Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 24 1

தாழம்பூ வாசம்  நீ….. 24 அடுத்த ஒரு வாரத்தில் மார்கழி மாதம் வருவதால்.. காவ்யாவின்..  திருமண தொடக்க வேலைகளை பார்க்க தொடங்கினர். எனவே இன்று உப்பு சர்க்கரை வாங்க, சுற்றம் சொந்தத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தது மூர்த்தியின் வீடு. காலையிலேயே செல்லுவதால்… ஆண்கள் எல்லாம் பொதுவாக பேசியபடி இருந்தனர். லிங்கா, இளா எல்லாம் கீழே சின்ன சின்ன வேலைகள் செய்தபடி வருபவர்களை கவனித்த படியும் இருந்தனர், ஒவ்வொருவராக.. வந்தனர்.  காமாட்சியின்,  அக்கா தங்கைகள்.. மூர்த்தியின் பங்காளிகள்… மற்றும் சம்பந்தி […]


Thazhampoo Vaasam Nee 23 2

தீபக் ஒத்துக் கொள்ளவில்லை… “நீங்க புல்லா கவுண்ட் பண்ணலை… “ என்றான். இப்போது தன் அப்பா பின்னால் போய் நின்று கொண்டான் “ப்பா.. சித்தி என்னை சீட் பண்றாங்க” என்றான். சக்தி சிரித்தாள்… லிங்காவும் வந்து சேர… கூடவே காவ்யாவும் வந்தாள். எல்லோரும் தீபக்கை பார்த்து சிரிக்க…  தீபக் அழ தொடங்கினான்.. “நான் அவுட் இல்ல.. சித்தி கவுண்ட் பண்ணவே இல்லை..” என மீண்டும் சொல்ல…  சக்தி “சரி வா… நானே கண்மூடிக்கிறேன்… பிக் பாய் அழுதா.. […]


Thazhampoo Vaasam Nee 23 1

தாழம்பூ வாசம்  நீ….. 23 நீல வண்ண சுடியில்… துள்ளி குதித்து சிரித்தபடி ஓடிய தன் மனைவியை துரத்தியபடியே சென்றான் லிங்கா…  அம்முவும் அவனுடன் கையை நீட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு தன் கால்களை உதைத்தபடி சித்தப்பாவின் கைகளில் சவாரி செய்து கொண்டிருந்தாள். லிங்காவின் முகமும்.. புன்னகையில் இருக்க… சின்ன ஆனந்தத்துடன்… தன் மனையாளை நெருங்கிக் கொண்டிருந்தான். அந்த சிரிப்பும்.. அவளின் அலட்டாத பாவமும் இன்றுதான் முதல் முதலில் அவனை ஈர்த்தது..  இத்தனை நாட்கள், லிங்காவிடம்.. ஏதோ […]


Thazhampoo Vaasam Nee 22 2

அதற்காக எல்லாம் தன்னவனை அவள் தள்ளி வைக்கவில்லை… அவன், தன்  அருகில் அமர்ந்து… பழைய கதைகள் சொல்லும் போது… இவளுக்கும், விழி விரித்து கேட்கத்தான் தோன்றியது.  அவனின் அருகாமை அவளை ஈர்த்தது… அன்றே, சொல்லிவிட்டானே… நான் அப்படி இருந்தேன் என… ஆக, அது இறந்தகாலம் என உறுதியாக நம்பினாள். அந்த நிச்சய தினம் மட்டுமே அவளின் குறை.  மேலும், அவனுக்கு எப்படியோ… சக்திக்கு, அவனை பிடிக்கும்தானே… எனவே அவனின் பேச்சில்… அவனை தவிர வேறு தெரிவதில்லை அவளுக்கு.  […]


Thazhampoo Vaasam Nee 22 1

தாழம்பூ வாசம்  நீ….. 22   நாட்கள் ஒன்று இரண்டு என பொறுமையாக நகர்ந்தது… ம்… நான்கு நாட்கள் சென்றுதான் லிங்காவின் வீட்டிற்கே வந்தனர் புதுமண தம்பதி… விருந்து மறுவீடு எல்லாம் முடிந்துதான் வந்தனர்  அங்கு இருந்த, இந்த நான்கு நாட்களில்… சக்தியை விட தாமு மாமாதான் லிங்காக்கு அதிக நெருக்கமானார். வாய்நிறைய, மாப்பிள்ளை… மாப்பிள்ளை… என அழைத்தப்படியே இருந்தார்.  லிங்காவும் சொல்லி சலித்தான்தான் “மாமா… தயவு செய்து இப்படி கூப்பிடாதீங்க… எனக்கு சங்கடமாக இருக்கு… நீங்க […]


Thaazham Poo Vaasam Nee 21 2

சக்திக்கு தூக்கிவாரி போட்டது “அ… அது… அப்படி இல்லங்க…. எ… எனக்கு இன்னும் உங்களை புரியலை… என்ன சொல்றது தெரியலை… “ என்றாள்.. சற்று தடுமாற்றமாக. லிங்கா “ஹேய்… விடு… நான் ஹீரோதான்…. அதுவும் இந்த சக்திக்கு நான்தான் ஹீரோ… சரி அத விடு…. அங்க விடிகாலையில்… போனோம் பாரு… அப்படி ஒரு அமைதி… அத்தோட… ஏதோ… ஒரு அமானுஷ்யம்… அது தெய்வ சக்தியா இருக்கலாம்ன்னு இப்போ தோனுது…. அப்போ, அது ஒரு த்ரில் மாதிரி இருந்தது….  […]


Thaazham Poo Vaasam Nee 21 1

தாழம்பூ வாசம்  நீ….. 21 சக்தியும், லிங்காவும் இரவு சக்தியின் வீட்டிற்கு வந்தனர். இங்குதான் இரவு சம்பிரதாயம் நடைபெற இருப்பதால்.. குறிப்பிட்ட உறவுகள் மட்டும் வந்தது இவர்களுடன், சக்தியின் வீட்டுக்கு. காவ்யா பிள்ளைகள் லதா என எல்லோரையும், டிரைவர் உடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் இளா. இளா… தாமுவுடன் மண்டபத்தில் நின்று கொண்டான் மீதி வேலைகளை முடிக்க. மூர்த்தியும் காமாட்சியும்… சக்தி வீட்டிற்கு வந்தனர். பெரியோர்களை முன் கொண்டு.. ஆசீர்வாதம் வாங்கி முடிந்து, அர்த்த ராத்த்திரியில் ஒரு […]


Amuthangalal Nirainthaen 20

அமுதங்களால் நிறைந்தேன்… 2௦ மதிய உணவு உண்ணும் நிகழ்வில்.. சக்தி திணறி போனாள்.. லிங்கா எது செய்தாலும் மற்ற எல்லோருக்கும் விளையாட்டாய் தெரிவது, அவளுக்கு மட்டும் தவறாக தெரிந்தது. லிங்காவை, சக்திக்கு ஊட்டி விட சொல்லி எல்லா சிறுசுகளும் கலாட்டா செய்ய… ஸ்வீட்.. என இலையில் லட்டு இருக்க.. அதை எடுக்காது.. விரல்களில் வழியும் பால் பாயசத்தை எடுத்துக் கொண்டு சக்தியின் உதடுருகே சென்றான்.. லிங்கா. எல்லோரும் கத்த தொடங்கினர்.. குசும்பு குரல்கள் வேறு.. “லிங்கா இங்க […]


Amuthangalaal Nirainthaen 19

அமுதங்களால் நிறைந்தேன்… 19 அதிகாலை முகூர்த்தம்… இரண்டு மணிக்கே வீடு விழித்துக் கொண்டது… ஒவ்வொருவராக கிளம்பினர்.. ஆர்பாட்டமானது வீடு.. நேற்று வரை இருந்த சங்கடம் எல்லாம் நேற்றே தீர்ந்தது போல.. எல்லோர் முகமும் பளிச்சென இருந்தது. காமாட்சி தன் மகளை விரட்டிக் கொண்டிருந்தார் “போடி அவனை பாரு கிளம்பிட்டானா பாரு” என சொல்லிக் கொண்டிருந்தார்.  காவ்யா ம்மா… எனக்கே நேரம் பத்தாது… இதில் நான் எங்க மேல போறது.. அவனுக்குதானே கல்யாணம் அவனே வரட்டும்…” என்றாள் சற்று […]


Amuthangalaal Nirainthaen 18

அமுதங்களால் நிறைந்தேன்… 18 சக்திக்கு லிங்கா அனுப்பிய செய்தி வந்து சேர்ந்தது… அதை அனிச்சையாய் பார்த்தும் விட்டாள். ஆனால், என்ன செய்வது என தெரியவில்லை. பெண் மனதில் இப்போது ஒதுக்கம் வந்தது.. ‘ஏன் பேசனும்..’ என தோன்றியது.. அதனால் அமைதியாகிவிட்டாள். ஊட்டியில் இருந்து நேற்றே தன் வீட்டுக்கு வந்திருந்தாள்.. சக்தி. பெரிய நட்பு படையையும் அழைத்து வந்திருந்தாள்.. ஆக, உறவினர்களாலும்.. நட்புகளாலும்.. சக்தி கலகலப்பாக இருந்தாள்.  இந்த நட்புகளின் துணை அவளுள் புது தெம்பை தந்திருந்தது… பெரிதாக […]