நிறைவுப்பகுதி மூன்று வருடங்களுக்குப் பிறகு…. மாடி ஹாலில் சாதனா மடியில் ரிஷி படுத்திருக்க…. அப்போது அங்கே வந்த ஜோதியை பார்த்ததும், இருவரும் பதறி எழுந்தனர். “எங்க டா சந்தோஷ்?” என ஜோதி கேட்டதும், இருவரும் அவர்கள் மகனை, ஆளுக்கொரு சோபாவிற்கு அடியில் குனிந்து தேடினர். “ரொம்ப நல்லாயிருக்கு, பிள்ளையைக் காணோம்மா… ரூம் ரூமா தேடுவாங்க. இவங்க சோபாவுக்கு அடியில தேடுறாங்க.” என ஜோதி நக்கலடிக்க….ரிஷி அவரை முறைத்து விட்டுச் சென்றான். சந்தோஷ் எப்போதுமே சோபாவுக்கு அடியில், […]
மாலை விழா மிகவும் சிறப்பாக நடந்தது. ரிஷி சொன்னது போல் சாதனா விழா துவங்கும் நேரத்திற்குத் தான் வந்தாள். அதுவரை ரிஷியின் செயலாளர் உதய் நின்று தான் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான். சாதனா வருவதைப் பார்த்தும் ரிஷியே வாயிலுக்குச் சென்று அவளை வரவேற்றான். ராயல் ப்ளூ நிறத்தில் வழவழப்பான புடவை, அவளின் எழிலான மேனியை தழுவியிருக்க…. அதற்குப் பொருத்தமாகக் காதிலும், கழுத்திலும் வைரம் அணிந்து, மிதமான ஒப்பனையில்… அமெரிக்ககையான தோற்றம் அவளிடத்தில். ரிஷி அவளிடம் பூங்கொத்தை கொடுத்து […]
பகுதி – 32 வீட்டிற்கு வந்த ரிஷிக்கும் சாதனாவிற்கு ம் இடையில் பேச்சே இல்லை… போன்னிலேயே நிறைய நிறையப் பேசி விட்டதால்…. நேராக ரொமான்சில் இறங்கி விட்டனர். வீட்டில் வேலை ஆட்கள் கூட இல்லை…. வாயில் காப்பவனைத் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி இருந்தான். இரவு முடியாமல் நீண்டு கொண்டே சென்றது. வெகு நாட்கள் கழித்துக் கிடைத்த இனிமையான அனுபவத்தை இருவருமே முடிக்க நினைக்கவில்லை என்பது தான் உண்மை. இதற்கு மேல் உடம்பில் சுத்தமாகத் தெம்பு […]
ராஜ்மோகனும் , ஜோதியும் இருவரையும் ஆவலாக வந்து வரவேற்றனர். ப்ரீதா வெற்றியை முறைத்தபடி ஓரமாக ஒதுங்கி நின்றாள். வெற்றிக்கு முன்பிருந்த கோபம் தன் மனைவியைப் பார்த்ததும், எங்கோ ஓடி விட…. அவன் கண்கள் அவளையே சுற்றி வந்தது. இந்த வீடு ஏற்கனவே சாதனா வந்த வீடு இல்லை. அது சின்னது என்பதால்…. இன்னொரு பெரிய வீட்டில் குடி வந்து இருந்தனர். ப்ரீதா சாதனாவோடு மட்டும் நன்றாகப் பேசினாள். அவளே அழைத்துச் சென்று அவளுக்கு வீட்டையும் சுற்றிக் காட்டினாள். […]
பகுதி – 31 ரிஷி நேகாவை வைத்துப் படம் எடுப்பது. குடும்பத்தில் மட்டும் அல்ல பட உலகிலும் சர்ச்சையை உருவாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் பத்திரிக்கைகளின் கவனத்தையும் கவர்ந்தது. ஏற்கனவே ரிஷி சாதனாவை பற்றி முன்பு எழுதி அடிவாங்கிய பாத்திரிக்கை, இந்த விஷயத்தை மேலும் துருவியதில்… சாதனா சில மாதங்களாக அவள் பிறந்த வீட்டில் இருப்பது தெரிய வர…. ரிஷியும் சாதனாவும் நிரந்தமாகப் பிரிந்து விட்டனர். அதனால தான் ரிஷி சென்று மீண்டும் நேகாவோடு சேர்ந்து கொண்டான் […]
அன்று சத்யாவிற்கும் இரவு நேர பணி என்பதால்….. சாதனாவும் அவனும் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். திடிரென்று ரிஷி அவள் முன்பு வந்து நின்றதும், சாதனாவால் அதை நம்பக் கூட முடியவில்லை. “ரிஷி…. வரேன்னு சொல்லவே இல்லை…” என்றபடி சாதனா எழுந்து அவனிடம் சென்றாள். அவள் முகத்தில் அவ்வளவு சிரிப்பு. சத்யாவிற்கு அதைப் பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. சாதனாவை பார்த்து கண்சிமிட்டிய ரிஷி, சத்யாவிடம் அவனே சென்று கை குலுக்கினான். “சத்யா உங்களை ரொம்ப நாளா […]
பகுதி – 30 சாதனாவின் உறவினர்கள் சிலர் அவர்கள் வீட்டுத் திருமணத்திற்குப் பத்திரிகை வைக்க வந்திருந்தனர். அவர்கள் வருவது தெரிந்து வெற்றியும் வீட்டில் தான் இருந்தான். அவர்கள் செல்வதற்கு முன் சாதனாவிடம் அவளுக்கு அபார்ஷன் ஆனது பற்றி விசாரிக்க…. அவளைப் பதில் சொல்ல விடாமல் ப்ரீதாவே சமாளித்து அனுப்பி வைத்தாள். இருந்தாலும் சாதனாவின் முகம் வாடி விட… அதிலிருந்து அவள் யாரோடும் பேசாமல் அறையிலேயே அடைந்து கிடந்தாள். வெற்றிக்கு அப்போது ரிஷி சொன்னது தான் நியாபகம் […]
பகுதி – 29 அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த வெற்றி ப்ரீதாவை தேட… அவள் அங்கே இல்லை. அவளைத்தேடி தங்கள் அறைக்கு சென்றான். அவனைப் பார்த்தும் ப்ரீதா முறைத்தாள். “என்னடி இப்படிப் பார்க்கிற? நீயும் வேதாளம் ஆகப்போரியா என்ன? “என்கிட்டே எல்லாத்தையும் மறைச்சிட்டீங்க இல்லை… உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லை.” ப்ரீதாவின் குரலில் அழுகை எட்டி பார்க்க…. அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்த வெற்றி, “அப்படி இல்லை… நானும் ரிஷியும் சந்தோஷமான மனநிலையில […]
பகுதி – 28 சாதனா தலைவலி இருப்பதால்…. அங்கே தனியாக இருக்க வேண்டாம் என இங்கே வந்ததாகச் சொன்ன காரணத்தை வெற்றியும் ப்ரீதாவும் நம்பியது போலவே காட்டிக்கொண்டனர். வெற்றி ப்ரீதாவிடம் சாதனாவை பற்றி எதுவும் சொல்லவில்லை… ஆனால் ஜோதி சொல்லியிருந்தார். அதனால் சாதனா திடிரென்று கிளம்பி வந்ததும் ப்ரீதா உள்ளுக்குள் பயந்து கொண்டே இருந்தாள். வந்த அன்று சாதனா தலை வலிப்பதாகச் சொல்லி படுத்தே இருந்த போதும், வெற்றியும் ப்ரீதாவும் சென்று அடிக்கடி அவளைப் […]
அதை கேட்டு சாதனாவிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அன்று இரவு தனிமையில் சாதனா ரிஷியிடம் காய்ந்தாள். “நான் உங்ககிட்ட பாட்டி பத்தி எதாவது சொன்னேனா….” “இல்லை, ஏன் கேட்கிற?” “அப்புறம் ஏன் மாமா பாட்டியையும் சேர்த்து கூடிட்டு போறாரு. நீங்க தான் எதோ சொல்லி இருக்கீங்க.” “ஆமாம், சாதனா கிட்ட குழந்தையை பத்தி பேசாதீங்கன்னு நான் தான் சொன்னேன். இப்ப என்ன அதுக்கு?” “என்னை எல்லோரும் தப்பா நினைக்க மாட்டாங்களா…” […]