Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Margazhi Poove

Margazhi Poove..! – 21 (1)

பூ 21: விமலின் ஆட்கள் மூலம் வந்தனா கடத்தப்பட்டிருந்தாள். யார் தன்னை கடத்தியிருக்கிறார்கள் என்று தெரியாமலேயே கடத்தப்பட்டிருந்தாள். “மாமா..! நம்ம வந்தனாவை கூப்பிட ஹாஸ்ட்டல் போனா, அவ அங்க இல்ல மாமா..! அந்த பையன் கூட ஓடிப் போயிட்டதா தகவல் வருது மாமா..!” என்றான் விமல், கனகவேலிடம் நல்லவன் போல். “என்ன சொல்ற விமல்..? வந்தனா நிஜமா அப்படி பண்ணிட்டு போயிட்டாளா..?” என்ற கனகவேலிற்கு கொஞ்சமும் நம்பிக்கை வரவில்லை. அவள் எதற்கெடுத்தாலும் பயப்படுவாள் என்று அவருக்குத் தெரியும். […]


Margazhi Poove..! – 20

பூ 20:   “இன்னைக்கு துளசி வரா விஜய்..!” என்றான் பிரவீன். “என்னடா திடீர்ன்னு..?” என்றான் விஜய் புரியாமல். ‘நீயென்ன லூசா..?’ என்பதைப் போல் பிரவீன் அவனைப் பார்த்து வைக்க, “இப்ப எதுக்குடா இப்படி பார்க்குற..?” என்றான் விஜய். “நீ எந்த உலகத்துல இருக்க விஜய். துளசிக்கு நாளைக்கு பர்த்டே..! அதுமட்டுமில்லாம, நாளை மறுநாள் அம்மா,அப்பா துளசி எல்லாம் சுவிஸ் போறாங்க. மேடம் காலேஜ்க்கு டிமிக்கி குடுத்தாச்சு..!” என்றான் பிரவீன். “இப்படி லீவ் போட்டா, உன் தங்கச்சி […]


Margazhi Poove..! – 19

பூ 19:   “நீ என்ன சொல்ற வந்தனா..?” என்று அதிர்ந்தபடி கேட்டான் விமல். “மாமா, நீங்க தான் எப்படியாவது அம்மாகிட்ட இந்த விஷயத்தைப் பத்தி பேசணும். என்னால அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. எனக்கு கல்யாணம் நடந்தா அவரோட தான் நடக்கணும். இல்லையா என்னோட கருமாதி தான் நடக்கணும்..!” என்று உணர்வு போங்க பேசிக் கொண்டிருந்தாள் வந்தனா. விமலுக்கு போனில் அவள் பேசிய விஷயங்களை முதலில் நம்ப முடியவில்லை. வந்தனாவைப் பற்றி […]


Margazhi Poove..! – 18

பூ 18:   “உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை விஜய்..? துளசி ஏன் கோபமா போறா..?” என்றார் வள்ளி. “அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி..! அவளுக்கு கோபப் பட ஏதாவது ஒரு சாக்கு வேணும், அவ்வளவு தான்..!” என்றான் விஜய். கண்ணனுக்கு என்னவோ அது சாதாரண கோபம் போல் தெரியவில்லை. திரும்பி கல்லூரி வந்து சேரும் வரை துளசி அப்படியே இருந்தாள். யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்கள் அதன் போக்கில் செல்ல, நண்பர்கள் மூவரும் […]


Maargazhi Poove..! – 17

பூ 17: மறுநாள் எரிச்சலுடன் கிளம்பி கல்லூரி சென்றாள் துளசி. ஏனோ அன்று காலையில் இருந்து அவளுக்கு எதற்கெடுத்தாலும் கோபம், யாரைப் பார்த்தாலும் கோபம் வந்து கொண்டிருந்தது. வெளியே தெரியாத வெறுப்பு அவள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளின் வெறுப்பை இன்னும் கூட்டுவதைப் போல் அங்கே பிரவீனும்,விஜய்யும் சிரித்துக் கொண்டிருந்தனர் கேண்டீனில். “எதுக்கு மச்சான் உன் தங்கச்சி பத்ரகாளி மாதிரி முகத்தை வச்சுகிட்டு வரா..?”என்றான் விஜய். “அவ காதுல மட்டும் கேட்கணும். மவனே நீ செத்தடா..!” […]


Margazhi Poove..! – 16

பூ 16:   சென்னையில், அந்த புகழ் பெற்ற கல்லூரி அமைதியாக இருந்தது. வசதியான வீட்டுப் பிள்ளைகள் அதிக பேர் படிக்கும் கல்லூரி. மாணவர்கள் ஆங்காங்கே தென்பட, நிறைய பேர் கர்ம சிரத்தையாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அன்று யுஜி மாணவர்களுக்கு மாடல் எக்ஸாம் நடந்து கொண்டிருக்க, பிஜி மாணவர்கள் ஹாயாக சுற்றிக் கொண்டிருந்தனர். எக்ஸாம் ஹாலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள் வந்தனா. மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகி. அவளின் உதட்டின் மேல் இருந்த மச்சம் கூடுதல் […]


மார்கழி பூவே…! – 15

பூ 15:   “என்ன சொல்ற பவி..?” என்றான் விஜய் மீண்டும். “ஆமாண்ணா..! துளசி மயங்கி விழுந்துட்டா..! அதான் மாமாவும், அப்பாங்களும் சேர்ந்து ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க..!” என்றாள் பவி. “நீங்க எல்லாரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? நல்லது செய்றேன் நல்லது செய்றேன்னு சொல்லி, இன்னும் எத்தனை பேர் நிம்மதியை கெடுக்கக் காத்திருக்கிங்க..? நான் உங்க யார்கிட்டையாவது, எனக்கு நல்லது செய்ங்கன்னு கேட்டேனா..?” என்றவன் பிரவீனை நோக்கித் திரும்பினான். “உண்மையை சொல்லப் போனா, நீ ரொம்ப […]


Margazhi Poove..! – 14

 பூ14:   திவ்யாவின் வடிவில் வந்த சூரைக் காற்று சிலர் மனங்களை அடியோடு சாய்த்திருந்தது. அலைகள் அற்ற கடலைப் போல் அந்த திருமண மண்டபம் அமைதியாக காட்சியளித்தது. யாருக்கும் என்ன செய்வதென்றும் புரியவில்லை, என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. எதற்கும் கலங்காத துளசியே கலங்கி நின்றாள். விஜயின் மனதை அவளால் அப்பொழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோரையும் விட பிரவீன் தான் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். விஜய்யின் பின்னால் செல்லும் அளவிற்கு அவனுக்கு உடலிலும் தெம்பில்லை, மனதிலும் தெம்பில்லை. […]


Margazhi Poove..! – 13 (1)

கீழே வந்தவன் நேராக பவித்ராவிடம் சென்றான். அவளும் அருணும் வழக்கம் போல் அங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க, “இங்க வந்தும் உங்க ரெண்டு பேர் சண்டையும் தீரலையா..? பவி சாப்பிட்டியா..? இல்லைன்னா வா, நான் சாப்பிடப் போறேன்..!” என்றான். “நான் சாப்பிட்டேன் மாமா..!” என்றாள் பவித்ரா, கொஞ்சம் வெட்கத்துடன். “கடவுளே..! இவ வெட்கப்படுறதை எல்லாம் என்னால கண் கொண்டு பார்க்க முடியலை. தயவு செஞ்சு என்னைக் காப்பாத்துங்க..!” என்றான் அருண். “போடா..! ரொம்பத்தான்..!” என்றவள், “நீங்க போய் […]


Margazhi Poove..!- 13

பூ 13: ரத்னவேல் குடும்பமே எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.  இரு மனங்களின் எதிர்ப்பும் அந்த குடும்ப சந்தோஷத்தில் காணாமல் போயிருந்தது. விடிந்தால் விஜய குமார்- விஷ்வ துளசி கல்யாணம். அந்த கல்யாண அரங்கமே கோலாகலமாக இருந்தது. நண்பர்களின் வருகையில் விஜய்யின் மன இறுக்கம் கூட கொஞ்சம் குறைந்திருந்தது. மனதில் வேறு எண்ணங்கள் எதுவும் தோன்றவில்லை. எதுவும் தோன்றாமல், பிரவீண் பார்த்துக் கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும். “என்ன வள்ளி..? பேரனுக்கு கல்யாணம்ன்னு சொன்ன உடனே […]