பகுதி – 27 இரண்டு நாட்கள் அமைதியாக சென்றது. ரிஷியும் சாதனாவும் எதை பற்றியும் பேசவில்லை. சாதனா மருத்துவமனைக்கும் செல்லவில்லை வீட்டில் தான் இருந்தாள். தனக்கே நம்பிக்கை இல்லாத போது…. நாம் மற்றவர்களுக்கு என்ன வைத்தியம் செய்து விடப்போகிறோம். ரிஷி சொன்னது சரிதான் என்று நினைத்து செல்லவில்லை. சென்னைக்கு செல்வதால்…. ஜோதிக்கு பொருட்களை எடுத்து வைப்பதில் உதவி செய்து கொண்டு இருந்தாள். இனி அவளும் ரிஷியும் மட்டும் தானே […]
பகுதி – 26 “ஹாய் ரிஷி என்ன இந்தப் பக்கம்?” சாதனா மூன்றாம் மனிதரிடம் கேட்பது போல் கேட்டு வைக்க…. ஒரு தடவை தங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்ட ரிஷி, சாதனாவின் உடைக்குள் இருந்த தாலியை உள்ளே கைவிட்டு எடுத்தான். அவன் கையைத் தட்டி விட்ட சாதனா “ச்சீ… என்ன பண்றீங்க?” என்றாள். “இல்லை நீ என் பொண்டாட்டி தான…. மாத்தி வேற யாரையும் பார்க்க வந்திட்டேன்னோன்னு நினைச்சேன்.” ரிஷி சொன்னதைக் கேட்டு சாதனா அவனை முறைக்க…. […]
பகுதி – 25 சாதனா அவள் பிறந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. வெற்றியும் ப்ரீதாவும் அவளை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டனர். பெரியம்மா மேகலாவும் உடன் இருந்ததால்…. அவரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டார். சாதனா நடுநடுவே கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். ரிஷியும் ஊரில் இல்லை வெளிநாடு சென்றிருந்தான். அவனும் ஊரில் இல்லாததால்…. ஜோதியும் சாதனா அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் சந்தானம், […]
வெற்றிக்கு தன் அம்மா இல்லாதது எப்போதையும் விட இப்போது மிகவும் துன்பமாக இருந்தது. தன் அம்மா இருந்திருந்தால்…. ஒருவேளை சாதனாவிற்கு இப்படி நடக்காமல் இருந்திருக்குமோ என நினைத்து வேதனை பட்டான். இப்போது தன் தங்கை புகுந்த வீட்டில் என்ன பேச்சு வாங்குகிறாளோ என அது வேறு அவனுக்குக் கவலையாக இருந்தது. ஜோதியாவது தன்னுடைய கோபத்தைச் சாதனாவிடம் நேரடியாகக் காட்ட மாட்டார். ஆனால் அமீர்தா பாட்டி அவளுக்கு முன்பே பேசி விடுவார். “இந்தக் காலத்தில குழந்தை பிறக்காம தள்ளி […]
பகுதி – 24 ஜுரம் விட்டு இரண்டு நாட்களில் சாதனா வீடு திரும்பி விட… இன்னும் ஒரு வாரம் கழித்து மதுரை பயணத்தை வைத்துக்கொள்வோம் என முடிவு செய்தனர். சாதனா வீட்டிற்கு வந்த அன்றே வெற்றி மதுரைக்குக் கிளம்பி விட்டான்…. சந்தானமும், ராஜ்மோகனும் அவர்கள் வேலைக்கு நடுவிலும் வந்து சாதனாவை பார்த்துவிட்டு சென்றனர். சாதனா அன்று தான் சற்று தெம்பாக உணர்ந்தாள். சும்மா அறையிலேயே படுத்துக் கிடப்பது ஒருமாதிரி இருக்க… எழுந்து நடமாடிக்கொண்டு இருந்தாள். மதிய உணவை […]
ப்ரீதா ரிஷிக்கும் அழைத்து ஜோதி வருத்தமாக இருப்பதைச் சொல்லி விட்டாள். ரிஷி தன் அம்மாவை செல்லில அழைத்துப் பேசினான். “என்ன மா கோபமா?” “பின்ன இருக்காதா… நாங்க என்ன யாரோவா? எங்களுக்கு இவ்வளவு லேட்டா சொல்றீங்க. இதே அவங்க அம்மா இருந்திருந்தா சாதனா சொல்லாம இருந்திருப்பாளா…” “உன் பாட்டி என்னை ரொம்பக் கேவலமா பேசுறாங்க. நீயும் உன் புருஷனும் அவளைத் தலையில வச்சிட்டு ஆடுனீங்க. உன்கிட்ட கூட மாசமா இருக்கிறதை சொல்லலையான்னு கேட்கிறாங்க.” “நான் தான் சொல்ல […]
பகுதி – 23 காலை சாதனா முதலில் எழுந்து விட்டாள். ரிஷி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க…. அவனை வேண்டுமென்றே சீண்ட ஆரம்பித்தாள். அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுவது, அவன் மூக்கை பிடித்துத் திருகுவது என்று அவள் சேட்டை செய்ய…. அதில் உறக்கம் கலைந்த ரிஷி, அவளை இறுக அனைத்து அவளை நகர விடாமல் செய்தவன், மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர்ந்தான். சாதனா அவனிடம் இருந்து விடுபடப் போராட… ரிஷி அவளின் இதழில் அழுத்தமாக முத்தம் வைக்க…. சாதனாவும் […]
மெல்ல அவளைக் கீழே இறக்கி விட்டவனின் முகம் முதலில் மலர்ந்தாலும், உடனே சுருங்கிவிட்டது. தான் செய்ய இருந்த காரியத்தை நினைத்து வந்திருந்த கலக்கம் அது. ஆனால் சாதனா அதைத் தவறாகப் புரிந்து கொண்டாள். அவனுக்குக் குழந்தை வந்தது பிடிக்கவில்லையோ என நினைத்து விட்டாள். “பிரக்னென்டா இருக்கியா… உனக்கு எப்ப தெரியும்?” “நான் லண்டன் வர்றதுக்கு முன்னாடியே டாக்டரை போய்ப் பார்த்துக் கன்பார்ம் பண்ணிட்டு தான் வந்தேன்.” “அப்ப குழந்தை வயித்துல இருக்குன்னு தெரிஞ்சும், அங்க இருந்து இவ்வளவு […]
பகுதி – 22 “ரிஷி போதும் தூங்கினது, எழுந்துக்கோங்க ப்ளீஸ்….” சாதனா எழுப்ப… சோம்பலாகச் சிறிது மட்டுமே கண்திறந்து பார்த்தவனின் விழிகள் தன்னவளை பார்த்ததும் வியப்பில் முழுவதும் திறந்து கொண்டது. கருப்பு நிற முழு நீல பாவடையும், அடர் ரோஜா நிற டாப்பும் அணிந்து இருந்தாள். காதில் வைர தோடும் கழுத்தில் தாலியோடு இன்னும் ஒரு சிறிய செயின் மட்டும். கைகளில் உடைகேற்ற நிறத்தில் நிறைய வளையல்கள் போட்டு வெளியே செல்ல தயாராக இருந்தாள். “மேடம் எங்க […]
“ச்ச… நான் வந்த மூடே போச்சு… எவ்வளவு ரொமாண்டிக்கா உன்னை வெல்கம் பண்ணனும்னு நினைச்சேன். அதுக்குள்ள ஒரு பஞ்சாயத்து.” ரிஷி சொல்ல… சாதனா அவன் சும்மா பொய் சொல்கிறான் என நினைத்தாள். அதற்குள் கார் இருந்த இடத்திற்கு வந்திருந்தனர். ரிஷி லக்கேஜை டிக்கியில் வைத்து விட்டு வந்தவன், முன்புறம் கதவை திறந்து ஒரு மலர் கொத்தை எடுத்து சாதனாவின் கையில் கொடுத்தவன், அவளை இடையோடு சேர்த்து அனைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு “வெல்கம் மை டியர்.” என்றான். […]