‘நாளைலயிருந்து இந்த டிரெஸ் போட்டுக்கிறேன்.. இப்ப வந்து சாப்பிடுங்க..” என்று கெஞ்சலாய் சொல்லி.. வெளியே வர எத்தணித்தாள். அவளின் கைபிடித்து நிறுத்தியவன்..
‘அப்போ நாளைலயிருந்துதான் நான் உன்னை தொடமாட்டேன்.. இன்னைக்கு நைட் தொடுவேன்.. பரவாயில்லையா..?” என்று அவளின் உயரத்திற்கு குனிந்து சிரித்துக் கொண்டே கேட்டாலும்.. மிரட்டலாகவே வந்தது அவனின் குரல்.
அதிர்ச்சியாய் விழிவிரித்தவள்.. ‘நீ.. நீங்க வெளியபோங்க.. நான் மாத்திட்டு வரேன்..” என்று திணறினாள்.
‘குட்… எனக்கு ரொம்ப பசிக்குது.. சீக்கிரம் மாத்திட்டு வரனும்..” என்று சொல்லி வெளியே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். முத்து ஹாட்பாக்சோடு வரவும்…
‘அம்மா சாப்பிட்டாங்களா..?” என்று விசாரித்தான்.
‘அவங்க எப்பவும்போல எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டாங்க தம்பி.. நீங்களும் பாப்பாவும்தான் சாப்பிடல..” என்று பிளேட்டை வைத்தார் முத்து.
‘பாப்பாவா..? அதுயாரு…?” என்றான் கேள்வியாய்.
‘உங்க சம்சாரத்தைதான் சொல்றேன் தம்பி..” என்றார் முத்து.
‘ஓஹோ.. அப்படின்னா.. என் சம்சாரம் கையாலயே நான் சாப்பிட்டுக்கிறேன்.. நீங்க கிளம்பறதாயிருந்தா கிளம்புங்க..” என்று சிரித்தான் சூர்யா.
‘சந்தோசமா சாப்பிடுங்க தம்பி.. நான் கிளம்பறேன்..” என்று கிளம்பினார் முத்து.
சற்று நேரத்தில் இலைபச்சை நிற சுடிதாரோடு வெளியே வந்த திலகவதியைப் பார்த்து பிரம்மித்து போனான் சூர்யா. தன் முகபாவத்தை அவள் கவனிக்காமல் இருக்கவேண்டி.. வெகு இயல்பாக.. ‘சீக்கிரம் டிபன் எடுத்துவை.. எனக்கு பசிக்குது..” என்றான்.
இட்லியை சூர்யாவின் தட்டில் வைத்ததும்.. இன்னொரு பிளேட்டை எடுத்து வைத்து.. ‘இங்கையும் வை..” என்றான்.
‘எனக்கு பசிக்கிலை..” என்றாள்.
‘நீயா சாப்பிடறையா…? இல்ல.. நான் ஊட்டிவிடனுமா..?” என்றான். அமைதியாக இன்னொரு தட்டிலும் இட்லியை வைத்து தானும் அமர்ந்தாள்.. சூர்யா சாப்பிட்டதும்.. திலகவதி சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவன்.. பிறகு ரூமிற்கு வந்ததும்..
‘இங்க பாரு திலகா.. நீ எல்லாரோடையும் இயல்பா இருந்தா உனக்கு எந்த பிரச்சனையும் இங்க வராது.. சின்ன.. சின்ன விசயத்துக்கெல்லாம் உன்னை மிரட்ட வைக்காத.. இனிமே நீ கொண்டையே போடக்கூடாது.. தூங்கி எழுந்தா முதல்வேலையா குளிச்சிட்டு தலைபின்னிக்கனும்.. டைம்க்கு சாப்பிடனும்.. தினமும் சுடிதார்தான் போடனும்..‚” என்று மீண்டும் ஆர்டராய் சொல்லிக்கொண்டிருந்தவன்..
டிரெசிங் டேபிளில் புதிதாய் இருந்த குங்குமச்சிமிழை திறந்து.. தன் விரலில் சிறிது குங்குமத்தை எடுத்துக்கொண்டு அவளருகில் வந்து.. திலகவதியின் நெற்றியில் அழுத்தமாய் தன் முதல் முத்தத்தை பதித்து.. குங்குமம் வைத்தவன்..
‘திலகவதின்னு பேர் வச்சிகிட்டு.. இப்படி நெத்தியில திலகமில்லாம இருக்கலாமா…? உன் நெத்தியில குங்குமம் இல்லன்னா… இப்படித்தான் எப்பவும் குங்குமம் வச்சிவிடுவேன்…” என்று சொல்லி அவளிடம் இருந்து விலகி.. எதுவும் நடக்காததுபோல கட்டிலில் படுத்தான்.
சூர்யாவின் இச்செயலை எதிர்பார்க்காத திலகவதி வெகுவாய் தடுமாறிப்போனாள். சூர்யாவின் சிறு முத்தத்திற்கே சூர்யாவோடு கட்டிலில் படுக்க பயந்தாள். அது அவளின் முகத்தில் தெரியவும்..
‘இங்க.. வா..” என்றான். அவள் வராமல் அங்கேயே நிற்கவும்.. லேசாய் முறைத்தான். பிறகு கட்டிலுக்கு பக்கத்தில் மெல்ல வந்து நின்றாள்.
‘எனக்கு ரொம்ப பிடிச்சதாலதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்.. யாராவது மனசுக்கு பிடிச்ச பொண்ணை கஷ்டப்படுத்துவாங்களா…?” என்று அவளை பார்க்க.. என் புருசன் செத்ததும் நான் உனக்கு மனசுக்கு பிடிச்சவளாய்ட்டேனா..? என வெறுப்பாய் நினைத்தாள்.
‘உன்னோட சம்மதம் இல்லாம எவ்ளோ நாளானாலும் நான் உன்னை நெருங்கவே மாட்டேன்.. நீ பயப்படாம இரு..” என்று அவளை தேற்றினான். அவள் முகத்தில் சற்றே நிம்மதி பிறக்கவும்.. அவளின் நிம்மதியை புரிந்தவன்..
‘ஆனா.. இந்த ஒரு விசயத்தில மட்டும்தான் நான் கரெக்டா இருப்பேன்.. மத்தபடி நான் சொல்றமாதிரி நீ நடந்துக்கலைன்னா.. இப்ப உனக்கு முத்தம் கொடுத்தமாதிரி எதாவது பண்ணிகிட்டேதான் இருப்பேன்..” என்று சிரித்தான்.
‘எனக்கு உங்க பக்கத்தில படுத்தா தூக்கம் வரமாட்டுக்குது.. நான் சோபாவில.. இல்லன்னா கீழ படுத்துக்கிறேன்…” என்றாள் பயத்தோடு.
‘பரவாயில்ல.. உனக்கு தூக்கம் வரவரைக்கும் டி.வி.பாரு.. ஆனா கண்டிப்பா கட்டில்லதான் படுக்கனும்..‚” என்று கட்டளையிட்டு கண்மூடினான். அரைமணி நேரம்வரை நின்றிருந்தவள்.. பிறகு சூர்யாவிற்கு முதுகுகாட்டி கட்டிலில்தான் படுத்தாள்.
இப்படியே பத்து நாள் முடிந்திருக்க.. நாம சாப்பிடற சாப்பாடுக்கு நாளைலயிருந்து வீட்டு வேலை செய்யனும் என்று மனதினில் நினைத்துக்கொண்டு.. இன்றும் வெகுநேரம் கழித்தே தூங்கினாள்.
காலையில் சூர்யா எழும்போது திலகவதி அருகில் இல்லை. குளித்து ஏழுமணிபோல் வெளியே வந்தான். தியாவும்.. சோனாவும் விளையாடிக்கொண்டிருக்க.. அவர்களுக்கு பந்து எடுத்து கொடுத்து உதவிக்கொண்டிருந்தாள். கீர்த்தி அங்கே வரவும்..
‘நான் சமைக்கிறேன்னு சொன்னா அந்த அண்ணா விடமாட்றாரு.. எல்லா வேலைக்கும் ஆள் வச்சிருக்காங்க.. சும்மாவே இருக்க கஷ்டமா இருக்குக்கா.. இனிமே வீட்டுவேலையெல்லாம் நான் பண்றேன்.. நீங்க அவங்ககிட்ட சொல்லுங்க..” என்று கமலத்தை காண்பித்தாள் திலகவதி.
‘அவங்க.. இவங்கன்னு சொல்லக்கூடாது திலகா.. அத்தைன்னு சொல்லனும்..” என்றாள் கீர்த்தி. பிடித்தமில்லை என்றாலும் இனி இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது என நினைத்தவளுக்கு கண்கலங்கவும் தலைகுனிந்தாள்.
‘நீ வேலை செய்தா அப்புறம் சூர்யா கஷ்டப்படுவானே.. உன் புருசன் கீர்த்தியையே வேலைசெய்ய விடமாட்டான்.. உன்னை வேலைசெய்ய விட்ருவானா..? உனக்கு வேலைசெய்யிறது தவிர வேற என்ன தெரியும்னு சொல்லு.. அதுக்கேத்த மாதிரி நான் எதாவது ஐடியா பண்றேன்..” என்றபடி ஆதவன் வந்து சோபாவில் உக்கார்ந்தான்.
திலகவதி அமைதியாக இருக்கவும்.. ‘யாராவது எதாவது கேட்டா பதில் சொல்லனும்..‚” என்றபடி இப்பொழுது சூர்யா வந்து ஆதவனுடன் உக்கார..
வாசலில் நிழலாடவும் திரும்பிப்பார்த்த ஆதவன்.. ‘வா பாலா..” என்றான் உற்ச்சாகமாக.
தன் தம்பியின் பெயரைக் கேட்டதும் வாசலைப்பார்த்த திலகவதி.. ‘பாலா.” என சந்தோசமாக அழைத்தவள்.. உள்ளே கூப்பிடலாமா..? வேண்டாமா..? எதாவது நினைத்துக்கொள்வார்களா..? என்று பலவாறு யோசித்து.. அமைதியாய் நின்றாள்.
‘என் மச்சான் வந்திருக்கான்.. வீட்டுக்கு வந்தவனை வான்னு சொல்லமாட்டியா…?” என்று சூர்யா திலகாவை மிரட்டியதும்.. ‘வா..டா..” என்றாள் சன்னக்குரலில். தயங்கியபடியே உள்ளே வந்தாலும் பாலாஜியின் முகத்தில் ஒரு பிரகாசம் இருந்தது.
‘என்ன பாலா..? ரொம்ப சந்தோசமா இருக்கபோல..? கையில என்ன..? உங்கக்காக்கு ரகசியமா எதாவது கொண்டுவந்திருக்கியா..?” என்றான் சூர்யா.
‘ஆமாம் மாமா.. ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கேன்.. ப்ளஸ் டூ ரிசல்ட் வந்திருக்கு.. ஸ்கூல் செகன்ட் மார்க்.. அதான் அக்காவைப் பார்த்திட்டு சொல்லிட்டுபோலாம்னு வந்தேன்..” என்றான்.
‘சூப்பர் பாலா… என்ன படிக்கலாம்னு இருக்க..?” என்றான் ஆர்வமாக.
‘இன்ஜினியரிங் படிக்கலாம்னு இருக்கேன் மாமா.. இங்க நம்ம ஊர் காலேஜ்லயே ஃ பிரீ சீட் தரேன்னு சொல்லியிருக்காங்க..” என்றவன்..
‘இந்தாக்கா..” என்று கையிலிருந்த கவரை திலகவதியிடம் நீட்டினான். பிறகு பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை சோனாவிற்க்கும்.. தியாவிற்கும் கொடுத்தான். திலகவதி கவரில் இருந்து பூவை எடுத்தாள். ஆமாம்.. தன் அக்காவிற்காக பூதான் வாங்கி வந்திருந்தான் பாலா.
‘கீர்த்தி அக்காவும்.. நீயும் வச்சிக்கோங்கக்கா..” என்றவனின் கண்கலங்கியது.
‘ஏய்.. எதுக்கு பாலா அழற..?” என்று ஆதவன் கேட்கவும்.. ‘பெரிய மாமா.. எங்கக்காக்கு பூன்னா அவ்ளோ பிடிக்கும்.. சின்ன வயசில பூவேணும்னு ரொம்ப அடம்பிடிக்கும்.. பூ வாங்கிகொடுக்க எங்கம்மாகிட்ட காசு இருக்காது..” என்று வருத்தத்தோடு சொன்னவன்..
‘அப்புறம் இனிமே அக்கா பூவே வைக்ககூடாதுன்னு சொல்லிட்டாங்க..” என்று பெருகிய கண்ணீரை துடைத்தபடியே.. ‘அம்மாகிட்ட அக்காக்கு என்ன வாங்கிட்டு போறதுன்னு கேட்டேன்.. பூ வாங்கிட்டு போ.. இனிமே வைக்கலாம்னு சொன்னாங்க.. எங்கக்கா பூ வச்சிகிட்டா ரொம்ப அழகா இருக்கும்.. அதான் வாங்கிவந்தேன்..” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.
சூழ்நிலையை இலகுவாக்க.. ‘சரி அதைவிடு.. உனக்கு எதனால இன்ஜினியரிங் பிடிக்கும்.?” என்றான் சூர்யா.
‘பிடிக்கும்னு எல்லாம் இல்ல மாமா.. ஆனா நிறைய சம்பாரிக்கனும்.. எங்கம்மாவை கஷ்டப்படாம பார்த்துக்கனும்.. எங்கக்காக்கு நிறைய வாங்கி கொடுக்கனும்.. பெரிய வீடு கட்டனும்.. அதுக்குத்தான்..” என்றான்.
‘நீ நம்ம இனம்டா…” என்று பாலாவை கட்டியணைத்தான் ஆதவன். ‘நீ நல்லா படி.. உன்னையும் என்கூடவே ஃ பாரின்க்கு கூட்டிட்டு போய்டுறேன்.. அங்க நிறைய சம்பாதிக்கலாம்..” என்று கூறிய ஆதவன்…
‘பேசாம நீயும் படிக்கிறியா திலகா..?”என்றான் யோசனையாக.
‘அச்சோ..” என்று மிரண்ட பார்வை பார்த்தாள் திலகவதி.
‘வேண்டாம்னா விடு.. அதுக்கெதுக்கு இப்படி பயந்துக்கிற..?”என்றான் சூர்யா.
‘அக்காக்கு படிக்க பிடிக்காது.. ஆனா.. டெய்லரிங் ரொம்ப பிடிக்கும் மாமா.. கொஞ்சநாள் கிளாசுக்கு போனாங்க.. அப்புறம் அம்மா வேணாம்னு சொல்லவும் நின்னுக்கிட்டாங்க..” என்றான்.
‘அப்போ டெய்லரிங் கிளாசுக்கு போறியா திலகா..?” என்றான் ஆதவன்.
‘ம்கூம்..” என்று அவசரமாய் மறுத்தாள்.
‘சரி விடு.. வீட்டுக்கே வந்து சொல்லிகொடுக்க ஏற்பாடு பண்ணிக்கலாம்.. நீ டெய்லரிங் கத்துகிட்டு.. பாலா படிச்சிமுடிச்சி சம்பாதிக்கிறதுக்கு முன்னாடியே நீ சம்பாரிச்சி உங்கம்மாக்கு கொடு..” என்று யோசனை சொன்னான் ஆதவன்.
அதற்கும் அமைதியாகவே இருந்தாள் திலகவதி. ‘வா.. பாலா சாப்பிடலாம்..” என்றான் சூர்யா.
‘இல்லமாமா.. அம்மா எனக்காக காத்திட்டிருப்பாங்க.. ஸ்கூலுக்கு போய் டீச்சரைப் பார்க்கனும்.. நான் கிளம்பறேன்..” என்றவன்…
சூர்யாவிடம்.. ‘நான் மார்க் வாங்கின சந்தோசத்தைவிட அக்காவை இந்த டிரெஸ்சில பார்க்கிறதுக்கு இன்னும் சந்தோசமா இருக்கு மாமா..” என்று சூர்யாவிடம் சொன்னவன்..
வெகுநாட்களுக்கு பிறகு. நெற்றியில் குங்குமத்தோடும்.. தன் பின்னலை தொங்கவிட்டிருப்பதும்.. முக்கியமாக அழகான மஞ்சள் நிற சுடிதாரில்.. பாந்தமான அழகோடிருக்கும் தன் அக்காவைப் பார்த்து.. ‘இப்ப நீ ரொம்ப ரொம்ப.. அழகா இருக்கேக்கா..” என்று சந்தோசமாய் சொல்லி கிளம்பினான்.