அத்தியாயம் 7 வாகனத்தை வெகு சிரத்தையாக ஓட்டிக் கொண்டு சென்றான் விஷ்னு. சுமிக்கோ பாட்டில்லாமால் வாகனப் பயணங்களே இல்லை. மதியிடம் “ஏய் இதென்ன சவம் கொண்டு போற வண்டியா ஒரு சோங் கூட இல்ல ரொம்ப போர் அடிக்குது” என்றாள் சுமி. “சும்மா இருடீ கோயிலுக்குப் போகும் போது பாட்டு போடக் கூடாதுங்கறது அண்ணனோட கட்டளை” என மதி கூற “உங்க நொண்ணனுக்கு எதுல எதுல கன்டிஷன் போடுறதென்ட வெவஸ்தயே இல்லாமப் போயிட்டுது ச்சே..” என்றவள் “ஏங’க […]
அத்தியாயம் 6 இவ்வாறாக நாட்கள் பல நகர்ந்தன. பரீட்சைகள், கணிப்பீடுகள் என பல்கலைக்கழகத்தின் ஒரு வருடம் கழிந்து விட்டது. அன்று ஏப்ரல் விடுமுறைக்காக அனைத்து மாணவர்களும் தத்தமது வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர். “சுமி உன்னோட திங்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா? ஸ்வட்டர் இருந்தா எடுத்துக்கோ, இல்ல தேவையில்ல அங்கயே வாங்கிக்கலாம் என்றாள்” மதி. “என்னடீ நீ பாட்டுக்கு ஸ்வெட்டர் என்டெல்லாம் சொல்ற? ஏன் ரிங்கோ போறதுக்கு ஸ்வெட்டர் எல்லாம், அங்க அடிக்கிற வெயிலுக்கு வெள்ளக்காரன் போல திறந்து […]
அத்தியாயம் ஐந்து : மதி, சுமி ஆகியோரை எதிர்பார்த்து ஏனைய மூன்று நண்பர்களும் காத்திருந்தார்கள். ஐவரும் ஒன்றாகவே வகுப்பறைக்குட் சென்றனர். வழமையாக ஒவ்வொரு வகுப்பறையிலும் நல்லவன், கெட்டவன், காமெடியன் என ஒவ்வொரு ரகமும் வந்து சேரும். ஒவ்வொரு நல்லவனுக்குள்ளேயும் ஒரு கெட்டவன் இருப்பான். பொதுவாகவே எல்லா ஸ்டோரில இருக்கிற மாதிரித்தான் ஒரு வில்லியும், ஒரு வில்லனும் இருப்பான்க. இங்க கொஞ்சம் வித்தியாசமா நல்லவன் வேஷம் போடும் கெட்டவனையும், இல்ல இல்ல கேடுகெட்டவனையும், ஹீரோயினோட ஹீரோவ எப்படியாச்சும் கைக்குள்ள […]
முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை பாகம் – 4 விரிவுரைகள் அனைத்தும் முடிவடைந்து மதி உட்பட அவளது நண்பிகள் அரசாங்க விடுதிக்கும் மதி தனியார் விடுதிக்கும்; சென்றாள். மதி தங்கியிருக்கும் விடுதி கொழும்பின் நவலோகவில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்த்pலிருந்து பத்து ரூபாய் பஸ் தூரத்தில் தான் அந்த விடுதி அமைந்துள்ளது. விடுதி என்னமோ பத்து நிமிட பயணம் தான், ஆனால் கொழும்பு நகரம் பரபரப்பான ஒரு நகரம் என்பதால் வாகன நெரிசல்களும் சனநெருசல்களும் அதிகமாகவே இருக்கும். அதனால் எப்படியும் […]
முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை பாகம் – 3 பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இணைய இணைப்புக்கள் இலவசமாக இருப்பதனால் அங்கு பாவனைக்குக் குறைவேயில்லை. பெரும்பாலான மாணவர்களின் பல்கலைக் கழக வருகைக்கு காரணமே இந்த இலவச இணைய இணைப்புத்தான். நாடகம், திரைப்படங்கள் என பதிவிறக்கம் செய்து ஒரே கொண்டாட்டம் தான். அன்று பாதி விரிவுரைகள் முடிவுற்றிருந்தன. நேரம் பிற்பகல் பன்னிரெண’டை அண்மித்தது. அவர்களது தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது. சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களை சந்திக்க இருப்பதனால் கலைப் பீடத்தின் […]
முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை பாகம் – 2 புதுப்புது முகங்கள், மதிக்கோ சுமித்ராவைத் தவிர வேறு யாரையும் தெரியாது. ழசநைனெயவழைn pசழபசயஅஅந நடந்த அந்த ஐந்து நாட்களிலும் ஒரு சில நண’பர்களை சேர்த்துக் கொண்டாள் மதி. எங்கு சென்றாலும் அவர்கள் 5 பேரும் ஒரு குழுவாகவே சுற்றுவார்கள். ஐவரும் கிராமத்துக் பெண்கள். சுமி, மதி தவிர காவியா, மோனிஷா, தாட்ஷாயினி ஆகியோரே நண்பர்கள். பொதுவாகவே பாடசாலை என்றாலும் சரி, பல்கலைக்கழகம் என்றாலும் சரி நாளைந்து பெண்பிள்ளைகள் […]