கலாட்டா 16.1 கடிகாரம் இரவு பத்தை கடந்து சில நிமிடங்கள் என நேரம் காட்டியது. லட்சுமி மௌனமாய் அடுக்களையில் நின்றுக்கொண்டிருந்தார். வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண், காய்ச்சிய பாலை அவரிடம் கொடுக்க, “வச்சுட்டு கிளம்பு, நான் எடுத்துக்குறேன்” என்று அவளை அனுப்பி வைத்தார். பின்னே, தனக்கும் கணவருக்குமாய் இரு குவளைகளை எடுத்துக்கொண்டு அவர் அறைக்குள் செல்ல, பீரோ லாக்கரில் எதையோ மும்மரமாய் தேடிக்கொண்டிருந்தார் ராஜகோபால். சத்தம் வரும்படி மேசை மீது குவளையை ‘டங்’கென […]
கலாட்டா காதல் 15 ராஜகோபால் அறையில் இருந்து சற்று குதூகலமாகவே வெளியே வந்தான் ஆதி. வேலையில் கவனம் இருந்தாலும், ‘எங்க போனவனை ஆளே காணோம்?’ என ஆதியை எதிர்ப்பார்த்து காத்திருந்த கோகுலுக்கு, அவன் துள்ளல் நடையில் வெளியே வருவதை கண்டதும் ஆர்வமாகி போனது. ஆதி தன் கேபினுக்குள் நுழைந்த மறுநிமிடம், கோகுலும் ஓடி சென்று அவன் அருகே அமர்ந்துக்கொண்டு, “என்னடா பேசுனீங்க இவ்ளோ நேரம்?” என்றான் ஆவலாய். “எல்….லாம் பேசியாச்சு” “அதான்…!!! […]
கலாட்டா காதல் 14 தனது அலுவலக அறையில் மூன்றாள் அகலத்திற்கு கண்ணாடி பதிக்கப்பட்டு, உள்ளிருந்தே வெளியுலகை காணும்படி இருந்த ‘பிரன்ச் விண்டோ’வின் மூலம் சென்னையின் ரம்யத்தை சூடான குளம்பியுடன் ரசித்துக்கொண்டிருந்தார் ராஜகோபால். மகளிடம் எதையும் கேட்க வேண்டாம் என மனைவியிடம் சொல்லிவிட்டார். அதற்க்காக அவள் சம்பந்தப்பட்ட விடயத்தை அப்படியே ஆறப்போட அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. மகளே சொல்லட்டும் என காத்திராமல் தன் யூகத்தை சரிப்பார்க்க, ஆதித்யாவை சந்திக்க வரும்படி அழைத்துவிட்டு காத்திருந்தார். […]
கலாட்டா 13 ஆதி சொன்னது போல மியூசிக் ப்ராக்டிசில் பிஸியாகிவிட, அவனை பார்க்கக்கூட முடியாது சோர்ந்துப்போனாள் தன்யா. மதிய இடைவெளியில் அவனை சந்திக்க ஆவலாய் ஆடிட்டோரியம் போனவளை முழுதாய் ஏமாற்றினான் ஆதி. அவனை சுற்றி குறைந்தது முப்பது பேராவது ஆண் பெண் என்ற பாகுபாடின்றி சூழ்ந்து நிற்க, அவர்களிடம் என்னவோ பேசி சிரித்துக்கொண்டிருந்தான் ஆதி. அவன் முகமே இருவர் நகர்ந்த இடைவெளியில் சிறிதளவே தெரிய, இதில் எங்கே அவனிடம் பேசுவது? சிறுது நேரம் நின்று […]
கலாட்டா 12 ஆதி கத்த கத்த நிற்காமல் காரை கிளப்பிக்கொண்டு சென்றவளைக்கண்டு அவனுக்கு ஆத்திரம் மிக, அதை தன் நடையில் காட்டியபடி பார்க்கிங்கில் இருந்து வெளியே வந்தான் ஆதி. கோகுல் பைக்கில் அமர்ந்து இவன் வருகைக்காக காத்திருப்பதை கண்டதும், பின்னே ஏறி அமர்ந்தவன், “போ…டா” என்றான் தொலைவில் புள்ளியாய் தெரியும் தன்யாவின் காரை வெறித்துக்கொண்டே. கோகுல், “எங்கடா? பாம்பே’க்கா?” என்றிட, சட்டென திரும்பி அவன் முகம் பார்த்த ஆதி, அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு […]
கலாட்டா 11 அன்று ஹாஸ்டலுக்கு திரும்பிய தன்யாவுக்கு மனம் முழுக்க ஆதியின் நினைவே…! அவளே மறக்க வேண்டும் என நினைத்தாலும் கூட உடன் இருக்கும் தோழிகள், ‘ஆஹா, ஓஹோ’ என ஆதி புகழ் பாட, அது ஒருபுறம் கேட்க உவப்பாய் இருந்தாலும், மறுபுறம் கொஞ்சம் எரியவே செய்தது. “நான் நேத்தே சொன்னேன்ல? அவர் பார்க்க ஒன்னும் மோசமான ஆளா தெரியலன்னு! இப்போ பார்த்தியா? நான் சொன்னமாறியே அவர் எவ்ளோ ஸ்வீட்டா இருக்காருன்னு” என அம்ருதா […]
கலாட்டா 10 மாலை ஆறு மணி நெருங்க ‘தேவா விலாஸ்’ஸுக்குள் உற்சாகமாய் நுழைந்தான் ஆதித்யதேவ். பைக்கை நிறுத்திவிட்டு சாவியை தூக்கிப்போட்டு பிடித்தபடி உள்ளே வந்தவன், “ம்மா!! பால் கொழுக்கட்டை ரெடியா?” என கேட்டுக்கொண்டே வர, “இதோ வந்துட்டானே, உன் உத்தம புத்திரன்! இடுப்புல தூக்கி வச்சு சோறூட்டு!” என நக்கலாக சொன்னார் ஜெயதேவ். அந்த நேரத்தில் அவர் குரலை அவர்கள் வீட்டில் எதிர்ப்பாராதவன், அந்தரத்தில் பறந்த சாவியை கூட பிடிக்க மறந்து அப்படியே […]
கலாட்டா 09 (***கல்லூரி கால சம்பாஷனைகள் ‘ஹிந்தி’ மொழியில் தான் அமைந்திருக்கும் என்றாலும் மொழி புரிதலுக்காக இங்கே தமிழில் பதிவு செய்யப்படுகிறது***) ஐந்து வருடங்களுக்கு முன்பு…! மகாராஸ்டிராவில் ‘தேவா விலாஸ்’சில் இருந்து சத்தம் வீட்டின் வெளி கேட் வரை கேட்டுக்கொண்டிருந்தது. நடு கூடத்தில் ஜெயதேவ் ஒரு திரும்பி நிற்க, ஆதித்யதேவ் மறுபுறம் திரும்பி நிற்க இருவருக்கும் இடையே நின்ற தெய்வானை வழக்கம் போல தனது ‘ரெப்ரீ’ வேலையை ஆரம்பித்திருந்தார். […]
கலாட்டா 08 அடுத்தநாள் காலை, பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அலுவலகத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்தனர் கோகுலும் ஆதியும். ஆதி தன்போக்கில் ஏதோ பாடலை முனுமுனுத்தபடி வர, கோகுல் சிறிதாய் செருமிக்கொண்டு, “என்னென்னவோ நடக்குது? என்னன்னு தான் புரிய மாட்டேங்குது?” என்றான் கடைக்கண்ணால் ஆதியை நோட்டமிட்டபடி. “நீயும் நானும் நடக்குறோம், அது இல்லாம இன்னும் ரெண்டு பேர் நமக்கு முன்னாடி நடக்குறாங்க!” என்ற ஆதியிடம், தீவிரமான பாவத்துடன், “இந்த மாறி செத்துப்போன காமெடி எல்லாம் கொஞ்சம் தவிர்த்திடலாம் மச்சி! என்ன?” […]
கலாட்டா 07 (2) தன்யாவுக்கு அடக்க முயன்றும் தாளாமல் கண்களில் இருந்து நீர் வடிய, அவள் கேபினின் உள்ளே சிறியதாய் இருக்கும் ஓய்வெடுக்கும் அறைக்குள் சென்று அங்கிருந்த சோபாவில் படுத்துவிட்டாள். ‘அவள் நடந்துக்கொண்டது சற்று அதிகப்படி’ தான் என அவளுக்கு புரியாமல் இல்லை. அவன் செய்த தவறை கண்டுப்பிடித்ததும், அதை சொல்லி அவனை திட்டிவிட வேண்டும் என்ற ஆவேசம். யோசிக்காமல் நடந்துக்கொண்டாள். ஒரு வருடத்திற்கும் மேலாய் தன் முகம் பார்க்கக்கூட விரும்பாத […]