அத்தியாயம் — 9
காலை ஐந்து மணிக்கெல்லாம் கண்விழித்த சூர்யா.. முதலில் திலகவதியைத்தான் பார்த்தான். நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். ஆனால் தூக்கத்தில் கூட அவளின் சாரி சிறிதளவும் விலகவில்லை.. கால் விரல்கள் கூட வெளியே தெரியாமல் இருக்கும்படி தனது சாரிக்குள்ளேயே காலை சுருட்டி படுத்திருந்தாள். முதல்ல இந்த சாரிக்கு ஒரு முடிவு கட்டனும்.. என்று நினைத்தவன் சத்தமில்லாமல் குளித்து ஆறு மணிக்கெல்லாம் வெளியே வந்தான்.
‘சித்தா..” என்று தியா அழைக்கவும்… ‘குட்டி பொண்ணும்மா.. அதுக்குள்ள எழுந்திட்டிங்களா..?” என்று தூக்கினான். ‘ம்ம்..” என்று கண்ணை உருட்டியவள்..
‘சித்தா…” என்று சூர்யாவின் ரூமை காண்பித்தாள்.
‘சித்தா.. இல்லடா.. சித்தி.. சொல்லு..” என்று சொல்லிகொடுத்தவன்..
‘உன் சித்தி தூங்கிட்டிருக்கா..” என்றான்.
‘இந்தா சூர்யா காஃ பி..” என்று கீர்த்தி கொடுக்கவும்.. வாங்கிகுடித்தான்.
‘திலகவதி நைட் சாப்பிட்டாளா..? அழுதுட்டேதான் இருந்தாளா..?”என்றாள்.
‘முதல்ல பசிக்கிலேன்னுதான் சொன்னா.. மிரட்டிதான் சாப்பிடவச்சி.. தூங்கசொன்னேன்.. ஆனா.. அழல..” என்றான் கொஞ்சம் நிம்மதியாக.
‘அவ அழாம இருந்ததே பெரிய விசயம்.. போகப்போக சரியாய்டுவா..”என்றாள்.
‘அண்ணி.. நான் இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகனும்.. வர லேட்டாகும்.. நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா..?” என்றான்.
‘என்ன பண்ணனும்னு சொல்லு சூர்யா..”
‘திலகவதிக்கு கொஞ்சம் சுடிதார் வாங்கிகொடுங்க.. எப்பப்பார்த்தாலும் கிழவிமாதிரி இந்த சாரியையே சுத்திட்டிருக்கா.. எனக்கு சுத்தமா பிடிக்கல..” என்றான் கடுப்பாக.
‘அது வாங்கிக்கலாம் சூர்யா.. ஆனா நீ இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகாம இருக்கலாமில்ல..” என்றாள் கீர்த்தி.
‘இல்லண்ணி.. இரண்டு நாளா ஹாஸ்பிட்டல் போகல.. என்னை நம்பியே அவுட் பேசன்ட் நிறையபேர் வருவாங்க.. முடிஞ்சா ஈவ்னிங் வீட்ல இருக்கப்பார்க்கிறேன்.. ஆனா இப்ப ஏழுமணிக்கெல்லாம் நான் கிளம்பியே ஆகனும்..‚” என்றவன்..
‘முத்து எனக்கு இரண்டே இரண்டு இட்லி மட்டும் தாங்க.. பசிக்குது..” என்றான்.
இட்லியை கொண்டு வந்து வைத்தவர்.. ‘நீங்க இப்படி கேட்டு வாங்கி சாப்பிட்டு.. வருசத்துக்கும் மேல ஆய்டுச்சி தம்பி..” என வாஞ்சையாய் சொன்னார் அவர்களின் சமையலர் முத்து.
முத்துவிற்கு சிரிப்பை பதிலாகத் தந்தவன்.. சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் ஒருமுறை ரூமிற்கு சென்று திலகவதியை பார்த்தான்.. தூங்கிக்கொண்டுதான் இருந்தாள். அமைதியாக வெளியே வந்தவன்..
‘அண்ணி.. திலகா தூங்கிட்டிருக்கா கொஞ்சம் பார்த்துக்கோங்க.. தியாவையும்.. சோனுவையும் குளிக்கவைக்கிறதில இருந்து.. சாப்பிட வைக்கிற வரைக்கும் அவளையே பார்த்துக்க சொல்லுங்க.. அவளை தனியா விடாதிங்க.. நான் கிளம்பறேன்..” என்று சொல்லி தன் அம்மாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
ஹாஸ்பிட்டல் சென்றதும்.. சீஃ ப் டாக்கரிலிருந்து.. கம்பொளன்டர் வரை அனைவரும் சூர்யாவை பிடித்துக்கொண்டனர். ‘எங்களுக்கு கல்யாணசாப்பாடு போடாமலே உங்க கல்யாணத்தை எப்படி நீங்க முடிக்கலாம்..?” என்று உரிமையாய் கேட்டனர்.
‘என்னை பொருத்தவரை அழகிலும் குணத்திலும் சிறந்த.. என் மனசுக்கு பிடிச்சவளைத்தான் நான் கல்யாணம் செய்துகிட்டேன்.. ஆனா உங்களை பொருத்தவரை.. நான் ஒரு விடோவை கல்யாணம் செய்துகிட்டேன்றது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. என்னோட விருப்பத்தோடும்.. அவளோட விருப்பமில்லாமலும் இந்த கல்யாணம் நடந்திருக்கு..
என் வெய்ஃ புக்கு கஷ்டமா இருக்கும்னுதான் நான் கல்யாணத்துக்கு யாரையும் கூப்பிடலை.. அதோட லட்சகணக்கில செலவு பண்ணி கல்யாணம் பண்றதுல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.. அந்த பணத்தை டிரெஸ்டுக்கு கொடுத்தாலாவது யூஸ்ஃ புல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சி.. அதான் சிம்பிளா முடிச்சிட்டேன்..
ஆனா உங்களுக்கெல்லாம் கண்டிப்பா ட்ரீட் உண்டு.. இந்த வாரத்திலயே ஒருநாள் இன்வைட் பண்றேன்.. கண்டிப்பா எல்லாரும் வாங்க.. எங்க வீட்லயே உங்களுக்கெல்லாம் பிடிச்சமாதிரி பார்ட்டி வச்சிடலாம்.” என்றான்.
‘சார் அந்த லக்கிகேர்ள் ஒரு வருசத்துக்கு முன்னாடி திலகவதின்னு ஒருத்தங்க இங்க அட்மிட் ஆனாங்களே அவங்கதான..? எங்களுக்கு அப்பவே தெரியும்.. நீங்க அவங்களைத்தான் கல்யாணம் செய்துக்குவிங்கன்னு..” என்று ஒரு செவிலியர் சொல்ல அனைவரும் கொள்ளென சிரித்தனர்.
அந்த அளவுக்கா நாம வெளிப்படையா அவளோடு அப்பவே இருந்திருக்கோம் என்று சூர்யாவிற்குத்தான் ஆச்சரியமாக இருந்தது. சிறு வெக்கத்தோடு அவர்களிடமிருந்து நழுவி தனதறைக்குள் வந்துவிட்டான். தாம் வீட்டில் இருந்தால் திலகவதி இயல்பாய் இருக்கமாட்டாள் என தெரிந்துதான் சூர்யா இன்று மருத்துவமணைக்கு வந்துவிட்டான். எப்படியோ திருமணம் நல்லபடியாக முடிந்தது என்று.. மனம் அவ்வளவு நிறைவாய் இருந்தது. வேலை முடிந்தும் மருத்துவமணையிலேயே தன் மனையாளின் யோசனையோடே இருந்தவனின் போன் அடிக்கவும்.. ‘ம்ம்.. எல்லாம் ரெடிங்களா..? ம்ம்.. கமலம் இல்லத்துக்கு சாப்பாடு கொண்டு வந்திடுங்க..” என்றவன்.. ஆதவனை அழைத்தான்.
‘என்ன சூர்யா…?”
‘ஆதவா இங்க ஹோம்க்கு சாப்பாடு சொல்லியிருந்தேன்.. கல்யாண சாப்பாடுன்னு அங்க எல்லாரும் நான் குடும்பத்தோட வருவேன்னு எதிர்பார்த்திட்டிருப்பாங்க.. அம்மாக்கும் இந்த கல்யாணத்தில அவ்வளவா விருப்பமில்ல.. இப்போ இருக்கிற நிலமைல திலகாவையும் கூட்டிட்டு வரமுடியாது.. நீ கிளம்பி வரியா..? நாம ரெண்டுபேருமாவது அங்க இருக்கலாம்..” என்றான்.
‘இப்போதான் நானும் கீர்த்தியும் இங்க திலகாக்கு பர்ச்சேஸ் பண்ண வந்தோம்.. எதையும் சரியா ப்ளான் பண்ணமாட்டியா..? இப்படின்னு சொல்லியிருந்தா நாளைக்காவது சாப்பிங் செய்திருக்கலாம்.. இப்போ கிளம்பினாலும் இந்த டிராஃ பிக்ல நாங்க வந்து சேர ஒருமணி நேரத்துக்கு மேல ஆகும்டா..” என்றான் கோபமாக.
‘சரி.. சரி.. நீ டென்சன் ஆகாத.. இங்க நான் பார்த்துக்கிறேன்.. நீ சாப்பிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போய்டு..” என்றான் தன்மையாக.
சூர்யா ஹோமிற்க்குள் நுழைந்ததும் அனைவரின் முகமும் வாடிட.. மனைவியோடு வராததால்தான் அவர்களின் இந்த முகவாட்டம் என புரிந்தவன்.. பொறுமையாக திலகவதியின் நிலையை சொல்லி..
‘என்னை வில்லனா நினைச்சிட்டிருக்கா.. கொஞ்சநாள் கழிச்சி எல்லாம் சரியானதும் என் பொண்டாட்டியை கூட்டிட்டு வரேன்..” என்று சமாதானம் செய்யவும்..
ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்வை சரிசெய்திருக்கிறான் என்ற நினைவில் மனம் குளிர்ந்து போனார்கள் அங்கிருந்த பெரியவர்கள்..
‘ஒன்னும் அவசரமில்லங்க தம்பி.. அந்த பொண்ணு உங்களை சீக்கிரம் புரிஞ்சிக்கும்.. நீங்க சந்தோசமா வாழறதை நாங்க பார்க்கத்தான் போறோம்..” என்று மனமாற ஆசிர்வதித்தனர்.
அனைவரிடமும் சூர்யா சந்தோசமாக இரண்டுமணி நேரத்திற்க்குமேல் பேசிக்கொண்டிருக்க.. ‘தம்பி உங்களுக்கு கல்யாணமாகிடுச்சி.. வீட்டுக்கு கிளம்புங்க..” என்று சிரிப்போடே ஒரு பெரியவர் நினைவுபடுத்த.. பிறகுதான் கிளம்பினான் சூர்யா.
வீட்டிற்கு வர இரவு ஒன்பது மணியாகவும்.. சூர்யா உள்ளே வந்ததும்.. ‘சித்தா..” என்று சூர்யாவின் அருகில் வேகமாய் சென்ற தியா.. கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பேட்டால் சூர்யாவை தன் பலத்தைக்கூட்டி அடித்தாள்.
‘அச்சோ குட்டி பொண்ணுமா.. சித்தாக்கு வலிக்குது.. எதுக்கு என்னை அடிக்கிறிங்க.?” என்று அந்தபக்கமும்.. இந்தபக்கமும்.. சென்று போக்குகாட்டினான்.
‘உன்னை கேட்டிட்டே இருந்தா சூர்யா.. ரொம்ப லேட்டாகிடுச்சில்ல..? அதான் உன்மேல ரொம்ப கோபமா இருக்கா..” என்று ஆதவன் சொல்ல..
‘சாரிடா..“ என்று சொன்னாலும்.. பேட்டை தூக்கிக்கொண்டு மீண்டும் அவனிடம் ஓடிவந்தாள்.
‘இந்த வாலுக்கு நடக்க தெரிஞ்சதால என்னால தப்பிக்க முடியலையே..” என்று தியாவிடம் விருப்பத்தோடு அகப்பட்டவன்.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து சாரி கேட்கவும்.. பிறகுதான் பேட்டை கீழே போட்டாள்.
‘அம்மாடி.. எவ்ளோ கோபம் வருது..?” என்று ஆச்சரியப்பட்டவன்.. ‘உங்க சித்தி எங்க..?” என்றான்.
‘தூம்ல..” என்கவும்.. புரியாமல் கீர்த்தியை பார்த்தான்.
‘ரூம்லன்னு சொல்றா..” என்ற கீர்த்தி.. ‘தியா நல்லா திலகாகிட்ட ஒட்டிகிட்டா.. இரண்டுபேரையும் திலகாகிட்ட விட்டுட்டுதான் பர்ச்சேஸ் போனோம்.. சுடிதார்ன்னு இல்ல.. இன்னும் திலகவதிக்கு தேவையானது நிறைய வாங்கினோம்.. எல்லாம் உன்ரூம் கப்போர்ட்ல வச்சிருக்கேன்.. ஆனா.. நாங்க எவ்ளோ சொல்லியும் திலகா சுடிதார் போடமாட்டேன்னுட்டா..” என்றாள் கீர்த்தி.
‘அதை நான் பார்த்துக்கிறேண்ணி.. பொண்ணுமா.. சித்தா ஃ ப்ரெஸ்சாய்ட்டு வந்திடறேன்..” என்று தியாவை இறக்கிவிட்டு தனதறைக்குள் போனான். கீழே உக்கார்ந்துகொண்டு.. தன் தலையை சோபாவில் சாய்த்திருந்தாள். சூர்யாவை கண்டதும் அவசரமாக எழுந்து நின்றாள். அவளருகில் வரவும் திலகவதி பின்னே நகர்ந்தாள். சூர்யாவும் முன்னேறி அவளுக்கு மிக அருகில் நின்றான். அதற்குமேல் நகர முடியாத நிலையில் திலகவதி சுவற்றோடு ஒட்டியிருக்க..
‘வந்து எனக்கு சாப்பாடு போடு..” என்றான் உரிமையாக.
திலகவதி வெறுப்போடு முகம் திருப்ப.. ‘நீ போடாம நான் சாப்பிடமாட்டேன்.. நான் சாப்பிடாம நீ தூங்கமுடியாது..” என்றான் அழுத்தமாக.
எப்படியும் விடமாட்டான் என நினைத்தவள்.. வெறுப்போடே சரி என தலையாட்டினாள்.
‘இப்படியே இல்ல.. நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள.. இந்த கொண்டை ஜடையா மாறியிருக்கனும்.. சாரியை கழட்டிட்டு சுடிதார் போட்டுட்டு வந்து எனக்கு சாப்பாடு போடனும்.. அப்பதான் நான் சாப்பிடுவேன்..” என்றான்.
‘எனக்கு அது மாதிரியெல்லாம் போட்டு பழக்கமில்ல.. நான் போடமாட்டேன்..” என்று எரிச்சலாய் சொன்னாள் திலகவதி.
‘இனிமே பழகிக்க.. நீயா போடலைன்னா.. நான் போட்டு விடுவேன்..” என்று மிரட்டலாய் சொல்லி அவளின் முகம்பார்க்க.. மிரண்டிருந்த அவளின் முகம்பார்த்து.. தன் கோபம் தளர்த்தி..
‘சீக்கிரம் நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள எனக்கு சாப்பாடு போட ரெடியாகு..” என்று தன்மையாய் சொல்லி பாத்ரூமினுள் சென்றான்.
சூர்யா வருவதற்குள் ஜடைதான் பின்னியிருந்தாள். உடை மாற்றவில்லை.. அவளை முறைத்துப்பார்க்க.. ம்கூம்.. தான் முறைத்து என்ன..? அவள் தன்னை பார்த்தால்தானே தன்னுடைய முறைப்பு புரிவதற்கு.? பிடிவாதத்தோடு தலைகுனிந்திருந்தாள் திலகவதி.
அவளிடம் எதுவும் சொல்லாமல் ரூமின் கதவை தாழ்போட்டு.. பிறகு கப்போர்டில் இருந்து ஒரு சுடிதாரை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கி இடுப்பில் சொருகியிருந்த அவளின் முந்தானையை பிடித்து உருவுவதுபோல் இழுத்தான்.
அப்பொழுதுதான்.. அவனின் முகம்பார்த்து.. ‘வேணாம்..” என்று கண்கலங்கினாள்.
‘நீ எனக்கு பிடிச்சமாதிரி இருக்கிறவரைக்கும்தான்.. நான் உனக்கு பிடிச்சமாதிரியிருப்பேன்..” என்றான். திலகவதி புரியாமல் பார்க்கவும்..
‘புரியலையா..? நான் உன்னை தொட்டா உனக்கு பிடிக்காதுதான..? உனக்கு பிடிக்காததை நான் பண்ணாம இருக்கனும்னா.. நீ எனக்கு பிடிக்காததை பண்ணகூடாது..‚ அப்பதான் நான் உன்னை தொல்லை பண்ணமாட்டேன்..” என்று சிறுபிள்ளைக்கு போல் விளக்கி.. அவளிடமிருந்து விலகி கட்டிலில் அமர்ந்து..
‘உன்கிட்ட எனக்கு பிடிக்காதது இரண்டே விசயம்தான்.. ஒன்னு இந்த சாரியை இப்படி கிழவிமாதிரி சுத்திக்கிறது.. இரண்டாவது உன் கொண்டை.. இனிமே எப்பவும் நீ சுடிதார்தான் போடனும்.. நீட்டா தலைபின்னியிருக்கனும்..” என்று ஆர்டர் போல் சொன்னான்.