கலாமில்ல..? ஆம்பிளை டாக்டரை எதுக்கு கூப்ட்டிங்க..?” என்று கோபம் காட்டினாள்.
‘இந்த டைம்க்கு மத்த டாக்டருங்க வீட்டுக்கு வருவாங்களா..? என் பிரண்டுங்கிறதால இவன் வந்தான். டாக்டர்ல ஆம்பிளைன்னா என்ன? பொம்பளைன்னா என்ன..? நம்ம வீட்ல யாருக்கு முடியலைன்னாலும் அவன்தான் பார்ப்பான்.. நான் இல்லாத டைம்ல உனக்கு எதாவது உடம்பு முடியலைன்னாலும் அம்மாகிட்ட சொல்லு.. அவங்க சூர்யாவை வரசொல்லி பார்த்துக்குவாங்க..” என்றான்.
பிரசாத் சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தாள். சற்றுநேரம் அவளையே பார்த்திருந்தான். பிறகு.. ’நான் காலைல ஐஞ்சிமணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்.. எழுந்ததும் எனக்கு டீ கொடுக்க என்னை தேடிட்டிருக்காத..” என்றான் கரகரத்த குரலில்.
‘எங்க போறிங்க..?” என்றாள் தலைகுனிந்தபடியே..
‘அப்படி கேக்கக்கூடாது.. போய்ட்டு வாங்க சொல்லனும்..” என்றான் தன்மையாக.
‘ம்ம்..” என்றாள் சமத்தாக.
‘நான் உன்னை கூப்பிடும்போதெல்லாம் உங்களுக்கு என்ன வேணும்னு கேப்பயில்ல..? எனக்கு உண்மையா என்ன வேணும்னு சொல்றேன் கவனமா கேட்டுக்க..
நான் ஊர்ல இல்லைன்னாலும் நீ எப்பவுமே ரொம்ப சந்தோசமா இருக்கனும்.. டைம்க்கு சாப்பிடனும்.. தினமும் தலைபின்னி பூ வச்சிக்கனும்.. உனக்கு என்ன வேணும்னாலும் எங்கம்மாகிட்ட கேளு.. அவங்க உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க.. எங்கப்பம்மா என்ன சொன்னாலும் உன் நல்லதுக்குத்தான் சொல்வாங்க.. புரியுதா.?” என்று கேட்கவும்.. அவனை பாராமல் சரி என்று தலையசைத்தாள்.
ஒருமாதம் இங்குதானே இருப்போம் என்று நினைத்திருந்த பிரசாத்திற்கு.. நாளையே பணிக்கு திரும்பும் நிலைவரவும்.. தற்போது போனால் எத்தனை மாதமாகுமோ என கவலையோடு நினைத்திருந்தான். திலகவதியோடு பேசவும்.. அவளிற்கு ஆறுதலளிக்கவும்.. இன்னும் நிறைய நிறைய விசயங்கள் பிரசாத்திற்கு இருந்தாலும்.. தற்போதைய அவளின் உடல்நிலையை நினைத்து.. ‘சரி தூங்கு..” என்றான்.
படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.. அவளின் கண்கள் மூடியிருந்தாலும் கண்மணிகள் உருண்டுகொண்டே இருந்தது. ஒருமணிநேரத்திற்கு பிறகு திலகவதி உறங்கியபிறகும்.. அவளையே பார்த்திருந்தான் அதிகாலை நான்கு மணிவரை.
பிறகு குளித்து பணிக்கு தயாரானவன்.. அசதியாய் தூங்கிக்கொண்டிருக்கும் மனையாளுக்கு கணக்கிலடங்கா நெற்றிமுத்தம் வைத்து.. திலகாவின் தலைகோதி ரூமின் கதவுவரை வந்தவன்.. மீண்டும் மனைவியிடம் சென்று ஐந்து நிமிடம்வரை மனைவியையே பார்த்திருந்து அவளின் பாதம்வரை போர்த்திவிட்டு.. பிறகு சத்தமில்லாமல் கதவை சாத்தி வெளியே வந்தவன்..
தன் தந்தையை மட்டும் எழுப்பி அவரிடம் தான் புதிதாய் ஆற்றப்போகும் பணிவிபரம் சொல்ல.. மூர்த்தி அதிர்ச்சியாகவும்.. ‘கவலைப்படாதிங்கப்பா எனக்கு ஒன்னும் ஆகாது..” என்றவன் திலகவதியின் உடல்நிலையையும் சொல்லி..
‘திலகவதியை பத்திரமா பார்த்துக்கோங்கப்பா..” என்று அதையே இரண்டு மூன்றுமுறை திரும்ப திரும்ப சொல்லி.. தந்தையிடம் ஆசி பெற்று..
‘அம்மா தூங்கிட்டிருக்காங்க.. எழுந்ததும் சொல்லிடுங்க.. பாவம் நைட் கொஞ்சம் கோபமா பேசிட்டேன்..” என்று தாய்க்காகவும் வருந்தி.. விடைபெற்றான் பிரசாத்.
காலை ஏழுமணிக்கு மேலாகியும் திலகவதி கண் விழிக்கவில்லை.. அவளை பார்ப்பதற்க்காக சூர்யா வந்தான். ‘வா சூர்யா..” என்ற அன்னபூரணியின் முகம்.. மகன் இல்லாமல் வாடியிருந்தது.
‘அவங்க எப்படிம்மா இருக்காங்க..? பிரசாத் காலைல வந்து பார்க்க சொல்லிட்டு போனான். அதான் வந்தேன்..” என்றான்.
‘தூங்கிட்டிருக்கா சூர்யா.. எழுப்பட்டுமா..?” என்றார்.
‘இல்லம்மா தூங்கி எழட்டும்.. நான் வெய்ட் பண்றேன்..” என்று சோபாவில் உக்கார்ந்தான். நவீனின் மனைவி சூர்யாவிற்கு டீ கொடுக்க.. வாங்கி அருந்தியவன் திலவதியின் கண்விழிப்பிற்க்காக காத்திருந்தான்.
ஏழரை மணிக்குமேல் திலகவதியின் அறையில் கொலுசு சத்தம் கேட்கவும்.. அன்னப்பூரணி உள்ளே போனார். திலகவதி சோர்ந்துபோய் இருந்தாள். ‘ஹீட்டர் போட்டுக்கோ அப்பதான் உடம்புவலி போகும்..” என்று கனிவாய் சொன்னார்.
‘ம்ம்..” என்று உள்ளே போய் குளித்து வந்தவளிடம்.. டீயை கொடுத்தார் அன்னபூரணி. ‘அச்சோ.. நீங்க எதுக்கு எனக்கு கொடுக்கிறிங்க..? நானே போட்டுக்குவேன்..” என்று பதறியபடி சொன்னாள்.
‘பிரசாத்துக்குத்தான் நீ பொண்டாட்டி.. எனக்கு நீ என் பொண்ணுமாதிரி.. சங்கடப்படாம குடி..” என்றார் வாஞ்சையாக.
‘ம்ம்..” என்று மண்டையை உருட்டிய திலகவதி டீ குடித்து முடித்ததும்.. ‘சூர்யா உன்னை பார்க்க வந்திருக்கான்.. வா..” என்றார்.
‘அம்மா எனக்கு ஒன்னுமில்ல.. அதுவுமில்லாம ஆம்பளை டாக்டர் வேணாம்.” என்று முகம் சுழித்தாள்.
தன்னை அம்மா என்றழைத்ததில் சந்தோசமடைந்த அன்னபூரணி.. ‘அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்வேன்.. சூர்யாவும் என் மகன்மாதிரிதான். அவன் எவ்ளோ பெரிய டாக்டர் தெரியுமா..? அவனை பார்க்கிறதுக்காக ஹாஸ்பிட்டல்ல எத்தனை பேர் காத்திட்டிருக்காங்க.. ஆனா அவன் ஒருமணிநேரமா உனக்காக காத்திட்டிருக்கான்.. வா..” என்று தன்மையாக சொல்லி வெளியே அழைத்துவந்தார்.
இவர்கள் உள்ளே பேசியது சூர்யாவிற்கு நன்றாக கேட்டது. திலகவதி வெளியே வரவும்.. பக்கத்தில் உள்ள சேரை காண்பித்து.. ‘உக்காருங்க..” என்றான் சூர்யா.
அவள் உக்காரவும்.. ‘இப்ப பிலீடிங் நின்றுச்சிங்களா..?” என்றான்.
‘என்ன கேக்குறிங்கன்னு புரியலை..” என்றாள்.
‘இரத்தப்போக்கு நின்றுச்சிங்களா..? இப்போ வலி பராவயில்லையா..?” என்று அவளை பார்க்கவும்.. அறுவறுப்பாய் முகம்சுழித்து எழுந்து ரூமிற்குள் போய்விட்டாள்.
‘இரு சூர்யா நான் போய் கேட்டுட்டு வரேன்..” என்று அன்னபூரணி உள்ளே போகவும்..
‘அம்மா நான் ஆம்பளை டாக்டர்கிட்ட இதெல்லாம் சொல்லமாட்டேன்.. அவங்களை போகசொல்லுங்க..” என்று கோபமாக முகம் திருப்பினாள்.
‘சரி.. அவன்கிட்ட சொல்லவேணாம்.. என்கிட்ட சொல்லு..” என்றார்.
‘எனக்கு சரியாய்டுச்சிம்மா.. ஆனா அலுப்பா இருக்கு..” என்றாள்.
அன்னபூரணி சூர்யாவிடம் வந்து அவளின் நிலையை சொல்லவும்.. ‘இந்த டேப்லட்டை சாப்பிட்டதுக்கு அப்புறம் குடிக்க சொல்லுங்க.. நான் இரண்டு நாள் கழிச்சி வந்து பார்க்கிறேன்.. “என்று கிளம்பினான்.
சொன்னதுபோலவே இரண்டு நாள் கழித்து வந்து திலகவதியை பார்த்தவன்.. அவளின் முகத்தில் பிரசாத் ஊரில் இல்லை என்ற வருத்தம் இருப்பதாக தெரியவில்லை என்றதும்…
‘பிரசாத் ரொம்ப நல்லவன்..” என்று சூர்யா ஆரம்பிக்கும்போதே.. ‘எனக்கு நல்லாயிடுச்சி.. நீங்க பெரிய டாக்டர்ன்னு சொன்னாங்க.. உங்களுக்கு நிறைய வேலையிருக்கும் நீங்க கிளம்புங்க..” என்று வெடுக்கென சொல்லி உள்ளே போய்விட்டாள் திலகவதி.
‘தப்பா நினைக்காத சூர்யா.. திலகவதி ரொம்ப இன்னொசன்ட்..” என்று நவீன் சூர்யாவிடம் எடுத்துரைக்க.. ‘யா ஐ நோ.. “ என்றான் சூர்யா.
‘அப்புறம்.. நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப்போற..?” என்றான் நவீன்.
‘உனக்கு யாராவது மச்சினிச்சி இருந்தா சொல்லு.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட்டுடறேன்..“ என சொல்லி சூர்யா சிரிக்க..
‘மச்சினிச்சியை சைட் அடிக்கிற கொடுப்பனை இல்லையேன்னு.. நானே வருத்தத்தில இருக்கேன்.. இதுல உனக்கு வேற சொல்லனுமா..?” என்று நவீன் கிண்டல் கலந்த சோகத்தோடு சொல்ல..
‘ஓ.. அத்து வேறவா.. உன்க்கு நானே ரொம்ப தாஸ்த்தி..” என்று தற்போதுதான் தமிழ் கற்றுகொண்டிருக்கும் நவீனின் மனைவி முறைப்பாய் சொல்ல..
‘ஏய்.. நாங்க இவ்ளோ ஸ்பீடா பேசியும்.. உனக்கு தமிழ் புரிஞ்சிடுச்சா..?” என்றான் பொய்யான பயத்தோடு.
‘சிஸ்டர்கிட்ட இவ்ளோ பயம் இருக்கு.. அப்புறம் எதுக்கு நமக்கு தேவையில்லாத வேலை..?” என்று சிரித்தவன்.. ‘இவனை இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க சிஸ்டர்..” என்று சிரிப்போடு சொன்னவன்..
‘நவீன்.. திலகவதி பிரசாத்தை தப்பா நினைச்சிட்டிருக்காங்க.. நீ ஊருக்கு போறதுக்குள்ள அவங்ககிட்ட பிரசாத்தை பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லு.. இப்டியே நினைச்சிட்டிருந்தாங்கனா.. பிரசாத் ஊருக்கு வந்தாலும் அவனோட சந்தோசமா வாழமாட்டாங்க.. பிரசாத் திரும்பவும் ஊருக்கு வரதுக்குள்ள சிஸ்டர்கிட்ட சொல்லி பிசராத்தை புரிய வைங்க..” என்றான் அக்கறையாக.
சரி என்பதாய் நவீன் தலையசைக்க.. நிம்மதியாக கிளம்பினான் சூர்யா.