ஆதவன் சொன்னதுபோல் பிரசாத்தின் வீட்டிற்கு போகமல் இருப்பது சூர்யாவிற்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.. வாரம் ஒருமுறை போய் பார்த்துவிட்டுதான் வருவான்.. பிரசாத் உயிரோடு இருக்கும்போதே அவன் ஊரில் இல்லாத போது.. சூர்யா வாரம் ஒருமுறை அவர்களை பார்க்க போவது வழக்கம்தான் என்பதால் பிரசாத்தின் அம்மாவிற்கும் அது சந்தோசத்தையே கொடுத்தது.
ஆனால் திலகவதிதான்.. சூர்யாவின் பேச்சு சத்தம் கேட்டுவிட்டால்.. வெளியில் கூட வரமாட்டாள். அது சூர்யாவிற்கும் அவ்வளவு கோபத்தை உண்டு பண்ணும்.. இருந்தாலும் வெளிகாட்டிக்கொள்ள மாட்டான். முடிந்தவரை இயல்பாகவே இருப்பான்.
தினமும் சோனுவிடமும்.. தியாவிடமும் ஸ்கைஃ பில் பேசும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சூர்யாவின் முகம் சோர்வாகத்தான் இருக்கும்.. கமலத்திற்கு சூர்யாவின் கவலைதான் எப்பொழுதும்.. முதலிலெல்லாம் கல்யாணப் பேச்செடுத்தால் வேண்டாம் என்று தன்மையாக சொல்லிகொண்டிருந்தவன்.. இப்பொழுதெல்லாம் தன் அம்மாவிடமே கோபமாக பேச ஆரம்பித்திருந்தான். திலகவதியின் இறுகிய முகத்தால் சூர்யாவாலும் மருத்துவமணையில் கூட இயல்பாய் இருக்க முடிவதில்லை.
மருத்துவமணையில் ஒரு நர்ஸ்.. ‘சூர்யா சார் ஏண்டி இப்படி இருக்கார்..? குழந்தைகள் யாராவது அட்மிட் ஆகிட்டா.. வீட்டைக்கூட மறந்து குழந்தைகளோட பேசிட்டிருப்பார்.. இப்போல்லாம் குழந்தைகள் கிட்டகூட சரிவர பேசமாட்றார்.. “ என்று இருவர் பேசிக்கொள்வது சூர்யாவின் காதிலும் விழவே..
அம்மாகிட்ட நல்லா பேசிக்கூட ரொம்ப நாளாச்சி.. நாம ஏன் இப்படி இருக்கோம்..? என சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டவன்.. ஹோம் பக்கம் போயே ஐஞ்சி மாசத்துக்கு மேல ஆகிடுச்சி.. அங்கயிருக்க குழந்தைகளையாவது போய் பார்த்திட்டு வரலாம் என்றெண்ணி.. நிறைய திண்பண்டங்கள் வாங்கிக்கொண்டு கிளம்பினான்.
இல்லத்தின் வாசலில் சூர்யாவின் காரைப்பார்த்ததும் சந்தோசமிகுதியில் குழந்தைகள் ஆர்பரிக்கவும்.. ‘ச்ச.. இத்தனை நாள் இவங்களை தவிக்க விட்டுட்டோமே என்ற வருத்தத்தோடே உள்ளே வந்தவன்.. குழந்தைகளிடம் இரண்டு மணிநேரத்திற்கு மேல் செலவிட்டு.. பிறகு முதியோர் இல்லத்திற்கு கிளம்பினான்.
வெகுநாட்களுக்கு சூர்யாவைப் பார்த்த பெரியவர்கள்.. ‘எங்களையெல்லாம் மறந்திட்டிங்களா தம்பி..” என்று கண்கலங்கினர்.
‘அப்படி இல்லங்கம்மா.. ஹாஸ்பிட்டல்ல வேலை அதிகம்.. அதான் வரமுடியல..” என்று அவர்களை தேற்றும் விதத்தில் தன்மையாக சொன்னான்.
‘நான் கூட கல்யாணம் ஏது செய்துகிட்டிங்களோன்னு நினைச்சேன் தம்பி..” என்று சந்தோசத்தோடு ஒரு பெரியவர் சொல்ல.. உடனே சட்டென திலகவதியின் முகம்தான் சூர்யாவின் நினைவில் வந்தது.
சிரித்தவன்.. ‘உங்ககிட்ட சொல்லாம.. உங்க ஆசிர்வாதம் இல்லாம என் கல்யாணம் நடக்காதுங்கய்யா..” என்றான் இயல்பாக.
‘வர நேரமில்லன்னாலும் எங்களுக்கு தேவையானதை செய்யிறதில எப்பவும் நீங்க தவறனதில்ல.. எங்களை சந்தோசமா பார்த்துகிட்டு உங்க சந்தோசத்தை மறந்திடாதிங்க தம்பி… உங்களுக்கு ஒரு கல்யாணம் நடந்து நீங்க சந்தோசமா இருக்கிறதை பார்க்கனும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு.. எப்போ தம்பி கல்யாண சாப்பாடு கிடைக்கும்..?” என்றார் அந்த பெரியவர்.
‘எனக்கு பிடிச்ச பொண்ணுக்கு என்னை பிடிக்கலயே பெரியவரே..” என்று சின்ன சிரிப்போடு சொல்ல..
‘இந்த தங்கத்தைக்கூட பிடிக்கலன்னு சொல்ல ஆளிருக்கா..? யாரு கண்ணு அது..? எங்ககிட்ட சொல்லு.. அந்த பொண்ணுகிட்ட நாங்க பேசுறோம்..” என்று ஒரு வயதான பெண்மணி அங்கலாய்க்க..
‘வருத்தப்படாதிங்கம்மா.. பொண்ணோட விருப்பத்தை நாம மதிக்கனும்ல..?” என்று அந்த பெண்மணியை சூர்யா தேற்ற..
‘உங்களைக் கட்டிக்க கசக்குதாம்மா கண்ணு..? அப்படிப்பட்ட பொண்ணே உங்களுக்கு வேண்டாம்.. நீங்க கல்யாணம் செய்துக்கப்போறிங்கன்னு தெரிஞ்சா எத்தனை பேர் உங்களுக்கு பொண்ணுகொடுக்க போட்டிப்போடுவாங்க.. உங்க அம்மாகிட்ட சொல்லி உங்க அன்பை புரிஞ்சி நடந்துக்கிறமாதிரி வேற நல்ல பொண்ணா பாருங்க கண்ணு..” என்று தவிப்போடு சொல்ல..
அப்பொழுதும் குறையாத ஆற்றாமையில்.. ‘அடுத்தமுறை வரும்போது அம்மாவை கூட்டிட்டுவாங்க கண்ணு.. நாங்க அம்மாகிட்ட பேசுறோம்..” என்றார்.
எத்தனை கோடி பணமிருந்தாலும் இப்படி பாசம் கிடைத்திடுமா..? என்ற பெருமையோடு அப்பெண்மணியை பார்த்தவன்.. ‘சரிங்கம்மா..” என்று சிரிப்போடு சொல்லி மற்றவர்களிடமும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு விடைபெற்றான்.
இலகுவான மனநிலையோடு வீட்டிற்க்கு வந்தவனுக்கோ திலகாவைப் பற்றிய எண்ணமேதான் வலம் வந்தது. திருமணம் என்றதும் திலகாவின் முகம் மனதில் தோன்றியதை நினைத்துக்கொண்டே தன்னை சுத்தம் செய்தவன்.. அறையிலுள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான்.. முகமும் பொலிவைக் காட்ட.. சிறு வெக்கம் கூட தோன்றியது சூர்யாவிற்க்கு.
இதென்ன..? பொண்ணுங்க மாதிரி நாமும் கண்ணாடி பார்த்து சிரிச்சிட்டிருக்கோம் என்று தன்னைத்தானே வேடிக்கையாய் நினைத்தவன்.. ம்ம் கண்ணாடி பார்க்கிறதுக்கு ஆணென்ன..? பெண்ணென்ன..? என்று நினைத்தவனின் மனம் உல்லாச மனநிலையில் இருக்க..
தன் அம்மாவைத் தேடி ஹாலுக்கு வந்தான்.. ‘முத்து.. அம்மா சாப்ட்டாங்காளா..?” என கேட்கவும்..
‘அம்மா எப்பவும் எட்டு மணிக்கே சாப்பிட்ருவாங்க தம்பி.. நீங்க வரும்போதே ஒன்பது மணி.. நீங்க வர கொஞ்சம் முன்னதான் தூங்க போனாங்க..” என்றார் முத்து.
அடுத்த நாள் காலை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூர்யா ஹாஸ்பிட்டல் போகமாட்டான்.. நேரம் பொறுத்துதான் எழுவான் எனத்தெரிந்த கமலம் தன் மகனுக்காக காத்திருந்தார்..
கமலம் நினைத்தது போலல்லாமல்.. இதோ குளித்து ரெடியாகி வந்தான்.
‘என்ன சூர்யா..? இன்னைக்கும் ஹாஸ்பிட்டல் போகனுமா..?” என கமலம் ஏமாற்றத்தோடு கேட்க.. ‘ஆமாம்மா.. ஏன் கேட்க்கிறிங்க..?” என்று தன்போல் கேட்க..
‘இன்னைக்கு ஞாயித்துக் கிழமை சூர்யா.. எதாவது முக்கியமான ஆப்ரேசனா..?” என்றார். ஓ.. இன்னைக்கு சன்டேவா.? ஏன நினைத்து சற்றே தடுமாறியவன்.. ‘ஆமாம்மா.. ஒரு முக்கியமான வேலையிருக்கு..” என்றான்.
‘மதியமாவது வந்திடுவியா..?” என கமலம் கேட்க.
‘ம்ம்.. ட்ரை பண்றேம்மா..” என்றான்.
‘ட்ரைப் பண்றதெல்லாம் இல்ல.. மதியம் இரண்டு மணிபோல வந்திடு.. மூனுமணிக்கு மேல பொண்ணு பார்க்க போகனும்..” என்றார் ஆர்டராய்.
‘ப்ச்.. அம்மா…” என்று சலிப்போடு இழுக்க.. கமலம் முறைத்தார்.
‘நான் வர லேட்டாகும்.. இன்னைக்கு எங்கையும் போகமுடியாது..” என்று கோபமாக சொல்லி.. ‘முத்து அம்மாக்கு டிபன் கொடுங்க.. எனக்கு லேட்டாகுது நான் கிளம்பனும்.. நான் சாப்பிடாம போய்ட்டேன்னு அவங்களும் சாப்பிடாம இருந்திடப்போறாங்க..” என்று சொல்லி தன் அம்மாவிடமும் ‘சாப்ட்டு ரெஸ்ட் எடுங்கம்மா..” என்று சொன்னவன்.. அவர்களின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்.
அத்தனை அவசரமாக பிரசாத்தின் வீட்டிற்க்குத்தான் வந்திருந்தான். இத்தனை நாட்களாக அனைவரின் நலமறிய வருபவன்.. இன்று முதன் முறையாக திலகாவின் முகம் காணும் எண்ணத்தோடு வந்திருந்தான்.
சூர்யா உள்ளே வரவும்.. ‘வா சூர்யா.. “ என்று இன்முகத்தோடு வரவேற்றார் மூர்த்தி. ஹாலில் அமர்ந்து துணிகளை மடித்துக்கொண்டிருந்தவள்.. சூர்யாவைக் கண்டதும் இறுகிய முகத்தோடும் கடுப்போடும் எழுந்து தனதறைக்குள் புகுந்து கொண்டாள்.
ரூமிலிருந்து வெளியே வந்த அன்னப்பூரணி.. ‘வா சூர்யா.. என்ன காலைலயே..?” என்றவர்.. பிறகு தானே ‘ஓ.. இன்னைக்கு ஞாயித்துக்கிழமையில்ல..?” என்று.. ‘திலகா.. சூர்யாக்கு டீ போடும்மா..” என்றார்.
உள்ளிருந்த படியே.. ‘எனக்கு தலைவலிக்குதுமா..” என்று குரல்கொடுத்தாள் கொஞ்சம் காரமாக.
‘என்ன தலைவலியா..? எப்போயிருந்து வலிக்குது..?” என்றபடியே அன்னபூரணி உள்ளே போகவும்.. தன் வரவு பிடிக்காமல்தான் இத்தனை கடுப்பா.. என நினைத்து எழுந்தவன் திலகா அறையின் வெளியிலிருந்தபடியே..
‘வெளில கூட்டிட்டு வாங்கம்மா.. நான் செக் பண்றேன்..” என்றான் தானும் கடுப்பாக.
‘அவளே தலை வலிக்குதுங்கிறா.. நீதான் கொஞ்சம் உள்ள வந்து பாரேன் சூர்யா..” என்று உரிமையோடு அன்னபூரணி அழைக்கவும்.. சின்ன சிரிப்போடு உள்ளே வந்தவன்.. திலகாவின் முகம் பார்க்கவும் வெறுப்போடு முகத்தை திருப்பினாள் சுவற்றுப்புறம்.
‘பொடனிலயா தலைவலி செக் பண்ணமுடியும்..? திரும்பு திலகா..” என்று அன்னபூரணி திலகவதியின் கன்னத்தை பிடித்து திருப்பவும்..
‘மாத்திரை போட்டுட்டேன்ம்மா.. கொஞ்ச நேரம் அமைதியா படுத்தா சரியாகிடும்..” என்று கெஞ்சலாக சொன்னவள்.. ‘அவரை போக சொல்லுங்க..” என்றாள் கடுப்பாக.
‘தலைவலின்னா வீட்லயிருக்கிறவங்ககிட்ட சொல்லனும்.. இப்படி கண்ட மாத்திரை போடக்கூடாது..” என்று அதட்டியவன்.. திலகாவின் நெற்றியை தொட்டுப்பார்க்க.. சில்லிட்டிருந்ததை அறிந்தவன்.. தன் கையை எடுக்காமலே அழுத்திப்பிடித்தான் சிறுகோபத்தோடு.
சூர்யாவின் பிடியில் உண்மையிலேயே அவளுக்கு தலைவலிக்கவும்.. கலங்கிய கண்களோடு.. ‘வலிக்குது விடுங்க..” என்றாள் சன்னக்குரலில்.
அவளின் கெஞ்சலில் மனமிறங்கியவனாய் தன் கையை விலக்கியவன்.. ‘மாத்திரை போட்ருக்காங்க.. கொஞ்ச நேரம் பார்ப்போம்.. தலைவலி நிக்கலைன்னா நான் வேற டேப்லட் கொடுக்கிறேன்..” என்று அன்னபூரணியிடம் சொன்னவன்..
திலகாவைப் பார்த்தவாறே.. ‘எனக்கு டீ வேணாம்மா.. இன்னைக்கு இங்க என்ன சமையல்..? எனக்கு பசிக்குது..” என்றான்.
அதிசயமாய் சூர்யாவைப் பார்த்த அன்னபூரணி.. ‘திலகாதான் சமைச்சா… ரொம்ப நல்லா செஞ்சிருக்கா.. வா சூர்யா..” என்று சந்தோசத்தோடு சொல்லி வெளியேறினார்.
‘டீ குடுக்கலன்னா என்ன..? உங்க கையால வச்ச குழம்பை ருசி பார்க்கப்போறேன்..” என்று அழுத்தத்தோடு சொல்லி வெளியேறினான்.
சூர்யாவிற்க்கு பரிமாறிக்கொண்டே.. ‘ஏன் சூர்யா..? நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப்போற..?” என்றார்.
என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு என்னை கண்டாலே ஓடுறாங்க.. என நினைத்தவன்.. ‘கல்யாணம் பத்தி பேசப்போய்தான்மா அம்மாக்கும் எனக்கும் சின்ன வருத்தமாகிடுச்சி.. அதான் கோபமா சாப்பிடாம வந்திட்டேன்..” என்றான்.
‘அப்பா சாமி.. அத்திப் பூத்தாப்பில இன்னைக்குத்தான் சாப்பிட கேட்டிருக்க.. இங்கையும் கோபிச்சிட்டு எழுந்திடாத.. உன் கல்யாணத்தைப் பத்தி நான் கேட்கமாட்டேன்..” என்றார் அன்னபூரணி.
சிரித்தவன்.. ‘உங்ககிட்ட நான் கோபிக்கமாட்டேன்மா.. எனக்கும் கல்யாணம் செய்துக்க விருப்பம்தான்.. ஆனா பொண்ணு மனசுக்கு பிடிச்சவளா அமையனுமே..” என்றான் ஏக்கமாக.
‘ஒருத்தரை குறை சொல்லக்கூட உனக்கு தெரியுமா சூர்யா..?” என்றார் அதிசயமாக.
‘நான் யாரையும் குறையா நினைக்கலம்மா..” என்றவன்.. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு என்னை குற்றவாளிபோல பார்க்கிறாங்களே.. என மனதில் நினைத்து வேறெதும் பேசாமல் சாப்பிட்டவன்.. எத்தனை வருடமானாலும் தனதன்பை திலகா புரிந்து கொள்ளமாட்டாள் என்று சூர்யாவிற்கு தோன்ற.. இனி தொல்லை செய்தாவது திலகாவை தம்மை நினைக்க வைக்கவேண்டும் என புதிய சபதமே எடுத்திருந்தான். அதை இன்றே செயல்படுத்திடவும் வேண்டும் என எண்ணிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தவன்..
திலகவதியிடம் தலைவலி சரியாகிடுச்சிங்களா என மைய்யலாக கேட்டும்.. உங்க கைபக்குவத்தில சமையல் செம்மையா இருந்தது.. என்று இருகண் சிமிட்டியும் அவளை எரிச்சலடையச் செய்தே கிளம்பினான்.
திலகா மீதான சூர்யாவின் காதல் அதிகமாக அதிகமாக.. சூர்யாவின் மீதான திலகாவின் வெறுப்பு எல்லை தாண்டி செல்ல ஆரம்பித்தது.. இதோ.. இப்படியே உருண்டோடிவிட்டது ஒரு வருடம்.
‘ஆதவா.. ஆறுமாசம் கழிச்சி வரேன்னு சொன்ன.. நீ போய் ஒருவருசமே ஆய்டுச்சி.. எப்ப ஊருக்கு வர..?” என்று கண்ணீர் விட்டார் கமலம்.
‘கண்டிப்பா அடுத்த வாரம் வரேன்மா.. அழாதிங்க..” என்றான்.
‘உண்மையாவா..?” என்றார் கமலம்.
‘உண்மைதான்மா.. இந்த முறை வந்தா உங்க கஷ்டத்தை போக்கிட்டுதான் நான் ஊருக்கு வருவேன்.. கவலைப்படாதிங்க..” என்றான். சந்தோசத்தோடே தன் பெரிய மகனின் வருகையை எதிர்பார்த்து ஆவலாய் காத்திருந்தார் கமலம்.