Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே 18

அத்தியாயம் 18   விஜயின் கைப்பேசி சிணுங்கவும் அனிச்சையாய் அவன் கைகள் மொபைலை நாட ஸ்விப் செய்து பார்த்தவன் நோடிஃப்வீகெஷனாய் Dr.சந்தானம் இடமிருந்து, “ஓகே விஜய்.. ஐ வில் பீ தேர் இன் ஃபிஃப்டீன் மினிட்ஸ்..”  என்று குறுஞ்செய்தியை காட்ட,  ‘அங்கிள்ட்ட அப்பாவை அட்மிட் செய்ததை யாரு சொன்னது..’  என்ற யோசனையோடு மெசேஜை திறந்தவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. ”வாட் த ஹெல்..”  அவசரமாய்  சாட்டை ஸ்க்ரோல் செய்து அதன் ஆரம்பத்தை பார்க்க சில நிமடங்களுக்கு முன்னால் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே 17

அத்தியாயம் 17   இருவரும் சுதாரித்த நொடி அவ்விடத்திற்கு விரைய அங்கே சிவகுமாரின் தலையை சுற்றி இரத்தம் நிரம்ப பார்க்கவே மனதை பதற வைத்தது.சுற்றியுள்ள அனைவரும் கூடி இடமே பரபரப்பாக அவர்கள் பேச்சிலே எல்லோரும் அவர் விழுந்ததும் தான்‌ பார்த்திருக்கின்றனர் என்பது புரிய ‘சக்தியை யாரும் பார்க்கவில்லை’ என்று அவன் நம்பிய அதே நேரம் அவனை தனியே‌ இழுத்து வந்த மனோஜ், “அது…சக்தி…சக்தி தானே..” என்று அதிர்ச்சியாய் சொல்ல, “சக்தியா..?அவ எங்க இங்க..எ-என்ன உளர..வா சாருக்கு என்னாச்சு […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 16

அத்தியாயம் 16 “குட் மார்னிங் கோச்..வர சொன்னீங்களாமே..” கையில் பந்துடன் தன்னை சுற்றி நின்ற சில மாணவர்களுக்கு எதையோ விளக்கி கொண்டிருந்தவர் ஆரியன் வந்து நிற்கவும், “நீங்க ப்ராக்டீஸ் பண்ணுங்க..” என்று அவர்களை அனுப்பிவிட்டு ஆரியனை நெருங்கி அவன் தோளில் கைப்போட்டு, “ஆமாடா ஒரு முக்கியமான விஷயமா தான்..இப்போ உன் கால் பரவாயில்லையா…”  “ஐயம் ஃபைன் கோச்…பழையபடி நார்மல் ரொடீன்னுக்கு திரும்பியாச்சு…”  “குட்..ஏன் கேட்கிறேன்னா நீ ஸ்டெட் லெவலில் பார்டீசிப்பேட் பண்ண போற..ஸோ காம்படீஷன் ஹெவியா இருக்கும்.. […]


சமீராவின் இளங்காத்து வீசுதே 15

அத்தியாயம் 15   “யாரு…” என்று அதட்டலாய் கேட்டதும் சட்டென்று நின்றுவிட்ட சத்தம் அடுத்த நொடி வேறு இடத்தில் தொடங்கி விஜயை சிலிர்க்க செய்தது. ஒன்றன்பின் ஒன்றாய் நடக்கும் இவையை என்னவென்று புரியாமல் ஒரு நிமிடம் தடுமாறியவன் சட்டென்று தன்னை மீட்டு எச்சரிக்கை உணர்வு ஓங்க அவ்வறையை விட்டு வெளியே வந்தான். மேல் படிப்பிற்கான வெளிநாட்டு வசத்தில் தொடங்கி அதன்பின் ஊரில் வந்து தொழிலை கையில் எடுத்தபின்னும் தனிமை ஒன்றே விஜயின் துணையாய் இருந்தது. நெருங்கிய நண்பர்கள் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே 14

அத்தியாயம் 14   கே.வி.எஸ் கல்லூரி நூலகம் புத்தகங்களின் பிரத்யேக வாசனையும் ஒழுங்கான வரிசைப்பாடும் முழு நிசப்தம் நிரம்பிய இடத்தில் ஆங்காங்கே சின்ன முணுமுணுப்புகளோடு அதற்கே உரித்தான வழக்கத்தோடு இயங்கிக் கொண்டிருக்க அங்கே ஒரு பகுதியை நம் ஆரியனும் அவனது நண்பர்கள் கூட்டம் ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து புத்தகத்தில் ஆழ்ந்து இருப்பதை காணும்போது  நமக்கு மைல்ட் அட்டாக் வந்தாலும் அத்திபூத்தார் போல் நடக்கும் இந்த காட்சியை ஜீரணித்துக் கொண்டு ஆரியனும் அனித்தும் அமர்ந்திருந்த […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 13

அத்தியாயம் 13   “மித்ரா…எங்க போன…மித்ரா..நீ நினைக்கிறா மாதிரி இல்ல..” காற்றில் கலந்து கரைந்தவளை காணாது  பதறி தேடியபடி நகர முற்பட்டவளை தடுக்க தன்னையும் மீறி அவள் கையை பற்றினான் ஆரியன். “ஏ..சக்தி..நில்லு..என்ன பண்ற..அது போயிடுச்சா..??” என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி சந்தேகமாய்.பெரிதாய் பேசிவிட்டாலும் அதற்கு மித்ராவின் எதிரொலி எப்படி இருக்குமோ என்ற பயம் லேசாய் அவனிடம் இருக்க தான் செய்தது.சும்மாவா..? ஏற்கெனவே அடிவாங்கியவன் ஆகிற்றே..! ஆதலால் பேசிவிட்டு அது என்ன செய்யுமோ என்ற அச்சத்தோடு தான் […]


சமீதாவின் இளங்காத்து வீசுதே – 12

அத்தியாயம் 12 இத்தனை நாட்கள் சென்று இன்று தான் கல்லூரிக்கு மீண்டும் வந்தான் ஆரியன்.ஆனால் அனித்தின் பைக்கில். கால் இன்னும் முழுவதும் குணமடையாததால் அதுவரை பைக்கை தொட ஆரியன் தந்தை தடா விதித்திருந்தார். வீட்டிலேயே அடைந்துக் கிடந்ததினில் சலித்து போயிருந்தவனுக்கு மீண்டும் கல்லூரிக்கு வந்தது இரட்டிப்பு உற்சாகத்தை தர அனித்திடம் வளவளத்தப்படி வந்தான் ஆரியன். பேசிக்கொண்டே வந்தவன் கண்ணில் சற்று தொலைவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த புதிய கட்டிடம் பட்டது.  மெதுவாய் ஆகி கொண்டிருந்த வேலை இந்த […]


சமீராவின் இளங்காத்து வீசுதே 11

அத்தியாயம் 11 சிறகு முளைத்த பறவையாய் நாட்கள் பறந்தோட அன்று இரவு உணவு உண்ண டெய்னிங் ஹாலிற்கு வந்தனர் சக்தியும் சந்தியாவும்.. சூடான உணவின் வாசம் கமகமவென இவர்கள் நாசி வழியாக நுழைந்து பசியை தூண்ட உணவு தட்டுடன் தங்களுக்கான பரோட்டா குருமாவை எடுத்துக்கொண்டு வரிசையாக போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்தனர். “ம்ஹூம்..இந்த காலேஜில் சேர்ந்ததுக்கு வயுத்துக்கு வஞ்சம் இல்லாமல் சாப்பாடு திருப்தியாய் இருக்கு..இதுக்காகவே கே.வி.எஸ் வாழ்க..” என்று இலவச பாராட்டோடு பரோட்டாவை பிய்த்து குருமாவில் தொட்டு […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 10

அத்தியாயம் 10   “முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா என்மனதில் உந்தன் ஆதிக்கமா இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…. நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா..” ‘பா’ வடிவில் அமைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் குருவிக்கூடுப்போல் இருந்த அத்தனை வீடுகளில் ‘8c’ என்ற கதவு எண் பொறுத்தப்பட்ட வீட்டில் முழு வால்யூமில் இப்பாடல் ஓடிக்கொண்டிருக்க தொலைகாட்சி முன் அமர்ந்திருந்தான் ஆரியன். நெற்றியில் ஒரு ப்ளாஸ்டரும் வலதுக்கையில் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 9

அத்தியாயம் 9 “சொன்னா கேளு சக்தி..இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல..வா..போயிருலாம்…” பதட்டமாய் கூறிய சந்தியாவை, “உனக்கு பயமா இருந்தால் நீ போ..” என்று கூறி விஜயின் அறை வாசலை பார்த்தபடி நின்றாள்.கடந்த அரைமணி நேரமாய் விஜயை பார்ப்பதற்காக தான் அவன் வாசலில் தவமாய் தவமிருக்கிறாள்.ஆனால் உள்ளே நடந்துக்கொண்டிருந்த மீட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை. “ஏன்டி இப்படி பிடிவாதமா நிற்கிற..ரூல்படி நீ முதல்ல ஹெச்.ஓ.டிட்ட இல்லேனா வைய்ஸ் பிரின்ஸிட்ட தான் சொல்லணும்..நீ ஸ்ரைட்டா விஜய் சரிடமே வந்து நிற்கிற.இதுக்கு வேற […]