என்னவள்_37 எல்லாமே வேகமாக நடந்து முடிந்திருந்தது…பார்த்து விட்டு வந்தவனுக்கு கடைசியாக புன்னகைத்தபடி நகர்ந்து சென்ற சக்தியின் முகமே கண்களில் நின்றது. உன்னை கண்டுகொண்டேன் என்பது போல… அங்கிருந்து வந்ததும் மனதிற்குள் சொல்லி கொண்டது…’புத்திசாலி பொண்ணு’ என்பது மட்டும் தான். மாயாவின் தந்தை தான் மறுபடியும் இவனிடம் பேசினார்.” கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லு கார்த்திக்.சிவா உன்னோட ஃப்ரெண்ட் தானே ஏதாவது கேட்கணும்னா கேட்டுட்டு பதில் சொல்லு…என்றபடி…கார்த்திக் மாயா முடிஞ்சது போன அத்தியாயம் இனி அவளை […]
என்னவள் _36 சக்தி வேலைக்குசெல்வதை நிறுத்தி இருந்தாள். மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது. ரேஷ்மா தான் விடாமல் “மறுபடியும் வேலைக்கு வா சக்தி என்று அழைத்து கொண்டு இருந்தாள். பொண்ணுன்னு இருந்தா கேட்டு வரத்தானே செய்வாங்க சக்தி. பிடிக்கலைனா நமக்கு ஒத்துவராதுன்னு தோணினா விலகிடறதும் சகஜம் தானே அதுக்காக வேலையை விடுவாயா..”.என்று கேட்டு இருந்தாள் அதுவும் இவளது வீடு தேடி வந்து சண்டையிட்டு இருந்தால் என்றுதான் சொல்ல வேண்டும். “அப்படியல்ல ரேஷ்மா…கொஞ்ச நாள் வரைக்கும் வரணும்ன்னு […]
என்னவள்_35 ஹாஸ்ப்பிடலின் வாசலில் மாயாவின் தந்தையோடு அமர்ந்து இருந்தான் கார்த்திக். பிருந்தாவை ஆறுமணிக்கு வந்து மாயாவின் தாயார் அழைத்து சென்றிருந்தார். அப்போது ஃபோன் அழைத்தது கார்த்திக்கை…அழைப்பை பார்த்தவனின் முகம் லேசாக புன்னகை புரிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவா இவனை அழைத்து இருந்தான். “ஹலோ” என்றபடி எழுந்து நகர்ந்து சென்றான். “எப்படிடா இருக்கற கார்த்திக் காலையிலேயே அத்தனை மகிழ்ச்சியாக அவனின் குரல் இவனுக்கு கேட்டது.” “ம்.. நல்லா இருக்கிறேன் என்னடா திடின்னு இந்த நேரத்தில் […]
என்னவள்_34 வடமதுரை ஈஸ்வரன் கோவிலுக்கு வழக்கம்போல மாலையில் உள்ளே செல்ல அங்கே பிரபு இவளுக்காக வாசலிலேயே காத்து இருந்தான். “வா..சக்தி “என்று அழைத்துக்கொண்டு அவனோடு கோவிலுக்குள் உள்ளே நுழைந்தாள். “அம்மா ,ஸ்ரீ வரலையா இன்றைக்கு…சக்தி கேட்டபடி அவனை பின் தொடர்ந்தாள்.” “இல்லை சக்தி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…அதனால்தான் வரச்சொன்னேன் .” “ஒ..”.என்று சொன்னதோடு சரி…அமைதியாக கோவிலை வலம் வந்தனர் இருவரும்…சாமி கும்பிட்டு முடிக்கவும் தெய்வத்தை பார்த்தபடி அமைதியாக அமர்ந்து இருக்கு…பிரபு […]
என்னவள்_33 மாயா முதலில் தாயாரிடம் சொன்னது போல அவளுடைய வீட்டிற்கு போகமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி இருந்தாள். கடைசியில் இவளோடு அவர்தான் இங்கே வந்து தங்கி இருந்தார். அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்து அந்த தருணமும் வந்தது. வலிபிடிக்கவும் உடனே ஹாஸ்ப்பிடலுக்கு அழைத்து சென்றிருந்தனர். ஒரு நாள் முழுக்க இவளை கதறவிட்டு கடைசியாக ஜனித்திருந்தான் இவளது தவப்புதல்வன். வலி பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் டாக்டரிடம் சண்டைக்கே போய் இருந்தாள் மாயா… “வலி தாங்கமுடியலை […]
என்னவள்_32 தாயாரின் அழைப்பை கேட்கவும் வேகமாக புறப்பட்டு வந்திருந்தான் கார்த்திக். காலையில் புறப்படும் போது அவளது பேச்சு ஞாபகம் வந்தது. ஒரு வேளை இவள் காலையில் பேசினதை வச்சிகிட்டு வம்பிழுக்கறாலோ என்று வேகமாக வீட்டிற்கு வந்தான். “காலையில்இருந்து சாப்பிடலைடா ..வயிற்றில் பிள்ளையை சுமக்கறா…எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியவில்லை. ஒவ்வொரு தடவையும் போய் கதவை தட்டியாச்சு..ஏன் இந்த பொண்ணு இப்படி பண்ணறான்னு தெரியலை…ஏண்டா கார்த்திக் நீ ஏதாவது சண்டை போட்டியா…” “ம்மா…என்று ஆரம்பித்தவன் இருங்கள் […]
என்னவள்_31 அன்றைய பொழுது எதுவும் சொல்ல வில்லை ஆனால் கோபம் மட்டும் பிருந்தா மேல் சுழன்று கொண்டுஇருந்தது. அப்போது வந்தவள் மறுபடியும் உடைமாற்றி கீழே வரும் போது கார்த்திக் பிருந்தாவிற்கு படிக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தான். அமைதியாக சற்று தொலைவில் அமர்ந்து கொண்டாள் மாயா… கோபம் நிறைய இருந்தது பிருந்தா மேல்…’நீ என் கிட்ட மாட்டுவே பிருந்தா’என்று அந்த நிமிடம் மனதிற்குள் சொல்லி கொண்டாள். இரவு வரையிலுமே படிப்பு நீண்டு கொண்டு இருந்தது. ஒன்பதரை […]
என்னவள்_30 கார்த்திக் வீட்டில் மொத்தமாக குழுமி இருந்தனர். கார்த்திக் தாய்,தகப்பனார் அதே போல மாயாவின் தாய்,தந்தை என்று மொத்தமாக…பிருந்தா டியூஸ்சனுக்கு புறப்பட்டு சென்று இருந்தாள். “மாயாவின் தகப்பனார் கார்த்திக்கை பார்த்து கார்த்திக் கல்யாணம் முடிஞ்சாச்சு ஹனிமூனுக்கு எந்த ஊருக்கு போகலாம்ன்னு முடிவு செஞ்சு இருக்களிங்க என்று ஆரம்பித்தார். “ மாயா கார்த்திக் என்ன சொல்ல போகிறான் என்று அவனது முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள். “அங்கிள் வேலை நிறைய இருக்கு…இப்ப முடிக்கற […]
என்னவள்_29 அன்றும் வழக்கம்போல பிரபு சக்தி,ரேஷ்மா இருந்த செக்சனுக்கு வந்து இருந்தான். ஆண்டுவிழா முடிந்து பதினைந்து நாட்கள் முடிந்து இருந்தது. சக்தியின் கவிதை சத்தமில்லாமல் பிரபுவின் பிரோவில் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் அடைந்து இருந்தது ஆனால் இன்று வரையிலும் கேட்கும் தைரியம் மட்டும் அவனுக்கு வரவில்லை. நிமிர்ந்து முகம்பார்த்து பேசும் அவளிடம் கேட்க இவனுக்கு தான் தைரியம் வரவில்லையோ…ஆனால் சிறு சிறு உதவிகளை தயங்காமல் கேட்க பழகி இருந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு ரேஷ்மா, […]
என்னவள்_28 காலை ஆறுமணியை தொடும் போது கார்த்திக்கிற்கு விழிப்பு வந்து இருந்தது. அருகில் திரும்பி பார்க்க இன்னும் ஆழ்ந்து தூங்கி கொண்டு இருந்தாள் மாயா…அவனை வயிற்றோடு அணைத்தபடி…சிறு குழந்தை போல…லேசான புன்கையோடு… கார்த்திக்கிற்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது மாயாவின் மாற்றம் ஒரே நாளில் மொத்தமாக மாறி இருந்தாள். இனி எல்லாமே நீ மட்டும் தான் என்பது போல…கொஞ்சம் பயமாக கூட இருந்தது கார்த்திக்கிற்கு…இவ்வளவு அதிக அன்பும் கூட கொஞ்சம் ஆபத்து தானோ என்று…கொஞ்ச நேரம் […]