Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 21

”சிம்மாசனமா?”   தேவி கண்கள் விரியக் கேட்டாள்.   ”ரூம்க்குப் போய் நிதானமா பேசுலாம்!”   வேதாளப் பட்டன் பதிலளிக்கும் முன் விக்ரம் இடைமறித்தான்.   தேவி வேண்டா வெறுப்பாய்த் தலையசைத்துவிட்டு முன்னால் செல்ல, மற்றவர்கள் அவளைப் பின் தொடர்ந்து சென்றனர்.   ”அருண் எல்லாருக்கும் ஏதாச்சு ஸ்னேக்ஸும் ட்ரிங்க்கும் ஆர்டர் பண்ணு…”   என்றுபடி விக்ரம்  அமர்ந்துகொண்டான். அது இரண்டு பெரிய பகுதிகளைக் கொண்ட விசாலமான ’ஸ்வீட்’ அறை. ஒன்று வரவேற்பறை போலவும் மற்றது படுக்கையறையாகவும் […]


Vijay’s MV – Chapter 20

விக்ரம் அவனைப் பார்த்து “பட்டா” என்றதும் அவன் ‘ஆம்’ என்பதைப் போல மெள்ளத் தன் வலது கையை நெஞ்சில் வைத்துக் கண்களை மூடித் தலையைத் தாழ்த்தி விக்ரமை வணங்கினான்.   அருகில் இருந்த தேவியும் அருணும் பரபரப்பாக, அவர்களை நோக்கி ‘அமைதி’ என்பதைப் போலப் புன்னகையுடன் கண்களை மெள்ளச் சிமிட்டிவிட்டுக் கையில் இருந்த பிரசாதத் தட்டை விக்ரமிடம் கொடுத்தான்.   “இங்க ஷத்தம் போட்டா மாமா கோச்சுப்பார், திருச்சுற்று மாளிகைல பழைய நந்தியாண்ட வெயிட் பண்ணுங்கோ, நான் […]


Vijay’s MV – Chapter 19

”விஷாலி மேடம் அறையில் இல்லை” என்று வேலைக்காரப் பெண் சொன்னதும் அருணும் தேவியும் பரபரப்பானார்கள்.   “நல்லா தேடிப் பார்த்தியா? பாத்ரூம்ல இருப்பா… நீ கவனிக்காம அவசரப்பட்டு வந்து சொல்லாத!”   அருண் அந்தப் பெண்ணை இலேசாய்க் கடிந்துகொள்வதைப் போலச் சொன்னான்.   “இரு நானே போய்ப் பார்த்துட்டு வரேன்…” என்று தேவி மாடியை நோக்கிச் சென்றாள்.   ஆனால் விக்ரம் எதுவும் பேசாமல் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமர்ந்தது அமர்ந்தபடியே இருந்தான்.   அவன் மனத்தில் […]


Vijay’s MV – Chapter 18

விஷாலி தேவியின் கழுத்தை நெறிக்கத் தொடங்கியதும் வண்டிக்குள் குழப்பம் வெடித்தது.   தேவி அவளைத் தள்ளிவிட முயன்றாள். விக்ரமும் தேவியின் கழுத்தில் இருந்து விஷாலியின் கைகளைப் பிரிக்க முயன்றான்.   “ஹே… என்ன பண்ற!”   “ஏய்… விஷி…” அருண்.   “மேடம்… மேடம்…”   பின்னால் அமர்ந்திருந்த தேவராசுவும் சத்தீசும் விஷாலியின் தோள்களைப் பிடித்து அழுத்தி அவளை அமைதியாக்க முயன்றனர்.   அருண் சட்டென்று ஏற்பட்ட சலசலப்பில் இலேசாய் வண்டியின் பிடியை விட்டுப் பின் சமாளித்துக்கொண்டு […]


Vijay’s MV – Chapter 17

மன்யாக்னியின் ஒளிக்கீற்று அந்தச் சகர் படையை ஒன்றும் செய்யாமல் தாண்டிச் சென்றதைப் பார்த்து அனைவருமே ஒரு கணம் திகைத்தனர்.   இவர்களை ஒவ்வொருவராக வெட்டித்தான் வீழ்த்த வேண்டும் என்று உணர்ந்து, முதல் ஆளாக தேவி அவர்கள் மீது பாய்ந்தாள்.   விஷாலியின் வலியையும் துன்பத்தையும் அறிந்திருந்த அவள் அந்த கோவத்தை இவர்கள் மீது காட்டுபவளைப் போல கையிலிருந்த வாளைச் சுழற்றிக்கொண்டு அவர்கள் மீது பாய்ந்தாள்.   விக்ரம் அருகில் வந்த சகர்களை வெட்டி வீழ்த்தியபடியே சத்தீசை நெருங்கினான். […]


Vijay’s MV – Chapter 16

தேவி மயங்கியதைப் பார்த்ததும் அனைவரும் பரபரப்பானார்கள்.   “தண்ணி கொண்டாங்க…”   செழியன் தேவியின் நாடியைப் பார்த்தபடியே கேட்டார்.   “கார்ல இருக்கு…”   என்றுவிட்டு ஆய்வாளர் சத்தீசு அந்தக் கோயிலுக்கு வெளியே ஓடினார்.   “விக்ரம், நாமளும் காருக்கே போகலாம், இங்க வந்த வேலைதான் முடிஞ்சிருச்சே, இவளைத் தூக்குங்க…”   என்றார் செழியன்.   விக்ரமும் ஆய்வாளர் தேவராசும் தேவியைத் தூக்கிக் கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானார்கள், அருண் கோயிலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி இருந்தான். […]


Vijay’s MV – Chapter 15

விஷாலி அலறியபடியே கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.   அந்தக் கட்டாரி தன் உடலில் இறங்கக் காத்திருந்தவளின் எதிர்பார்ப்பு வீணானது. அவள் மெள்ளக் கண்களைத் திறந்து பார்த்த போது பட்டி கட்டாரியை உயர்த்திப் பிடித்தபடி அவளையே குரூரப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.   “நீ என்ன கத்தினாலும் இங்க யாரும் வரப் போறதில்ல ரத்னாங்கி… வரவும் முடியாது! என்னோட படை இந்த இடம் முழுக்க காவல் இருக்காங்க…”   அவன் தன்னைக் கொல்லப் போவதில்லை என்ற நம்பிக்கை மீண்டும் […]


Vijay’s MV – Chapter 14

எங்கோ மிகத் தொலைவில் அந்த ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.   ‘ரம்-டம்-பட்-டட்-டற-டற…’   மெல்லியதாய், ஆனால் இடைவிடாமல் அவ்வொலி கேட்டுக்கொண்டே இருந்தது.   விஷாலிக்கு அதைக் கேட்டுக் கேட்டுத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.   ‘தலை வெடிக்கும்’ என்ற எண்ணம் வந்தபோதுதான் அவள் அந்த வலியையும் உணர்ந்தாள்.   தலையிலிருந்து கால்வரை பரவி, எங்கே என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத ஒரு அவத்தை. உண்மையில் அந்த வலி இருக்கிறதா? கற்பனையா?   விஷாலி கண்களைத் திறக்க முயன்றாள். […]


Vijay’s MV – Chapter 13

”வேதாளப் பட்டன்? யு மீன் வேதாளம்?”   தேவி வியப்பும் குழப்பமும் கலந்து கேட்டாள்.   “ஆமா… அவனேதான்!”   செழியன் இலேசான சிரிப்புடன் சொன்னார்.   “அதான… விக்ரமாதித்யர்னா அடுத்து வேதாளம்தான! இவ்ளோ நாளா நமக்கு அது தட்டுப்படவே இல்ல பாரேன்!”   அருண் சற்று வியந்தபடியே சொன்னான்.   செழியன் அவனை முறைத்துப் பார்த்தார்.   “வேதாளம்னா… அது பேயா? பிசாசா? பூதமா?”   தேவி கேள்விகளை அடுக்கினாள்.   “இவங்க பேசிக்குறதைப் பார்த்தா […]


Vijay’s MV – Part II – Chapter 01

விக்ரம் அந்த வாளைக் கையில் உயர்த்திப் பிடித்திருந்தான். குளிர்பிரதேசத்தில் எப்போதாவது அடிக்கும் வெயிலில் நனைவதைப் போன்ற ஒரு உணர்வை உடலெங்கும் உணர்ந்தான்.   சற்று நேரம் அந்த வேறுபட்ட ஆனால் சுகமான உணர்வில் திளைத்தவன் அனிச்சையாய் அதை உறையில் போட எத்தனித்து தன் இடதுபக்கம் இடுப்பிற்கு அருகே இறக்கினான், செழியன் (பட்டி!) புன்னகைத்தபடியே உடலாக மாறியிருந்த கற்சிலையிலிருந்து வாளுக்கான உறையை எடுத்து விக்ரமிடம் கொடுத்தார்.   விக்ரம் அந்த உறையைக் கையில் வாங்கி வாளை அதற்குள் இட்ட […]