முகத்தை கழுவியவள்.. துடைக்க துண்டை எடுத்து கொண்டு வராமல் வந்ததை அப்போது உணர்ந்தவள்.. முகத்தில் நீர் சொட்ட சொட்ட.. அங்கும் இங்கும் துளிகள் அவளின் முகத்தில் முத்தமிட படி இருக்க.. மதிய வெயிலின் சூரியன் அந்த துளிகளின் மேல் பொறாமை பட்டு.. அவற்றை உறிஞ்சி அகற்றும் பொருட்டு அந்த துளிகளின் மேல் பட… அது மேலும் ஒரு அழகான ஒளி கதிரை அவளின் முகத்தில் படர செய்தது வாசலில் ஜீப்பில் வந்து இறங்கியவன்..உமாவையும், […]
ராதா வீடு திரும்பிய சந்தோஷத்தில் அடுத்த நாள் காலை, பர பரப்பாகவே விடிந்தது அனைவர்க்கும் மகள் வந்த சந்தோஷத்தில்.. முன்பு போல ராதாவிற்கு பிடித்த அணைத்து தின் பண்டம்.. உணவு என்ன ஹோட்டல் மெனு போல் தயாரித்து கொண்டு இருந்தார் எழில் மாணிக்கம் மறுபுறம்.. நேற்று மகளின் ஆடையையும், அவள் வந்து நின்ற கோலத்தையும் கண்டவர்… விடிந்தும் விடியாமலும் கடை தெருவிற்கு கிளம்பி விட.. மணி ஏழு இருக்கும் போது கிட்ட தட்ட […]
காற்று 7 அந்த இருள் சூழ்ந்த இரவு நேரத்தில்..எதிரில் இருக்கும் உருவமும் அரைகுறையாய் தெரியும் அந்த நிலவொளியில்…வண்டியில் இருந்து ஒருவர் இறங்க.. அது சத்யன் தான் என்பது உமாவிற்கு புரிந்து போக ஆவலுடன் அவனை நெருங்க எத்தனித்த அவளின் கால்களை நிறுத்தியது, சத்யனுக்கு அருகில் வந்த அந்த மற்றொரு உருவம் அது யார் என்று புரிய மனதிற்கு நேரம் எடுத்தாலும்… மூளை உடனே அடையாளம் கண்டு கொண்டது மூன்று வருடம் […]
அன்று இரவு ஜனா அறையில் சத்யன் உறங்கி விட..உமாவிற்கு தூக்கம் எட்டி கூட பார்க்க வில்லை.. அன்றைய நாள் பொழுதின் நிகழ்வுகள் எல்லாம் அவளின் மனதில் காட்சிகளாய் ஓடி கொண்டு இருக்க.. இறுதியில் அவளின் கனவின் கண்ணை நேரில் பார்த்த பரவசம் அவளின் மனதில் நிலை கொண்டு இருந்தாலும்.. ராதாவை அவன் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.. என்பதே அவளுள் புரியாத ஒரு மன உளைச்சலை உருவாக்கியது.. “ஒரு வேலை அக்கா வேற […]
சிலையென நின்று கொண்டு இருந்த அவளை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டு நின்றான் அவன்.. “சத்யா.. உள்ள போப்பா.. ஏன் வாசல்லேயே நிக்குறே” குரல் கொடுத்த படி விஸ்வநாதன் அங்கு வந்து, அவன் நிற்கும் கோலத்தை பார்த்தவர்.. “என்னடா, ஹோலி கொண்டாடுனியா” என்ற படி அவர் கூற. “அப்பா” பல்லை கடித்து கொண்டு அவன் பேசும் போது… தன் கண்ணனின் குரலை முதன் முறை கேட்டவள்..மேலும் மயங்கி போய் நின்று […]
காற்று 4 இரவு நேரம் நெருங்க…அன்று முழுவதும் சத்யனின் மனது எங்கெங்கோ உழன்று கொண்டுதான் இருந்தது.. எதோ சொல்ல முடியாத துயரம்.. நெஞ்சை வாட்டி எடுப்பது போல் உணர்வு.. அவனுக்கு எப்போதும் அமைதி தரும் அந்த கடற்கரையில் சென்று அமர்ந்தவன்.. நேரம் அது போக்கில் கடக்க.. கடலை வெறித்த படி அமர்ந்து இருந்தான் சத்யன்.. இரவு மணி ஒன்பதை தாண்ட..அவனின் நினைவை கலைத்தனர், அங்கு வந்த காவலர்கள்.. “தம்பி.. […]
“ஏன்டி.. ஒழுங்கா பொண்ணு மாதிரி நடந்துக்கோன்னு சொன்னா கேக்குறியாடி நீ… எங்க போனாலும் ஏழரைய இழுத்துகிட்டு வந்துடுற” டீ போட்ட படி கோமதி உள்ளே புலம்பி கொண்டு இருக்க “விடு மதி… வந்ததும் வராததுமா எதுக்கு பிள்ளையை போட்டு வையுற… அவன் எவனோ களவாணி பையன் வன்பு இழுத்தா சும்மா வர முடியுமா.. அதன் அவுங்களுக்கு புரியுற பாஷைல சொல்லிக்கிட்டு வந்து இருக்கா” சிவகாமி உமாவிற்கு சாதகமாக பேச ஒரு தட்டு பலா பழத்தை […]
காற்று இரண்டு காலை கதிரவனின் செங்கதிர்கள் கூட சுட்டெரிக்கும் தீ போல் உணரும் கத்திரி வெயில் காலம் அது.. பள்ளி கல்லூரிகள் விடுமுறையில் இருக்க.. குடும்பங்கள் ஊட்டி கொடைக்கானல் என்று இந்த வெயிலில் இருந்து தப்பித்து கொண்டு சென்று விட… எப்போதும் இரைச்சலாய் இருக்கும் அந்த சாலை.. இன்று ஏனோ அமைதியாக காண பட்டது அந்த அமைதியிலும்.. மனம் முழுதும் நினைவுகளின் காயங்களுடன்.. மறக்க நினைத்தும் தோற்கும் மனதுடன்… […]
காற்று 1 “கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்” பாடலின் வரிகளை பாடிய படி தன் ஆறடி கூந்தலை முன்னாள் விட்டு, கையால் சுற்றிய படி மான் போல் குதித்த படி சென்று கொண்டு இருந்தாள் உமா அந்த அழகிய பல நிற மலர்களோடு பூத்து குலுங்கும் நந்தவனத்தில் அவ்வப்போது பார்வையை சுழற்றிய படி அதன் அழகை ரசித்ததோடு […]