அறிவில்ல… முதல்ல பழிவாங்க அப்படி என்ன காரணம் இருக்க போகுது..?? எனக்கு நல்லது செய்யனும்னு நினைச்சு இந்த கல்யாணம் பண்ணி வச்சாங்க… அப்புறம் நீ.. மனசுல எதோ ஒரு நம்பிக்கை இருக்க போயி தான எனக்கு கழுத்தை நீட்டுன.. இனிமே பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு… அதுவும் என்கிட்டே ரொம்பவே யோசிச்சு பேசு.. இப்போ மாதிரி நான் பொறுமையா இருக்கமாட்டேன்..” என்று பதிலுக்கு எகிறியவனை கண்டு வாயடைத்து தான் போனாள்.
ஆனாலும் அதெல்லாம் ஒருநொடி தான். இவன் செய்வது எல்லாம் செய்துவிட்டு இப்படி எல்லாம் பேசினால் ஒன்றுமே இல்லையென்று ஆகிவிடுமா என்ன??? இப்படி கத்தினால் நான் சும்மா இருந்துவிடுவேனா என்ன??
நீ ஈசன் என்றால் நான் லட்சுமி. அதுவும் உன் மனைவி என்று நினைத்தவளுக்கு, இதுதான் உன் பொறுமையின் லட்சணமா என்று தோன்றியது. பதில் ஏதும் சொல்லாது அவனை வெறித்துப் பார்த்தாள்.
“என்ன?? இப்போ எதுக்கு இந்த பார்வை?? ஆமா நானும் கேட்கனும்னு தான் நினைச்சேன்.. பல வருசமா நீயும் இப்படித்தான் அடிக்கடி பாக்குற.. சொல்லு இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்??? இப்போ மட்டும் இந்த பேச்சு பேசுற.. இத்தனை வருசமா எங்க போச்சு இந்த பேச்செல்லாம்..?” என்று லேசாய் தலையை ஆட்டி, புருவம் உயர்த்திக் கேட்டவனை அவள் மனம் அந்நிலையிலும் ரசிக்க தவறவில்லை.
ஆனால் சொல்ல முடியுமா?? உன்னை சைட் அடிக்கிறேன் என்று. சட்டென்று அவள் மனம் எச்சரிக்கை செய்தது. ‘ஆகா லட்சுமி ஈஸ் மாமா அங்க சுத்தி இங்க சுத்தி பழைய விஷயத்துக்கு வர்றாங்க உசாராகிடு…’ என்று நினைத்தவள்,
“நான் என்ன பேசினேன்..நீ ங்க என்ன கேட்கிறீங்க மாமா???” என,
“ஷ்…!!! ஷப்பா….” என்று தலையை கொதியவன், அவளருகே இன்னும் நெருங்கி அமர்ந்து, குரலை இன்னுமே கூட தனித்து,
“சொல்லு லஷ்மி உனக்கு என்ன தெரியனும்…?? மறுபடியும் ஏன் கல்யாணம் பண்ணன்னு மட்டும் கேட்காத…” என்றான்.
அவன் அருகாமையும், குரலும் லட்சுமியின் மனதில் ஒரு இதத்தை கொடுத்தாலும், இவனை இப்படியே விட்டால் வழிக்கு வரமாட்டான் என்று நினைத்தவள்,
“காலையில போனா இதோ இப்படி நைட்டு தான் வர்றீங்க.. வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன்.. நீங்க சாப்பிட்டீங்களா இல்லையான்னு கூட எனக்கு தெரியலை.. எனக்கு மட்டும் செஞ்சு சாப்பிடவும் ஒரு மாதிரி இருக்கு.. நீங்க என்னை அவாய்ட் பண்றீங்கன்னு நல்லா தெரியுது மாமா…” என்றவளுக்கு கடைசியில் தொண்டை அடைத்தது.
“உங்களுக்கு பிடிக்கலைனா இப்பகூட சொல்லிடுங்க மாமா.. நான்…” என்று மீண்டும் தொடர்ந்தவளை, இதற்குமேல் ஒன்றும் சொல்லாதே என்று அவள் இதழில் கை வைத்தவனை விழிகள் விரித்து தான் பார்த்தாள்.
இந்த ஈசன் அவளுக்கு முற்றிலும் புதியவன். அவன் செய்கையே அவள் வாயடைக்க, அவனது விரல்களோ இன்னும் அவளது இதழில் தான் இருந்தது.
“எனக்கு நிஜமாவே வேலை லஷ்மி.. மத்தபடி ஒண்ணுமில்ல.. ஆமா என்னை நானே கொஞ்சம் பிசியா வச்சிக்கிறேன் உண்மை தான். அதுக்கு காரணம் இதெல்லாம் பிடிக்காம இல்லை.. இதுல எப்படி என்னை பொருத்திக்கன்னு தெரியாம தான்..” என, அவளோ குழப்பமாய் பார்த்தாள்.
“உண்மை தான் லஷ்மி… உனக்கு ஈசியா இதெல்லாம் செட் ஆகிடுச்சு. ஆனா எனக்கு?? ம்ம்ச் உனக்கு எப்படி சொல்லி புரியவைக்கன்னு கூட எனக்கு சொல்ல தெரியலை…” என்றவனின் கரங்களை தன் இதழ்களில் இருந்து எடுத்தவளுக்கு, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது நன்றாகவே புரிந்தாலும் அவனே சொல்லட்டும் என்று,
“ஹ்ம்ம் உங்களுக்கு எப்படி சொல்ல வருதோ சொல்லுங்க மாமா.. நான் சரியா புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்…” என்றாள் முகத்தில் ஒன்றும் காட்டாது.
“இந்த கல்யாணம்.. நானே எதிர்பார்க்காதது.. அதுவும் ஒரே வாரத்துல.. எதுவுமே என் மனசுக்கு ஒட்டுறதுக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சிடுச்சு.. இந்த சூழ்நிலைல என்னை நானே எப்படி செட் பண்ணிக்கன்னு எனக்கு தெரியலை லஷ்மி.. அதான் ஓட்டமா ஓடுறேன்.. முதல்ல நான் வீட்ல அடிக்கடி வந்து போனா அது உனக்கு கம்பர்டபிலா இருக்குமா என்னன்னு கூட எனக்கு தெரியாது..
நீங்க லேடீஸ் இருக்கீங்களே இப்படி சட்டுன்னு புது சூழ்நிலைல உங்களை நீங்களே பொருத்திப்பீங்க.. ஆனா நாங்க இருக்கோமே… வெளிய கெத்தா காட்டிக்கிட்டாலும்.. ம்ம்ஹும்.. சத்தியமா அது முடியாது. தென் இந்த தனி குடித்தனம்.. ம்ம் இனிமேலயும் என் வாழ்க்கைல யார் தலையீடும் இருக்க கூடாதுன்னு தான் இந்த முடிவு லஷ்மி.. மத்தபடி உன்னை கஷ்டபடுத்த இல்லை…” என்று தன்னால் முடிந்த மட்டும் தன்மையாகவே பேசினான்.
இதை தானே அவளும் எதிர்பார்த்தது. லட்சுமி மட்டும் இன்று தன் பொறுமையை கைவிட்டு ஈசனிடம் மல்லுக்கு நிற்கவில்லை என்றால் இப்படி அவன் மனதில் இருப்பது எல்லாம் வெளிவருமா என்ன?? உள்ளுக்குள் மகிழ்ந்துகொண்டாள்.
“அதுக்குனு இப்படிதான் இருப்பீங்களா மாமா?? காலையில போனா நைட்டு வர்றீங்க.. எல்லாம் என்னை தான் கேட்கிறாங்க.. எல்லாருக்கும் நான் தானே பதில் சொல்றேன்..”
‘என்னடா இது?? எவ்வளோ சொன்னாலும் முதல்ல இருந்து வர்றா… ஈசா இது சரியே இல்லை. இது உன் பாணி இல்லையே.. ரூட்ட மாத்து…’ என்று எண்ணியபடி தன் நாடியை தடவியவன்,
“ஆமா.. அப்படியே நான் வராம போனாலும் நீயும் அப்படியே போன் மேல போன் போட்டு கூப்பிட்ட பாரு.. நல்லா உனக்கு மட்டும் செஞ்சு சாப்பிட்டிட்டு தூங்கி தூங்கி தானே எழுந்த..” என்று நக்கலாய் கேட்டவனை கண்டு ஆச்சரியத்துத்தான் போனாள்.
“சொல்லு லஷ்மி..” என்றான் இன்னும் அழுத்தமாய். அவன் குரலே அவளை பிடித்து உலுக்க,
“ஹா… இல்ல மாமா.. அது.. அது.. போன் பண்ணா நீங்க என்ன நினைப்பீங்களோன்னு தான்…” என்று இழுத்தாள்.
‘அப்படி வா வழிக்கு…’ என்று நினைத்துக்கொண்டவன்,
“அப்போ அதே போல தான எனக்கும் இருக்கும்.. அது ஏன் உனக்கு புரியலை..” என்று கேட்க,
‘இந்த ஈஸ் மாமா பண்ணதும் நான் பண்ணதும் ஒண்ணா…’ என்று தோன்ற,
“சரி சரி… நாளைக்கிருந்து இப்படி பண்ணாதீங்க… என்ன…” என்று போனால் போகிறது உன்னை மன்னிக்கிறேன் என்ற தினுசில் சொல்லிவிட்டு அவன் பதிலை கூட கேட்காது எழுந்து சென்றுவிட்டாள்.
பின்னே இதற்குமேலும் அமர்ந்திருக்க அவள் என்ன கிறுக்கா??
ஈசனுக்கு வெகு நாட்கள் கழித்து மனம் லேசாய் இருந்தது போல் இருந்தது. இதழ்களில் வந்து புன்னகை ஒட்டிக்கொள்ள மீண்டும் தலையை கோதிக்கொண்டான்.
“கிறுக்கச்சி… திடீர் திடீர்னு எதையாது சொல்றா…” என்று நினைத்துக்கொண்டவனுக்கு கேபிளில் ஆபிஸில் இருந்து அழைப்பு வர,
“என்ன பிரபு இந்நேரத்துல…” என்று அவன் பேசியது கேட்கவுமே மீண்டும் அறைக்குள் இருந்து வெளிவந்தவளின் மீது பார்வையை பதித்துக்கொண்டே தான் பேசினான்.
அந்தபக்கம் இருந்து என்ன செய்தி வந்ததோ, ஈசனின் முகமே எதோ பிரச்சனை என்று காட்டி கொடுக்க, பேசி முடித்தவன், “சரி வர்றேன்…” என்று மட்டும் சொல்லிவிட்டு,
“லஷ்மி… கேபிள் வர போயிட்டு வர்றேன்..” என்று அவளிடம் சொல்லிக்கொண்டே உடை மாற்ற செல்ல,