KUK – 14 மலரின் வகுப்பு தோழனின் பார்வையின் அர்த்தம் புரியாத அளவுக்கு சூர்யா மக்கு கிடையாது. ‘பய ரொம்ப நாள் ரூட் விட்டுட்டு இருக்கான் போல’ அவன் பார்வையை கண்டதும் சூர்யாவுக்கு தெரிந்து விட்டது. “சொல்லு மலர் எதுக்கு இவ்வளவு நாள் லீவ் போட்ட??” விடாது குமார் கேட்க, மலருக்கு கோபமாக இருந்தது. “ம்ச்ச் இப்போ இது முக்கியமா…. அதான் வந்துட்டேன்ல” எரிச்சலாக பதில் சொன்னாள். அதற்குள் அவள் வகுப்பு தோழி, மலரின் நெருங்கிய தோழி […]
KUK – 12 கிராம சூழலில் இருந்து நகர வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். வீட்டிற்கு வந்ததுமே தன் அன்னை, தந்தையிடம் விக்கி, அனிக்கா செய்த காரியத்தை சொல்லிவிட்டான் நவீன். “இவங்களை இங்கவே விட்டுட்டு வரலாம்னு உன்கிட்டே திருவிழா போகுறதுக்கு முன்னாடியே சொன்னேன். நீதான் நம்மள நம்பி அனுப்பி இருக்காங்க… தனியா விட முடியாதுனு சொன்ன” மனைவியிடம் கடிந்து கொண்டார் வரதன். “இந்த அளவுக்கு போவாங்கனு எனக்கு தெரியாதுங்க. நவீன் இந்த விக்ஷயம் அங்க யாருக்கும் தெரியாதுதானே?” பதட்டத்துடன் […]
மருத்துவமனையில் பாட்டிக்கு ட்ரிப்ஸ் ஏத்தி முடித்ததும் காலை ஏழு மணிக்கு வீட்டுக்கு கிளம்பினர். “சூர்யா நான் சொன்னதால நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துகலயே?? உனக்கு மலர் மேலே விருப்பம் தான??!” எங்கே நாம் கட்டாயபடுத்தி ஒத்துக்கொண்டானோ என்று பாட்டியின் மனம் கவலை கொண்டது. காரில் இருந்த அவனது அப்பாவும், நண்பனும் அவன் பதிலுக்காக காத்து இருக்க “எனக்கு பிடிக்கவில்லை என்றால் யார் என்ன சொன்னாலும் அதை செய்ய மாட்டேன் பாட்டி. ஸோ, யூ டோன்ட் வொரி” மலர்ந்த […]
KUK- 11 சூர்யாவும், நவீனும் அவனை எழுப்ப முயன்று சோர்ந்து விட்டனர். அவன் அந்த அளவுக்கு குடித்து இருந்தான். கடைசி முயற்சியாக அவன் மூக்கில் பலமாக ஒரு குத்துவிட்டான் சூர்யா. “டேய் மச்சான் செத்துகித்து போயிறாமடா…. கொலை கேசு ஆகிரும்” பயந்து போய் நவீன் சொன்னான். சூர்யாவின் அந்த குத்து வேலை செய்தது. கடகடவென மூக்கில் ரத்தம் வர வலியில் கண் விழித்தான். அவனை அப்படியே கார் இருக்கும் இடத்திற்கு இழுத்து சென்றனர். கண் விழித்தவன் தன் […]
KUK – 10 டாக்டர் வந்து பரிசோதித்து பார்த்த பின்பு சாதாரண மூச்சுதிணறல்தான் என்றவர் ஒரு வாரத்திற்கு மருந்து மாத்திரை எழுதி கொடுத்து சென்றுவிட்டார். “ஏய் தேனு நீ கொடுத்த பில்டப்புல வீடே கதிகலங்கி போயிட்டு” படுத்து இருந்த பாட்டியின் கால் அருகில் தலையில் கை வைத்து உட்கார்ந்து இருந்த தேனுவை பார்த்து சொன்னான் நவீன். அவளுக்கே தான் கொஞ்சம் ஓவரா சத்தம் போட்டோமோ என்று இருந்தது. “இல்லைங்க ஐயா நான் பாட்டிய இந்த மாதிரி பார்த்ததுயில்ல…. […]
சத்தம் வந்த திசைக்கு இருவரும் விரைய அங்கு சமையல் அறையில் மலரை சுற்றி எல்லோரும் குழுமி நின்றனர். “என்ன மலர்… எதுக்கு சத்தம் போட்ட?” பதட்டத்துடன் அவள் அருகில் வந்து சூர்யா கேட்டான். முகம் முழுவதும் வியர்வை துளிகள் அரும்பி நிற்க, தொண்டை எச்சிலை விழுங்கி “அத்தான் இங்க தோட்டத்து பக்கம் யாரோ முக்காடி போட்டுட்டு போனாங்க.” “நீ எதுக்கு இங்க வந்த” “பாட்டி பால் கேட்டாங்க, அத்தை சாப்ட்டு இருந்தாங்க, தேனு பறிமாரிட்டு இருந்தாள் அதான் […]
“சூர்யா” என்று அழைத்த குரலுக்கு மலர் பயந்து நின்றாலும் அவளது எதிரில் நிற்பவனுக்கு அந்த பயம் இல்லை போலும் மலரின் கையை இன்னும் அழுத்தமாக பற்றி நின்றான். “டேய் மச்சான் உன்னை பாட்டி கூப்….” வார்த்தை வெளி வரா நர்த்தனம் ஆட, “ நீ இந்த புள்ள கூட இங்க என்னடா பண்ற அதுவும் யாருக்கும் தெரியாத இடமா பார்த்து நிக்கிற” என்றான் நவீன். “சும்மா பேசிட்டு இருந்தோம்டா” எரிச்சல் மண்டியது அவனது குரலில். பற்றி இருந்த […]
தனது அறையில் கால்கள் நோக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள் அனிக்கா. விக்கி எரிச்சலாக “நீ இப்படி ஓவரா ரியக்ட் பண்ற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கல. சும்மா படத்துல வர வில்லி மாதிரி அங்க, இங்க நடந்துட்டு இருக்க”. “ம்ம் உனக்கு என்னடா ஒரு கவலையும் இல்லை, நீ இப்படிதான் கூலா இருப்ப….. சை, அந்த கிழவிகிட்ட எங்கள் இருவருக்கும் உள்ள காதலை பற்றி ஒரு கோடிட்டு காட்டலாம் என்றால் இந்த சூர்யா காரியத்தையே […]
தன் அன்னையிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் நினைவு மலரை பற்றியே இருந்தது. பல முறை அவன் வீட்டு எண்ணிற்கு அழைத்து இருக்கிறான்…. இது வரை ஒரு முறை கூட மலர் அவனிடம் பேசியது இல்லை. அவளோட நம்பர் அவங்கிட்ட இருக்கு இருந்தும் ஒரு சின்ன தயக்கம் மலரிடம் பேச… இதுவே லன்ட்லைன்-ல அழைத்தா அவகிட்ட சுலபமா பேசிரலாம். அவளை பற்றி கேட்கும் போது அவனுக்கு கிடைக்கிற பதில் “மலர் ரூம்ல படிச்சிட்டு இருக்காடா” , “இவினிங்க் ஸ்டிச்சிங் […]
போன் பேசிவிட்டு வந்தவன் தூரத்தில் மலருடன் ஒரு சில பேர் வம்பு இழுத்து கொண்டு இருப்பதை பார்த்தவன் கோபம் தலைக்கு ஏற அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான். “மலர்” என்ற சூர்யாவின் அழைப்பு காதில் விழ கோடி மின்னல்கள் கண்ணில் மின்ன அவன் அருகில் போய் நின்றுகொண்டாள். தன் கையை இறுக்கி பிடித்து இருந்த அவளது கரத்தில், அழுத்தம் கொடுத்தவனாக அவள் புறம் தலையை மட்டும் திருப்பி பார்த்தவாறு “இங்கே, என்ன செய்கிறாய் மலர்?… அம்மா […]