அத்தியாயம் 16 “அஜூ..இங்க பாரு..அக்காவை பாருங்க..அஜூ..டேச்சு கண்ணா…” தொட்டிலில் படுக்க வைத்திருந்த நான்கு மாத குழந்தை அர்ஜுனிடம் கண்களை உருட்டி முகத்தை சுழித்து நிலா அழகு காட்ட அவனும் தன் பொக்கை வாயை திறந்து கைகாலை ஆட்டி அவளுக்கு பதில் சொல்ல என்று அக்காவும் தம்பியும் விளையாடும் அழகை அமைதியாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் உதயா.அதுவாவது தன் தகிக்கும் உள்ளத்தை குளிர்விக்குமா என்ற நப்பாசையோடு..!! கதவை திறந்து உள்ளே வந்த வெண்பா, கால்களை மடித்து […]
அத்தியாயம் 15 ஆழிக்கண்ணன் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ந்து நிற்க அதற்கு மேலும் தாங்கள் அமைதியாய் இருந்தால் சரியாக இருக்காது என்று உணர்ந்த செந்தில்நாதன் மனைவியை பார்க்க அவரும் புரிந்துக் கொண்டு தலையசைத்தார். “சம்பந்தி..நமக்குள்ள ஏதேதோ நடந்து போச்சு..பழசை விட்டுடுவோமே..உங்க மக உதயாவை எங்க பையன் உதயிக்கு மனபூர்வமா கேட்கறோம்..நீங்க எல்லாரும் யோசித்து நல்ல முடிவா சொல்லுங்க..நாங்க இப்போ கிளம்புறோம்..” என்று அவரை சங்கடப்படுத்த விரும்பாமல் விடைபெறும் விதமாய் கூற, “இருங்க மாமா..ரொம்ப நாள் கழிச்சு […]
அத்தியாயம் 14 லாவண்யாவின் உறவினர்கள் சிலர் குழந்தையை பார்க்க வந்திருக்க மருத்துவமனை அறையே சிறியது என்பதால் வெண்பா வெளியே வந்துவிட்டாள். உதயா பேருந்து நிலையம் வந்து இறங்கிவிட்டதால் அவளை அழைத்துவர மதி சென்றிருக்க அவனுடன் நிலாவும் சென்றிருக்க அவர்கள் வருகையை எதிர்பார்த்த வண்ணம் அந்த வராண்டாவில் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள். மக்கள் தேனீ போல் சுறுசுறுப்பாய் அங்கும் இங்கும் போய் கொண்டிருக்க சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவள் பார்வை ஓரிடத்தில் நிலைத்தது. அவளுக்கு எதிரே இருந்த அறையில் […]