அத்தியாயம்….23 வீரேந்திரன் கோயம்பத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளி வரும் போதே அவன் தாத்தாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க… காரணம் இல்லாது அழைக்க மாட்டாரே என்று நினைத்து அவன் தன் வீட்டுக்கு செல்லாது நேராக அவன் தெய்வநாயகியின் வீட்டுக்கு சென்றான். ஆம் தெய்வநாயகி எப்போது அந்த வீட்டிற்க்கு திருமணம் முடிந்து கால் அடி எடுத்து வைத்தாரே, அன்றில் இருந்து அந்த இல்லம் தெய்வநாயகியின் இல்லம் என்று தான் எல்லோருமே சொல்வர். கூடத்தில் வீட்டு ஆட்களோடு மூன்று பேர் […]
அத்தியாயம்….22(2) மணிமேகலைக்கு தன் அத்தையிடம் பேசிய பின், முதலில் இருந்த அந்த பட படப்பு இல்லை என்றாலும், ஒரு வித தயக்கத்தோடு தான் அவள் வீரேந்திரன் அறை நோக்கி சென்றாள். இந்த தயக்கத்திற்க்கு வீரேந்திரன் காரணம் இல்லை. சங்கரி அத்தை சொன்னது போல் வீரா அத்தான் எனக்கு புதியவரா…?அதுவும் சிறுவயதில் வீரா அத்தான் வீரா அத்தான் என்று அவன் பின் சுற்றியது இப்போது நினைவுக்கு வந்து இது வரை இல்லாத வெட்கம் வேறு வந்து தொலைத்தது. அதுவும் […]
அத்தியாயம்….22….(1) அடுத்த முகூர்தத்தில் வாசுதேவன் வசுந்தரா கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக ஆக்கி கொண்டான்.தாலி கட்டிய வாசுதேவனின் முகத்திலும் சிரிப்பு இல்லை. என்றால், தலை குனிந்து தாலியை ஏற்றுக் கொண்ட வசுந்தராவின் முகத்தில் சிரிப்புக்கு பதிலாய் அங்கு பயம் தான் குடிக் கொண்டு இருந்தது. ஆம் பயம் தான். அந்த புகை நடுவில் அமர்ந்து இருப்பது அவளுக்கு குடலை புரட்டிக் கொண்டு வரும் அளவுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. தெய்வநாயகி… “வாந்தி எடுக்காதே …” […]
அத்தியாயம்…. 21 தன் பேரன் தன்னையே இப்படி அனைவரின் முன்னும் எதிர்த்து நிற்ப்பான் என்று தெய்வநாயகி துளியும் எதிர் பார்க்கவில்லை. அதுவும் தன்னை அடிப்பது போல் விரல் நீட்டிக் கொண்டு வந்த வீரேந்திரனின் செயலில் தெய்வநாயகி பெரியதாய் அடி வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் தன் பேரனுக்கு மணிமேகலையை மணம் முடிக்க சிறிதும் விருப்பம் இல்லாது தான் இந்த கல்யாணத்திற்க்கே தெய்வநாயகி சம்மதித்தார். அதற்க்கு காரணம் இதோ என் முன் விரல் நீட்டி பேசிக் […]
அத்தியாயம்….20 அந்த ஊரில் திருமணம் முன் ஜோடியாக சபையில் அனைவரும் பார்க்கும் படி நிற்க வைக்க மாட்டார்கள். அதற்க்கு காரணம் அனைவரின் கண் பட்டு ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நின்று விடப்போகிறது என்ற காரணம் ஒன்று என்றால், மற்றொரு காரணம் அப்படி திருமணம் தடைப்பட்டு விட்டால்… மற்றொருவன் பக்கத்தில் ஜோடியாக நின்ற பெண்ணை மணக்க தயங்குவர். அதனால் காலையில் கல்யாணம் மாலையில் வரவேற்ப்பு என்ற அந்த ஊரின் வழக்கப்படி…விடியற்காலை முகூர்த்தமான நாலரையில் இருந்து ஆறுமணிக்குள் […]
அதுவும் இருவரும் ஒரு சேர வாசல் படியில் வலது காலை எடுத்து வைக்கும் போது, மணிமேகலையின் பக்கம் தன் கையை நீட்டினான். மணிமேகலையும் அவனின் மனது உணர்ந்து தன்னால் அவன் கைய்யோடு தன் கையை பிணைத்துக் கொண்டு அந்த வீட்டில் உள் நுழையும் போது… மணிமேகலையின் உடல் தன்னால் சிலிர்த்துக் கொண்டது. தெய்வநாயகி கூட வீரேந்திரனிடம்… “ஏற்கனவே மணிய பார்த்துட்டு ஊரே கண்ணு பட்டு இருக்கு. இதில் ரெண்டு பேரும் சோடியா வேற வீட்டில் நுழையுறிங்க…ஊரு மொத்தமும் […]
அத்தியாயம்….19 “இந்த புடவை எடுத்துக்க…இது நல்லா இருக்கும். இதை பார்.” என்று வகை வகையாக..எண்ணற்ற கலரில் குவிந்து கிடந்த புடவையில் இருந்து, தனக்கு பிடித்த புடவைகளை வசுவின் மீது போட்டு பார்த்த வாசுதேவன் அவன் கண்களுக்கு திருப்தியாய் பட… விற்பனை பெண்ணிடம்… “ம் இதை எடுத்து வைங்க..ஆ அது வேண்டாம்.” என்று சொல்லிக் கொண்டு இருந்த வாசுதேவன் மருந்துக்கும் வசுவிடம்.. “இது உனக்கு பிடித்து இருக்கா…?வரவேற்ப்புக்கு எந்த கலரில் எடுக்கலாம் என்று நினச்சி இருந்த…? இந்த டிசைன் […]
அப்போ அவ சொன்ன… “அவனுக்கும் கொடுத்துட்டாங்க…எனக்கு கொஞ்சமா கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப கொடுத்தா செத்தது போல ஆயிடுவேன் நல்லா இருக்காது என்ன என்னவோ சொல்றாங்க வீரா. சீக்கிரம் வா…சீக்கிரம் வா.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.வீரா அவங்க வர சத்தம் கேட்குது.” என்று சொன்னது மட்டும் தான் கடைசியா அவ பேசியில் என்னிடம் பேசியது. அவள் சொன்ன ஓட்டல், நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து ரொம்ப பக்கம் தான். அதனால் தான் அவள் கடைசியா பேசிக் கொண்டு […]
அத்தியாயம்….18 “மணி கிட்ட ஏதோ மாற்றம் தெரியல…?” என்று வசுந்தரா வாசுதேவனிடம் கேட்டாள். “எனக்கு என்ன தெரியும்.” என்று வாசுதேவன் வசுந்தராவை எடுத்தெரிந்து பேசுவத போல் பேசினான்.எப்போதும் வசு தான் சின்ன விசயத்திற்க்கு கூட, முறுக்கிக் கொள்வாள். வாசு தான் அவளிடம் சமாதானம் பேசி தன் வழிக்கி கொண்டு வருவான். வாசுதேவனின் இந்த எடுத்தெரிந்து பேசுவது வசுந்தராவுக்கு புதியது. “என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு வாசு …?” என்று எப்போதும் கேட்பது போல் […]
தங்களோடு வசுந்தராவும், வாசுதேவனும் வருவதை பார்த்து,மணிமேகலை யோசனையுடன் அவர்களை பார்த்தாளே ஒழிய வாய் திறந்து… “நீங்க ஷாப்பிங் போகலையா…?” என்று கேட்கவில்லை. ஆனால் வீரேந்திரன் கேட்டு விட்டான். “ஏன் நீங்க உங்க வேலைய பார்க்கலாமே…” என்று. அதற்க்கு வசுந்தரா… “என்ன அண்ணா எல்லோரும் ஒன்னா வந்தோம். ஒன்னாவே வாங்கலாம். ஒரே குடும்பத்தில் எதற்க்கு தனி தனியா போய் வாங்கிட்டு.” என்று என்னவோ திருமணத்திற்க்கு குடும்பமாக போய் தான் வாங்க வேண்டும் என்ற ரீதியில் வசுந்தரா பேசினாள். ஆனால் […]