2 – அஞ்சுவது யாதொன்றுமில்லை “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” அலைபேசியில் இளையராஜாவின் தேன்குரல் இனிமையாக இழைய அப்போது தான் ட்யூட்டி முடிந்து வந்து குளித்து தலைதுவட்டி நின்ற சித்தார்த் அலைபேசியின் தோடுதிரையைப் பார்க்க அதில் “மாமியார்” என்று மிளிர புருவங்கள் முடிச்சிட அழைப்பை ஏற்றான். மறுமுனையில் “என்ன மருமவனே!! எப்படி இருக்கீய? உச்சஸ்தாயியில் குரல் வர, சித்தார்த்துக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. அத்தை எப்போதுமே இப்படித்தான். அலைபேசியில் அழைப்பதால் குரலுயர்த்திக் […]
அஞ்சுவது யாதொன்றுமில்லை அத்தியாயம் – 1 ‘வித் தாட் வி கம் டு த எண்டாஃப்திஸ் சேப்டர். இந்த சேப்டருக்குண்டான வொர்க்ஷீட் எல்லாரும் மண்டே சப்மிட் பண்ணிடுங்க. நோ எக்ஸ்க்யூஸஸ். இட்ஸ் மண்டே சப்மிஷன் கைஸ்.” என்று கண்டிப்பான குரலில் சற்றும் இளக்கமில்லாமல் சொல்லியபடி தனது விரைப்பான நடையுடன் வகுப்பறையை விட்டு வெளியேறினார் ப்ரொஃபஸர் வைஜெயந்தி. கடைசி பெஞ்சில் இங்கு நடக்கும் எதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதாய் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த ஸ்ருதியின் […]