“சரி சரி பூனை ரொம்ப சீராத… உள்ள இருக்க புலிங்க உனக்கு மேல சீற போறாங்க…” என்றவனின் குரலில் தோழியை குறித்த அக்கறையே மேலோங்கி இருந்தது. “காரு நாங்க நாளைக்கே கிளம்பி வர்றோமே… பாப்பா இரண்டு பேரையும் பார்த்து ஒரு வாரம் மேல ஆகுது… உனக்கும் டெலிவரிக்கு இன்னும் பத்து நாள் தானே இருக்கு… நாங்க இப்பவே வர்றோமே…” என்றவன் கெஞ்சலாக கேட்டதும், “டேய்! ஒரு கம்பெனி ஓனர் மாதிரி பேசுடா… நானும் ஒரு […]
மாயாவி 32 ::- ஆறு வருடங்கள் கழித்து!!!! “அடியேய்! சொன்னா கேளு… இந்த நேரத்துல அங்க வேணாம்… இன்னொரு நாள் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்…” என்று சொன்னவனை பெரிதாக சட்டை செய்யாமல், “இப்ப என்னை கூட்டிட்டு போறீங்களா? இல்லையா?” என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லமால் அழுத்தமாக கேட்டவளை முறைத்தான். “இப்ப எதுக்கு முறைக்கறீங்க? நான் என்ன என்னை வெளியூருக்கா கூட்டிட்டு போக சொன்னேன் இல்லை கூர்க் தான் கூட்டிட்டு போக சொன்னேனா.. […]
“நீங்க என்னை கூர்க்ல போய் தேடனீங்களா?” என்று ஆச்சர்யமாக கேட்டவள் தொடர்ந்து, “நான் நாலு நாளைக்கு முன்னாடி வரைக்கும் அங்க தான் இருந்தேன்… நம்ம தங்கியிருந்த ஹோட்டல்ல இருந்து வேற இடம் போய் தங்கினேன்…. அப்புறம் போக போக உங்களை விட்டுட்டு இருக்க முடியல… ஏதோ தப்பு பண்ற மாதிரி தோணுச்சு…” “இப்படி உங்க தோள்ல சாயாம இனி இருக்கவே முடியாதுன்னு தோணுச்சு… அதான் இங்க வந்தேன்… நான் தனியா வந்ததை பார்த்து மாமா […]
மாயாவி 31::: மாயமாகிப் போன என் வாழ்க்கையில் என்னென்னவோ மாயங்கள் செய்து அதை வண்ண மயமாக்கி விட்டாயே! என்னடா(டி) மாயாவி நீ! “நீ இங்க தான் இருக்கன்னு நேத்து நைட்டே அவன் கிட்ட சொல்லிட்டேன்… உன்னை காணோம்னு ரொம்ப பதறிட்டான்… இப்பவும் நாளைக்கு விசேஷம் ஒரு காரணம் தான் ஆனால் உன்னை உடனே பார்க்கணும்னு தான் இப்பவே வந்துட்டான்…” “அவனை மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க உண்மையாவே நீ கொடுத்து வைச்சு இருக்கணும்…” […]
மாயாவி 29 ::: எனக்கு நீ! உனக்கு நான்… என்பதை கட்டிய தாலி கொடுத்த உணர்வை விட… உன் விழி பார்வையால் என்னை இந்த பந்தத்தில் உன்னோடு இணைய வைத்தாயே!… என்னடி மாயாவி நீ ! இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் சேர்ந்தாற் போன்ற பட்டு புடவையில் கழுத்தில் ஆரமும் நெக்லசும் அதற்கு தோதாக ஜிமிக்கியும் போட்டுக் கொண்டு, புடைவை நிறத்திற்கு இணையாக கைநிறைய வளையலோடு, இருபுறமும் மல்லி சரம் தொங்க, கூட்டமாக அமர்ந்திருந்த பெண்களின் நடுவே […]
மாயாவி 30::: வெற்றி என்பதின் அரிச்சுவடி அறியாத எனக்கு உன் நம்பிக்கையை கொடுத்து என் காதலை எடுத்து கொண்டு இந்த வாழ்வில் என்னை வெற்றி அடைய வைத்தாயே!… என்னடி மாயாவி நீ! “மாயமா? அப்படி என்ன மாயம் செஞ்சு உங்களை எனக்கு அடிமையாக்கிட்டேனாம்… இவரு எனக்கு அடிமையா இருக்காராம்…. நம்பற மாதிரி சொல்லுங்க…” என்று நொடித்துக் கொண்டவளைப் பார்த்து சிரித்த அமுதன், “பின்ன உன்னை பார்த்துக்கணும்னு வந்தவனை எல்லாத்துக்கும் உன் பின்னாடி சுத்த […]
மாயாவி 28::: முதல் பார்வையில் எல்லாம் உன்மேல் எனக்கு காதல் இல்லை… ஆனால் இன்று உன்னை பார்க்கும் ஒரு ஒரு நொடிக்கும் உன்மேல் காதல் கொள்ள வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ ! சூழ்நிலையின் காரணமாக நடந்த திருமணத்தில் இருவரின் மனமும் வெவ்வேறு மனநிலையில் இருக்க அப்போது அந்த தருணத்தை அனுபவிக்க முடியாமல் இருந்தனர். ஆனால் நாளை நடக்கும் தாலி கோர்க்கும் சடங்கிலாவது ஒருவரை ஒருவர் உணர்ந்து அதை ஏற்க வேண்டும் என்ற […]
மாயாவி 27 ::: உன்னை தேடித் தேடி… களைப்படைந்த என்னை… இளைப்பாற வைத்த நீ ! சோர்வே அடையாத உன் காதலில் காலம் முழுக்கும் என்னை மூழ்க வைக்க நினைக்கிறாயே! என்னடி மாயாவி நீ! அவளிடம் தன் மனதை முழுமையாக தொலைத்த இடமான கூர்க்கில் அவள் நினைவுகளோடு சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாளே ஆனாலும் உரிமையும் நெருக்கமுமாக அவளையும் அவள் மனதையும் படித்த இடமாயிற்றே… ஊருக்கு செல்லுமுன் அங்கு செல்ல வேண்டும் போல […]
மாயாவி 26 ::: வாழ்க்கையின் தேடலை ஆரம்பித்த என்னை… இன்று நீ தேட வைத்தது… என் காதலை… என் வாழ்க்கையை மட்டுமல்ல… என் காதல் வாழ்க்கையான…. உன்னையே தேட வைத்து விட்டாயே… என்னடி மாயாவி நீ ! இன்றோடு ஒரு மாதம் ஆகிற்று அவள் அவனை விட்டு சென்று… அன்றைய இரவில் அவள் மறுப்பையும் மீறி நாம் பேசி அனைத்தையும் புரிய வைத்திருக்க வேண்டுமோ என்று அவன் எண்ணாத நாளில்லை… இங்கேயே என்னிடம் விலகி […]
மாயாவி 25:::- நானே உணராத நம் பந்தத்தின்… உரிமையை உணர வைத்த நீ! நீயே உணராத உன் காதலையும்… எனக்கு உணர வைத்த நீ ! அந்த காதலுக்கும் உரிமைக்கும்… நான் விரும்பியே என்னை… அடிபணிய வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ ! கண்முன்னே இருக்கும் இயற்கை எழிலை இந்த பனிப் பொதிகள் மறைப்பது போல இவளுள்ளே இன்னும் என்னவெல்லாம் மறைத்துக் கொண்டிருக்கிறாள். இயல்பான சின்ன சின்ன ஆசைகளை கூட தன்னுள் பொத்திக் […]