இங்கு தீபக் வண்டி கேட்பதை… அங்கு மறைந்து கொண்டு… பார்த்துக் கொண்டிருந்தான் ஒன்பது வயதே ஆன காவ்யா அரவிந்தின் மகன் ஆதித்யா. தீபக் வண்டி எடுத்தால்.. அவனின் பின் சத்தமில்லாமல் வந்து அமர்வான்… ஆதி. ஆதிக்கு வண்டிகளில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும், தீபக் இப்போது கார் வரை ஒட்டுவதால்.. தீபக்தான் ஆதியின் ஆல் டைம் ஃபேவரைட். இதை பார்த்துக் கொண்டிருந்த சக்தி லிங்காவின், சீமந்த புத்திரன் தரணிஷ்வரன் வந்தான் தீபக்கிடம் “என்ன ண்ணா” என்றான். தீபக் […]
லிங்கா அவளை தூக்கி தன் மேல் போட்டுக் கொண்டான்… சக்தியின் அங்கமெல்லாம் அவனின் இம்சையை கூட்ட அதைவிட இப்போது தன்னவளின் வாயிலிருந்து வரும் சொல்லுக்காக “நீ இப்படி கூப்பிட்டினா.. நான் எதுக்கு கோவப்பட போறேன்… ம்…” என்றான். சக்தி ஏதும் சொல்லாமல் அவனின் மீசையை இழுக்க “என்ன சொல்லுங்க இல்ல இழுப்பேன்…” என்றாள். கண்ணாளன் “ஆமாம், உன்னை பார்க்க வந்தா, என்னை வெளிய உட்கார வைச்சிட்டு.. என்னமோ, ஒன்னுமில்லாத சாமான எடுத்துகிட்டு இருக்க… வரவேண்டியது தானே.. அப்புறம் […]
தாழம்பூ வாசம் நீ….. 29 இப்போதுதான் எலெக்ஷன் ரிசல்ட் வந்தது. தாமுவுடன் கட்சி அலுவலகத்தில்தான் லிங்கா இருந்தான். சாரங்கன் அங்கே மேலிடத்துடன் இருந்தார். சாரங்கன் அமோக வெற்றிப் பெற்றார் என செய்திகளில் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருந்தது சேனல். தாமு, தன் மாப்பிள்ளைக்கு சந்தோஷமாக கைகொடுத்தார். லிங்கா பெரிதாக அலட்டாமல் “ம்… மாமா… இனி எப்படியாவது நல்லது செய்திடுங்க” என்றான் சிரித்தபடியே. தாமு தன் மாப்பிள்ளையை ஆனந்தமாக அணைத்துக் கொண்டார் “கண்டிப்பா… முடிந்த வரை… அராஜகத்திலிருந்து விலகி […]
காலை அலாரத்தில்தான் விழிப்பு வந்தது சக்திக்கு. அவசரமாக எழுந்து அதனை ஆப் செய்தாள். கணவன் எழுந்து விடுவானோ என பார்க்க.. அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவளின் கைகள்.. அவனின் தாடியை மென்மையாக தடவியது ‘என்னை எழுப்பவில்லை.. கோவமா’ என கேட்டுக் கொண்டிருந்தாள் தன்னுள். அவளின் தீண்டலில் லிங்காக்கு விழிப்பு வந்தது.. மனம் அந்த அதிகாலையில் குளிர்ந்து போனது.. கூடவே அவளின் வாசம் வேறு.. தன் கண்களை திறக்க… சக்தி, அவன் கன்னத்தில் தன் கை வைத்து.. […]
தாழம்பூ வாசம் நீ….. 28 தாமுக்கு, மாப்பிள்ளை சொல்லிவிட்ட பிறகு.. எந்த தயக்கமும் இல்லை… ஆனால், ஒரு மகளின் தந்தை எனும்போது.. அவரும் என்ன செய்வார்.. அளவாக ஒரு இடம் வாங்கி போட்டார்.. சக்தியின் பெயரில். அவருக்கு, லிங்காவின் வீட்டிலிருந்து வந்த.. பணம். அதை பிள்ளைக்கு செய்த சீர் என்ற கணக்கில் வைத்திருந்தார். ஆனால், எதிர்பாரா விதமாக திரும்பி வரவும்.. அதை எப்படி சக்திக்கு கொடுக்காமல் விடுவது என எண்ணம்.. எனவே சக்திக்கு ஒரு பங்கு செய்தார். […]
தாழம்பூ வாசம் நீ….. 27 அப்போதுதான் உறங்கியது போல் இருக்க… “ப்ரியா… ப்யார்…. எழுந்துக்கோ டா…. “ என அவளை உலுக்கிக் கொண்டிருந்தான் லிங்கா. சக்தி “ம்… போங்க..” என அவள் சினுங்க… எப்போதும் போல அவளை இறுக்க கட்டிக் கொண்டு முத்தம் வைத்தவன்… “போகலையா, வேண்டாமா…. நீ படிக்க போறேன்னு சொன்ன…. இப்போ கிளம்பினா… உன்னை காலேஜில் விடறேன்… போலாம் டா… மாமா மூடு மாறிடும்… “ என அமர்ந்து கொண்டு அவளை எழுப்பிக் கொண்டிருந்தான் […]
அன்று அப்படி ஒரு நிம்மதி இளாக்கும் லிங்காக்கும். மூர்த்தி அப்போதே கிளம்பிவிட்டார் கம்பெனியில் இருந்து. சகோதரர்கள் தான், சற்று நேரம் இருந்து வேலைகளை பார்த்து வந்தனர். அந்த இரண்டு மாதத்தில் சற்று தெளிந்திருந்தான் இளா. எக்ஸ்போர்ட் ஆர்டர் வகையில் கொஞ்சம் கவனம் கொண்டான். லிங்கா இப்போது ஆடர் எடுப்பதை வேலையாக கொண்டான். தயாரிப்பு, மேற்பார்வை இளா பார்க்க.. லிங்கா கணக்கு வழக்கு என பார்த்துக் கொண்டான். இந்த வாரத்தில், பழைய சரக்கு அனுப்பியதற்கு பணமும் வந்து சேரும். […]
தாழம்பூ வாசம் நீ….. 26 மதியம் உணவுக்கு கூட… தாமுவும் லிங்காவும் வீடு வரவில்லை. லிங்கா, மாலை ஐந்து மணிக்கு வந்தான். அவசர அவசரமாக உடை மாற்றி கிளம்பினான். பெரிதாக ஏதும் இல்லை ஒரு ஜீன்.. ப்ராண்ட் ஷர்ட்.. அவ்வளவுதான். என்ன இப்போது புதிதாக திமிரும்.. சற்று கர்வமும் வந்திருந்தது அவனின் துணைக்கு. எனவே, தாடியுடன் மீசையுமாக லிங்கா சற்று மாறி இருந்தான்… ‘என்னால் சமாளிக்க முடியும்’ என்ற நிமிர்வு வந்திருந்தது. கறி விருந்து மதியத்திலிருந்தே அமர்க்களப்பட்டது.. […]
தாழம்பூ வாசம் நீ….. 25 லிங்காக்கு அதிகாலையே விழிப்பு வந்துவிட்டது… லேசான மென்னகையுடன் விழித்தான் லிங்கா. அவனின் தோளில் மனையாளின் ஆனந்த சயனம். அவளை அப்படியே பார்த்தவன் தன் மற்றொரு கையால், அவளின் புருவ வளைவை வருடினான்… சுடுவது போல் இருந்தது அவனுக்கு. நெற்றி, கழுத்து என கைகள் வைத்து பார்த்தான். சூடு தெரிந்தது. மணி ஐந்தரை… எழுந்து தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு கீழே சென்றான்.. அவனின் அன்னை அப்போதுதான் குளித்து வந்து பாலை அடுப்பில் […]
இன்று சீக்கிரமாக வந்தாள் சக்தி, தங்களின் அறைக்கு. சக்தி உள்ளே வர… எப்போதும் அவள் வந்தவுடன் லிங்கா வெளியே செல்லுவான். இன்றும் அப்படி நடக்க.. இவளும் உடை மாற்றி கதவை திறந்தாள். அங்கே காணோம் லிங்காவை… பத்து நிமிடம் காத்திருந்து பார்த்தாள்.. காணோம் எனவும்.. மொட்டை மாடிக்கு சென்றாள்.. அங்கேதான் லிங்கா உலாவிக் கொண்டிருந்தான். இவளும் வந்து நின்றாள்.. லிங்காக்கு இவ்வளவு அமைதியாக எல்லாம் இருந்ததே இல்லை அவன்.. ஆனாலும் அவளை கண்டுக்காமல்.. அமைதியாக நடந்தான். […]