Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Dum Dum En Kalyaanam

dum dum en kalyaanam 18

Episode 18   வீராவின் அலுவலக அறையில் அவனது நாற்காலியில் அமர்ந்திருந்தார் பரசுராம். எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வீரா, “இப்போதான் அங்கிள்… கையில் இருந்தது எல்லாம் புரட்டிப்போட்டு தியேட்டர் ஒன்னு வாங்குனேன்! அதுக்குள்ள இன்னொரு செலவுன்னா ரொம்ப சிரமம்” என்றான் யோசனையாய்.   “தியேட்டரா? சொல்லவே இல்ல நீ”   “உங்களை நேர்ல கூப்பிட்டு சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு இருந்தேன்! ரெநோவேஷன் வேலை நடந்துட்டு இருக்கு!”   “ஹும்! நீ என்னை சர்ப்ரைஸ் பண்றதுக்குள்ள நான் உன்னை […]


டும் டும் என் கல்யாணம் 17

Episode 17 “ஆஆஆஆ….. அம்மாஆஆ” என கிச்சனில் இருந்து அலறல் கேட்க, வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடினர் இருவரும்.   அங்கே தன் காலை பிடித்துக்கொண்டு அஷ்டா கீழ உட்காந்திருக்க, பால் அடுப்பு தாண்டி, சிலாப்பில் சிந்தி, தரையில் சொட்டிக்கொண்டிருந்தது.   சூடான பால் காலில் பட்டு தான் கத்துகிறாள் என நொடியில் உணர்ந்துக்கொண்ட வீரா, “நீங்க இப்படி வாங்க முதல்ல” என்று கைத்தாங்கலாய் அவளை எழுப்பி வெளியே கொண்டு வந்து அமர வைத்தான்.   விஜயா பதைப்புடன் […]


dum dum en kalyaanam 16

Episode 16   “வேண்டாம் மாப்ள! இது சரி வரும்ன்னு எனக்கு தோணல” என உறுதியாய் மறுத்துக்கொண்டிருந்தார் சண்முகம்!   “முதல்ல இந்த மாப்பிள்ளையை விடுங்க மாமா! வீரா’ன்னே சொல்லுங்க” என அதட்டலாய் சொன்னான் வீரா.   “மாப்ள?” என மீண்டும் அவர் தொடங்க…   “வீர்….ர்..ரா” என அழுத்தி அவன் சொன்னதும், “சரி வீரா! என்னதான் நம்ம சொந்தமா இருந்தாலும் காசு உள்ளுக்குள்ள வந்துட்டா பின்ன உறவுல சிக்கலா போய்டும்!” என்றார் சண்முகம்.   “என்ன […]


dum dum en kalyaanam 15.2

வாசலில் இருந்த தள்ளுவண்டிகாரரிடம் விரைந்த விஜயா, “தம்பி, அரைகிலோ கேரெடும், பீன்சும் போட்டுடுப்பா” என்று சொல்ல,   “வா’க்கா… புது மாமியாரே! மருமக, மகர் எல்லாம் நலமோ?” என கேலியாய் கேட்டுக்கொண்டே ஒரு ஒயர் கூடையுடன் அங்கே வந்தாள் பக்கத்துவீட்டு கௌசி.   “ம்ம்ம்…. எங்க நலத்துக்கு என்ன குறைச்சலாம்? பக்கத்து வீட்டுக்காரி பார்த்து வவுத்தெரியுற அளவுக்கு அமோகமா இருக்கோம்” என்ற விஜயா,   “இந்தாப்பா! பின்ன வந்தவங்களுக்கு அளந்து போடாம, முன்ன கேட்ட எனக்கு போட்டுக்குடு […]


Dum Dum En Kalyanam 15.1

Episode 15   காலையில் அஷ்டா கண்விழிக்கையில் வழக்கம் போல மணி ஏழரையை தொட்டிருந்தது.   ‘ஐயோ சீக்கிரமே எழுந்துரிச்சாலும் எப்படி கடிகாரம் இதே டைமே காட்டுது? முதல்ல கடிகாரத்தை மாத்தனும்’ என பேசிக்கொண்டே குளியறைக்குள் புகுந்துக்கொண்டாள்.   அரக்கப்பறக்க அவள் வெளியே வந்தபோது நேரம் எட்டை நெருங்க, சுடிதார் ஒன்றை மாட்டிக்கொண்டு அறையை விட்டு வந்தாள் அஷ்டா.   டிவியில் செய்தி முடியும் தருவாயில் இருந்தது. விஜயா அதை கவனித்துக்கொண்டே சம்மணம் போட்டு அமர்ந்திருக்க, “குட் […]


dum dum en kalyaanam 14.2

உண்ட மயக்கத்தில் வந்து தன் அறைக்குள் விழுந்த அஷ்டாவை தேடி வந்தார் நீலா.   “அஷ்டா? எப்படி டி இருக்க?”   “ம்ம்…ம்ம்ம்” படுத்துக்கொண்டே முனகினாள். மனதிலோ, ‘இப்போ தான் கண்ணுக்கு தெரியுறேன் போல’ என சடைத்துக்கொண்டிருந்தாள்.   “காலைல நேரமே எழுந்துரிச்சியா? தலைக்கு ஊத்திக்கிட்டியா? சாமி மாடத்துல விளக்கு ஏத்துனியா? கோலம் போட சொன்னேனே? செஞ்சியா?” வரிசையாய் அவர் கேட்க,   “ஸ்ஸ்ஸ்… ஷப்பா! நான் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு! இப்போதான் என்கிட்ட பேசவே […]


dum dum en kalyaanam 14.1

Episode 14   காலை கண்விழிக்கையில் உடல் அலுப்பாக இருந்தது அஷ்டாவுக்கு. திருமணத்திற்கு என அலைக்கழித்ததில் இன்னும் இரண்டு நாட்கள் விட்டால் கூட தூங்கிக்கொண்டே இருந்திருப்பாள்.   ஆனால், கொஞ்சமாய் விழிப்பு தட்டியபோதே, தான் இருப்பது ‘மாமியார் வீட்டில்’ என்ற நிதர்சம் நியாபகம் வர, மிச்சம் வந்த தூக்கத்தையும் விரட்டிவிட்டு அவள் எழுந்து அமர்ந்த போது, கட்டிலுக்கு எதிரே இருந்த டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை வாரிக்கொண்டிருந்தான் வீரா.   அஷ்டா எழுந்துவிட்டதை கண்ணாடி வழியே […]


டும் டும் என் கல்யாணம் 13

Episode 13   தங்களுக்கு சொந்தபந்தம் என பெரிதாய் யாரும் இல்லை என வீரா சொன்னதை வைத்து மனக்கணக்கு போட்டிருந்த சண்முகம், மண்டபத்தில் நிரம்பி வழிந்த ஆட்களை கண்டு தலை சுற்றிப்போனார்.   வந்திருந்தவர்களில் பெண்வீட்டார் பாதி கூட இல்லை! வீராவுக்கு சொந்தபந்தம் தான் குறைவே தவிர, தொழில்துறை நண்பர்கள், அக்கம்பக்கம், பழகியவர்கள் என ஏராளமாய் இருந்தனர்.   ஐயர் ‘மாப்பிள்ளையை வர சொல்லுங்கோ’ என அழைக்கும்வரை மண்டபத்தில் அங்கும் இங்குமாய் ஓடி ஓடி வேலைகளை கவனித்துக்கொண்டும், […]


டும் டும் என் கல்யாணம் 12

Episode 12   தான் சொன்னதை கேட்டு அதிர்ந்துப்போவான் என எதிர்ப்பார்த்தாள் தான்!!! ஆனால், ‘எழுந்து வெளில போங்க’ என பல்லைகடித்துக்கொண்டு அவன் விரட்ட, திருதிருவென முழித்தாள் அஷ்டா.   “என்னங்க பார்க்குறீங்க? எழுந்துரிங்கன்னு சொல்றேன்’ல!!!” என்றான் அடிக்குரலில்.   சட்டென எழுந்தவள், அவனை மிரண்டப்பார்வை பார்க்க, விறுவிறுவென கோவிலை விட்டு வெளியே சென்றான் வீரா. அஷ்டாவும் அவன் பின்னாலேயே ஓடினாள்.   கோவிலின் வெளிப்புறத்தில் பைக் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தவன், “உங்க ஸ்கூட்டி எங்க?” என்றான். […]


dum dum en kalyaanam 11

Episode 11   தன்முன் சிகப்பு ரோஜாவை நீட்டிக்கொண்டு நின்ற வீராவை மேலும் கீழும் பார்த்தாள் அவள்.   கைகள் தன் ஹேண்ட்பேகை இருக்கிக்கொண்டது.   அவள் அப்படியே நிற்கவும் தான்… சுயத்துக்கு வந்த வீரா, தான் ரோஜாவை நீட்டிக்கொண்டு நிற்ப்பதை கண்டு ‘அய்யயோ’ என திகைத்துவிட்டான்.   ‘இதை எப்போ நீட்டுனேன்?’   எதிரே பார்த்தால், ஒரு விளங்கா பாவனையில் அவனையும் ரோஜாவையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அஷ்டா.   உடனே சமாளித்துக்கொண்டு, “ஹாய்’ங்க” […]