சக்தி… மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு கிளம்பி… தனது கல்லூரிக்கு சென்றாள். அவர்கள் தோழிகள் நான்கு பேர் சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர்.. எனவே சமையலுக்கு ஆட்கள் உண்டு.. எனவே ‘இன்று தான் வருவதை சொல்லி, சென்றாள்’. தாமு கிளம்பும் போதும் கேட்டார் “மாப்பிளைக்கிட்ட சொல்லிட்டியா டா” என. மையமாக தலையசைத்து.. கிளம்பினாள் பெண். இந்த புறக்கணிப்பை அவளால் தாளவே முடியவில்லை… அதற்காக அவனை வெறுக்கவும் தெரியவில்லை சக்திக்கு. என்ன செய்வது தன்னை எப்படி நிலைப்படுத்துவது […]
அமுதங்களால் நிறைந்தேன்… 16 லிங்கா வீடு வந்ததும்… நேரே மேலே சென்றுவிட்டான்.. ‘அப்பாடா ஒரு வேலை முடிந்தது..’ என்ற நிலை அவனுக்கு. அவளிடமிருந்து தப்பித்த உணர்வு… ‘எங்கும் கேள்வி கேட்கவில்லை.. அதற்கு டைம் இல்லை.. நல்லவேளை’ என எண்ணினான்.. அதுதான் அவன் உள்மனம் எண்ணியது. நாளைக்கு யாரை பார்க்கணும், எங்க பேமெண்ட் பண்ணனும்… என அதிலேயே சிந்தனை சென்றது லிங்காக்கு. அப்படியே எதிலிருந்தோ தப்பித்து வந்தவன் போல் அமர்ந்து கொண்டான்.. தனது அறையில், சற்று நேரம். பின்தான், […]
எனவே ‘காலையிலிருந்து நேரம் பார்த்திருந்தாள்… எப்போது மணி பத்தாகும்’ என.. எனவே காவ்யாக்கு அழைத்துவிட்டாள்.. நம்பர் கேட்க.. காவ்யா “ஏன் அண்ணி, உங்களுக்கு அண்ணன் போனே பண்ணினது இல்லையா…” என்றாள்.. சக்திக்கு அவளின் விசாரணை த்வனி தெரியவில்லை “ம்கூம்… “ என்றாள் சாதரணமாக. மீண்டும் சக்தியிடம் “நீங்க எப்போ அண்ணன பார்த்தீங்க… உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க” என்றாளே பார்க்கலாம்… சக்தி, தெறித்து விட்டாள்.. “ஐயோ காவ்யா.. நான் லவ் எல்லாம் பண்ணல…” என்றாள்… அனிச்சையாக. காவ்யாக்கு […]
அமுதங்களால் நிறைந்தேன்… 15 லிங்கா நேரே… மேலே அறைக்கு வந்துவிட்டான்… மேலே செகண்ட் ப்ளோரில் பெரிய ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விழா. இவன் அறையிலிருந்து வெளியேறியது.. சக்திக்கு ஒருமாதிரி சங்கடத்தை தர… காவ்யா அதனை கவனித்து… வேறு ஏதோ ஊகித்துக் கொண்டாள்… ‘அண்ணன் ‘தான்’ இருப்பதால்… பேசவில்லை போல, சக்தி அண்ணியிடம்’ என நினைத்துக் கொண்டு… “அண்ணி… அண்ணனுக்கு ஏதோ டென்ஷன்… நீங்க வாங்க… நான் உங்க ரூமில் வெயிட் பண்றேன்…” என சொல்லி அம்முவுடன் சக்தியின் […]
லிங்காவை, அவ்வபோது லதா இளா இருவரும் அழைப்பர்… ‘வா டா… உன் மாமனார் ஹோட்டல் பார்த்திருக்கிறார்… எங்களை கூப்பிட்டார் பார்ப்பதற்கு, நீயும் வா…’ என அழைப்பான் இளா. அதன்பின் ‘உன் ப்ரண்ட்ஸுக்கு சொல்லனுமா… இன்னும் நீ யாருக்கும் சொல்லல… கூப்பிடு டா எல்லோரையும்…’ என சொல்லுவான். ஆனால் லிங்கா ‘எல்லாம் நீ பார்த்து செய்திடு ண்ணா.. இந்தா நம்பர்…’ என முடித்துக் கொண்டான். அத்தோடு, அலுவலகத்திலேயே கிடக்கிறான்.. கொஞ்சமும் நகரவில்லை. அன்று இரவே இளா போனில் அழைத்துதான் […]
லதா பொறுமையாக எல்லாம் கேட்டு.. அவனை ஆசுவாசப்படுத்தி “ போடா… ட்ரெஸ் மாத்தி வா… நிறைய பேசலாம்.. பாட்டி, உனக்கு முறுக்கு செய்து தந்திருக்காங்க… வாடா.. சாப்பிடலாம்..” என நிறைய சமாதானம் சொல்ல… எதற்கும் அசையவில்லை தீபக். அப்போதுதான் நினைத்துக் கொண்டாள் லதா.. ‘இனி இவனை இப்படி ஏங்க விடக் கூடாது…’ என. அதற்கு தக்க தீபக்கும்.. பேசியப் படியே மடியில் படுத்து உறங்கிவிட்டான்… ukgதான் படிக்கிறான்… பால்மனம் மாறாத.. பாலகன்… தன் அன்னையின் பிரிவை சொல்லத் […]
அமுதங்களால் நிறைந்தேன்… 13 சக்திக்கு அன்று முழுவதும் தன் தந்தை சொல்லிய வார்த்தைகளே நிறைந்திருந்தது.. ‘லிங்கா… உன்னை பிடித்து கேட்கிறார்…’ இதுதான் ஓடியது. நல்லதாகவும் இருந்தது.. சற்று, கலவரமாகவும் இருந்தது சக்திக்கு. இன்னும் பெரிதாக உலகம் தெரியாது.. அதற்காக தெரியாமலும் இல்லை.. அவர்களை சுற்றி உள்ள.. குடும்ப வட்டம் அப்படி.. எனவே, அவனை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாள் பெண். எனவே கீழேயே இருந்தாள்… தனது வளர்ப்பு பெற்றோர் அடிக்கடி பேசிக் கொண்டது… என எல்லாவற்றையும் கவனித்தப் […]
அமுதங்களால் நிறைந்தேன்… 12 அம்மா வீடு வந்த லதாக்கு.. இங்கே இருப்பே கொள்ளவில்லை.. அங்காவது வேலை இருக்கும், அப்படி… இப்படி… என அமரவே நேரமிருக்காது.. சுற்றிலும் அவளை தனியே விடாது மனிதர்கள் இருப்பார்கள்.. ஏதோ, பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இங்கு அப்படி அல்ல… அழகான சின்ன வீடு… நிறைய தோட்டம்.. என அவளை சீண்டுவார் யாருமில்லை. பிள்ளையையும்.. இப்போது அம்மா, அப்பா.. அக்கம் பக்கம் வீடு… என பார்த்துக் கொள்ள. லதாக்கு தன் கணவன் […]
லிங்கா தன் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான் “காமாட்சி… எங்க வீட்டு மீனாட்சி…” என்றான். அன்னை “டேய்.. சொல்லு என்ன பண்ணின” என்றார். லிங்கா… சற்று அமைதியாகிவிட்டான்… தன் அண்ணனை பார்த்தான், இளா பதறிப் போய், அமர்ந்திருந்தான்.. காவ்யா கல்யாணம் முடிந்து பேசிக்கலாமே என தோன்றியது அண்ணனாய் இளாக்கு. ஆனால் லிங்காக்கு… அப்போது பேசி நோ யூஸ் என்றே தோன்றியது.. எனவே கண்ணால், தன் அண்ணனை அடக்கி விட்டு “ம்மா… நான் சொல்றத அமைதியா, பொறுமையா கேட்பியா..” […]
அமுதங்களால் நிறைந்தேன்… 11 இரண்டு நாட்கள் கடந்திருந்தது… இயல்பாய் நாட்கள் சென்றது. ஷக்திப்ரியா வீடு… காலையில்.. தந்தை… தன்னை இரண்டு நாளாக கூட அழைத்து செல்லுவதில்லை என்ற கடுப்பில்.. அவ்வப்போது ஏதாவது பேசிக் கொண்டிருந்தாள்.. இல்லை சண்டை வளர்த்துக் கொண்டிருந்தாள்… சக்தி. இன்றும்.. தாமோதரன் உடற்பயிற்சி முடித்து.. அவள் கொடுத்த அந்த கஷாயத்தையும் குடித்து விட்டு அமர்ந்திருந்தார்.. சாரங்கன் இன்று மாலை வருவதாக இருப்பதால்.. லிங்கா சக்தி திருமண விஷயம் பேசி விடலாம் என்ற யோசனையில் […]