Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 21.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

கதிர் ஆங்காங்கே அலைந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் அடிக்கடி அவன் கண்கள் தேன்மொழியை தீண்டி சிவக்க வைத்து விட்டு சென்றது.   பின் மணமக்கள் சடங்குகள் நடந்து முடிந்ததும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.   பின் மணமக்கள் காலை உணவருந்த சென்று விட்டார்கள். செல்வா அருகில் வந்த வேணி அவன் கையில் கிஃப்டைக் கொடுத்து விட்டு “நான் கிளம்புறேன் செல்வா. வீட்ல தங்கச்சி தனியா இருப்பா. அம்மா அப்பா வேலைக்கு கிளம்பிருவாங்க. அதான்”, என்றாள். […]


அத்தியாயம் 21.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 21 உன் உதடு உச்சரிக்கும் வார்த்தைகளை மட்டும் அல்ல, உன் மௌனத்தையும் ரசிக்கிறேன் நான்!!!  தினேஷ் மற்றும் கீதாவுக்கு ரிசப்ஷன் வைக்கலாம் என்று துரைராசுவிடம் சொன்னதற்கு வெகுவாக சந்தோஷப் பட்டார். ஒரே மகளின் திருமணம் இந்த கோலத்திலா நடக்கணும் என்று கவலையில் இருந்தவர் இதற்கு சந்தோஷமாக சரி சொன்னார்.   இந்த விஷயம் மதியிடமும் பேசப் பட இவ்வளவு நல்ல விஷயம் அவருக்கு மட்டும் கசக்குமா என்ன?   “என் மகன் கல்யாணம் தான் எளிமையா […]


அத்தியாயம் 20 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  20 மறக்க முடியாத அழகான நிலாக்காலம் தான் நீ என்னுடன் கழித்த ஒவ்வொரு நொடியும்!!!   கண்ணன் திருமணத்துக்கு சரி என்று சொன்னதும் ஆக வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் தடாபுடாலாக நடந்தது.   இந்த விஷயத்தை சகுந்தலா மூலம் கேள்வி பட்ட தேன்மொழி “நானும் பொண்ணை பாக்கணும்”, என்று சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ண மற்றொரு நாள் தேன்மொழி, கதிர், தினேஷ், கீதா, கண்ணன், செந்தில் என மொத்த குடும்பமே பெண் வீட்டுக்கு சென்றது.   ராதாவைப் […]


அத்தியாயம் 19.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அனைவரும் ஒவ்வொரு விஷயம் பேசிக் கொண்டிருக்க அனைவரின் மீதும் கவனம் வைத்திருந்தாலும் அருகில் அமர்ந்திருந்த தேன்மொழியை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தான் கதிர்.   யாரும் பார்க்காதவாறு அவள் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதும் அவள் முறைத்தால் கண்ணடித்து அவளை திகைக்கவும் வைத்துக் கொண்டிருந்தான் கதிர்.   அனைவரும் அவர்களை கவனித்தாலும் அதை யாரும் கண்டு கொள்ள வில்லை. தினேஷும் கீதாவும் என்ன கோபம் என்று கண்களால் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். செல்வாவும் அன்னமும் ஏட்டிக்கு போட்டி […]


அத்தியாயம் 19.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  19  சின்ன சின்ன சண்டைகளால் சில்மிஷம் செய்தவளே சிறு சாம்பலாய் என்னை எரித்தது ஏனோ?!!! முதல் வகுப்பு கால் வாசி முடிந்திருக்கும் வேளையில் தான் கிளாசுக்கு சென்றான் செல்வா. பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் பெர்மிசன் கேட்டான்.   தாமதமாக வருவதற்கு அவர் காரணம் கேட்க “பைக் ரிப்பேர்”,என்று சொல்லி தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.   “வர மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்ட. உன்னால இன்னைக்கு சீக்கிரமே எந்திச்சு பஸ்ஸை பிடிச்சு வந்துருக்கேன். சொல்லிருந்தா சேந்தே […]


அத்தியாயம் 18.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“சரி சரி, எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? உன்னை விட எனக்கு இந்த செயின் முக்கியம் இல்லை தேனுமா”, என்று சொல்லிக் கொண்டே அதை கழட்டி தன்னுடைய சட்டை பையில் போட்டுக் கொண்டான்.   நிம்மதியாக அவனைப் பார்த்து சிரித்தாள் தேன்மொழி. “இப்ப என்னை உனக்கு பிடிச்சிருக்கா தேனு?”   “ரொம்ப பிடிச்சிருக்கு”   “அதை இவ்வளவு  தள்ளி இருந்து தான் சொல்லணும்னு இல்லை. இப்படி கிட்ட இருந்தே சொல்லலாம்”,என்று சொல்லி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். […]


அத்தியாயம் 18.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 18 காதல் கல்வெட்டுகளை என்னுள் புதைத்து விட்டு சாவியைத் திருடிச் சென்றது ஏனோ?!!!   “என்ன பாட்டி துணி எடுக்க போறேன்னு சொல்லிட்டு போனீங்க? எடுக்காமலே வாரீங்க?”, என்று கேட்டாள் கீதா.   “அதுவா? துணி இன்னும் காயலை கீதா. காலைல எடுத்துக்கலாம். நீ தூங்கு”, என்று சொல்லி விட்டு படுத்தாள் அன்னம்.   அதற்கு மேல் தினேஷிடம் பேச முடியாது என்பதால் “பாட்டி வந்துட்டாங்க. தூங்குங்க”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள்.   […]


அத்தியாயம் 17.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அதே தயக்கத்துடன் தான் அறைக்குள் வந்தாள் தேன்மொழி. “சாயங்காலம் நடந்த மாதிரி நடக்குமா?”, என்று எண்ணமிட்டாள்.   அவளைப் பார்த்ததும் அவளை கட்டி அணைக்க அவன் செல்கள் அனைத்தும் பரபரக்க “இங்க இருந்தா ஆபத்து”, என்று எண்ணி கீழே சென்று விட்டான்.   “என்னை பிடிக்காம தான் போறானோ?”, என்று எண்ணியவளுக்கு கவலையாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் தன் வேலையைப் பார்த்தாள்.   பின் இரவு சாப்பிடும் போதும் கதிர் அவள் முகத்தை பார்க்கவே இல்லை. அவர்கள் […]


அத்தியாயம் 17.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  17 தாகம் தீர்க்கும் ஊற்றாய் வந்தவளே எனக்கு மட்டும் கானல் நீரானது ஏனோ?!!!   காரை ஒரு பெரிய கடைக்கு முன்னே நிறுத்தினான் கதிர். “நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. நாங்க காரை பார்க் பண்ணிட்டு வரோம்”, என்று கதிர் சொன்னதும் கீதாவும் தேன்மொழியும் இறங்கிக் கொண்டார்கள்.   காரை நிறுத்தி விட்டு இறங்கியதும் “அண்ணா கீதாவுக்கு ஒரு போன் வாங்கிக் கொடுக்கணும்”,என்றான் தினேஷ்.   “வாங்கிரலாம் டா, கார்ட் உன்கிட்ட தரவா?”   […]


அத்தியாயம் 16.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“அட பாவி, இது எப்ப டா? சத்தியமா நான் இதை எதிர் பாக்கலை. நீயா டா?”   “நீங்க மட்டும் தான் லவ் பண்ணனும். நான் பண்ண கூடாதா”   “பண்ணு டா ராசா பண்ணு. சரி அவ கிட்ட சீக்கிரம் சொல்லிரு டா.மனசுலே வச்சிக்காதே”   “சரிண்ணா, இருந்தாலும் உன் பொண்டாட்டி ரொம்ப மோசம்”   “அவ என்ன டா செஞ்சா?”   “என்ன செஞ்சாளா? ஒரு நம்பர் கேட்டதுக்கு என்னவெல்லாம் சொல்லிட்டா தெரியுமா?”, என்று […]