Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Aagaayam Theeyaagavae

ஆகாயம் தீயாகவே..! – 12

ஆகாயம் 12:   இரவு முழுவதும் அறையில் நடந்து கொண்டிருந்தவனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. பரவிய எந்த செய்தியிலும் உண்மை இல்லை என்றாலும், கருணைநாதன் பேசிய பேச்சுக்கள் அவனைத் தூண்டி விட்டிருந்தன. அடுத்து சைன் பண்ணவேண்டிய படங்கள் வரிசையில் இருக்க, இந்த நேரம் பார்த்து அரசியல் தலையீடு தேவையா? என்று அவனுக்குள் தோன்றிய எண்ணம், நேரம் ஆக ஆக வலுவாய் மாறிக் கொண்டிருந்தது. கண்டிப்பாக மறுநாள், பரவிய செய்தி அனைத்தும் வதந்தி என்று சொல்லி முற்றுப் புள்ளி […]


ஆகாயம் தீயாகவே..! – 11

ஆகாயம் 11:   “அப்பா என்னப்பா சொல்றிங்க..? கண்டிப்பா என்னால முடியாது. இந்த விஷயத்துக்கு நான் சம்மதிப்பேன்னு நீங்க எப்படி நினைச்சிங்க..?” என்று துவாரகி எரிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தாள். “இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா, நீ ரொம்ப சந்தோஷப்படுவன்னு நினைச்சேன் துவாரகி. ஆனா, நீ இந்த அளவுக்கு அதிர்ச்சியாவன்னு நினைக்கலை. அப்படி ஒன்னும் பெரிய விஷயத்தையும் நான் சொல்லலை..” என்றார் கருணைநாதன். “அப்பா உங்களுக்கு வேணுமின்னா இது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். ஆனா, கண்டிப்பா எனக்கு […]


ஆகாயம் தீயாகவே..! – 10

ஆகாயம்  10:   ஆதித்யா ஷூட்டிங் கிளம்பி  சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தது. திருமணம் முடிந்ததும் தெரியவில்லை. அதற்கு அடுத்து நடந்த எதுவும் புரியவில்லை. எல்லாருக்கும் புரியாத புதிராய் இருக்க, அவன் எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக இருந்தான். கருணைநாதனும், அவனைப் பற்றி நெகட்டிவாக செய்தி பரப்ப நினைத்து நொந்து கொண்டது தான் மிச்சம். ‘திருமணம் முடிந்த கையேடு ஷூட்டிங் கிளம்பிய பிரபல நடிகர்… வேலையில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு, தொழிலில் அவருக்கு […]


ஆகாயம் தீயாகவே..! – 9

ஆகாயம் 9:   ஆதியின் கோபம் எல்லைமீறத் துடித்துக் கொண்டிருந்தது. துவாரகி என்ன செய்வதென்று புரியாமல், திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அசையாமல் நிற்பதை பார்த்த கருணைநாதனுக்கு அப்படி வெற்றி களிப்பு முகத்தில். சோபாவைப் பிடித்திருந்த துவாரகியின் கைகள் இறுகியிருக்க, தான் நினைத்ததை செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு அவள் நிலை புரிந்ததோ என்னவோ..? “உங்கப்பாவை மாதிரி கட்டாயப்படுத்த நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. ஆனா, கல்யாணம் முடிஞ்ச உடனே, […]


ஆகாயம் தீயாகவே..! – 8

ஆகாயம் 8:   திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சக்ரபாணி மரியாதை நிமித்தமாக ஆதித்ய வர்மாவை சந்தித்து விட்டு சென்றார். இந்த தகவல் கருணைநாதனின் காதிற்கு செல்ல, மனுஷன் அடைந்த அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் அளவே இல்லை. “இந்த நேரத்துல இந்த ஆளு எதுக்கு ஆதித்யாவை பார்க்க போகணும்..? ஏற்கனவே வரும் தகவல் எல்லாமே முன்னுக்கு பின் முரணாக இருக்க, இந்த செய்தியும் அவரின் பிரஷரை ஏற்றிக் கொண்டிருந்தது. “கண்டிப்பா இது வேற சந்திப்பா […]


ஆகாயம் தீயாகவே..! – 7

ஆகாயம் 7:   “அடடே..! வாப்பா கனகவேலு..! வாம்மா திவ்யா..?” என்றார் கருணைநாதன். கனகவேலும், திவ்யாவும் அவரைப் பார்ப்பதற்காக சென்றிருந்தனர். இதற்கு முன்பும் திவ்யா இரண்டு முறை அங்க சென்றிருக்கிறாள். ஆனால், இந்த முறை ஏதோ அவளுக்கு வித்யாசமாய் பட்டது. “என்னப்பா கனகவேலு, எலக்சன் வேலையெல்லாம் எப்படி போகுது. கட்சி ஆபீஸ் பக்கம் ஆளையே காணோம்..?” என்றார் கருணைநாதன். “கொஞ்சம் வேலையில பிசியா இருந்துட்டேன் தலைவரே. இனி தேர்தல் முடியற வரைக்கும் நகர நேரமிருக்காது. அதான் தேர்தல் […]


ஆகாயம் தீயாகவே..! – 6

ஆகாயம் 6:   ஆதித்யாவின் வீடு சென்று சேரும் வரைக்கும் துவாரகி ஒன்றும் பேசவில்லை. கவினின் முன்பு பேச வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ. ஆனால் ஆதிக்கு தான் மனம் காய்ந்து கொண்டிருந்தது. ஆதியுடன் அந்த நேரத்தில் துவாரகியை எதிர்பார்க்காத பார்கவி திகைத்தார் என்றால், சேதுராமன் அமைதியாக இருந்தார். துவாரகியின் வரவை அவர் முன்னமே எதிர்பார்த்திருந்தார் போல. “அம்மா! உங்களுக்கு உடம்புக்கு முயலைன்னா, என்கிட்டே தான் சொல்லணும். ஆனா, என்னைத் தவிர எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு. நீங்க ஒரு […]


ஆகாயம் தீயாகவே..! – 5

ஆகாயம் 5: சம்பத் பேசியதைக் கேட்ட ஆதித்யாவுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. காரணமே இல்லாமல் சில காரியங்கள் அவன் வாழ்வில் குறுக்கே வருவதைப் போன்ற உணர்வு அவனுக்கு. ஒரு வழியாக அதே மனநிலையில் அன்றைய ஷூட்டிங்கை முடித்து விட்டான். “சார் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றான் கவின். “கொஞ்சம் தலைவலிக்குது கவின். ஒரு காபி ஷாப்ல காரை நிறுத்த சொல்லு..” என்று மந்த மனநிலையில் சொல்ல, “சார், வீட்டுக்கு போய்டலாமா..?” என்றான் கவின். […]


ஆகாயம் தீயாகவே..! – 4

ஆகாயம் 4: “என்னாச்சு சம்பத்? எதுக்கு என்னைப் பார்த்தவுடனே போனை கட் பண்ற..?” என்றான் ஆதித்யா யோசனையாக. “அதெல்லாம் ஒண்ணுமில்லை ஆதி. பேசி முடிச்சுட்டேன், அதான் போனை கட் பண்ணேன்..” என்றான் சம்பத். “போன்ல யாரு..?” என்றான். அவன் வாயிலிருந்து என்ன வருகிறது என்று ஆதி நோட்டம் பார்க்க, “துவாரகி தான் கால் பண்ணியிருந்தா. வீட்டுக்குப் போய் சேர்ந்த உடனே எனக்கு இன்பார்ம் பண்ண சொன்னேன், அதான்..” என்றான் சம்பத் எதார்த்தமாய். “ஹோ.. துவாரகியை உனக்கு முன்னாடியே […]


ஆகாயம் தீயாகவே..! – 3

ஆகாயம் 3:   “என்ன ஆதி, கருணை நாதன் என்ன சொன்னாரு..?” என்றார் சேது ராமன். “அவர் என்ன சொல்வார் டாட்..? நான் இப்படி பேசுவேன்னு அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கலை போல, அது அவர் முகத்துல இருந்தே தெரிஞ்சது. ஆதித்யா கூட மோதுறதுக்கு முன்னாடி அவர் யோசிச்சிருக்கணும். என்னைப் பத்தி அவருக்கு சரியா தெரியலை போல இருக்கு..” என்றான் ஆதி. “அவரை அப்படி மட்டும் சாதாரணமா எடை போட்டுடாத ஆதி. அரசியல் வாழ்க்கைக்காக, அவர் எந்த அளவுக்கு […]